Monday, February 9, 2026
Huis Blog Bladsy 3

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்; நாகமுத்து பிரதீபராஜா வெளியிட்ட தகவல்..!

0

இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் தொடரும் வாய்ப்புள்ளது என யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் கிடைத்து வரும் மழை மத்திய, வட மத்திய, வட மேல், ஊவா, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் எதிர்வரும் 04ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது.

வடக்கு மாகாணத்தின் பல குளங்கள் மீண்டும் வான் பாயத் தொடங்கியுள்ளன. மழை தொடரும் வாய்ப்புள்ளதனால் இந்த நிலைமையும் எதிர்வரும் 04ஆம் திகதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே குளங்களின் வான் பாயும் தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் இது தொடர்பாக விழிப்பாக இருப்பது அவசியம்.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நெல் அறுவடை மற்றும் நெல் உலர விடும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகள் இந்த நாட்களில் இந்த செயற்பாடுகளைத் தவிர்க்கவும்.

விதைப்புக்காலத்தின் சீரற்ற மழை, டிட்வா புயல் மற்றும் வெள்ளம், நோய்கள் , குறைவான சந்தை விலை போன்ற பல நெருக்கடிகளில் நெற்செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகள் உங்கள் நெல் அறுவடையையும் நெல் உலர விடும் செயற்பாட்டினையும் திட்டமிட்டு மேற்கொண்டு அவற்றைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

கிவுல் ஓயா எதிர்ப்புப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்..!

0

எதிர்வரும் 2ம் திகதி இடம்பெறவுள்ள கிவுல் ஓயா தமிழர் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு பொதுமக்கள், பொது அமைப்புக்கள், வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், தவிசாளர்கள், உபதவிசாளர்கள், உறுப்பினர்கள், ஒன்றிணைந்த தமிழ்க் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், ஒன்றிணைந்த செயற்பாட்டாளர்கள் அனைவரும் உணர்வுபூர்வமாக கலந்து கொள்ளுமாறு வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் திருநாவுக்கரசு கிருஸ்ணவேணி கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 02.02.2026 ஆம் திகதி காலை 10 மணிக்கு நெடுங்கேணி பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகும் இப் போராட்டத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து வருகைதந்து எமது தமிழர்களின் பூர்வீக நில ஆக்கிரமிப்புக்கும் திட்டமிட்ட இனப் பரப்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகளுக்கும் எதிராக குரல் கொடுக்குமாறு உரிமையுடன் வேண்டிக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

யாழ். இந்துக் கல்லூரியின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு; நீதிமன்றின் அதிரடி..!

0

யாழ் இந்துக் கல்லூரியின் அடிப்படை உரிமை மீறல் வழக்கின் நீதிமன்ற அவமதிப்பு விண்ணப்பத்தை மூல வழக்குடன் சேர்த்து நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களான குமுதினி விக்கிரமசிங்க மற்றும் கே. பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் கடந்த (27-01-2026) அன்று இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் முதலாம் எதிர்மனுதாரரான ரட்ணம் செந்தில்மாறனுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு விண்ணப்பமே இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

ஏற்கனவே விசாரணைக்கு அனுமதியளிக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்குடன் இந்த நீதிமன்ற அவமதிப்பு விண்ணப்பத்தையும் சேர்த்து நடாத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் குறித்த விண்ணப்பமானது எதிர்வரும் (03-07-2026) ஆம் திகதிக்கு அடிப்படை உரிமை மீறல் வழக்குடன் சேர்த்து விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மனுதாரர்களான அமிர்தலிங்கம் லதாங்கன், திருநாவுக்கரசு சிவகுமரன் மற்றும் நடராஜா சிவானந்தராஜா ஆகியோர், முதலாம் எதிர் மனுதாரரான ரட்ணம் செந்தில்மாறன் நீதிமன்றத்தில் வழங்கிய உத்தரவாதத்திற்கு எதிராக நடந்து கொண்டுள்ளார் என்ற அடிப்படையில் இந்த நீதிமன்ற அவமதிப்பு விண்ணப்பத்தைத் தாக்கல் செய்து ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

யாழ் இந்துக் கல்லூரியின் அடிப்படை உரிமை மீறல் வழக்கின் ஒரு பகுதியாக இந்த நீதிமன்ற அவமதிப்பு விண்ணப்பம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாகராஜா வித்தியாலயத்தினை 1C பாடசாலையாக தரமுயர்த்த சத்தியலிங்கம் எம்.பி கோரிக்கை…!

0

வவுனியா சிதம்பரபுரம் ஶ்ரீ நாகராஜா வித்தியாலயத்தினை தரம் 1C பாடசாலையாக தரமுயர்த்த நடவடிக்கையெடுக்குமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுனர், வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர், வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,

வவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயமானது தற்போது தரம் 2 பாடசாலையாக இயங்கி வருகின்றது.

1995ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுமார் 4 ஏக்கர் விஸ்தீரணமுடைய குறித்த பாடசாலையில் தற்போது 615 வரையிலான மாணவர்களும் 32 ஆசிரியர்கள் உள்ளடங்கலாக 35 பேர் பணிபுரிகின்றனர்.

இங்கு தரம் 12, 13 வகுப்புக்கள் 3 ஆண்டுகளாக இடம்பெற்ற போதிலும் கல்வி திணைக்களத்தின் அனுமதி கிடைக்காமையினால் கல்விகற்ற மாணவர்கள் அருகிலுள்ள கோமரசங்குளம் மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தூரம் மற்றும் அமைவிடத்தின் அடிப்படையில் இப்பாடசாலையில் தரம் 12,13 வகுப்புக்களை ஆரம்பிக்க வேண்டியுள்ளமை காலத்தின் தேவையாகும்.

மேற்படி பாடசாலையினை தரமுயர்த்துதல் தொடர்பில் வவுனியா பிரதேச அபிவிருத்திக்குழு மற்றும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களிலும் நான் கோரிக்கை முன்வைத்திருந்தேன்.

மிகவும் அதிகஸ்ர பகுதி மாணவர்களை கொண்ட இப்பாடசாலையினை குறித்த பகுதியின் நலனை கருத்திற் கொண்டும் மாணவர்களின் சிறந்த கற்றல் நடவடிக்கையின் பொருட்டும் தரம் 1C பாடசாலையாக தரமுயர்த்த ஆவன செய்யுமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

யாழ் பண்டத்தரிப்பில் இருந்து அகற்றப்பட்ட இராணுவ முகாம்..!

0

பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பிரதேச சபையின் கொல்களம் அமைந்துள்ள காணியானது 2012 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் தற்போது அந்த காணியை விட்டு இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.

அங்கிருந்து வெளியேற்றப்பட்ட இராணுவத்தினர் அராலி இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த காடாப்புலம் காணியானது இன்று புதன்கிழமை பிரதேச சண்டிலிப்பாய் செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுழிபுரம் பகுதியில் இருந்த இராணுவ முகாமும் அகற்றப்பட்டு அங்கிருந்த இராணுவத்தினர் சங்கானையில் உள்ள இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் பாடசாலை மாணவனுடன் உல்லாசம்; ஆசிரியைகள் அனைவரும் உடனடி பணி நீக்கம்..!

0

இவர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட அந்தரங்க காணொளி அழைப்புகள் (Video Calls) மற்றும் காட்சிகள், அந்த மாணவரின் நண்பர் ஒருவரால் சமூக ஊடகங்களில் கசியவிடப்பட்டுள்ளன.​

இதனைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் இடைநீக்கம்-முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நான்கு ஆசிரியைகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த மாணவரிடமிருந்து ஆசிரியைகள் பணத்தைப் பெற்றுக் கொண்டு இத்தகைய செயல்களில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் கல்வி அமைச்சின் ஒழுக்காற்றுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.​

சைபர் குற்றத்தடுப்பு பிரிவு-காணொளிகள் கசிந்த விதம் மற்றும் அதனைப் பரப்பியவர்கள் குறித்து காவல்துறையின் சைபர் குற்றத் தடுப்புப் பிரிவினர் தனி விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.​

நாட்டின் முன்னணி பாடசாலை ஒன்றில் ஆசிரியர்களின் இத்தகைய ஒழுக்கமற்ற செயல் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை குறித்த ஆசிரியைகள் சமூகப் பிறழ்வான செயல்களில் ஈடுபட்டமை உறுதிப் படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் அனைவரையும் அரச சேவையிலிருந்து முழுமையாக நீக்க வேண்டியது கல்வி அமைச்சரின் பொறுப்பாகும்.

ஒழுக்கமற்ற கல்வி மாணவர்களை எங்கு கொண்டு சேர்க்கின்றது என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

பணிப்பெண்ணாக சென்ற 15 வயது மலையக சிறுமிக்கு நடந்த கொடூர செயல்..!

0

வீட்டுப்பணிப் பெண்ணாக வந்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2026.01.18 அன்று கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது மலையக பகுதியை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது கல்முனை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன், கடந்த 2026.01.15 அன்று குறித்த வீட்டில் பணிப் பெண்ணாக செயற்பட்ட போது, இரவு தன்னை குறித்த சந்தேக நபர் அழைத்துச் சென்று தன்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக சிறுமி வாக்குமூலம் ஒன்றினை வழங்கியதும், பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளி திருமணம் முடித்த யாழ் பெண் வைத்தியர் சனி விவாகரத்துக்கு முடிவு..!

0

கடந்த வெள்ளிக் கிழமை கொழும்பில் இஞ்சினியர் ஒருவரை மணம் முடித்த யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக் கொண்ட கொழும்பில் வசித்து வந்த 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் விவாகரத்து செய்வதற்கு முடிவு செய்துள்ளார்.

மாப்பிளையான இஞ்சியினர் ஓ.எல் வரையும் கல்வி கற்றவர் என்பதுடன் யாழ் தொழில்நுட்பக்கல்லுாரியில் மட்டுமே இஞ்சினியரிங் கற்றுள்ளார்.

தொழில்நுட்ப கல்லுாரியில் கல்வி கற்று வெளியேறிய மாப்பிளை அதன் பின்னர் மத்தியகிழக்கு நாடு ஒன்றில் கட்டட மேற்பார்வையாளராக வேலை செய்து வந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

இவரையே குறித்த பெண் வைத்தியரின் பெற்றோர் மற்றும் உறவுகளுக்கு இஞ்சினியர் என கூறி தலையில் மிளகாய் அரைத்து கலியாணம் கட்டி வைத்துள்ளார் புறோக்கர்.

பெண்ணின் இரு சகோதரர்களும் புலம்பெயர் நாட்டில் இருந்து விசாரித்த போதும் மாப்பிளை இஞ்சினியர் என்றே புறோக்கர் மற்றும் மாப்பிளையின் சகோதரர்களால் கூறப்பட்டுள்ளது.

இந் நிலையில் நேற்று முன்தினம் கொழும்பில் நடந்த திருமண வைபவத்தின் பின் நேற்றே மாப்பிளையின் சுய விபரம் வைத்திய மணமகளுக்கு தெரிய வந்துள்ளது.

அத்துடன் மாப்பிளை 2011ம் ஆண்டு யாழில் உறவினர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் எனவும் தெரிய வருகின்றது.

பெருமளவு சீதனப் பகிர்வுகளும் நடைபெற்றுள்ள வேளையில் நேற்று மாலையே மணமகள் மாப்பிளையை விட்டு பிரிந்து கொழும்பில் உள்ள அவளது பெற்றோருடன் வந்து விட்டதாக உறவுகள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிக்கத் தயார் – மணிவண்ணன் அறிவிப்பு

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிக்கவும் எதிர்வரும் தேர்தல்களில் சேர்ந்து போட்டியிடும் எந்தத் தடையும் இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சி வெறுமனே தேர்தலை மையமாகக் கொண்டு இயங்காமல் ஒரு கொள்கையை முன்வைத்த அணிதிரட்டலை மேற்கொள்ள வேண்டும் என விஸ்வலிங்கம் மணிவண்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடக நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் கூட்டணிக்கு நல்லூர் பிரதேச சபையில் ஆட்சி அமைக்க வேண்டிய தேவை இருந்தது.

அதனால் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் ஏற்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் அங்கு ஆட்சியமைத்தோம்.

அதேபோன்று வேறு உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு நாங்கள் ஆதரவு வழங்கியுள்ளோம். இதை மறுக்க முடியாது.

அதேநேரம், எதிர்வரும் தேர்தல்க ளில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் ஒற்றுமையாக இணைந்து போட்டியிடுவதற்கும் எவ்வித தடையும் இல்லை.

அவர்களுடன் இணைந்து பயணிப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது.

ஆனால் தமிழரசுக் கட்சி தேர்தல் அரசியலுக்குள் மட்டுமே சிக்கிக் கொள்ளாமல் ஒரு கொள்கையையும் ஒழுக்க நெறிகளையும் முன்னிலைப்படுத்தி ஒரு வலுவான அணி திரட்டலை மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு செயற்பட்டால் நாங்கள் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிப்பதில் எந்தத் தடையும் இருக்காது என்றார்.

சிறீதரனின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவி பறிப்பு..!

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) அரசியல் குழுவின் ஆலோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஏற்க மறுத்தமையால், அவரை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கக் கட்சி தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று (25) பிற்பகல் மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியானது தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவினாலேயே வழங்கப்பட்டது. தேர்தல் முடிந்த பின்னர் வவுனியாவில் நடைபெற்ற அரசியல் குழுக் கூட்டத்தில், அப்போதைய தலைவர் மாவை சேனாதிராஜாவும் கலந்து கொண்டிருந்தார். அந்தக் கூட்டத்திலேயே தேசியப் பட்டியல் ஆசனத்தை வைத்தியர் சத்தியலிங்கத்திற்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.”

“அதேபோன்று நாடாளுமன்றக் கொறடா பதவியை வைத்தியர் சத்தியலிங்கத்திற்கும், நாடாளுமன்ற நடவடிக்கைக் குழுவின் பிரதிநிதியாக இரா. சாணக்கியனையும் நியமிக்கத் தீர்மானித்தோம். நாடாளுமன்றக் குழுவின் தலைவராக எஸ். சிறீதரனை நியமித்தோம். ஒரு குழு நியமித்த பதவியை மாற்றுவதற்கான அதிகாரம் அக்குழுவிற்கே உண்டு.”

“அரசியல் குழு அவர் மீது நம்பிக்கை வைத்து ஏகமனதாக இப்பதவியை வழங்கியது. ஆனால், அவர் அரசியலமைப்புச் சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என அரசியல் குழு இரண்டு தடவைகள் ஆலோசனை வழங்கியிருந்தது. நேற்று திருகோணமலையில் நடைபெற்ற கூட்டத்திலும் சுமார் 4 மணித்தியாலங்கள் இது குறித்து வலியுறுத்தியும் அவர் செவிமடுக்கவில்லை.”

“கட்சியின் எந்த உயர் சபை அவருக்குப் பதவியை வழங்கியதோ, அந்தச் சபையின் ஆலோசனையை அவர் நிராகரித்தால், அப்பதவியை அவரிடமிருந்து மீளப் பெறத் தீர்மானித்துள்ளோம்.” என்றார்.

எனினும், இது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திடம் வினவிய போது, “அவ்வாறு சிறீதரனைப் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான எந்தவொரு இறுதித் தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!