Wednesday, July 15, 2026
Huis Blog Bladsy 48

ஈழத் தமிழரின் மறைக்கப்பட்ட மறக்க முடியாத வரலாறு..!

0

இலங்கைத் தீவின் பூர்வகுடிகளில் முதன்மையான சமூகமாகத் திகழும் ஈழத் தமிழர்கள், தமக்கெனத் தனித்துவமான மொழி, பண்பாடு, சமயம் மற்றும் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவர்கள்.

அவர்களின் வரலாறு, தீவின் வரலாற்றோடு இரண்டறக் கலந்துள்ளது. தொன்மையான குடியேற்றங்கள், புகழ்பெற்ற இராச்சியங்கள், குடியேற்றவாத ஆட்சிகளின் கீழ் ஏற்பட்ட மாற்றங்கள், சுதந்திரத்திற்குப் பின்னரான அரசியல் போராட்டங்கள் என இலங்கைத் தமிழரின் வரலாறு பல பரிமாணங்களைக் கொண்டது.

இலங்கையில் தமிழரின் இருப்பு என்பது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தொடங்குகிறது. தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான குறுகிய கடல் வழி, வரலாற்றுக் காலம் முழுவதும் மக்கள், பண்பாடு மற்றும் வர்த்தகப் பரிமாற்றங்களுக்கு வழிவகுத்தது. இலங்கையின் ஆதிக்குடிகளான இயக்கர், நாகர் போன்றோருடன் தமிழர் கலந்து வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.

கந்தரோடை, பொம்பரிப்பு, ஆனைக்கோட்டை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வுகள், தென்னிந்தியாவின் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடைய நாகரிகம் இலங்கையின் வட பகுதியில் நிலவியதை உறுதி செய்கின்றன. ஆனைக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட முத்திரையில் “கோவேத” என்ற பெயர் காணப்படுவது, அக்காலத்திலேயே ஒரு தமிழ் ஆளுகை இருந்ததற்கான சான்றாகக் கருதப்படுகிறது.

மகாவம்சம் போன்ற சிங்கள வரலாற்று நூல்களே கூட, துட்டகைமுனுவுக்கு முன்பே எல்லாளன் என்ற தமிழ் மன்னன் அனுராதபுரத்தை 44 ஆண்டுகள் ஆண்டதாகக் குறிப்பிடுகின்றன. இது, தீவின் அரசியலில் தமிழரின் ஆரம்பகாலப் பங்களிப்பை நிறுவுகிறது.

யாழ்ப்பாண இராச்சியத்தின் எழுச்சி (கி.பி. 13 – 17 ஆம் நூற்றாண்டு) கலிங்க மாகனின் படையெடுப்பைத் தொடர்ந்து, 13 ஆம் நூற்றாண்டில் வட இலங்கையில் ஒரு பலமான தமிழ் இராச்சியம் உருவானது. ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தினரால் ஆளப்பட்ட இந்த யாழ்ப்பாண இராச்சியம், ஒரு சுதந்திரமான அரசாக சுமார் 400 ஆண்டுகள் நிலைபெற்றது. நல்லூர் அதன் தலைநகராக விளங்கியது.

இந்த இராச்சியம் தனக்கெனத் தனித்துவமான நிர்வாக முறை, வரிவிதிப்பு, மற்றும் இராணுவத்தைக் கொண்டிருந்தது. முத்து மற்றும் யானை வர்த்தகத்தில் சிறந்து விளங்கியது. இக்காலத்தில் தமிழ் மொழி, சைவம், மற்றும் கலைகள் பெரும் வளர்ச்சி பெற்றன. பல கோவில்கள் கட்டப்பட்டன, இலக்கியங்கள் ஆதரிக்கப்பட்டன.

யாழ்ப்பாண இராச்சியத்தின் வீழ்ச்சி, 1619 இல் போர்த்துக்கேயரின் படையெடுப்புடன் நிகழ்ந்தது. இது இலங்கைத் தமிழரின் அரசியல் இறையாண்மைக்கு ஏற்பட்ட முதல் பெரும் அடியாகும்.குடியேற்றவாதக் காலம் (கி.பி. 1619 – 1948)போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், மற்றும் ஆங்கிலேயர் என மூன்று ஐரோப்பிய சக்திகளின் ஆட்சியின் கீழ் இலங்கைத் தமிழர் பல மாற்றங்களைச் சந்தித்தனர். இவர்களின் காலத்தில், தமிழர்களின் பாரம்பரிய சமூக மற்றும் சமயக் கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டன. பல இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டு, மக்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர்.

1796 இல் கரையோரத்தையும், யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றிய ஆங்கிலேயர், 1803 இல் பண்டார வன்னியனின் கீழிருந்த வன்னி பிரதேசத்தையும் சூழ்ச்சியால் கைப்பற்றி, இறுதியில்  1815 இல் முழுத் தீவையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தனர்.

இது பல நூற்றாண்டுகளாகத் தனித்தனியே இயங்கி வந்த தமிழ் மற்றும் சிங்களப் பிரதேசங்களை ஒன்றிணைத்தது. ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய கல்வி முறை, குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிஷனரிகளால் நிறுவப்பட்ட பாடசாலைகள், தமிழர்கள் மத்தியில் கல்வியறிவை வளர்த்தன.

இதனால், ஆங்கிலம் கற்ற தமிழர்கள், குடியேற்றவாத அரசின் சிவில் சேவை மற்றும் பிற தொழில்முறைத் துறைகளில் அதிகளவில் இடம் பிடித்தனர். இது பிற்காலத்தில் இனங்களுக்கிடையேயான போட்டிக்கு ஒரு காரணமாக அமைந்தது.

இதே காலத்தில்தான், தேயிலை, கோப்பித் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தென்னிந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் ஆங்கிலேயர்களால் இலங்கையின் மலையகப் பகுதிகளுக்குக் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் “மலையகத் தமிழர்” அல்லது “இந்திய வம்சாவளித் தமிழர்” என அழைக்கப்பட்டு, பூர்விக இலங்கைத் தமிழரிடமிருந்து வேறுபட்ட சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.

சுதந்திரத்திற்குப் பின்னரான காலமும் இன முரண்பாடுகளும்1948 இல் இலங்கை சுதந்திரம் அடைந்தபோது, தமிழர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், நாட்டின் பொருளாதாரம், நிர்வாகம் மற்றும் கல்வியில் முக்கியப் பங்காற்றினர். ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த சிங்களப் பேரினவாத அரசுகள், தமிழர்களின் உரிமைகளைப் படிப்படியாகப் பறிக்கத் தொடங்கின.

குடியுரிமைப் பறிப்பு (1948)

முதலாவதாக, மலையகத் தமிழர்களின் வாக்குரிமை மற்றும் குடியுரிமையைப் பறிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இது பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்களை நாடற்றவர்களாக்கியது.

தனிச் சிங்கள சட்டம் (1956)

இதுவே இன முரண்பாட்டின் ஆணிவேராக அமைந்தது. தமிழ் மொழியின் அரச கரும மொழித் தகுதியை நீக்கி, சிங்களத்தை மட்டும் ஒரே ஆட்சி மொழியாக அறிவித்த இச்சட்டம், தமிழர்களின் வாய்ப்புகளைப் பறித்தது.

பல்கலைக் கழக தரப்படுத்தல் (1970)

பல்கலைக் கழகங்களுக்கு இனரீதியான தரப்படுத்தல் முறையைக் கொண்டு வந்ததன் மூலம், திறமையான தமிழ் மாணவர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

அரசியல் தீர்வு முயற்சிகளின் தோல்வி

தந்தை செல்வா (S.J.V. செல்வநாயகம்) தலைமையிலான தமிழரசுக் கட்சி, சமஷ்டி அடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வை வலியுறுத்தி சாத்வீகப் போராட்டங்களை (சத்தியாக் கிரகம்) முன்னெடுத்தது. பண்டா-செல்வா, டட்லி-செல்வா ஒப்பந்தங்கள் போன்ற தீர்வு முயற்சிகள் சிங்களத் தலைவர்களால் கிழித்தெறியப்பட்டன.

ஆயுதப் போராட்டமும் அதன் விளைவுகளும்அரசின் தொடர்ச்சியான ஒடுக்கு முறைகள், அரச வன்முறைகள் (1958, 1977, 1983 இனக் கலவரங்கள்), மற்றும் அமைதி வழிப் போராட்டங்களின் தோல்வி ஆகியவை தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டப் பாதைக்குத் தள்ளின.

பல ஆயுதக் குழுக்கள் தோன்றினாலும், ஒழுக்கமும், கட்டுக் கோப்பும் மிக்க தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பு பிரதானமான சக்தியாக உருவெடுத்தது. 1983 இல் வெடித்த உள்நாட்டுப் போர், சுமார் மூன்று தசாப்தங்கள் நீடித்து, 2009 இல் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்தது.

இந்தப் போர், இலங்கைத் தமிழர் வரலாற்றில் ஒரு பெரும் துயர அத்தியாயமாகும். பல்லாயிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், இடம்பெயர்ந்தனர், மற்றும் நாட்டை விட்டு வெளியேறினர். தமிழ்ப் பிரதேசங்களின் பொருளாதாரம், சமூகம் மற்றும் உள்கட்டமைப்பு முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டது.

போர் முடிந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாகியும், இலங்கைத் தமிழர்கள் இன்றும் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறல், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவ மயமாக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல், மற்றும் நிலையான அரசியல் தீர்வு போன்ற கோரிக்கைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

இருப்பினும், இந்தப் பேரிழப்புகளுக்கு மத்தியிலும், இலங்கைத் தமிழ்ச் சமூகம் தனது தனித்துவமான பண்பாட்டையும், மொழியையும், அடையாளத்தையும் பேணிப் பாதுகாத்து, தமக்கான அரசியல் உரிமைகளுக்காகத் தொடர்ந்து உள்நாட்டிலும், உலக அரங்கிலும் போராடி வருகிறது.

இலங்கைத் தமிழரின் வரலாறு என்பது, ஒரு இராச்சியத்தை நிறுவி ஆண்ட பெருமையுடன், அந்நியர் ஆட்சியில் உரிமைகளை இழந்து, சுதந்திர நாட்டில் சொந்த சகோதரர்களாலேயே ஒடுக்கப்பட்டு, ஒரு கொடிய போரைச் சந்தித்து, அதிலிருந்து மீள முயலும் ஒரு நீண்ட, சிக்கலான பயணமாகும்.

அவர்களின் எதிர்காலம், இலங்கையில் உண்மையான நல்லிணக்கம், சமத்துவம் மற்றும் நீதியை நிலைநாட்டும் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வைப் பொறுத்தே அமையும்.

தங்களின் தொன்மையான மரபைப் பாதுகாத்து, எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு பிரகாசமான வாழ்வை அமைத்துக் கொடுப்பதே இன்றைய ஈழத் தமிழ்ச் சமூகத்தின் முன் உள்ள பெரும் சவாலாகும்.

ய்வான்

அரச அலுவலகங்களின் அறிவிப்புக் குறித்து கட்டாயமாகும் சட்டம்..!

0

அரச திணைக்களங்கள் மற்றும் அரச அலுவலகங்களினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், கடிதங்கள் மற்றும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போதைய, அதிதீவிர வானிலை காலப்பகுதியிலும் தனிச் சிங்கள மொழியில் மாத்திரம் அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களின் அறிவித்தல்கள் அனுப்படுகின்றமை தொடர்பில் வினவிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இதற்குப் பதில் வழங்கிய அமைச்சர், மும்மொழிக் கொள்ளையைப் பின்பற்றுமாறு அனைத்து அரச அலுவலகங்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

எனினும், கடந்த நாட்களில் அதனைப் பின்பற்றியிருக்கவில்லை என்றால் அது குறித்து ஆராய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், விடயம் தொடர்பில் அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தல் விடுத்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.

அதற்கமைய நாளை முதல் அனைத்து அரச அலுவலகங்களிலும் வெளியிடப்படும் அறிவித்தல்கள், மும்மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்பது தொடர்பில், தாம் பணிப்புரை விடுப்பதாகவும் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகுதியானோர் புறக்கணிக்கப்பட்டால் அதிகாரிகளே பொறுப்பு – யாழ் மாவட்ட செயலாளர்

0

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 25,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு விநியோகத்தில், தகுதியானவர்கள் புறக்கணிக்கப் பட்டாலோ அல்லது தகுதியற்றவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டாலோ, அதற்கு அரச அதிகாரிகளே பொறுப்புகூற வேண்டும் என யாழ் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

மாவட்டத்தின் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் யாழ் மாவட்ட செயலாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட (முற்றிலும் சேதமடைந்த, பகுதி சேதமடைந்த, அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட) அனைத்து வீடுகளுக்கும் இந்த ரூபா 25,000 உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், கிராம மட்ட அலுவலர்கள் நேரடியாகப் பிரிவுக்குச் சென்று தரவுகளைப் பெற்றுக்கொள்வதைப் பிரதேச செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

எனினும், இதில் குளறுபடிகள் ஏற்படின் அதற்குப் பிரதேச செயலாளர் உட்பட குறித்த பிரிவுக்குரிய கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண உத்தியோகத்தர் ஆகியோர் கூட்டாகப் பொறுப்புக் கூற வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதியானவர்களின் பெயர்ப் பட்டியலை இற்றைப்படுத்தி உறுதி செய்து கிராம அலுவலர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகத்தில் தமிழ் மொழியில் காட்சிப்படுத்தி அதன் மென் பிரதியினை மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பி வைக்குமாறும், மாவட்ட செயலாளரின் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடும் மோசமான வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு..!

0

கடும் மோசமான வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 618 ஆக அதிகரித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இற்றைப்படுத்தப்பட்ட தரவுகளில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகளால் முறைப்பாடு..!

0

சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் அவதூறு ஏற்படுத்தி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் என தெரிவித்து பெண்ணொருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

யாழ் சிறைச்சாலை அதிகாரிகளினால் நேற்று (06) குறித்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் கசிப்பு தொடர்பான நீதிமன்ற பிடியாணை மூலம் 30 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் யாழ் போதனா வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருவது தொடர்பில் யாழ் ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை தொடர்பில் அவதூறு பரப்பும் வகையில் அவரின் சகோதரி கருத்து தெரிவித்திருந்ததாக குற்றஞ்சாட்டியே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் ஏழாம் திகதி கசிப்புடன் தொடர்புடைய வழக்கு ஒன்றுக்காக சிவராமலிங்கம் தர்சன் என்ற நபர் புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு நிதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து, விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் இரவு 10:20 மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அவர் அழைத்து வரப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையின் உள்ளே அனுமதிக்க முற்பட்ட பொழுது குறித்த நபர் (கசிப்பு சிக்) வலிப்பு காரணமாக நிலத்தில் விழுந்துள்ளார்.

இதன்பின்பு, சக கைதிகளினால் காப்பாற்றப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் முதலுதவி அளிக்கப்பட்டு சிறைச்சாலை வாகனம் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதன்பின்னர், ஒன்பதாம் திகதி சிகிச்சை முடிந்து வைத்தியசாலையில் இருந்து சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் மறுநாள் பத்தாம் திகதி காலை ஏழு மணியளவில் நோய் உபாதைக்கு உள்ளாகி நோயாளர் காவு வண்டி மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தற்போது கோமா நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வரப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், அவரது சகோதரி முன்னுக்கு பின்னர் முரணனான தகவல்கள் மூலம் முதலில் காவல் துறையினர் தாக்கியதாகவும் மற்றும் சிறைச்சாலையில் தாக்கியதாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச ஊழியர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் உடனடியாக ரத்து..!

0

அரச உத்தியோகத்தர்களுக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அனுமதிப்பதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நவம்பர் மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, அது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, புதிய விடுமுறை விண்ணப்பங்கள் அல்லது விடுமுறை நீடிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த வேண்டும் என அமைச்சின் செயலாளர், அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு குறித்த சுற்றறிக்கையின் மூலம் அறிவித்துள்ளார்.

சிரேஷ்டத்துவம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு அதிகபட்சம் 5 வருடங்களுக்கு உட்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கி, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் பொது நிர்வாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய, அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளின் கீழ் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைகளை அனுமதிப்பதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு விடுமுறைகளைப் பெற்றுள்ள உத்தியோகத்தர்களுக்கு அனுமதிக்கப்பட்ட காலப்பகுதிக்கு மட்டும் அந்த விடுமுறையைப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரையில் விடுமுறைக்கான அனுமதியைப் பெற்று, அந்த விடுமுறையைக் கழிக்கும் எதிர்பார்ப்பில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு, அனுமதிக்கப்பட்ட காலப்பகுதிக்கு அமைவாக விடுமுறையைப் பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளதாக பொது நிர்வாக அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாட்டு விடுமுறையைப் பெற்றுக் கொள்வதற்காக தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள, அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்துள்ள புதிய விடுமுறை விண்ணப்பங்கள் மற்றும் விடுமுறை நீடிப்பு விண்ணப்பங்களுக்கு புதிய சுற்றறிக்கையினால் பாதிப்பு ஏற்படாது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தேவைகளைப் பூர்த்தி செய்யாத மற்றும் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களில் குறைபாடுகள் உள்ள விடுமுறை விண்ணப்பங்கள் மீள் பரிசீலனை இன்றி நிராகரிக்கப்படும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் உள்நாட்டு விடுமுறைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடுமுறை விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினால் 607 ஆக உயர்வடைந்த பலி எண்ணிக்கை..!

0

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பேரிடரினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 607 ஆக உயர்வடைந்துள்ளது.

மழை வெள்ளம், புயல் மற்றும் மன்சரிவு போன்ற இயற்கை பேரனர்த்தங்களினால் இதுவரையில் 607 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் அதிகாரப் பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த அனர்த்தங்கள் காரணமாக இன்னமும் 214 பேர் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா வடக்கின் கல்வி வீழ்ச்சியும் கல்வி அதிகாரிகளின் அசமந்தமும்..!

0

ட மாகாணத்தின் முக்கிய கல்வி நிர்வாக வலயங்களில் ஒன்றாகிய வவுனியா வடக்கு, போர் பிந்தைய காலத்தில் பல துறைகளில் மாற்றங்களை அனுபவித்து வருகிறது. உட்கட்டமைப்பு, பொருளாதாரம், குடியேற்றம், அரசியல் ஆகிய துறைகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு இணையாக, கல்வித் துறையும் பல சவால்களைச் சந்தித்து வருகிறது.

அண்மைக் காலத்தில்,

  1. மாணவர்களின் கல்விப் பெறுபேறுகள் வீழ்ச்சி
  2. இடை விலகல் (dropout) அதிகரிப்பு
  3. ஆசிரியர்களின் மனஅழுத்தம்
  4. பெற்றோர்களின் நம்பிக்கையின்மை

என வவுனியா வடக்கின் கல்வி நிலை குறித்து பல பரிமாணங்களில் கேள்விகள் எழுந்துள்ளன. இந்தப் பின்னணியில் “கல்வி அதிகாரிகளின் அசமந்தம்” தொடர்பில் சமூகத்தில் பல விமர்சனக் குரல்கள் உருவாகியுள்ளன.

இந்த ஆய்வின் ஊடாக,

1. வவுனியா வடக்கின் கல்வி நிலையைச் சுருக்கமாக விளக்குதல்
2. கல்வி வீழ்ச்சியின் முக்கிய வடிவங்களையும் காரணிகளையும் ஆய்வு செய்தல்
3. கல்வி அதிகாரிகளின் பங்கு, பொறுப்பு, அசமந்தம் ஆகியவற்றை ஆராய்தல்
4. சாத்தியமான மாற்றுத் தீர்வுகளை முன்வைத்தல்
எனும் குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு வடிவில் அமைந்துள்ளது. இவ்வாய்வு, சமூக அனுபவங்கள், பொதுவான கண்காணிப்புகள், கல்விச் செயற்பாடுகள் பற்றிய விடயங்களை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வு என்பதையும் ஆரம்பத்திலேயே குறிப்பிட வேண்டும்.

வவுனியா வடக்கின் கல்வி அமைப்பு – ஒரு சுருக்கப் பின்னணி

வவுனியா வடக்கு பகுதி பெரும்பாலும் கிராமப்புறத்தை அடிப்படையாகக் கொண்ட களமாகும். பல வருடங்கள் நீடித்த உள்நாட்டுப் போர், இடம்பெயர்வு, முகாம்கள், மீளக்குடியேற்றம் ஆகியவையால் இப்பகுதி மக்களின் வாழ்க்கை அமைப்பும் கல்வி முன்னேற்றமும் பாதிக்கப்பட்டுள்ளன.

போருக்குப் பிந்திய காலத்தில்,

புதிய பாடசாலைக் கட்டிடங்கள்
பாடசாலை உபகரணங்கள்
ஆசிரியர் நியமனங்கள்
போன்றவை ஓரளவு முன்னெடுக்கப்பட்டாலும், கல்வியின் உண்மையான தரம் உயர்ந்ததா என்ற கேள்வி இன்னும் வினாவாகவே நிலைத்திருக்கிறது.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில்,

சிறிய அளவிலான ஆரம்ப பாடசாலைகள்,
குறைந்த வசதியுள்ள இடைநிலைப் பாடசாலைகள்,
சில உயர்நிலை கல்லூரிகள்
எனப் பன்முகப் பாடசாலைகள் உள்ளன. ஆனால் இவை அனைத்தும் அதே தரத்தில் செயல்படுகின்றனவா என்பது சந்தேகமே. இந்த தர வேறுபாடு மற்றும் திணைக்களத் திட்டமிடலின் பலவீனங்களுமே கல்வி வீழ்ச்சிக்கான அடிப்படை காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

வவுனியா வடக்கில் கல்வி வீழ்ச்சி பல தளங்களில் வெளிப்படுகிறது அந்த வகையில்,

தேர்ச்சி வீத வீழ்ச்சி

புலமைப்பரிசில், சாதாரண தர, உயர் தர பரீட்சைகளில் தேசிய சராசரியை விட குறைந்த தேர்ச்சி விகிதம். குறிப்பாக கணிதம், விஞ்ஞானம் போன்ற முக்கியப் பாடங்களில் அதிக அளவில் சித்தியின்மை. பல பாடசாலைகளில் உயர்தர மாணவர்கள் கூட குறைந்த பெறுபேறுகளுடன் மட்டும் தேர்ச்சி பெறுதல்.

வருகை வீழ்ச்சி

பாடசாலை வருகையானது இடைநிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளில் குறைவாகக் காணப்படுகின்றது.

அடிப்படைத் திறன்கள குறைவு

முன் கல்வியை வெற்றிகரமாக முடித்தும், சரளமாக வாசிக்க இயலாமை, தங்களின் எண்ணங்களை தெளிவாக எழுத இயலாமை, எளிய கணக்கீடுகளுக்கே சிக்கல் அனுபவிப்பது.

மாணவர்–ஆசிரியர் உறவின் தரம் குறைவு

பரஸ்பர நம்பிக்கை, மரியாதை, ஊக்கம் ஆகியவை குறைந்து, “பாடசாலையில் படிப்பது பயனற்றது” என்ற கருத்து சில மாணவரிடம் உருவாகுதல். போன்ற எல்லா வெளிப்பாடுகளும் இணைந்து, வவுனியா வடக்கில் கல்வி வீழ்ச்சி காணப்படுகின்றது. இது ஒரு தனிநபர் மட்டப் பிரச்சினை அல்ல; அமைப்பு மட்டப் பிரச்சினை என்பதையே ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

இங்கு கல்வி அதிகாரிகள் என்பவர்கள் யார்?

  1. மாகாண கல்வி அமைச்சு / மாகாண கல்வி செயலாளர்
  2. மாகாண கல்வித் திணைக்களம்/ மாகாண கல்விப் பணிப்பாளர்
  3. வலயக் கல்வி அலுவலகம்/ வலயக் கல்விப் பணிப்பாளர்
  4. கோட்டக் கல்வி அலுவலகம் / கோட்டக் கல்வி அலுவலர்கள்
  5. பாடசாலைகள் அதிபர்கள் / ஆசிரியர்கள்
  6. உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் – பாடம்,
  7. ஆசிரிய ஆலோசகர்கள்/ பாட வளவாளர்கள் ஆகியோர் நிர்வாக வட்டாரத்தைச் சேர்ந்தவர்களாகும்.

அதிகாரிகளின் அடிப்படைப் பொறுப்புகள்

  1. கல்விக் கொள்கைகளை செயல்படுத்தல் – தேசிய மற்றும் மாகாண கல்விக் கொள்கைகளை பாடசாலைகளுக்கு கொண்டு சென்று, அவை நடைமுறையில் அமுல்படுகிறதா என உறுதிசெய்தல்.

2. ஆசிரியர் மற்றும் பாடசாலைக் கண்காணிப்பு – வகுப்பு கண்காணிப்பு, பாடத்திட்ட முன்னேற்றம், கற்பித்தல் தரம், பரீட்சை முறைகள் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்தல்.

3. திட்டமிடல் மற்றும் வளவளப் பகிர்வு – ஆசிரியர் நியமனங்கள், பயிற்சிகள், உபகரண விநியோகம், கட்டிடடங்கள் முதலியவற்றை திட்டமிட்டு ஒழுங்குபடுத்துதல்.

4. தர மேம்பாட்டு நடவடிக்கைகள் – குறைவான தேர்ச்சி வீதம் உள்ள பாடசாலைகளுக்கு சிறப்பு உதவி திட்டங்கள், பயிற்சிகள், மாணவர் ஆதரவு நிகழ்வுகள் ஆகியவற்றை முன்னெடுத்தல்.

இந்தப் பொறுப்புகள் சரியான முறையில் செயல் படுத்தப்படாமல் போகும் போது “அசமந்தம்” என்ற குற்றச்சாட்டு எழுகிறது.

வவுனியா வடக்கில் கல்வி அதிகாரிகளின் அசமந்தம் பற்றி கூறும் போது, அது பல வகைகளில் வெளிப்படுகிறது.

  1. சில பாடசாலைகளில், மாதங்கள் கடந்தும் கல்வி திணைக்கள அதிகாரிகளின் மேற்பார்வை இன்றி இயங்கும் நிலை.

2. அறிக்கைகளில் பார்வை செய்யப்பட்டதாகக் காட்டப்பட்டாலும், உண்மையில் நேரடி வகுப்பு கண்காணிப்பு நடைபெறாத சூழ்நிலை.

3. உண்மையான பாட அடைவு, மாணவர் முன்னேற்றம், தனிநபர் வேறுபாடு போன்றவற்றை ஆராயாமல், “பரிந்துரை”, “குறிப்பு” என காகிதத்தில் மட்டும் செயல்கள் பூர்த்தி செய்யப்படுதல். அதனால், ஆசிரியர்கள் உண்மையிலேயே தரம் உயர்த்தப் போராட வேண்டிய அவசியத்தை உணராமல் போகிறார்கள்.

4. பரீட்சை முடிவுகள், வருகை விவரங்கள், இடை விலகல் பிரச்சினை உள்ள பாடசாலைகள் பற்றிய தரவு சேகரிப்பு தொடர்ந்து நடைபெறுகின்றது. ஆனால், “இந்தத் தரவின் அடிப்படையில் எத்தனை தர மேம்பாட்டுத் திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன?” என்ற கேள்விக்கு தெளிவான பதில் இல்லை.

பொறுப்புக்கு பதில் காரணங் கூறுதல்

ஆசிரியர் பற்றாக்குறை, நிதி குறைவு, போக்குவரத்து சிரமம், பெற்றோர் ஒத்துழைப்பு இல்லாதது போன்றவற்றை முன்வைத்து, நிர்வாகத் தரப்பு தமது பொறுப்பைத் தட்டிப்போடும் மனப்போக்கு. சில சமயங்களில் நிர்வாக அழுத்தம், உள்நிலை முரண்பாடுகள் காரணமாக நீதி, சமநிலை ஆகியவை பாதிக்கப்படுவது தொடர்பிலும் சமூகத்தில் பேசப்படுகின்றன.

குறைந்த தேர்ச்சி வீதம் குறித்து ஒவ்வொரு ஆண்டும் ஒரே மாதிரியான விவாதங்கள், கூட்டங்கள், அறிக்கைகள், இடம்பெற்றாலும் 3–5 ஆண்டு காலப் பாடத்திட்டத்தை நோக்கிய மூலோபாயத் திட்டங்கள் (strategic plans) இல்லாமை. இதுவே சமூகத்தில் “கல்வி அதிகாரிகள் அசமந்தமாக இருக்கிறார்கள்; உண்மையான மாற்றத்துக்கு முன்வரவில்லை” என்ற கருத்தை வலுப்படுத்துகிறது.

கல்வி வீழ்ச்சியும் அதிகாரி அசமந்தமும்

கல்வி வீழ்ச்சி என்பது ஆசிரியர் மட்டத்தினரின் குறைபாடு மட்டும் அல்ல; அதில் திணைக்கள நிர்வாகத்தின் செயலின்மை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.

ஒருவரும் தீவிரமாக கண்காணிக்காத இடத்தில், சில பாடசாலைளில் வகுப்பு ஒழுங்கு, பாட முன்னேற்றம், பரீட்சை தயாரிப்பு ஆகியவை தளர்வாக இருப்பது இயல்பாகிறது.

சில எளிதில் அதிகாரிகளால் அணுகக் கூடிய பாடசாலைகளுக்கு மட்டுமே வாய்ப்புகள், பயிற்சிகள், கூடுதல் உதவி வழங்கப்படுவதுடன் முரண்படும் பாடசாலைகள் புறக்கணிக்கப்படுதல்.

இடை விலகும் மாணவர்களை காப்பாற்ற வல்லுநர் ஆலோசனை, சமூகப் பணி, non-formal education திட்டங்கள் உருவாக்காத நிர்வாகம், பிரச்சினையை அதிகரிக்கச் செய்கின்றது.

ஆதாரம், உரிய முறைப்பாடு இல்லாமல், குற்றம் சுமத்தும், பழி சுமத்தும் முறையில் மட்டுமே கல்வி அதிகாரிகள் பாடசாலையை அணுகும் போது, விசுவாசமாகச் செயற்படும் ஆசிரியர்கள் உற்சாகம் இழக்கின்றனர். இது மாணவர்–ஆசிரியர் உறவையும் நேரடியாக பாதிக்கிறது.

இதனால், கல்வி வீழ்ச்சி மற்றும் கல்வி அதிகாரிகளின் அசமந்தம் ஆகியவை ஒரு நச்சு வட்டமாக செயற்படுகின்றன.

“வவுனியா வடக்கின் கல்வி வீழ்ச்சியை மீட்க, முக்கிய மாற்றமானது நிர்வாக மட்டத்தில் மேற்கொள்வதே அவசியமாகின்றது.”

அந்த வகையில்,

குடும்ப வறுமை
போருக்குப் பிந்திய மனநிலை
பெற்றோர்களின் கல்வி நிலை
சமகால ஊடகத் தாக்கம்
போன்ற காரணிகள் கல்வி வீழ்ச்சிக்கு காரணங்கள் தான். ஆனால், இத்தகைய சிக்கலான சூழலில் கூட, நன்கு திட்டமிடப்பட்ட நிர்வாகம், உறுதியான கல்விக் கொள்கை அமுலாக்கம், தொடர்ச்சியான கண்காணிப்பு இருந்தால், வீழ்ச்சியை பாரியளவு குறைக்க முடியும்.

இந்தப் பின்னணியில், கல்வி அதிகாரிகளின் அசமந்தம் என்பது,

செயற்பட முடியாத அசமந்தமா?
செயற்பட விரும்பாத அசமந்தமா?
என்ற இரு கோணங்களிலும் பார்க்க வேண்டியது அவசியமாகின்றது.

இந்த நிலையில் சில வலயங்களில்,

வாகன வசதி இன்மை,
நிதி குறைவு,
ஊழியர் பற்றாக்குறை
போன்ற காரணிகளால் அவர்கள் செயற்பாட்டில் கட்டுப்படுத்தப்படுகிறார்கள்.

ஆனால், அது வவுனியா வடக்கு வலயத்திற்குப் பொருந்தாது. எனினும் அதனையே தமது வீழ்ச்சிக்கான காரணமாகக் கூறிக் கொள்வதே இங்கு பிரச்சினையின் மையமாகக் காணப்படுகின்றது.

மாற்றத்திற்கான சாத்திய வழிகள்

ஆண்டுக்கு ஒரு முறை மேற்பார்வை விழாவை விட, குறைந்த தேர்ச்சி வீதம், இடை விலகல், குறைந்த மாணவர் வருகை கொண்ட பாடசாலைகளுக்கு தொடர்ச்சியான கண்காணிப்பினை மேற்கொள்ளல்.

ஒவ்வொரு பாடசாலைக் கண்காணிப்புக்குப் பின்னர்,

  1. குறைபாட்டுப் பட்டியல்
  2. 6–12 மாத செயற் திட்டம்
  3. காலவரையறை மற்றும் பொறுப்பாளர்கள் ஆகியவை எழுத்து பூர்வமாகத் தயாரிக்கப்பட்டு, அதைப் பின்தொடர வேண்டும்.
  4. தேர்ச்சி வீதம், இடை விலகல், வருகை, ஆசிரியர் நியமனங்கள் போன்றவற்றை பெற்றோர்–சமூகத்திற்கு திறந்தவெளியில் பகிர்ந்து கொள்ளும் நிலையை உருவாக்குதல்.
  5. கல்வி அதிகாரிகள் தங்களை வெறும் கணக்கெடுப்பு மற்றும் மேய்க்கும் அதிகாரிகளாக அல்ல, “கல்வி மாற்றத் தலைவர்கள்” எனக் கருதி செயற்படக் கூடிய மனப்போக்கு உருவாக பயிற்சிகளில் ஈடுபடல்.
  6. “தண்டனை” மையமாக அல்ல; மாறாக “ஆதரவு, ஆலோசனை” மையமாக கண்காணிப்பு பணியை மாற்றுதல்.
  7. கல்வி அதிகாரிகளின் பதவி உயர்வு, ஊக்கம், மதிப்பீடு ஆகியவற்றை, அவர்களின் கல்வி வலயத்தில் ஏற்பட்ட கல்வித் தர முன்னேற்றத்துடன் தொடர்புபடுத்துதல்.
  8. கல்வி அதிகாரிகள் நேரடியாக கிராம மக்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய கூட்டங்களை திட்டமிட்டு நடத்துதல்.
  9. பாடசாலை மேம்பாட்டுத் திட்டங்களை சமூகத்துடன் பகிர்ந்து கூட்டு பொறுப்பு உணர்வு ஏற்படுத்துதல்.

ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள தொழில்முனைவோர், அரசு பணியாளர்கள், வெளிநாட்டில் உள்ள ஊரார் ஆகியோரின் ஆதரவைக் கோருவதில் அதிகாரிகள் தூண்டுகோலாக செயல்படுதல்.

ஒவ்வொரு பாடசாலையிலும் இடை விலகும் மாணவரின் விவரம் உடனுக்குடன் கோட்டக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.

அந்த மாணவரின் வீட்டுக்குச் சென்று அதிகாரிகள் – ஆசிரியர்கள் – சமூகப் பணியாளர்கள் இணைந்து காரணங்களை ஆய்வு செய்தல் வேண்டும்.

1. சாதாரண கலைத் திட்டத்தில் பொருந்தாத மாணவர்களுக்கு
2. தொழிற் பயிற்சிகளை வழங்குதல்
3. குறுகியகால நுண்திறன் பயிற்சி
4. காலை–மாலை வகுப்புகள்
போன்ற மாற்றுப் பாதைகள் உருவாக்கப்பட வேண்டும்.

வவுனியா வடக்கின் கல்வி வீழ்ச்சி என்பது, போர் பிந்தைய வறுமை, சமூக அமைப்பு சிதைவு, குடும்பப் பொருளாதார அழுத்தம் போன்ற பல காரணிகளின் சகலவித சிக்கல்களையும் தன்னகத்தே தாங்கியுள்ள ஒரு ஆழமான பிரச்சினை.

இச் சூழலில், கல்வி அதிகாரிகள் ஒரு முக்கிய தலையாய வட்டாரமாக இருக்கும் போதும், அவர்களின் அசமந்தம், செயல் பலவீனம், திட்டமிடல் குறைவு ஆகியவை பிரச்சினையை மேலும் கூர்மையாக்குகின்றன.

கல்வி வீழ்ச்சி மற்றும் இடை விலகல் பற்றி பேசும் போது,
ஆசிரியர்களையும்,
மாணவர்களையும்,
பெற்றோர்களையும் மட்டுமே குற்றம் கூறுவது போதுமானது அல்ல.
நிர்வாகமும் தன்னை நேர்மையாகப் பிரதிபலித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.

“சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பதே கல்வி நிர்வாகத்தின் உயிர்நாடி; அந்த முடிவு தாமதப்பட்டாலோ, தளர்த்தப்பட்டாலோ, ஒரு தலைமுறை முழுவதும் அதன் விலையை செலுத்த வேண்டியிருக்கும்.”

எனவே,

நிர்வாகத் துல்லியம்
விளைவு அடிப்படையிலான திட்டமிடல்
உண்மையான கண்காணிப்பு
சமூகப் பங்குபற்றல்
இவற்றை முன்னிறுத்தும் மாற்றம்தான் வவுனியா வடக்கின் கல்வி வீழ்ச்சியையும், கல்வி அதிகாரிகளின் அசமந்தத்தையும் மாற்றக்கூடிய வழி என்பதையும் வலியுறுத்துகிறது.

ய்வான்

இதுவரை 481 பேர் பலி; காணாமல் போனோர் எண்ணிக்கை 345 ஆக உயர்வு..!

0

DMC இன்று (04) மாலை 4 மணிக்கு வெளியிட்ட சூழ்நிலை அறிக்கையின்படி, நாட்டில் பேரிடர் ஏற்படுத்திய மோசமான வானிலை காரணமாக 481 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 345 பேர் காணாமல் போயுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 1,814,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 171,492 பேர் அரசாங்கத்தால் நிறுவப்பட்ட 1,236 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.

57 போலி சமூக ஊடக பதிவுகள் குறித்து போலீஸ் விசாரணை ஆரம்பம்..!

0

அண்மைய நாட்களில் பரவிய போலிச் செய்திகள், தவறான தகவல்கள், வதந்திகள் மற்றும் சரிபார்க்கப்படாத புதுப்பிப்புகள் அடங்கிய 57 சமூக ஊடக இடுகைகளை போலீசார் அடையாளம் கண்டதையடுத்து, குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அவசரகால விதிமுறைகளின் கீழ் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

பரவலாகப் பகிரப்பட்டால், பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துமா, ஒழுங்கை சீர்குலைக்க முடியுமா அல்லது பதட்டத்தைத் தூண்டுமா என்பதைத் தீர்மானிக்க சிறப்பு சிஐடி பிரிவு தற்போது அவற்றை மதிப்பாய்வு செய்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பொது பாதுகாப்பு சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள அவசரகால விதிமுறைகளின் கீழ், சமூக அமைதியின்மைக்கு வழிவகுக்கும் தவறான தகவல்களை பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

தற்போதைய பேரிடர் மீட்பு நடவடிக்கைகளின் போது சரி பார்க்கப்படாத உள்ளடக்கத்தைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு காவல்துறை செய்தித் தொடர்பாளர் ASP F. U. Wootler பொது மக்களை வலியுறுத்தினார்.

தவறான தகவல்களைத் தடுக்கவும், பொதுப் பாதுகாப்பைப் பாதுகாக்கவும் சமூக வலைத் தளங்களை போலீஸ் குழுக்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

error: Content is protected !!