Monday, September 15, 2025
Huis Blog Bladsy 3

12 வயது மாணவன் துஷ்பிரயோகம்; ஆசிரியருக்கு நீதிமன்றம் அளித்த உத்தரவு..!

0

அநுராதபுர தலைமையக காவல்துறையின் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகம், பாடசாலையின் கணித அறையில் பன்னிரண்டு வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக அநுராதபுரத்தில் உள்ள ஒரு முன்னணிக் கலவன் பாடசாலையின் ஆசிரியரை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அநுராதபுர தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன் முற்படுத்தப்பட்ட பின்னர், 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபர், திரப்பனே, அத்துங்கமவைச் சேர்ந்த திருமணமான ஆசிரியர் ஆவார்.

அநுராதபுரத்தில் உள்ள ஒரு பிரபலமான கலவன் பாடசாலையைச் சேர்ந்த பன்னிரண்டு வயது சிறுவனின் பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக அநுராதபுர தலைமையக காவல்துறையின் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு அளித்தனர்.

சந்தேக நபருக்காக முன்னிலையான வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் மீதான குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ரணிலின் உடல் நிலை அறிக்கை; ருக்‌ஷான் பெல்லனவுக்கு ஒழுக்காற்று விசாரணை..!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கொழும்பு தேசிய வைத்திய சாலை பிரதிப் பணிப்பாளர் ருக்‌ஷான் பெல்லன மீது ஒழுக்காற்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு 26 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, அவர் வெலிகடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் திடீர் உயர் இரத்த அழுத்தம் காரணமாக சிறைச்சாலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரணில் பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிகப்பட்டதுடன், அவருக்கு கடுமையான ஓய்வு அவசியம் என கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்திருந்தார்.

இதன் பின்னணியில், நேற்று சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை இடம்பெற்றதுடன், அதன் போது ரணில் விக்ரமசிங்க நேரில் முன்னிலையாகமல் ZOOM தொழிநுட்பம் ஊடாக தோன்றியிருந்தார்.

இந்த நிலையில், ரணிலின் உடல் நிலை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளதை அடுத்து, கொழும்பு தேசிய வைத்திய சாலை பிரதிப் பணிப்பாளர் ருக்‌ஷான் பெல்லன மீது ஒழுக்காற்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

யாழில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பணி இடை நீக்கம்..!

0

யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர் ஒருவர் தப்பியோடியதை அடுத்து, காவல்துறை சார்ஜண்ட் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் கடந்த25ஆம் திகதி கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சுகவீனமடைந்த நிலையில், காவல்துறை பாதுகாப்புடன், யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியுள்ளார்.

அதனை அடுத்து சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மல்லாகம் நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்து , நீதிமன்றினால் சந்தேக நபருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் , சம்பவம் தொடர்பில் காவல்துறையினரின் உள்ளக விசாரணைகளை அடுத்து , சந்தேகநபர் தப்பி சென்ற நிலையில் , அன்றைய தினம் சந்தேக நபரின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை சார்ஜண்ட் தர உத்தியோகத்ததர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் வைத்திய சாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வர முயற்சி – தமிழரசுக் கட்சி எதிர்ப்பு

0

மன்னார் பொது வைத்திய சாலையினை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கு மன்னார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானமொன்றினை நிறைவேற்றுவதற்கு முயற்சியெடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த முயற்சிக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோரால் மிகக் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

குறிப்பாக அதிகாரப் பகிர்வு நோக்குடன் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினூடாக ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கைளை மீளவும் மத்திய அரசிற்கு கையளிக்கும் இந்தச் செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாதெனக் கூறியே நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிகரன் மற்றும், சத்தியலிங்கம் ஆகியோரால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இருப்பினும் ரிஷாட் பதியுதீன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்னார் பொது வைத்திய சாலையில் வளப் பற்றாக்குறை காணப்படுவதாகவும், அந்தவளப் பற்றாக்குறைகளைத் தீர்க்க மாகாண சபை அந்த வளப் பற்றாக்குறைகளத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டதுடன், குறித்த மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையை மத்திய அரசின்கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இதனை மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிகரன் மற்றும், சத்தியலிங்கம் ஆகியோர் மத்திய அரசின்கீழ் குறித்த வைத்திய சாலையை கொண்டு வர முடியாதெனவும், வளப் பற்றாக்குறைகளைத் தீர்ப்பதற்கு மாகாணசபையூடாக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமெனவும் தெரிவித்தனர்.

(விஜயரத்தினம் சரவணன்)

செம்மணி மனித புதைகுழி; இன்று 16 என்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிப்பு..!

0

யாழ் – செம்மணி, சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாவது அமர்வு நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாக அகழ்வுப் பணிகளின் முன்னெடுக்கப்பட்டன.

அதற்கமைய, இன்றைய அகழ்வுப் பணிகளின் போது 16 என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனடிப்படையில் இதுவரை வெளிப்பட்ட என்புக்கூடுகளின் எண்ணிக்கை 163 ஆக அதிகரித்துள்ளது.

சிறுவர்களுடையது என சந்தேகிப்படும் என்புக்கூட்டு தொகுதிகளும், ஆடையை ஒத்த துணியும் இன்று வெளிப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 வது நாளாக தொடரும் போராட்டம்; மன்னாரில் பொதுமக்கள் பொலிஸார் முறுகல்..!

0

மன்னாரில் ர்காற்றாலை செயற் திட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் இன்று 24 வது நாளாக இன்று (26) இடம்பெற்று வருகின்ற நிலையில் மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் பொலிஸார் மற்றும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் புதிதாக அமைக்கப்படுவதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் 24 வது நாளாக தொடர்கின்றது.

போராட்டத்தில் அருட்தந்தை சக்திவேல் உள்ளடங்களாக தென்பகுதியில் இருந்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், அருட்சகோதரிகளும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்று வந்த நிலையில் போராட்டகாரர்கள் மகஜர் ஒன்றை வழங்குவதற்கு மாவட்ட செயலகத்திற்கு அமைதியான முறையில் நுழைந்த நிலையில் பொலிஸார் போராட்டகாரர்களை வெளியேற்ற முயற்சித்தனர்.

போராட்டகாரர்கள் வெளியேற முடியாது என தெரிவித்த நிலையில் பொலிஸாருக்கு போராட்டக்காரர்களுக்கும் முரண்பாடு இடம்பெற்றது. இதனையடுத்து மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த நிலையில் போராட்டக்காரர்களை அமைதியான முறையில் மாவட்ட செயலகத்துக்குள் அனுமதித்தார்.

நீண்ட இழுபறிக்கு பின்னர் போராட்டகாரர்கள் அபிவிருத்தி குழு தலைவர், அரசாங்க அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்தனர்.

புதைகுழிகளுக்கு வகை கூற வேண்டியவர்களே நீதி கோருகின்றனர் – மணிவண்ணன் ஆதங்கம்

0

வடக்கு கிழக்கில் இருக்கும் புதைகுழிகளுக்கு வகை கூற வேண்டியவர்களே இன்று தமிழ் தேசிய பரப்பின் உரித்தாளர்கள் எனக் கூறி கூட்டமைத்து போராடுகின்றனர், இது தமிழ் மக்களின் சாபக்கேடு என சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (26) ஊடக சந்திப்பை மேற்கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்கள் கூட்டணிக்கு அழைப்பு விடுக்காமையானது தேசியப் பரப்பில் பயணிப்பவர்கள் என்று கூறி எதிர்வரும் 29ஆம் திகதியன்று கையெழுத்து போராட்டம் மேற்கொள்ள முயற்சிப்பவர்களின் தேசியக் கொள்ளைக்கு எமது நிலைப்பாடு ஒத்துவராதென நினைத்திருக்கலாம்.

அவர்கள் கூட்டு என்ற போர்வையில் எதை சாதிக்க முயல்கின்றார்கள் என தெரியவில்லை. நேற்றைய தினம் கூடிய கூட்டுக்குள் பல கட்சிகளின் பிரதிநிதிகள் இராணுவத்துடன் இணைந்து ஒட்டுக் குழுவாக பல்வேறு மோசமான செயற்பாடுகளை செய்தவர்கள் என்பதை மக்கள் அறிவர்.

அதன்படி இதில் உள்ள அவர்களில் சிலர் செம்மணி உள்ளிட்ட பல கொலைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களாகவும் இருக்கும் நிலை உருவாகலாம். எனவே இவர்கள் முன்னெடுக்கும் இந்த போராட்டம் எந்தளவு வெளிப்படையானதாகவும் உணர்வு பூர்வமானதாகவும் இருக்கும் என்பது தெரியாது.

இதேவேளை குறித்த போராட்டத்தை முன்னெடுக்கும் தலைவர்கள் உண்மையானவர்களாக இல்லாது போனாலும் போராட்டம் அவசியமானது. அந்தவகையில் போராட்டத்தின் வலுவாக்கலுக்கு எமது கட்சியின் ஆதரவு என்றும் இருக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் விரைவில் நடவடிக்கை எடுப்போம் – பிமல்

0

ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின் போது அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு மாத்திரமல்ல, விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரச உத்தியோகத்தர்களுக்கு உரித்தான சட்டமே ஜனாதிபதிகளுக்கும் உரித்தாகும், அவர்களுக்குப் பிரத்தியேகமான சட்டம் இல்லை, அதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும், அலோசியஸிடம் பணம் பெற்றவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மக்கள் வழங்கியுள்ள ஆணையில், இது முக்கியமான விடயமாகும் எனக் குறிப்பிட்ட பிமல், அதனை நிறைவேற்றுவோம் எனக் கூறியுள்ளார்.

வவுனியாவில் துவிச்சக்கர வண்டியில் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்..!

0

வவுனியா கனகராயன்குளம் கொல்லர்புளியங்குளம் பகுதியில் இன்று(2)மதியம் இடம்பெற்ற விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த கன்ரர் ரக வாகனம் கொல்லர் புளியங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபருடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த முத்து ராமலிங்கம் (வயது 61) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.

விபத்து தொடர்பாக கனகராயன்குளம் காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ரணில் கைதை முன்னரே கூறிய யூடியூப்பர் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை..!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவதற்கு முன்னர் யூடியூபர் சுதத்த திலகசிறி வெளியிட்ட கருத்து குறித்து சிறப்பு பொலிஸ் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் என்று சுதத்த திலக்சிறி கடந்த வெள்ளிக் கிழமை தனது யூடியூப் தளத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில் இது குறித்து விசாரணை நடத்தக் கோரி ஐக்கிய தேசியக் கட்சி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாட்டை செய்துள்ளது.

இந்தநிலையிலேயே சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் ஆரம்பிக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 22 ஆம் திகதி நாட்டின் பொதுப் பணத்தை குற்றவியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார் .

நேற்று முன்தினம் (22) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவரது தீர்ப்பு அறிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 20 இலட்சத்திற்கு மேற்பட்ட நிதிக் குற்றச்சாட்டிற்கு பொதுவாக பிணை வழங்கப்பட மாட்டாது என்பது பொது அறிவு.

error: Content is protected !!