Friday, April 17, 2026
Huis Blog Bladsy 48

கிளிநொச்சியில் உயர்தரப் பரீட்சை மண்டபத்தில் நிறை வெறியில் மேற்பார்வையாளர்..!

0

கிளிநொச்சி- பூநகரி நல்லூர் மகா வித்தியாலயத்தில் பரீட்சை கடமையின் போது மது போதையில் இருந்த பரீட்சை மேற்பார்வையாளர் குறித்த பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது கடந்த 20ஆம் திகதி இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பூநகரி மகா வித்தியாலயத்தில் கடமையில் இருந்த மேற்பார்வையாளர் ஒருவர் மதுபோதையில் இருந்தது தொடர்பாக வலய கல்வி பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டது.


இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பரீட்சை திணைக்கள அதிகாரிகள் மதுபோதையில் இருந்து பரீட்சை மேற்பார்வையாளரை அந்தப் பணியில் இருந்து நீக்கி உள்ளனர். மேலும், இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை வடக்கின் கல்வித்துறை அதிகாரிகள் உயர்தர கல்வி கலந்துரையாடலுக்கு சென்ற வேளை மது அருந்தி சர்ச்சையில் சிக்கிய போதும் விசாரணைகள் இரண்டு வருடங்கள் கடந்த போதும் இன்று வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்பள்ளி ஆசிரியையும் அவரது கணவரும் அதிரடி கைது..!

0

மாதம்பிட்டி – மிஹிஜயசெவன பகுதியில் பல கோடி ரூபாய் பெறுமதியான ஒரு கிலோகிராமிற்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப் பொருளுடன், முன்பள்ளி ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் பொலிஸாரினால் நேற்றிரவு (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாதம்பிட்டிய பொலிஸாரின் சுற்றிவளைப்பின்போது, முதலில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்யப்பட்ட 32 வயதான ஆசிரியை மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது.


அத்துடன், அவர் தனது வேலைக்கு மத்தியிலும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. பின்னர், ஒரு கிலோ 310 மில்லிகிராம் போதைப் பொருளுடன் வீட்டுக்கு வந்த அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில், சந்தேகநபரான கணவர் வெளிநாடொன்றிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து பொருட்களைப் பெறுபவர் என்றும், உயிரிழந்த ‘கெசெல்வத்தே தினுக’வின் உதவியாளர் என்றும் தெரிய வந்துள்ளது.


கைது செய்யப்பட்ட கணவர் இன்று (23) நீதவான் முன்னிலையில் முன்னிலைப் படுத்தப்பட்ட போது, ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிரான்சில் வவுனியாவைச் சேர்ந்த கணவனுடன் மனைவி கள்ளத் தொடர்பு; இருவரும் பொலிசாரால் கைது..!

0

பிரான்ஸ் பாரிஸ் வொண்டிப் பகுதியில் வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்ட 39 வயதான கணவனும் 36 வயதான மனைவியும் நள்ளிரவு வேளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் விவாகரத்துப் பெற்றுள்ளனா்.

இந் நிலையில் மனைவி மற்றும் அவளது இரு குழந்தைகளுக்குமாக பிரான்ஸ் அரசாங்கம் கொடுக்கும் உதவித் தொகையை மனைவி பெற்றுவந்த நிலையில் இரகசியமாக கணவனுடம் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தெரிய வருகின்றது.


இந் நிலையிலேயே இவர்கள் இருவரும் பிரான்ஸ் பொலிசாரால் நள்ளிரவு வேளை வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

யாழில் மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற நால்வர் கைது..!

0

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குருநகர் பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு கும்பல் ஒன்று போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , கும்பலை சேர்ந்த நால்வரை கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட நால்வரிடமிருந்தும் ஆயிரம் போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து , கும்பலின் ஏனைய வலையமைப்புக்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சில அதிகாரிகளின் பொறுப்பின்மையால் அழியும் வடமாகாணம் – ஆளுநர்

0

வடக்கு மாகாண நிர்வாகத்திலுள்ள ஒரு சில செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்வதற்கு விருப்பமின்றி, தமக்கான வெறும் சலுகைகளை அனுபவிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர். அவர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன், என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, புதுமுறிப்புக் கிராமத்தில் மக்கள் நலன்சார் பணிகளை ஆற்றிவரும் ‘பத்மலோக மனிதவள சிறப்பாற்றல் நிறுவனத்தின்’ 10ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு நேற்று (21.11.2025) புதுமுறிப்பு விக்னேஸ்வரா கல்லூரியில் நடைபெற்றது.


இதில் பங்கேற்று உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நான் நிர்வாகச் சேவையில், ஆளுநராகப் பதவியேற்ற பின்னரே மாகாண நிர்வாகத்தினுள் நுழைந்தேன். மாகாண நிர்வாகம் இவ்வளவு பின்னடைவைச் சந்திக்கக் காரணம், பொறுப்பிலுள்ள சில அதிகாரிகளே.

இவர்கள் பதவிகளையும் கதிரைகளையும் பிடித்து வைத்துக் கொண்டு, மக்கள் சேவையாற்றாது காலத்தை ஓட்டுகின்றனர்.

மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளை எவ்வித தயக்கமும் இன்றிப் பெற்றுக் கொள்ளும் இவர்கள், அந்த மக்களுக்குச் சேவையாற்ற மட்டும் விரும்புவதில்லை. இத்தகைய சுமைகளையும் சுமந்து கொண்டே நாம் பயணிக்க வேண்டியுள்ளது.


கடந்த காலங்களில் அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல கிராமங்கள் அபிவிருத்தியிலிருந்து புறக்கணிக்கப்பட்டன. ஆனால், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ‘பின்தங்கிய கிராமம் என்று எதுவும் இருக்கக் கூடாது’ என்ற உறுதியான நோக்கோடு செயற்பட்டு வருகிறது.

எமது மாகாணத்துக்கு முன்னெப்பொழுதும் இல்லாதவாறு அபிவிருத்தி வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், இந்த நன்மைகள் மக்களைச் சென்றடைவதற்கு எமது அதிகாரிகளே முட்டுக்கட்டையாக இருப்பது வேதனையளிக்கிறது” என கூறினார்.

திருகோணமலை கடற்கரையில் சர்ச்சைக்குரிய சிற்றுண்டிச் சாலை; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

0

திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் சிற்றுண்டிச் சாலைக்கு எதிரான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (21) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இந்த வழக்கு விசாரணையின் போது, வழக்குத் தொடுத்த நகராட்சி மன்றின் சார்பிலும், எதிர் தரப்பான சிற்றுண்டிச் சாலையின் உரிமையாளர் சார்பிலும் விரிவான சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.

சிறுமியாகிய மருமகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மட்டக்களப்பு மாமனார் கைது..!

0

மட்டக்களப்பில் தனது சொந்த மருமகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மாமனாரை குற்றவாளியாக கண்ட மன்று , 40 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மட்டக்களப்பை சேர்ந்த 12 வயதான சிறுமியை மாமனார் கடைக்கு அழைத்து செல்வதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்று சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த சம்பவம் நடைபெற்று சில நாட்களின் பின்னர் , சிறுமி கல்வி கற்கும் பாடசாலையில் பாலியல் கல்வி தொடர்பிலான கற்பித்தல் இடம்பெற்றது.


இதன் போது, சிறுமி சோகமாக இருந்ததனை அவதானித்து , அது தொடர்பில் ஆசிரியர் வினாவிய போதே சிறுமி தனக்கு நடந்த சம்பவம் தொடர்பில் கூறியுள்ளார்.

அது தொடர்பில் ஆசிரியரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் , மாமனாரை கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள், மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி ரி.ஜெ. பிரபாகரன் முன்னிலையில் இடம்பெற்று வந்தது.


இந் நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, எதிரியான சிறுமியின் மாமனாரை குற்றவாளியாக கண்டு , 40 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்தார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், நஷ்ட ஈட்டினை செலுத்த தவறின் மேலும் மூன்று வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், அத்துடன் 30 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்த வேண்டும் என தண்டனை தீர்ப்பை வழங்கினார்.

திருகோணமலையில் பேருந்தில் இருந்து தவறி வீழ்ந்து நடத்துநர் பலி..!

0

பேருந்தின் முன்பக்கப் படிக்கட்டில் இருந்து கால் இடறி வீழ்ந்து, பேருந்தின் நடத்துநர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் காவல்துறை தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் இருந்து கந்தளாய் நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்தின் நடத்துநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


குறித்த விபத்து சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளது.

கீழே வீழ்ந்தவரின் தலை பலமாக வீதியில் மோதியதில் படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பேருந்தின் ஓட்டுநர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்குக் கடலில் போதைப் பொருள்; ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி வேட்பாளர் கைது..!

0

நாட்டின் தெற்கு கடலில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


அந்த நபர் பன்னலவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் இலஞ்சம் பெற்ற காவல்துறை உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி..!

0

வவுனியா நெடுங்கேணி காவல்நிலையத்தில் பணிபுரியும் சாஜன்ட் தர உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெறமுற்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த கைதுநடவடிக்கை நேற்று(19) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

குறித்த காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறைஉத்தியோகத்தர் ஒரு முறைப்பாடு தொடர்பாக நபர் ஒருவரிடம் இலஞ்சம் கோருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.


இதனையடுத்து நேற்றையதினம் நெடுங்கேணி பகுதிக்கு வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் காவல்துறை உத்தியோகத்தர் இலஞ்சப் பணத்தின் ஒரு பகுதியை பெறமுற்பட்ட போது அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் இன்றைய தினம்(20) வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 14 நாட்களுக்கு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!