Wednesday, February 5, 2025
Huis Blog Bladsy 3

வவுனியாவில் தொலைபேசி கோபுரத்தில் ஏறிய நபருக்கு நேர்ந்த கதி..!

0

வவுனியா மகாரம்பைக்குளத்தில் தொலைபேசி கோபுரத்தை சீர்செய்யச் சென்ற தொழிநுட்ப உத்தியோகத்தர் ஒருவர் கோபுரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று(01.02.2025) இடம்பெற்றுள்ளது.

அத்தே மஹகிரில்ல, நிகவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய எச். எம். சுதேஷ் சதுரங்க ஹேரத் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான 50 மீற்றர் உயர தொலைபேசி கோபுரத்தின் பாகங்களை அகற்றும் போதே தொழில்நுட்ப உத்தியோகத்தர் கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிரிழந்த தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஊழியர்களுடன் தொலைபேசி கோபுரத்தில் ஏறி சில பாகங்களை அகற்றும் போது உதிரி பாகங்கள் அடங்கிய பையுடன் கீழே விழுந்துள்ளதாக பொலிசார் தெரவித்துள்ளனர்.

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையில் பாரிய வீழ்ச்சி..!

0

சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, ஒரு முட்டையின் விலை ரூ.26 முதல் 30 வரையிலும் கோழி இறைச்சி கிலோகிராம் ஒன்றின் விலை ரூ.650 முதல் 850 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முட்டை மற்றும் கோழி உற்பத்தி அதிகரித்துள்ளதாலும் தேவை குறைந்ததாலும் விலைகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சிறப்பு அங்காடிகளில் பத்து முட்டைகள் கொண்ட ஒரு பொதி ரூ.500 முதல் 520 வரை விற்கப்படுவதாகவும் நுகர்வோர் கூறியுள்ளனர்.

அத்தோடு, கோழி இறைச்சி கிலோகிராம் ஒன்று 600 ரூபாய் மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மாவையின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய நாமல் ராஜபக்ஷ..!

0

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச இன்றைய தினம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதன் போது பொதுஜன பெரமுனவின் வடக்குக்கான அமைப்பாளர் கீதனாத் காசிலிங்கமும் மாவை சேனாதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

கிளிநொச்சி-வவுனியா பொலிஸ் நிலையங்களை மூடுமாறு மக்கள் கோரிக்கை..!

0

கிளிநொச்சி இராமநாதபுரம் , வவுனியா ஈச்சங்குளம் பகுதி பொலிசாரின் செயற்பாடுகளால் பொலிஸ் நிலையங்களை மூடுமாறு மக்கள் விரக்தியில் தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்ட சட்டவிரோத வியாபாரங்களை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.

அதன் போது கருத்து தெரிவித்த பிமல் ரட்நாயக்க,

தான் இராமநாதபுரம் , ஈச்சங்குளம் ஆகிய பகுதிகளுக்கு மக்கள் சந்திப்புக்கு சென்ற சமயம் அப்பகுதி மக்கள் பொலிசாரின் விரும்பத்தகாத செயற்பாடுகளால், பொலிஸார் மீது நம்பிக்கை இழந்து விரக்தி நிலையில் உள்ளனர்.

சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தால், உடனேயே சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு அந்த தகவல் செல்கின்றன என தெரிவிக்கின்றனர்.

தமது பகுதியில் பொலிஸ் நிலையம் இருந்தும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், எதற்காக பொலிஸ் நிலையம், அதனை மூடிவிடுங்கள் என என்னிடம் தெரிவித்தனர் என மேலும் தெரிவித்தார்.

அதற்கு பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் பதில் அளிக்கையில்,

கீழ்நிலை பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையீனம் இருந்தால் , மேலதிகாரிகளுக்கு தகவல் வழங்க முடியும். என தெரிவித்தார்.

அதன் போது ஜனாதிபதி அனுர, வல்வெட்டித்துறை பருத்தித்துறை பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் அந்த தகவல் வழங்கியவர் தொடர்பில், சட்ட விரோத மதுபான உற்பத்தியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுவதாக எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என கூறினார்.

மாவை சேனாதிராஜாவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தவுள்ள ஜனாதிபதி; வெளியாகிய தகவல்..!

0

தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த மாவை சேனாதிராஜாவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேரில் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடல் நலக்குறைவினால் நேற்றிரவு (29) உயிரிழந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக மாவிட்டபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளைய தினம் (31) யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி மாவை சேனாதிராஜாவின் வீடடுக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இதற்கான முன்னேற்பாடுகளில் பாதுகாப்பு வட்டாரங்கள் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை அநுரகுமார திசாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு என சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நாளை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்.

அர்ச்சுனா எம்.பி உள்ளிட்ட ஐவருக்கு எதிரான மனு; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

0

யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள நிலையில் அவருக்கு எதிராகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் எனக் கருதி ஐந்து பேருக்கு எதிராகத் தடை உத்தரவு கோரி யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

யாழ். காவல்துறையினரால் நேற்று (29.01.2025) இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்பதற்காக நாளை (31.01.2025) யாழ்ப்பாணம் வருகின்றார்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான போராட்டத்தைத் தடுக்கும் வகையில் ஐந்து பேருக்குத் தடை கட்டளை கோரி காவல்துறையினர் நீதிமன்றில் விண்ணப்பித்திருந்தனா்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ச.சசிகரன், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் பிரபாகரன், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் முருகையா கோமகன் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராகத் தடை கட்டளை கோரி இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பில் தங்கள் தரப்பு நிலைப்பாட்டை நேரடியாகவோ, சட்டத்தரணி ஊடாகவோ யாழ். நீதிவான் நீதிமன்றில் முன்வைக்குமாறு நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு கட்டளையிட்டிருந்தது.

வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ச.சசிகரன் மற்றும் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் பிரபாகரன் சார்பில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் முன்னிலையாகி தனது வாதங்களை முன்வைத்தனர்.

இதையடுத்து, ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு இடையூறு இல்லாமல், அரசியலமைப்புக்குட்பட்ட வகையில் கவனயீர்ப்பை முன்னெப்பதற்கான உரிமை சகலருக்கும் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது இன்றைய தினம் (30.01.2025) குறித்த மனுவை நிராகரித்துள்ளது.

யாழ் பல்கலை பொருத்தமற்ற மாணவர்கள் மீது நடவடிக்கை தேவை – பல்கலை ஆசிரியர் சங்கம்

0

யாழ் பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் இன்று முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர். யாழ் பல்கலை ஆசிரியர் சங்கத்தின் அவசர கலந்துரையாடலுக்கு பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்ட யாழ் பல்கலை ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் முழு வடிவம் வருமாறு,

அண்மையில் இடம்பெற்ற யாழ் பல்கலைக் கழகத்தின் பேரவைக் கூட்டத்தின் பின்னர் பல்கலைக் கழகத்தின் கலைப் பீடாதிபதி தனது பதவியினை இராஜினாமா செய்தார்.

இராஜினாமாவினை அடுத்துப் பல்கலைக் கழகம் பற்றிய பல கருத்துக்கள் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் நிலைமை குறித்துக் கலந்துரையாடும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் விசேட பொதுக்குழுக் கூட்டம் திங்கட்கிழமை காலை 10 மணிக்குக் கலைப் பீடத்தில் இடம்பெற்றது.

மீறல்களிலும், வன்முறைகளிலும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தினை பாதிக்கும் வகையிலும், உடைமைச் சேதங்களை விளைவிப்பதிலும் சீரழிவு மிக்க நடவடிக்கைகளிலும் ஈடுபடும் மாணவர்களிற்கு எதிராகப் பல்கலைக் கழகத்தின் நிருவாகம் கடந்த காலத்திலே உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமை குறித்து இந்தக் கூட்டத்திலே பல உறுப்பினர்களும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

திட்டமிட்ட முறையில் விசாரணைகளில் தாமதங்கள் ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தண்டனைகளில் இருந்து தப்பித்துச் செல்ல நிருவாகம் வழிசமைத்துக் கொடுப்பதாகக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

தண்டனைகளின் நோக்கம் மாணவர்களை விரோதிப்பது அல்ல; மாறாக தாம் செய்யும் தவறுகளை மாணவர்கள் உணர்ந்து எதிர் காலத்திலே செம்மையாகச் செயற்படும் வகையில் ஊக்குவிப்பதே என்பதுவும் இங்கு சுட்டிக் காட்டப்பட்டது.

கூட்டத்தின் இறுதியில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இன்று திங்கட்கிழமை அன்று பல்கலை ஆசிரியர்கள் ஓர் அடையாள வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவது எனவும், நாளை செவ்வாய்க்கிழமை முதல் தொடர் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடுவதும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

கோரிக்கைகள்:

1. மோசமான செயல்களிலே ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இராஜினாமா செய்த கலைப் பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் அவர்கள் முன்வைத்த கோரிக்கை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.

பேராசிரியர் ரகுராம் தனது பதவி விலகலினை வாபஸ் பெற்று மீளவும் பீடாதிபதிப் பொறுப்பினை ஏற்பதற்கு உரிய ஒரு சூழலினைப் பல்கலைக்கழக நிருவாகம் பல்கலைக்கழகத்திலே ஏற்படுத்த வேண்டும்.

2. மாணவர்களுக்கு எதிரான‌ ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற பேரவைக் கூட்டத்திலே மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் உடனடியாக வாபஸ் பெறப்படல் வேண்டும்.

3. மோசமான செயல்களிலே ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் உறுதியாக இருக்கும் போதிலும், அவற்றினைப் பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வேண்டுமென்றே கால தாமதங்களை ஏற்படுத்தல், வேண்டுமென்றே நிருவாகத் தவறுகளை இழைத்தல் போன்ற செயன்முறைகள் மூலம் மீறல்களிலே ஈடுபட்ட மாணவர்கள் தண்டனையில் இருந்து தப்புவதற்கு நிருவாகம் வழிசமைத்துக் கொடுக்கும் போக்கு உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்படல் வேண்டும்.

4. இரண்டு மாணவர்கள் கணித புள்ளிவிபரவியல் துறையின் வாயிலில் இருந்த பூட்டினை உடைத்தமை தொடர்பிலே இடம்பெற்ற விசாரணையினை வேண்டுமென்றே தாமதமடையச் செய்த பல்கலைக்கழக நிருவாகிகளுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும்.

அதே போன்று கலைப் பீடத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை வேண்டுமென்றே இழுத்தடிப்போர் மீதும் விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

இது தொடர்பிலே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலையீட்டினையும் கோருவதற்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

5. கலைப்பீடத்திலும் விஞ்ஞானப் பீடத்திலும் மோசமான செயல்களிலே ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதில் இருந்து தவறிய பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களின் மீது எமது ஆசிரியர் சங்கம் நம்பிக்கையினை இழந்துள்ளது.

எனவே எல்லா வெளிவாரி உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும். புதிய உறுப்பினர்கள் பேரவைக்கு நியமிக்கப்பட வேண்டும். இது தொடர்பான சங்கத்தின் விண்ணப்பம் ஒன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுக்கும், உயர் கல்வி அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

மேற்கூறிய ஐந்து கோரிக்கைகளையும் உள்ளடக்கிய கடிதம் ஒன்று பல்கலைக் கழகத்தின் துணைவேந்தருக்கும், எல்லாப் பீடாதிபதிகளுக்கும் ஆசிரியர் சங்கத்தினால், இன்றைய கூட்டத்திலே மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் ஒன்றுக்கு அமைய‌ அனுப்பி வைக்கப்பட்டது – என்றுள்ளது.

மாங்குளத்தில் நாயை துாக்கில் போட்ட சரிதா சிறையிலடைப்பு..!

0

மாங்குளம் பகுதியில் நாயை தூக்கிட்டு கொலை செய்த 48 வயது சசிதா இன்று முல்லைத்தீவு நீதிபதியால் 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதே வேளை குறித்த பெண்ணிடம் நாயை ஒப்படைக்கச் சொன்ன இணக்கசபை முட்டாள்களும் விசாரிக்கப்பட்டு அவர்களுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத் தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது.

அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி அனுர வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி..!

0

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு நியாயமான அடிப்படை சம்பள உயர்வை வழங்குவதற்கும், ஓய்வூதியதாரர்களின் சம்பள முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குாமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் மாவட்ட செயலகத்தில் இன்று (26) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அரச சேவையை மக்களின் உரிமையாகவும், அரச அதிகாரிகளின் பொறுப்பாகவும் மாற்றும் வகையில் அதனை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

தற்போதுள்ள அரச சேவையில் மக்கள் திருப்தி அடையவில்லை என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் திறமையான சேவைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜுன் மாதத்திற்குள் அரச சேவையில் சரியான தரவு கட்டமைப்பொன்றை தயாரிப்பதற்கு செயலாற்றி வருவதாகவும், தற்போது அரச சேவையில் உள்ள தரவுகளின் அடிப்படையில் சரியான தீர்மானங்களை எடுப்பதற்கான இயலுமை இல்லை எனவும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், அரச சேவையில் தற்போது உருவாகியுள்ள சுமார் 30,000 அத்தியாவசிய வெற்றிடங்களை அவசரமாக நிரப்ப வேண்டியதன் அவசியம் குறித்தும் அந்த கூட்டத்தில் கலந்துரையாடப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அநுர ஆட்சி தொடர்பில் ரணில் வெளியிட்ட அறிவிப்பு..!

0

“என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்” என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(26) காலியில் வசிக்கும் மக்களிடம் கூறியுள்ளார்.

மறைந்த மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் வசித்து வந்த காலியில் உள்ள கபுஹெம்பல வீட்டிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை விஜயம் செய்தார்.

அந்த நேரத்தில் உள்ளூர்வாசிகள் வீட்டைச் சுற்றி திரண்டனர். விக்டர் ஐவனின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு ரணில் விக்ரமசிங்க புறப்படத் தயாராகிக் கொண்டிருந்த போது, ​​அந்தப் பகுதிக்கு வந்திருந்த குடியிருப்பாளர்கள் சாப்பிட அரிசி இல்லை என்றும் தேங்காய் இருநூறு ரூபாய்க்கு உயர்ந்துவிட்டதாகவும் கூறினர்.

“எங்கள் நம்பிக்கை நீங்கள்தான் ஐயா,” என்று குடியிருப்பாளர்கள் ரணில் விக்ரமசிங்கவிடம் கூறினர்.

இதன் போது உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, “என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்றார்.

error: Content is protected !!