Thursday, March 5, 2026
Huis Blog Bladsy 12

கூழாமுறிப்பில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய ரவிகரன் எம்.பி..!

0

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கூழாமுறிப்பு கிராமத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 11.01.2026 நேற்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.

கூழாமுறிப்பு கிராம மக்களின் வேண்டுகோளிற்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினரால் மேற்கொள்ளப்பட்ட குறித்த மக்கள் குறைகேள் சந்திப்பானது, கூழாமுறிப்பு பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

அந்தவகையில் உள்ளகவீதிகளின் சீரமைப்பு, பழுதடைந்த வீதி விளக்குகளை சீர்செய்தல், கூழாமுறிப்பு குளத்தின் நீர்ப்பாசன வாய்க்கால் சீரின்மையால் குளத்துநீர் குடியிருப்புகளுக்குள் உட்புகுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல், முத்துஐயன் கட்டு ஏழாம் கண்டம் கமக்கார அமைப்பினைப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல், முத்து ஐயன்கட்டு ஏழாம் கண்டத்திற்குரிய நீர்ப்பாசன வாய்க்காலை அமைத்தல், விவசாய வீதிகளை சீரமைத்தல், கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகளைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் இதன் போது முன்வைக்கப்பட்டன.

குறித்த குறைகேள் சந்திப்பினைத் தொடர்ந்து குளத்தின் நீர்ப்பாசன வாய்க்கால் சீரின்மையால் குளத்து நீர் குடியிருப்புக்குள் உட்புகுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

அத்தோடு கூழாமுறிப்பு குளத்தின் கீழான கீழ்வெளி வயல் நிலங்களுக்குச் செல்லும் விவசாய வீதிசீரின்மை மற்றும் கீழ்வெளி விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசன வாய்க்கால் வசதியை ஏற்படுத்துவது தொடர்பான விடயங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பார்வையிட்டிருந்தார்.

இவ்வாறாக மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன், நிலமைகளை நேரிலும் சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமக்கு எழுத்து மூலமாக கோரிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டதுடன், கூழாமுறிப்பு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பிலும் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

வசந்தபுரம் கிராமத்தில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்தினார் – ரவிகரன் எம்.பி

0

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மன்னாகண்டல், வசந்தபும் கிராமத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 11.01.2026 நேற்று மக்கள் குறைகேள் சந்திப்பொன்றினை நடாத்தியுள்ளார்.

வெள்ள அனர்த்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள குறித்த வசந்தபுரம் கிராம மக்களின் வேண்டுகோளிற்கிணங்க நாடாளுமன்ற உறுப்பினரால் அப்பகுதியில் மக்கள் குறைகேள் சந்திப்பொன்று நடாத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் வெள்ளஅனர்த்தத்தின் பின்னர் தாம் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பலத்த சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக வசந்தபுரம் கிராமமங்களால் இதன் போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிடப்பட்டது.

குறிப்பாக புதுக்குடியிருப்பு பிரதேச சபையால் வசந்தபுரம் கிராமத்திற்குச் செல்லும் நுழைவாயிலில் கிராமத்திலிருந்து நீண்டதூரத்தில் குடிநீருக்கான நீர்த்தாங்கியொன்று வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கிராம மக்கள், குடிநீரைப் பெறுவதற்கு போக்குவரத்து நெருக்கடிகளுக்கு உள்ளாவதாகவும், ஒரு நீத்தாங்கி குடிநீர் போதுமானதாக இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையீடு செய்தனர்.

எனவே குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் இடர்பாட்டினைத் தீர்த்து வைக்குமாறு இதன் போது நாடளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

மேலும் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படும் கிராமமாக வசந்தபுரம் கிராமம் காணப்படுவதால், குறித்த கிராமத்தை வேறு இடத்தில் குடியமர்த்துவதற்கான முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவ்வாறு வேறு குடியமர்த்தப்படுகின்ற போது தமது வாழ்வாதாரத்தினைக் கருத்திற் கொண்டு ஒரு குடும்பத்திற்கு 0.5ஏக்கர் காணியினைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வசந்தபுரம் கிராம மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் மக்களின் குறைபாடுகளைக் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கைகளை எழுத்து மூலமாக கையளிக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், வசந்தபுரம் கிராமமக்களின் குறைபாடுகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் கவனஞ் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழரின் யாழ் வீட்டில் விபச்சாரம்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

0

யாழில் வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டினை வாடகைக்கு பெற்று வீட்டினை விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர்களை விளக்ககமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்பாய் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

திருநெல்வேலி பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் சொகுசு வீட்டினை கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவர் வாடகைக்கு பெற்றுள்ளார்.

குறித்த வீட்டிற்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் பெண்கள் ஆண்கள் என பலர் மோட்டார் சைக்கிள்கள் கார்களில் வந்து செல்வது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தகவலை அடுத்து பொலிஸார் குறித்த வீட்டினை தமது கண்காணிப்புக்குள் கொண்டு வந்து, சில நாட்களாக கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், நேற்று முன் தினம் (10) வீட்டினை முற்றுகையிட்டு , வீட்டில் இருந்து வெளிமாவட்டங்களை சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் அந்த வீட்டினை வாடகைக்கு பெற்றிருந்தவர் ஆகியோரை கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரையும் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் (11) யாழ் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது

இணைய மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு கடும் நடவடிக்கை – CPU எச்சரிக்கை

0

குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்தில் புதிதாக நிறுவப்பட்ட சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து, இணைய மோசடிகள் மற்றும் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மற்றும் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் தெரிவிக்கையில்,

இணைய மோசடிகளில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களைப் பகிர்வது குறித்தும் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் பரப்பப்படும் நிதி விடயங்கள் குறித்து எவரையும் நம்ப வேண்டாம் என அவர் மக்களுக்கு எச்சரித்துள்ளார்.

சமூக ஊடக தளங்கள் மூலம் நடத்தப்படும் மோசடிகள், மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளைக் கையாள சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு (CPU) முழுமையாகத் தயாராக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக தளங்கள் மற்றும் வலைத் தளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் மோசடி சம்பவங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து விசாரணைகளை வலுப்படுத்தவும் பொது மக்களை எச்சரிக்கவும் சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு தயாராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய வானிலை முன்னறிவித்தல் 12.01.2026

0

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஹரிணி அமரசூரியவை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை – பிமல் உறுதி

0

பிரதமர் பதவியிலிருந்தோ அல்லது கல்வி அமைச்சுப் பதவியிலிருந்தோ ஹரிணி அமரசூரியவை நீக்குவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ஹரிணி அமரசூரிய அவரின் இரு பதவிகளிலும் தொடர்ந்து செயற்படுவார் எனவும் அரசுக்குள் இது குறித்து எந்த விதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஹரிணி அமரசூரிய மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்றும், ஹரிணி அமரசூரியவின் தலைமையில் அரசின் பணிகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வித் துறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் தொடர்ச்சியாகச் செயற்படுத்தப்படும் என்றும், அதற்காக ஹரிணி அமரசூரியவின் தலைமை அவசியமானதாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமருக்கு எதிராக எதிர்க் கட்சிகள் கொண்டுவரத் தீர்மானித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வற்றாப்பளையில் உள்ளக வீதிகள் சீரின்மையால் பாதிப்பை எதிநோக்கும் பொதுமக்கள்..!

0

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வற்றாப்பளை தெற்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள உள்ளக வீதிகள் மிகக் கடுமையாகப் பாதிப்படைந்த நிலையில் காணப்படுவதால் அவ் வீதிகளைப் பயன்படுத்தும் மக்கள் பலத்த போக்குவரத்து நெருக்கடிகளுக்கு முகங் கொடுக்கின்றனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 11.01.2025 இன்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

குறிப்பாக வற்றாப்பளை தெற்கு கிராம அலுவலர் பிரிவில் பள்ளவெளி 01ஆம் குறுக்குவீதி,04ஆம் குறுக்குக்கு வீதி, 05ஆம் குறுக்குவீதி (சுரேந்திரன் கடைவீதி) என்பன மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளன.

ஆகவே இவ்வீதிகளைப் பயன்படுத்தும் மக்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகளைக் கருத்திற்கொண்டு குறித்த வீதிகளைச் சீரமைத்துத் தருமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் மக்களால் இதன் போது கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் மக்கள் எதிர்நோக்கும் சிக்கல் நிலைமைகள் தொடர்பில் நேரடியாகப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், கோரிக்கைகளை எழுத்துமூலமாக கையளிக்குமாறு தெரிவித்ததுடன், குறித்த வீதிகளின் சீரமைப்புத் தொடர்பில் தம்மால் கவனஞ் செலுத்தப்படுமெனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் கணவனுடன் வைத்தியசாலை சென்ற 21 வயது பெண் மாயம்..!

0

மன்னார் சௌத்பார் பகுதியில் வசித்து வந்த 21 வயதுடைய பெண்ணை காணவில்லை என்று உறவினர்களால் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மன்னார் சௌத்பார் பகுதியில் வசித்து வந்த அ. கான்சியூஸ் சகாயகீர்த்தனா வயது (21) எனும் திருமணமான பெண்ணை அவரது கணவர் நேற்றைய தினம் ( 10-1-2025) மன்னார் பொது மருத்துவ மனைக்கு பற் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று பின்னார் அங்கிருந்து கணவர் வீடு திரும்பி மீண்டும் மனைவியை அழைத்துவர சென்ற போது அந்த பெண் அங்கு இல்லை.

இது தொடாபாக மருத்துவமனையிலும் விசாரணை செய்து மன்னார் நகரம் முழுவது தேடியும் பெண் தொடர்பான தகவல் இல்லை என்பதால் உறவினர்களால் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

பொலிஸார் தொடர்ச்சியாக மேற்கொண்ட விசாரணையில் குறித்த பெண் மன்னார் வைத்திய சாலையில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றில் மன்னார் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து வவுனியா செல்லும் பேருந்தில் சென்று வவுனியா குழு மாட்டுச் சந்தியில் இறங்கி வேறு ஒரு முச்சக்கர வண்டியில் சென்றதாக குறித்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தார்கள்.

இன்றைய தினமும் வவுனியா குழு மாட்டுச் சந்தி உட்பட பல இடங்களிலும் பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் தேடி வந்த போதும் பெண் குறித்த எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.

காணாமல் போன இந்த இந்த பெண் தொடர்பாக தகவல்கள் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கும் அவர்களது 0763302475 இந்த தொலைபேசிக்கும் அழைத்து தெரியப் படுத்துமாறு பெண்ணின் உறவினர்கள் கவலையுடன் கேட்டுக் கொண்டுள்ளனர்.

2026 பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!

0

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேசிய பரீட்சைகளுக்கான அட்டவணையை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்,

அதன்படி, இந்த ஆண்டு முழுவதும் ஏழு முக்கிய பரீட்சைகளை நடத்த பரீட்சைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பின் படி, “இந்த ஆண்டின் முதல் பரீட்சையாக இன்று (11) நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையாகும்.

அடுத்து சீரற்ற வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (GCE A/L) பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் ஜனவரி 12 முதல் ஜனவரி 20 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தர சாதாரண தர பரீட்சை பெப்ரவரி 17 முதல் பெப்ரவரி 26, 2026 வரை நடைபெறவுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (GCE A/L) பரீட்சை ஓகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறும்.

2027 ஆம் ஆண்டு முதல் முறையாக உயர்தர பரீட்சைக்கு பங்கேற்கும் மாணவர்களுக்கான மற்றொரு பொதுத் தகவல் தொழில்நுட்பத் பரீட்சை, ஒக்டோபர் 24 ஆம் திகதி நடைபெறும்.

இந்த ஆண்டின் இறுதி தேசியப் பரீட்சையான 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை டிசம்பர் 8 முதல் டிசம்பர் 17 வரை நடைபெற உள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பாடங்களை ஜனவரியில் முடிப்பதும், 2026 சாதாரண தர பரீட்சையை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்துவதும் தேசிய பரீட்சை நாட்காட்டியை அதன் வழக்கமான அட்டவணைக்கு மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிசுபிசுத்துப்போன ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை..!

0

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை (NCM) சமர்ப்பிப்பதை ஒத்தி வைக்க ஐக்கிய மக்கள் சக்தி (SJB) முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய கல்வித் தொகுதிகளிலும் தீர்க்கப்படாத பல சிக்கல்கள் குறித்து எதிர்க்கட்சிக்குத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தாமதப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி மேற்கண்ட விடயம் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கவலைகள் குறித்த தகவல்களைச் சேகரித்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் சேர்க்க கட்சி கூடுதல் நேரத்தைக் கோருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பரந்த ஆதரவைப் பெறுவதற்காக மற்ற எதிர்க்கட்சிகள் மற்றும் நாடாளுமன்றக் குழுக்களுடன் மேலும் கலந்துரையாடல்கள் தேவைப்படுவதால் இந்த தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த கட்டத்தில் பிரேரணையை சமர்ப்பிப்பதால் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு முன்கூட்டியே திகதி நிர்ணயிக்கப்படாமல் போகலாம் என்ற கவலையும் எதிர்கட்சிக்கு உள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

error: Content is protected !!