Monday, March 17, 2025
Huis Blog Bladsy 3

தயாராகிறது பட்டியல்; பல முக்கிய புள்ளிகளின் விபரங்கள் விரைவில் – அரசு

0

முன்னாள் அமைச்சர்கள் அல்லது ஆட்சியாளர்களின் ஊழல்கள் தொடர்பான பட்டியல்களை வெளியிடுவதை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை. ஏற்கனவே வெளியிடப்பட்டதைப் போன்று பிறிதொரு முக்கிய பட்டியலொன்றும் தற்போது தயாராகிக் கொண்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் அமைச்சர்கள் அல்லது ஆட்சியாளர்களின் ஊழல்கள் தொடர்பான பட்டியல்களை வெளியிடுவதை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை. அந்தந்த நிறுவனங்கள் அதற்கான பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றன.

இதுவரை வெளியிடப்பட்ட பட்டியல்களில் இடம்பிடித்தவர்களே அவை தொடர்பில் கலவரமடைந்துள்ளனர். இன்னும் பல பட்டியல்கள் வெளியாகக் காத்திருக்கின்றன.

அதேபோன்று ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியல்களில் இன்னும் சில தொகுதிகளும் உள்ளன. பொறுத்தமான சந்தர்ப்பத்தில் அவற்றையும் வெளிப்படுத்துவோம்.

இவை தவிர பிறிதொரு முக்கிய பட்டியலும் தயாராகிக் கொண்டிருக்கிறது. அது இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட பட்டியல்களைப் போன்றதல்ல. மிக முக்கியத்துவம் வாய்ந்ததும் பொறுப்புக்கூற வேண்டியதுமாகும்.

அதில் அரசியல்வாதிகள் தவிர்ந்த மேலும் பல முக்கிய புள்ளிகளும் காணப்படுகின்றனர் என்றார்.

கிரிப்டோ வணிகம் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையாக இருங்கள் – பிரதமர் அலுவலகம்

0

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவலாக விளம்பரப் படுத்தப்பட்டு வரும் மோசடியான ‘கிரிப்டோ’ பண வணிகம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த மோசடி விளம்பரங்கள் சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப் படுத்தப்பட்டு, வெளிநாட்டு நிறுவனங்களால் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிற பிரபல இலங்கை பிரமுகர்களின் பெயர்களைப் பயன்படுத்தி இந்த மோசடியான விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பிரபலமானவர்கள் மீதான மக்களின் நல்லெண்ணத்தை சிதைத்து, அவர்கள் மீதான நம்பிக்கையை உடைப்பதற்கு மக்களை திசை திருப்புவதே இந்த விளம்பரங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.

லிதுவேனியாவிலிருந்து இயங்கும் இந்த மோசடி கணக்குகள் மூலம், இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களை இலக்காகக் கொண்டு மோசடியான விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனவே, அரச அதிகாரிகள் மற்றும் பிரபலமானவர்களின் அங்கீகாரம் உள்ளதாக பொய்யாகக் கூறும், கிரிப்டோ பண முதலீடுகளை விளம்பரப்படுத்தும் ஒன்லைன் விளம்பரங்களிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவரை துஷ்பிரயோகம் செய்த நபரை கைது செய்யா விட்டால், மாகாணம் தளுவிய வேலை நிறுத்தம்..!

0

நேற்று இரவு வைத்திய சாலை வளாகத்தில் பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபரை உடனடியாக கைது செய்யக் கோரி, அனுராதபுரம் போதனா மருத்துவமனை மருத்துவர்கள் இன்று அதிகாலை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண் தனது கடமை அறைக்குச் சென்று கொண்டிருந்த போது தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து விவாதிக்கவும் எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானிக்கவும் GMOAவின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டதாக GMOAவின் ஊடகத் தொடர்பாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

நாளை புதன்கிழமை காலை 8 மணிக்குள் சந்தேக நபர் கைது செய்யப்படாவிட்டால், மாகாணம் முழுவதும் உள்ள மருத்துவ ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்துவார்கள் என்று அவர் எச்சரித்தார்.

தற்போது, அனுராதபுரம் போதனா மருத்துவ மனையில் அவசர சேவைகள் தவிர அனைத்து ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்கின்றனர் என்று அவர் கூறினார்.

தமிழரசுக் கட்சியிலிருந்து பதவி விலகிய உறுப்பினர்; வலுக்கும் உட்கட்சி மோதல்..!

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சி.காண்டீபன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“இலங்கைத் தமிழரசு கட்சியின் ஆயுட்கால உறுப்பினரும் எருவில் வட்டார தமிழரசு கட்சியின் வட்டார கிளைக்குழு தலைவராகவும் பிரதேசக் கிளை உறுப்பினராகவும் பதவி வகித்து வருகின்றேன்.

கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் எருவில் வட்டாரத்தில் போட்டியிட்டு அளிக்கப்பட்ட வாக்குகளில் 50 வீதத்துக்கும் அதிகமான மக்கள் ஆணையைப் பெற்று சிறந்த முறையில் மக்களுக்கு சேவையாற்றி கட்சி வளர்ச்சிக்காகவும் செயற்பட்ட எனக்கு இம்முறை உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தகுந்த காரணங்கள் எதுவுமின்றி மாற்றுக் கட்சியில் இருந்து தமிழரசுக் கட்சியில் இணைந்த களுவாஞ்சிகுடி வட்டார வேட்பாளரை தவிசாளர் ஆக்குவதற்கு நான் இடையூறாக இருப்பேன் என்கின்ற ஒரே காரணத்துக்காக கட்சியின் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணாக எனக்கு வேட்பாளராக இடம் தராமல் புறக்கணிக்கப்பட்டு இருட்டடிப்புச் செய்யப்பட்டேன்.

இது சம்பந்தமாக கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் அச்சமயம் எழுத்து மூலம் அறிவித்தும் இன்று வரை சம்பந்தப்பட்ட எவரிடம் இருந்தும் எவ்வித பதிலும் கிடைக்காமல் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்துள்ளேன்.

அந்த வகையில் அரசியல் நடைமுறைக்கு மாறாகவும் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணாகவும் கட்சி செயற்பட்டுள்ளதாலும் கட்சிக்குள் காணப்படும் உட்கட்சி முரண்பாடுகளினால் மக்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளது.

மக்கள் கட்சியில் அதிருப்தி அடைந்துள்ளதாலும் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால அங்கத்துவத்தில் இருந்தும் கட்சியில் நான் வகித்து வரும் சகல பதவிகளிலிருந்தும் மிகுந்த மனவேதனையுடன் எனது சுயவிருப்பின் பேரில் இராஜனாமா செய்கின்றேன் என்பதை இத்தால் அறியத் தருகின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

அதிக அளவில் மாத்திரைகளை உட்கொண்ட மாணவி உயிரிழப்பு..!

0

மஸ்கெலியாவில் பாடசாலை மாணவி ஒருவர் அதிக அளவில் மாத்திரைகளை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட பிரிவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

நேற்றைய தினம் சிறுமியின் வாய் பகுதியில் நுரை வருவதை கண்ட பெற்றோர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க கொண்டு சென்றுள்ளனர்.

இதன் போது, சிறுமியை பரிசோதித்த மஸ்கெலியா மாவட்ட வைத்திய அதிகாரி, சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளாரென தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மாணவியின் சடலம் இன்று டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலதிக பரிசோதனைக்கு பின்னர் மாணவியின் சடலம் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை வைத்தியசாலை மனநல விடுதியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த யுவதி துஸ்பிரயோகம்..!

0

தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையின் மனநோயாளர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளம் யுவதியொருவருடன் பாலியல் உறவு கொண்டார் என்ற குற்றச்சாட்டில், வைத்தியசாலையின் துப்புரவு பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பளை பொலிசாரால் சந்தேக நபர் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

மனநோயாளர் சிகிச்சைப் பிரிவில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த யுவதியொருவர் அளித்த முறைப்பாட்டையடுத்து, அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரியினால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யுவதியை காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாகவும் சந்தேகநபர் கூறியதாகவும், இதையடுத்து அவர்களுக்குள் வைத்திய சாலை வளாகத்துக்குள்ளேயே பாலியல் உறவு ஏற்பட்டதாகவும் யுவதியின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனக்கு திருமணம் நிகழ்ந்து, குழந்தைகள் உள்ளதையும் அவர் யுவதியிடம் மறைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், வைத்திய சாலையின் ஏனைய சிலருடன் பேசிய யுவதி, அந்த நபரை காதலிக்கலாமா என வினவியதாகவும், அந்த நபருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள விவகாரத்தை அவர்கள் குறிப்பிட்ட பின்னர், யுவதி இந்த விவகாரத்தை விடுதிக்கு பொறுப்பான வைத்தியரிடம் முறையிட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதை தொடர்ந்து, யுவதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியினால் பரிசோதிக்கப்பட்டு, அறிக்கையிட்டதை தொடர்ந்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனநோயாளர் சிகிச்சைப் பிரிவில் உள்ள பெண்கள் விடுதியை, ஆண் துப்புரவு பணியாளர் ஒருவர் சுலபமாக அணுகும் விதத்தில் இருந்தமை பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அனுராதபுர வைத்திய சாலையில் பெண் மருத்துவர் பாலியல் துஸ்பிரயோகம்..!

0

அனுராதபுரம் வைத்திய சாலையில் பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நபரைக் கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபர், இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபரின் இருப்பிடம் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

முன்னதாக கருத்துரைத்த எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அனுராதபுரம் வைத்திய சாலையில், திங்கட்கிழமை (10) இரவு கடமையில் இருந்த பெண் வைத்தியரை கத்தியை காண்பித்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார் என்றார்.

இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனுராதபுரம் வைத்திய சாலையில் கடமையாற்றுவோர், வேலைநிறுத்த போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை (11) ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பாதிக்கப்பட்ட வைத்தியர் தமிழர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“பழிக்கு பழி” பெண்களை நிர்வாணப்படுத்தி சிரியாவில் நடக்கும் கொடூரம்..!

0

சில காலமாக சிரியாவில் அமைதி மெல்லத் திரும்பிக் கொண்டிருந்த சூழலில், இப்போது அங்கே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

சிரியாவில் உள்ள ஆளும் தரப்புக்கும் முன்னாள் ஜனாதிபதி பஷர் அல் அசாத் ஆதரவாளர்களுக்கும் இடையே வெடித்த மோதலில் கடந்த இரண்டு நாட்களில் 1000 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய கிழக்குப் பகுதிகளில் தொடர்ச்சியாக மோதல் போக்கே நிலவி வருகிறது. ஏற்கனவே இஸ்ரேலுக்கும் ஹமாஸ், ஹிஸ்புல்லா இடையே சில காலமாகவே மோதல் நிலவி வந்தது. இப்போது தான் இஸ்ரேலில் மெல்ல அமைதி திரும்பி வருகிறது. இதற்கிடையே இப்போது திடீரென சிரியாவில் வன்முறை வெடித்துள்ளது.

மத்திய கிழக்கில் அமைந்துள்ள சிரியாவில் கடந்த 14 ஆண்டுகளாக அங்கு உள்நாட்டுப் போர் தொடர்கிறது. அங்கு பஷர் அல் அசாத் என்பவரே கடந்த 2000ம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக இருந்தார். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு எதிராகப் பல முறை கிளர்ச்சி வெடித்தது. இருப்பினும், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் அவர் அதை முறியடித்தே வந்தார். இடையில் 2020ம் ஆண்டு அங்கு முக்கிய போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் பிறகு அங்குச் சற்று அமைதி திரும்பியிருந்தது.

இருப்பினும், கடந்த டிசம்பர் மாதம் அங்கு மீண்டும் கிளர்ச்சி வெடித்தது. ஹெச்டிஎஸ் எனப்படும் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழுவினர் ஆட்சியைப் பிடித்த நிலையில், அசாத் ஆட்சி 24 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. அதன் பிறகு சிரியாவில் மெல்ல அமைதி திரும்பிக் கொண்டு இருந்தது. நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் இப்போது அங்கு மோதல் வெடித்துள்ளது.

சிரியாவில் தற்போதுள்ள பாதுகாப்புப் படையினருக்கும் ஜனாதிபதி பஷார் அசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் வெடித்துள்ளது. தொடர்ச்சியாக நடக்கும் இந்த சண்டைகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சிரியாவில் கடந்த 14 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் தொடர்ந்த போதிலும், இந்தளவுக்கு வன்முறை எப்போதும் நிகழ்ந்ததே இல்லை என குறிப்பிடுகிறார்கள்.

அங்கு கொல்லப்பட்டவர்களில் சுமார் 750 பேர் அப்பாவி பொதுமக்கள் ஆவர். அவர்களும் கூட மிக அருகில் நெருக்கமான தூரத்தில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டே கொல்லப்பட்டுள்ளனர். இது தவிர அரசு பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 125 உறுப்பினர்களும், அசாத் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த 148 பேரும் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. இந்த தாக்குதல் தொடர்ந்து நடக்கும் நிலையில், லடாகியா நகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் அசாத் ஆட்சியில் இருந்த போது எண்ணற்ற கொடுமைகள் அரங்கேறின. அப்போதும் கூட அசாத்துக்கு ஆதரவாகவே அலவைட் சிறுபான்மை பிரிவினர் இருந்துள்ளனர். இதனால் அவர்களை பழிவாங்கும் நோக்கில் தற்போதுள்ள ஆட்சிக்கு ஆதரவான சிலர், அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் பலர் உயிரிழந்தனர். அதன் பிறகு அசாத் ஆதரவாளர்களும் பதிலடி தாக்குதலை ஆரம்பித்ததே இந்த வன்முறைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அரசு தரப்பு விரைவாக எடுத்த நடவடிக்கைகளால் மோதல் சற்று முடிவுக்கு வந்துள்ளது.

இந்த மோதலின் போது பெண்களுக்கு எதிராக சில மோசமான சம்பவங்களும் நடந்துள்ளன. சில பெண்கள் சிறைபிடிக்கப்பட்டு அவர்களின் ஆடைகள் கிழிக்கப்பட்டுள்ளன. மேலும், பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாகவும் அழைத்துச் சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து பெண்களையும் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த வன்முறையால் இரு நாட்களில் மட்டும் 1000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்; சபையில் சாடிய அர்ச்சுனா எம்.பி..!

0

சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் வைத்தியர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட போதும் கடந்த 2 வருடங்களாக இடமாற்றம் பெற்றுச் செல்லாமல் தொடர்ந்தும் அங்கேயே பணியாற்றுவதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இன்றைய (11) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த வைத்தியர் செல்வாக்கைப் பயன்படுத்தி இடமாற்றம் பெற்றுச் செல்லாமல் இருப்பதாகவும் அர்ச்சுனா இதன் போது சுட்டிக் காட்டினார்.

வைத்தியர் இடமாற்றமாகி செல்லாததனால் மன்னார் வைத்திய சாலையில் குழந்தைகளுக்கான வைத்தியர் இன்றி அந்த மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த வைத்தியரை விரைவாக இடமாற்றுமாறு சுகாதார அமைச்சரிடம் கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தேசபந்து தென்னகோனை உடன் கைது செய்ய இன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு..!

0

பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் (ஐ.ஜி.பி)தேசபந்து தென்னகோனை உடனடியாக கைது செய்ய மாத்தறை நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறை (சி.ஐ.டி) விடுத்த கோரிக்கையின் பேரில் இன்று(11) இந்த திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பணி நீக்கம் செய்யப்பட்டமுன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக அவர் தேடப்படுகிறார்.

இதற்கிடையே தென்னகோன், மாத்தறை நீதிபதியின் கைது உத்தரவை இடைநிறுத்த இடைக்கால உத்தரவைக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக, பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, தென்னகோன் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்து வந்தால், அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

தேசபந்து தென்னகோன் தொடர்பான ஏதேனும் தகவல்களை வழங்குமாறு காவல்துறை பொது மக்களை வலியுறுத்தியுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனைக் கண்டுபிடிக்கும் பணி சி.ஐ.டிக்கு வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!