Wednesday, February 5, 2025
Huis Blog Bladsy 12

பற்றி எரியும் லொஸ் ஏஞ்சல்ஸ்; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்..!

0

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பரவிவரும் காட்டுத் தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அந்த நாட்டு அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பரவிவரும் காட்டுத் தீயானது, காற்று காரணமாக மேலும் அதிகரிக்கக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குறித்த பகுதியில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காட்டுத்தீ காரணமாக லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை விட்டு பெருமளவானவர்கள் வெளியேறியுள்ள நிலையில், அங்கு திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி, காட்டுத் தீயின் போது திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிப்பதற்கும் அமெரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஈரான் இராணுவத்தில் இணையும் ஆயிரம் ட்ரோன்கள் – தரைப் படைகளின் தளபதி

0

ஈரான் இராணுவம் தனது படைகளில் 1,000 மூலோபாய ட்ரோன்களை விரைவில் சேர்க்கவுள்ளதாக அறிவித்துள்ளது, இது நாட்டின் பாதுகாப்பு திறன்களை அதிகரிக்கச் செய்யுமென தெரிவிக்கப்படுகிறது.

ஈரான் இராணுவத்தின் மக்கள் தொடர்புகளின் அறிக்கையின்படி, பாதுகாப்பு மற்றும் ஆயுதப்படை தளவாட அமைச்சகத்துடன் இணைந்து இராணுவத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இந்த ட்ரோன்கள் வரும் நாட்களில் இராணுவத்தில் சேர உள்ளன.

வியாழக் கிழமை(09) நடந்த ஒரு விழாவின் போது, ​​ஈரானின் இராணுவ தரைப் படைகளின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் கியோமர்ஸ் ஹெய்டாரி, இராணுவத்தின் தரைப் படைகள் மேம்பட்ட இராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களைப் பெறுவதற்கான திறனை வலியுறுத்தினார்.

புதிய ஆயுதம் நான்கு அத்தியாவசிய திறன்களைக் கொண்டுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார்: நீண்ட தூரம், துல்லியம், உளவுத்துறை மற்றும் நெட்வொர்க் நோக்குநிலை, இவை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளப் பயன்படுத்தப்படும்.

சமீபத்திய ஆண்டுகளில் ஈரான் அதன் ட்ரோன் திறன்களை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் ஆளில்லா வான்வழி தொழி நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இஸ்ரோவின் புதிய தலைவராக மீண்டும் ஒரு தமிழர் நியமனம்..!

0

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ISRO) புதிய தலைவராக வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அப்துல் கலாம் முதல் சந்திரயான் 3 இன் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் வரை பல தமிழர்கள் இஸ்ரோவில் சாதனை படைத்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தின் குமரி மாவட்டத்தை சேர்ந்த வி.நாராயணன் இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (Indian Space Research Organisation எனப்படும் இஸ்ரோ பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயற்படுகிறது. இஸ்ரோவின் தற்போதைய தலைவராக சோம்நாத் உள்ளார்.

இவரது பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து புதிய தலைவராக வி. நாராயணனை மத்திய அரசின் நியமனக்குழு தேர்வு செய்துள்ளது.

எதிர்வரும் 14-ம் திகதி இஸ்ரோ தலைவராக வி.நாராயணன் பொறுப்பேற்க உள்ளார்.

இஸ்ரோவின் Liquid Propulsion Systems மையத்தின் இயக்குனராக தற்போது வி.நாராயணன் உள்ளார். இவர் இஸ்ரோவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

வெடித்து சிதறிய இந்திய உலங்கு வானூர்தி; இரண்டு விமானிகள் உட்பட மூவர் பலி..!

0

மேற்கு குஜராத் மாநிலத்தில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உட்பட மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஏஎல்எச் என்ற இந்த உலங்குவானூர்தி குஜராத்தின் தலைநகர் காந்திநகரில் இருந்து மேற்கே 416 கிமீ தொலைவில் உள்ள போர்பந்தர் விமான நிலையத்தில் வழக்கமான பயிற்சி செய்து கொண்டிருந்த வேளை விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த நிலையில், குறித்த உலங்குவானூர்தி தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலங்குவானூர்தி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததையடுத்து, அதிலிருந்த மூன்று பணியாளர்களும் உடனடியாக மீட்கப்பட்டு மோசமாக எரிந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

எனினும், துரதிர்ஷ்டவசமாக, மூன்று பணியாளர்களும் உயிரிழந்துள்ளதாக போர்பந்தர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இந்திய காவல்துறை மற்றும் கடலோர காவல்படை விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

லடாக் பகுதிகளை இணைத்து இந்தியாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த சீனா..!

0

இந்திய ஆளுகைக்குட்பட்ட லடாக் பகுதிகளை இணைத்து தனது மாவட்டமாக சீனா அறிவித்துள்ள நிலையில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படாது என இந்தியா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது

கிழக்கு லடாக்கின் டெம்சோக் மற்றும் டெப்சாங் பகுதியில் இருந்து இருதரப்பு ராணுவமும் தங்களது இடத்திற்கு திரும்பியது.

இந்த சம்பவம் நடைபெற்று ஓரிரு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் லாடாக் பகுதிகளை இணைத்து ஹோடன் மாகாணத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் பெயரை சீனா அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படாது என இந்தியா தெரிவித்துள்ளது.

“இந்தியப் பிரதேசத்தில் சீனா சட்ட விரோதமாக ஆக்கிரமித்ததை இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை.

சீனாவின் ஹோடன் மாகாணத்தில் இரண்டு புதிய மாவட்டங்களை நிறுவுவது தொடர்பான அறிவிப்பை நாம் பார்த்தோம்.

இந்த மாவட்டங்கள் என்று அழைக்கப்படும் பகுதிகளின் அதிகார வரம்பு இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தில் வருகிறது” என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலையில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; தமிழகத்தில் பரபரப்பு..!

0

சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் டிசம்பர் 23 ஆம் திகதியன்று மாணவி ஒருவர் பாலியல் வன்னொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

பாதிக்கப்பட்ட மாணவி டிசம்பர் 23 ஆம் திகதியன்று இரவு உணவுக்குப் பிறகு மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குறித்த மாணவியை அச்சுறுத்தி பிறகு மாணவியின் நண்பரை அங்கிருந்து அடித்து விரட்டிவிட்டு குறித்த பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார்.

அத்தோடு, இந்த விடயத்தை வெளியில் கூறினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய காணொளியை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என மிரட்டியதால் பாதிக்கப்பட்ட மாணவி பயத்தில் இருந்துள்ளார்.

இதையடுத்து, உடன் இருக்கும் மாணவிகள் கேட்கவும் நடந்ததை தெரிவித்த பாதிக்கப்பட்ட மாணவி இதையடுத்து, அவரின் பெற்றோருக்கும் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அடுத்த நாள் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

மாணவி அளித்த புகாரின் பேரில் அந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான எண்களை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அதன் அடிப்படையில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபரை பாதிக்கப்பட்ட மாணவி அடையாளம் காட்டியுள்ளார்.

இதையடுத்து, டிசம்பர் 25 ஆம் திகதியன்று 37 வயதான ஞான சேகரன் என்ற நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்யும் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்த உறவுகளுக்கு சிறிதரன் எம்.பி இரங்கல்..!

0

யாழ்ப்பாணத்தில் 51 வருடங்களுக்கு முன்னர் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்ற போது 9 பேர் மரணமடைந்த உறவுகளை நினைவு கூர்ந்ததுடன் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆறுதல் தெரிவித்தார்.

இன்றைய(10) பாராளுமன்ற பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சீனாவில் பரவும் HMPV வைரஸ்; இந்தியாவில் இரு குழந்தைகளுக்கு தொற்று உறுதி..!

0

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.

எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் மனித மெட்டா நியூமோ வைரஸ் தொற்று பாதிப்பு இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த 3 மாத பெண் குழந்தை மற்றும் 8 மாத ஆண் குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.

குழந்தைகள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் எந்த பயண வரவாறு இல்லை எனவும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், குழந்தையின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

மேலும், சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதோடு, இதில் சிறுவர்கள் பலர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக உலக நாடுகள் பலவும் அச்சத்தில் உள்ளன.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

0

நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் பெப்ரவரி 10 முதல் 12 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.

விடைத்தாள் மதிப்பீடு 64 மையங்களில் புதன்கிழமை (8) தொடங்கியது என்று அவர் கூறினார். 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 15 ஆம் திதி நடைபெற்றது.

சிங்கள மொழி மூலம் 244,092 பேரும், தமிழ் மொழி மூலம் 79,787 பேரும் உட்பட மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்..!

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவை நியமித்துள்ளார்.

இதற்கமைவான நியமனக் கடிதம் ஜனதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளரால், மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவுக்கு இன்று (10) வழங்கப்பட்டது.

error: Content is protected !!