Sunday, June 8, 2025
Huis Blog

இணுவில் சிவனின் புனிதத்தை மீட்டெடுக்க நாளை யாழில் மாபெரும் போராட்டம்..!

0

“இணுவில் காரைக்கால் சிவன் கோவில் புனிதத்தை மீட்டெடுப்போம்” என்ற தொனிப்பொருளில் காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்திற்கு எதிராக மாபெரும் கண்டனப் போராட்டம் நாளை காலை 10 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலக முன்றலில் முன்னெடுக்கப்படவுள்ளது.

சமூக செயற்பாட்டர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இப் போராட்டத்தின் கருப்பொருளாக “சட்டவிரோதமாக திண்மக் கழிவகற்றல் அமைக்கப்பட்டு இரசாயன இலத்திரனியல் மருத்துவ கழிவுகளை வகைப்படுத்தாது தீயிட்டுக் கொழுத்தி சூழல் மாசடையச் செய்யும் செயலுக்கு எதிராக திரண்டு எழுவோம்” என முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போது நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் குடிப்பரம்பல் அதிகரித்துள்ளது.இதனால் கழிவுகளும் அதிகளவில் வெளியேற்றப்படுகின்றன. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக காரைக்கால் திண்மக் கழிவகறல் நிலையத்தில் பிரதேச சபையினர் கழிவுகளை கொட்டி வருகிறார்கள்

குறித்த நிலையத்தில் கழிவுகளை முகாமை செய்யக்கூடிய திறனோ கொள்ளளவோ போதுமானதாக இல்லை. தற்போது குப்பைகள் தேங்கி பெருக்கெடுத்து காணப்படுகின்றன.

உரிய அனுமதிகள் பெறப்படாமல் இந்த நிலையம் இயங்குவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், அண்மையில் அந்த நிலையம் தீப்பற்றி எரிந்து மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தியிருந்தது. இது முதல் தடவை அல்ல என்பதுடன் பல தடவைகள் இந்த இடர்நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்குரிய மாற்று ஏற்பாடுகள் சபையில் பேசப்பட்டாலும் நடைமுறையில் எவையும் சாத்தியப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு சம்பத்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன் குறித்த போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு போராட்டத்தை ஏற்பாடு செய்த சமூக செயற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட சகோதரர்கள் இருவர் கைது..!

0

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.

புதுக்குடியிருப்பு காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

110 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபான விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட உந்துருளி என்பன பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 19 மற்றும் 27 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

யாழில் எந்தவொரு உள்ளூராட்சி சபைகளுக்கும் எமது கட்சி இடையூறாக இருக்காது – சந்திரசேகர்

0

யாழில் உருவாக்கப்படவுள்ள எந்தவொரு உள்ளூராட்சி சபைகளுக்கும் தமது கட்சி இடையூறாக இருக்காது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த காலத்தில் தமக்கு எதிராகச் செயற்பட்ட எந்தவொரு அணியினருடனும் தாம் இணையப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் – காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தில் – பொதிகள் போக்குவரத்து சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சி இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்திக்கு எதிராகச் செயற்பட்ட அனைவரும் இன்று ஆதரவாகச் செயற்பட்டு வருவதாகவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

50 கிலோ கிராம் சீமெந்து மூடையின் விலை இன்று (8) முதல் அதிகரிப்பு..!

0

50 கிலோ கிராம் சீமெந்து மூடையின் விலையை இன்று (8) முதல் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, 50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் மொத்த விலை, 100 ரூபாவால் அதிகரிக்கப்படும் என சீமெந்து நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டத்தில் குதிக்க தயாராகும் ஆசிரியர் சங்கம் – ஜோசப் ஸ்டாலின்

0

தனியார் பல்கலைக் கழகங்களில் கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற ஏராளமானோருக்கு முறையான முறைமை இல்லாமல், அரசாங்கம் ஆசிரியர் நியமனங்களை வழங்கி வருவதாக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.

குறித்த நியமனங்கள் தொடர்பாக அரசாங்கம் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் எனவும், இதுதொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மனைவியின் வெட்டிய தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்..!

0

மனைவியின் தலையுடன் கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரு அனேகல் பகுதியை சேர்ந்த ஒருவர் மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் வீடு வாடைக்கு எடுத்து வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த 3 ஆம் திகதி, குறித்த கணவர் தனது மனைவியிடம் நான் வேலைக்குச் செல்கிறேன். 4 ஆம் திகதி காலைதான் திரும்பி வருவேன் எனத் தெரிவித்து விட்டு வேலைக்குச் சென்றுள்ளார். வேலை விரைவாக முடிய, இரவே வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

வீட்டிற்கு வந்தபோது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய மனைவி மற்றொரு நபருடன் இருந்துள்ளார். இதைப் பார்த்த பயங்கர கோபம் அடைந்துள்ளார். மனைவியுடன் இது தொடர்பாக சண்டையிட்டுள்ளார்.

மனைவியும் இவருடன் சண்டையிட்டுள்ளார். பின்னர் வீட்டை விட்டு வெளியேறுவதாக மனைவி கூறியுள்ளார். வீட்டைவிட்டு வெளியேறிய மனைவி, அடிக்கடி வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இதுபோன்றுதான் நேற்றும் அவரது மனைவி வந்து தகராறு செய்துள்ளார்.

இதனால் கடுங்கோபம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்திற்குப் பிறகு மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். அத்துடன் அவரது கோபம் தீரவில்லை. மனைவியின் கழுத்தை கூர்மையான ஆயுதத்தால் துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல், மனைவியின் தலையை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று சரணடைந்துள்ளார்.

தனது மனைவியை தலை துண்டித்து கொலை செய்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். பொலிஸார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை சட்டரீதியாக அழைத்துவர ஏற்பாடு – மீன்பிடி அமைச்சர்

0

இந்தியாவில் நீண்ட காலமாக தங்கியுள்ள இலங்கை அகதிகளை சட்டரீதியாக அழைத்து வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

அண்மையில் இந்தியாவிலிருந்து கடல் வழியாக யாழ்ப்பாணம் வருகை தந்த அகதி ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

எமது கட்சி கடந்த காலங்களில் இலங்கையில் இருந்து சென்ற தமிழ் அகதிகளுக்கு பிரஜா உரிமை வழங்க வேண்டும் என பாராளுமன்றத்தில் வலியுறுத்திப் பேசினோம்.

இந்தியாவில் தங்கி உள்ள அகதிகள் இலங்கை வருவதற்கு சட்டரீதியான ஆவணம் ஒரு பிரச்சனையாக உள்ள நிலையில் சிலர் கடல் வழியாக சட்ட விரோதமான முறையில் படகுகள் மூலம் நாட்டுக்கு மீள வருகிறார்கள்.

அரசாங்கம் என்ற வகையில் எமது நாட்டிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்றவர்களை சட்டரீதியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை வெளிவிவகார அமைச்சினூடாக எடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

ஆகவே இந்தியாவிலிருந்து படகுமூலம் சட்டவிரோதமான முறையில் இலங்கை திரும்ப வேண்டாம் என கேட்டுக் கொள்வதோடு விரைவில் அவர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதிரடிக் கைதுகளால் கோவில், விகாரைகளுக்கு படையெடுக்கும் அரசியல்வாதிகள்..!

0

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் சமீபத்திய நாட்களில் விகாரைகள் மற்றும் கோவில்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்து ஆசி பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரார்த்தனை செய்தவர்களில் பெரும்பாலோர் பல்வேறு ஊழல் மற்றும் சட்டவிரோத குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்திய நாட்களில் இருபதுக்கும் மேற்பட்ட முன்னாள் அரசியல்வாதிகள் கதிர்காம கோயிலுக்கு மட்டும் சென்று பிரார்த்தனை செய்துள்ளதாக ஆலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ஒரு உயர் அரசு அதிகாரி, சிறப்பு பாதுகாப்புடன் அனுராதபுரம் ஜெய ஸ்ரீ மஹா போதி தேரரை சந்தித்து, அப்பகுதியின் முன்னணி துறவிகளைச் சந்தித்து ஆசி பெற்றதாக கூறப்படுகிறது.

இதேபோல், இந்தியாவுக்குச் சென்ற முன்னாள் அரசியல்வாதி ஒருவர் அங்குள்ள ஒரு கோவிலில் பெரிய அளவிலான பிரார்த்தனை நடத்தி ஆசி பெற்றுள்ளார்.

பல்வேறு ஊழல்கள் மற்றும் பிற முறைகேடுகள் தொடர்பாக அரசியல்வாதிகள் உட்பட கிட்டத்தட்ட இருபது அரசு அதிகாரிகள் சமீபத்திய நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடவடிக்கை இன்றேல் தொழிற்சங்க நடவடிக்கை; போக்குவரத்து சங்கங்கள் எச்சரிக்கை..!

0

தனியார் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து வாகனங்களை ஒழுங்கு படுத்துவதற்கு முன்னதாக, நிலவும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் நடத்துமாறு போக்குவரத்து சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இதேவேளை, அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்தார்.

தனியார் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள், பாடசாலை மாணவர் போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட பல போக்குவரத்து முறைகளை ஒழுங்குபடுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,

இதற்கான அனைத்து அதிகாரங்களையும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில் பாராளுமன்றத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இதன்படி, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திருத்த சட்டமூலம் சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதோடு, தனியார் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை மாணவர் போக்குவரத்து வாகனங்கள் உட்பட பல போக்குவரத்து முறைகளை ஒழுங்குபடுத்த தேவையான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ரணிலின் தனி தொழிலாளர் சட்டமூலத்தை மீண்டும் கொண்டுவர அரசு முயற்சி..!

0

ரணிலும், மனுஷ நாணயக்காரவும் அறிமுகப்படுத்தவிருந்த தனி தொழிலாளர் சட்டமூலத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னிலை சோஷலிசக் கட்சியின் பிரச்சார செயலாளர் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார்.

8 மணிநேர வேலை மணித்தியாலத்தை ரத்து செய்வதற்காக ரணில் விக்ரமசிங்க கொண்டுவந்த சட்டமூலத்தை, மீண்டும் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை இந்த அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இவ்வாறான மாற்றம் ஏற்படுமாயின், ஒருபோதும் தொழிற்சங்கம் ஒன்றை ஆரம்பிக்க முடியாது.

தற்போது, ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்படுமிடத்துக்கு, அதற்கு எதிராக உடனடியாக தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிப்பதற்குத் தொழிற்சங்கங்களுக்கு இயலுமை உண்டு.

எனினும், குறித்த சட்டமூலத்தில் பணிப்புறக்கணிப்பு ஒன்றை மேற்கொள்வதாயின், 30 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளன.

இதனூடாக தொழிலாளர்களின் உரிமைகள் வெளிப்படையாக மீறப்படுவதுடன், இது முற்று முழுதாக தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு சட்டமாகும்.

தொழிலாளர் சட்டத்தின் அரசியல் நோக்கம் 2022 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் தொடர்புடையது. அதற்கு அப்பால், இந்தத் திருத்தம் சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடுகளுடன் தொடர்புடையது.

இதனை அரசாங்கம் கொண்டு வரமுயற்சிக்குமாயின், ஒவ்வொரு நிறுவனமாகச் சென்று இது குறித்து பிரசாரம் செய்வதற்கும் தங்களது தரப்பு தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!