நாளை வடக்கு கிழக்கில் சுகாதாரத் துறையினர் பாரிய வேலை நிறுத்தப் போராட்டம்..!

நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்கள் பாரிய வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன. இலங்கை முழுவதும் உள்ள 33 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

அதற்கமைய நாளை (8) வடக்கு கிழக்கில் உள்ள ஸ்ரீ லங்கா சுகாதார சேவைச் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து சுகயீன விடுமுறைப் போராட்டம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.



அத்தோடு, நாளை நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வைத்திய சாலைகளில் சேவையாற்றும் வைத்தியர்கள் முதல் சிற்றூழியர்கள் வரையான 75 சேவைப் பிரிவுகளும் இணைந்து மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் இடம்பெறவுள்ளதால் மக்கள் வீணாண அலைச்சலை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.



இருப்பினும் போராட்டத்தின் போது, அவசர சிகிச்சைகளை மாத்திரம் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *