Saturday, June 7, 2025
Huis Blog

தமிழரசுக் கட்சியை திசைகாட்டி ஆதரிக்காது; அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்..!

0

வட- கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்கத் தேசிய மக்கள் சக்தி ஆதரவளிக்கவுள்ளது என்று சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியை அடியோடு நிராகரிக்கின்றோம் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கத் தமிழரசுக் கட்சிக்கோ அல்லது வேறு எந்தக் கட்சிகளுக்கோ தேசிய மக்கள் சக்தி ஆதரவு வழங்காது.

மக்கள் வழங்கிய ஆணையை மீறிச் செயற்படும் எண்ணம் எமது கட்சிக்கு இல்லை.

வடக்கு, கிழக்கில் எந்தச் சபைகளில் தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களுடன் இருக்கின்றதோ அந்தச் சபைகளில் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்க முடியும்.

மற்றைய சபைகளில் எந்தக் கட்சி அதிக ஆசனங்களுடன் இருக்கின்றதோ அந்தக் கட்சி ஆட்சியமைக்க முடியும். இதில் தேசிய மக்கள் சக்தி தலையிடாது.

இதைக் குழப்பும் வகையில் – மக்களின் ஆணையை உதாசீனம் செய்யும் வகையில் எந்தக் கட்சியும் செயற்படக் கூடாது.” என தெரிவித்துள்ளார்.

யாழில் பேருந்தில் சிறுமிகளிடம் அத்துமீறிய இருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

0

யாழ் தனங்களப்பு சந்தியில் சிறுமிகளை பாலியல் அத்துமீறல் செயற்பாட்டுக்கு உட்படுத்த முயற்சித்த இரு சந்தேகநபர்களை தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த இருவரும் நேற்று சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் தெரிய வருகையில்,

தனங்களப்பு பகுதியில் குறித்த இருவரும் மிகக் கொடூரமான செயற்பாடுகளைச் தொடர்ச்சியாகச் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இவர்களால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்க்கை நடாத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த இருவரும் அண்மையில் தனங்களப்பு சந்தியில் சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு..!

0

பொசன் வாரத்தை முன்னிட்டு இன்று (07) முதல் 12 ஆம் திகதி வரை அநுராதபுரம் பகுதியில் உள்ள பல பாடசாலைகள் மூடப்படும்.

குறித்த அறிவிப்பை வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, அநுராதபுரம் நகரம் மற்றும் மிஹிந்தலையைச் சுற்றியுள்ள பாடசாலைகள் மூடப்படவுள்ளது.

இந்த நிலையில், பொசன் வாரம் இன்று தொடங்கி 13 ஆம் திகதி வரை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவிப்பு..!

0

அரியாலை – செம்மணி மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை நடத்த அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும் “இந்தப் புதைகுழியில் இருந்து புதைகுழியை தொடர்ச்சியாக அகழ வேண்டும் என்று அவர்களின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணியும் அகழ்வை முன்னெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் திருப்திப்படும் வரையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவனின் கோரிக்கையின் அடிப்படையில் பாதீடு சமர்ப்பிக்கப்பட்டு நீதி அமைச்சின் ஊடாக நிதியை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

அத்துடன், தொல்லியல் தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அபிப்பிராய அறிக்கை மற்றும் அகழ்வில் திருப்தியடைவதாக தெரிவித்த நீதிவான், அவரே தொடர்ந்தும் அகழ்வில் ஈடுபடுவதற்கு அனுமதியும் வழங்கினார்.

அதேசமயம் இரண்டாம் கட்டமாக முன்னெடுக்கப்படும் அகழ்வு பணிகள் இன்றைய தினத்துடன் நிறைவுக்கு வருகிறன.

மேலும், இதுவரை 17- 18 மண்டையோட்டு தொகுதிகள் முழுமையாகவும் பகுதியளவிலும் அடையாளம் காணப்பட்ட நிலையில் 5 முழுமையாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் செம்மணியில் குழந்தைகள் உட்பட 18 எலும்புக் கூடுகள் மீட்பு..!

0

செம்மணியில் குழந்தைகள் எலும்புக்கூடு மீட்பு ,18 எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ் செம்மணி பகுதியில் குழந்தைகளுடன் புதைக்கப்பட்டு இருந்த, புதைகுழி ஒன்று தோண்டப்பட்டது .

இவ்வாறு நடைபெற்று வந்த அகழ்வு பணியில் 18 எலும்பு கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அடையாளம் காணப்பட்டுள்ள 18 எலும்பு கூடுகளில் ஐந்து எலும்பு கூட்டுத் தொகுதியில் அகழ்ந்து எடுக்கப்பட்டது. அவை சட்ட வைத்திய அதிகாரியின் என் பாதுகாப்புக்குள் வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல சில எலும்பு கூட்டுத் தொகுதிகள் இணைந்து காணப்படுவதால், அவை ஒரே இடங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனப்படுகிறது .

இதுவரையில் மீட்கப்பட்ட நிர்வாணமாக மீட்கப்பட்டதால் அவை வெறுமையாக புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது .

திட்டமிடப்பட்ட படுகொலை நடவடிக்கை என்பதாகவும் ,இராணுவத்தினரே இந்த படுகொலைகளை மேற்கொண்டு இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அப்பாவிகளை கைது செய்து அவர்களை மிக கொடூரமாக கொலை செய்து இவ்வாறு புதைக்கப்பட்டுள்ள விடயம் தற்போது அம்பலமாகி இருக்கின்றது.

செம்மணி புதைகுழி விவகாரம் உலகத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

யாழ் ஏதிலியின் கைது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது – அமைச்சர் சந்திரசேகர்

0

யாழ் மாவட்டத்தில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்குத் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் உறுதியுரையேற்பு நிகழ்ச்சியின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது புலம்பெயர் இலங்கையர்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய ஏதிலி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இந்தியாவில் இருந்து வருபவர்களை அநுர அரசாங்கம் கைது செய்கின்றது என சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

வடக்கு ரயில் சேவைகள் ஒரு மாதத்திற்கு நிறுத்தம் – புகையிரதத் திணைக்களம்

0

இலங்கை புகையிரதத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடக்கு பிராந்தியத்திற்கான ரயில் சேவைகள் மேலும் ஒரு மாதத்திற்கு இடைநிறுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான ரயில்வே பாதையில் உள்ள ஐந்து பாலங்களில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் காரணமாகவே இந்த இடைநிறுத்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேவைகள் மீண்டும் தொடங்கும் போது ரயில் நடவடிக்கைகளின் பாதுகாப்பு மற்றும் நீண்டகால செயல்திறனை உறுதி செய்வதற்காக இந்த தற்காலிக இடைநிறுத்தம் அவசியமானது என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

முல்லைத்தீவில் செல்பி எடுக்க முற்பட்ட மாணவிகள் ஆலய கேணிக்குள் வீழந்து பலி..!

0

குமுழமுனை கொட்டுக் கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் இன்றைய தினம் (01.06.2025) படம் எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு – குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் படம் எடுப்பதற்காக இரு யுவதிகள் சென்றுள்ளனர். கேணிக்குள் இறங்கி படமெடுக்கும் போது இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு மாணவிகளும். பூதன்வயல், மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்வி கற்கும் வித்தியானந்த கல்லூரி மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வயிற்று வலிக்கு சிகிச்சைக்கு சென்ற பதின்ம வயது சிறுமி கர்ப்பம்; மருத்துவர்கள் அதிர்ச்சி..!

0

ஹப்புத்தளை, கெல்பன் தோட்டத்தை சேர்ந்த சிறுமி, வயிற்று வலி காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வயிற்று வலி காரணமாக தியத்தலாவ வைத்தியசாலையில் சனிக்கிழமை (31) இரவு சிறுமி அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியை பரிசோதித்த வைத்தியர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை பொலிஸாரால் சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், கெல்பன் தோட்டத்தை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆசிரியர் இடமாற்ற முறைகேடுகள்; 4ஆம் திகதி ஆளுநர் அலுவலகத்தினை முற்றுகை..!

0

ஆசிரியர் இடமாற்ற கொள்கையில் முறைகேடுகள் திருத்தபடாவிடின் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக இலங்கை தாய் மொழி ஆசிரியர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், எதிர்வரும் 4ஆம் திகதி காலை 10.00 மணியளவில் ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தின் கலந்துரையாடல் யாழ் மாவட்டத்தில் இடம்பெற்றது .

குறித்த கலந்துரையாடலில் இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் கல்வி திணைக்களத்தின் இடமாற்ற கொள்கையால் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

வெளி மாவட்டத்தில் ஆசிரியர்கள் பணியாற்றுவதனை தடுப்பது சங்கத்தின் நோக்கமல்ல எனவும் ஆசிரியர்கள் ஏமாற்றபடாது வெளி மாவட்டங்களில் அவர்கள் ஆற்றவேண்டிய காலத்தை வரையறுக்குமாறும் குறித்த கூட்டத்தில் தொழிற்சங்க தீர்மானம் தொடர்பில் பிரஸ்தாபிக்கபட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு சங்கத்தினர் கருத்து தெரிவித்ததுடன் மேற்படி போராட்டம் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!