யாழ் மாவட்டத்தில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்குத் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் உறுதியுரையேற்பு நிகழ்ச்சியின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது புலம்பெயர் இலங்கையர்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய ஏதிலி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இந்தியாவில் இருந்து வருபவர்களை அநுர அரசாங்கம் கைது செய்கின்றது என சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.