Wednesday, February 5, 2025
Huis Blog Bladsy 11

Identity படம் – திரை விமர்சனம்

0

மலையாள சினிமாவில் தொடர்ந்து மிக தரமான படங்கள் வந்துக்கொண்டே தான் இருக்கிறது.

அதிலும் கிரைம் திரில்லர் என்றால் அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல், அந்த வகையில் டொவினோ தாமஸ், திரிஷா, வினய் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள ஐடென்டிட்டி எப்படியுள்ளது பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு இளம் பெண் ஆடை மாற்றுவதை ட்ரையல் ரூமில் வீடியோவாக எடுத்து ஒருத்தன் மிரட்டி பணம் கேட்கிறான்.

அப்படி ஒரு பெண்ணை மிரட்டும் போது, ஒருவன் அவன் இருக்குமிடம் தேடி சென்று அனைத்தையும் அழித்து அவனையும் கொன்று அந்த இடத்தையே எரித்து விடுகிறான்.

இந்த கொலையை இதே கேஸை பாலோ செய்து வரும் திரிஷா நேரில் பார்க்கிறார். அப்போது அந்த செய்தியை தொலைக்காட்சியில் வெளியிட வேகமாக போக அவர் மீது லாரி மோதி பேஸ் ப்ளைண்ட் என்ற பாதிப்பு ஏற்படுகிறது.

தற்போது இந்த கேஸை வினய் விசாரிக்க, டொவினோ நன்றாக படம் வரைபவர், அவர் உதவியுடன் திரிஷாவிற்கு அந்த கொலை செய்தவன் முகம் மட்டும் நியாபகமிருக்க, அதை டொவினோ வரைகிறார்.

ஆனால், திரிஷா சொன்ன அத்தனை அடையாளமும் டொவினோ தாமஸுடன் ஒன்றி போக, அட இது என்னடா டுவிஸ்ட் என்று வினய் பார்வை டொவினோ மீது போக, அவரும் அப் நார்மலாக செயல்பட, சந்தேகம் வலுவாகிறது,

இந்த நேரத்தில் நான் தான் அந்த கொலை செய்தேன் என்று ஒருவர் ஆஜராக, அட யார் தான்பா அந்த கொலை செய்தது என்ற சுவாரஸ்யமே இந்த Identity.

படத்தை பற்றிய அலசல்

மலையாள படம் என்றாலே கிரைம் திரில்லர் எடுப்பதில் வல்லவர்கள், அப்படி ஒரு கிரைம் திரில்லரை ஆண்டின் இரண்டாம் நாளே இறக்கியுள்ளது மலையாள சினிமா.

படத்தின் முதல் பாதி முழுவதும் அந்த கொலையை செய்தது யார் என்ற பதட்டம் தொடங்க, இரண்டாம் பாதி அப்படியே மாறி எதோ போக்கிரி படம் பார்ப்பது போல் மாறுகிறது.

டொவினோ தாமஸ் யார் என்ற கொஞ்சம் ஓவர் என்றாலும் படத்தின் கதைக்கு தேவை, அவரும் ஆ ஊ என்று அலட்டாமல் மௌனமாகவே தன் மேனரிசம் மூலமாவே கலக்கியுள்ளார்.

திரிஷாவும் ஒரு பேஸ் ப்ளைண்ட் பெண்ணாக படம் முழுவதும் ஒரு குழப்பத்துடனே வந்து கடைசியில் அவரும் அந்த கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஆள் யார் என்று கண்டுப்பிடிகும் இடம் சூப்பர்.

வினய் இந்த கதாபாத்திரம் பார்த்தவுடனே இவர் இந்த வேலையை செய்து இருப்பார் என தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை, அவரும் வழக்கம் போல் கொடுத்த வேலையை நன்றாகவே செய்துள்ளார்.

படத்தின் முதல் பாதி சீட் எஜ்-ல் உட்கார வைத்தாலும், இரண்டாம் பாதி களமே மாறி அதிரடி ஆக்‌ஷன் படம் பார்ப்பது போல் உள்ளது, லாஜிக் மீறலும் கொஞ்சம் வருகிறது,

கிளைமேக்ஸ்

ப்ளைட்டில் வரும் சண்டைக்காட்சி ஹாலிவுட் லெவல் தான். ஜாக்ஸ் பிஜாய் பின்னணி இசை படத்திற்கு மேலும் பலம், ஒளிப்பதிவு அட்டகாசம்.

மொத்தத்தில் இந்த Identity மூலம் Malayalam சினிமா தன் ஹிட் கணக்கை ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கி விட்டது.

கேம் சேஞ்சர் – பட விமர்சனம்

0

தமிழ் சினிமாவின் தரத்தை மற்றும் வர்த்தகத்தை பல மடங்கு உயர்த்தி சென்ற ஷங்கர் சமீப காலமாக சின்ன சறுக்கலில் இருக்க, அந்த சறுக்கலிலிருந்து கேம் சேஞ்சரில் மீண்டாரா, பார்ப்போம்.

கதைக்களம்

ராம் சரண் ஒரு நேர்மையான IAS அதிகாரியாக தன் மாவட்டத்தில் நடக்கும் அத்தனை அநியாயங்களையும் தட்டி கேட்கின்றார். அதே நேரத்தில் முதலமைச்சர் தன் மாநிலத்தில் எந்த ஒரு குற்றமும் நடக்கக்கூடாது என்று ஒரு அதிரடி திட்டத்தை கொண்டு வருகிறார்.

இதனால் CM மகனான எஸ் ஜே சூர்யாவின் மணல் கொள்ளை பாதிக்கப்படுகிறது, முதலமைச்சருக்கு தெரியாமல் இரவில் மணல் எடுக்கலாம் என்று பார்த்தால், ராம் சரண் அதற்கு தடையாக இருக்கிறார்.

இதனால் ராம் சரணுக்கும், எஸ் ஜே சூர்யாவுக்கும் மோதல் ஏற்பட, ஒரு கட்டத்தில் முதலமைச்சரை பதவிக்காக எஸ் ஜே சூர்யா கொல்லவும் செய்கிறார், அதோடு ராம் சரணை கொல்லவும் திட்டமிடுகிறார்.

ஆனால், இறப்பதற்கு முன்பு முதலமைச்சர் ஒரு வீடியோவில் அடுத்த CM யார் என்பதை வெளியிட, அதை பார்த்த ஒட்டு மொத்த மாநிலம் மற்றும் எஸ் ஜே சூர்யாவும் ஷாக் ஆக, அதன் பின் ராம் சரண், எஸ் ஜே சூர்யா மோதல் மேலும் பல மடங்கு ஆக, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

அரசியல் கதை எல்லாம் அல்வா சாப்பிடுவது போல் ஷங்கருக்கு, ஆனால், அந்த அரசியல் களத்தில் தான் இந்தியன் 2-வில் சறுக்க, கேம் சேஞ்சர் மூலம் மீண்டும் தான் அரசியல் கிங் என நிரூபிக்க போராடியுள்ளார்.

ஆம், போராடியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும., ராம் சரண் IAS ஆபிசராக மிடுக் ஆன தோற்றத்தில் கலக்கியுள்ளார், மொத்த படத்தையும் தாங்கி செல்வது ராம் சரண் தான், ப்ளாஷ்பேக்கில் வரும் அப்பா ராம் சரண் கேரக்டரில் திக்கு வாயில் அவர் படும் கஷ்டங்களை நம் கண் முன் கொண்டு வருகிறார்.

அதோடு இரண்டாம் பாதியில் மகன் ராம்சரண் தேர்தல் ஆணைய அதிகாரியாக வந்து செய்யும் அதிரடி ஆக்‌ஷன் என ராம் சரண் கெரியரில் முக்கியமான கதாபாத்திரமாக அமைந்துள்ளது கேம் சேஞ்சர்.

கியாரா ஷங்கர் படம் என்றாலே ஹீரோயினுக்கு கொஞ்சமாது முக்கியத்துவம் இருக்கும், இதில் அதுக்கூட இல்லை, வெறும் அழகு பதுமையாக வந்து செல்கிறார், அதோடு பாடல்களுக்கு தலையை காட்டுகிறார்.

வில்லனாக எஸ் ஜே சூர்யா படம் முழுவதும் பழைய ஷங்கர் வில்லன் ரகுவரனை நியாபகப்படுத்துகிறார், அதோடு கிளைமேக்ஸில் பாம் வைக்கிற காட்சியெல்லாம் அப்படியே ரகுவரனாகவே மாறிவிடுகிறார்.

ஆனால், எஸ் ஜே சூர்யா கண்டிப்பாக தன் உடல் மொழியை இந்த படத்திலிருந்து மாற்றியே ஆகவேண்டும், இதுவே தொடர்ந்தால் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டிவிடும்.

படத்தின் முதல் பாதி நல்ல விறுவிறுப்பாக சென்றாலும், ராம் சரண் காலேஷ் போஷன் கியாராவுடன் காதல் படத்தின் வேகத்தடையாக வருகிறது.

இரண்டாம் பாதியில் ப்ளாஸ்பேக் டிபிக்கல் ஷங்கர் ஸ்டைல், ஆனால் இந்த முறை மசாலா மிக அதிகம், அதுவும் கொஞ்சம் ராம்சரண் நடித்த ரங்கஸ்தலம் படம் போலவும் உள்ளது ப்ளாஸ்பேக் காட்சிகள்.

தேர்தல் ஆணையராக வரும் ராம் சரண் போஷன் மீண்டும் படம் செம வேகமெடுக்கிறது, அதிலும் கிளைமேக்ஸில் தேர்தல் கவுண்டிங்-கை எஸ் ஜே சூர்யா நிறுத்த வரும் காட்சியெல்லாம் இந்த டிஜிட்டல் உலகில் கூட இப்படி ஒரு காட்சி வைத்தது அதுவும் ஷங்கர் படமா இல்லை பாலையா படமா என்று தான் கேட்க தோன்றுகிறது.

படத்தின் ஒளிப்பதிவு வழக்கம் போல் பல பிரமாண்ட கூட்டம், செட் என அனைத்தையும் அத்தனை அழகாக காட்டியுள்ளனர்.

தமனின் இசையில் தொப், ஜருகண்டி பாடல் அட்டகாசம், இரண்டும் விண்டேஜ் ஷங்கர் டச். பின்னணி இசை கொஞ்சம் இரைச்சலை குறைச்சு இருக்கலாம்.

மொத்தத்தில் கேம் சேஞ்சர் ஷங்கர் எடுத்துள்ள ஆந்திரா மீல்ஸ், ஆனால் அதிலும் காரசாரம் குறைவே.

மெட்ராஸ்காரன் – திரை விமர்சனம்

0

ஷான் நிகம், கலையரசன் நடிப்பில் வெளியாகியுள்ள மெட்ராஸ்காரன் திரைப்படத்தின் விமர்சனம் குறித்து காண்போம்.

கதைக்களம்

சத்யா (ஷான் நிகம்) தான் காதலித்த பெண்ணுடன் சொந்த ஊரான புதுக்கோட்டையில் திருமணம் செய்துகொள்ள ஏற்பாடுகளை செய்கிறார்.

மறுநாள் திருமண என்ற நிலையில் ஏடிஎம்மிற்கு செல்லும் சத்யாவுக்கும், அங்கு ஒரு ஆளை அடிக்க தயாராக நிற்கும் துரைசிங்கத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு செல்லும் சத்யா, மணப்பெண்ணை பார்க்க அவர் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு காரில் போகும்போது கர்ப்பிணி பெண் ஐஸ்வர்யா தத்தா மீது மோதி விடுகிறார்.

இதனால் அவரது உறவினர்கள் ஒன்று கூடி சத்யாவை தாக்க முயல, முதலில் அப்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்று பேசி அழைத்து செல்கிறார் சத்யா.

அங்கு ஐஸ்வர்யா தத்தாவின் சகோதரரான அரசியல்வாதியும், கணவர் துரைசிங்கமும் வருகிறார். சிகிச்சையில் இருக்கும் ஐஸ்வர்யா தத்தாவின் குழந்தை இறந்து விடுகிறது.

இதன் காரணமாக குற்ற உணர்ச்சியில் சத்யா தாமாக சரணடைந்து சிறைக்கு செல்கிறார். அதன் பின்னர் அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது? காதலியை மீண்டும் கரம் பிடித்தாரா என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்

சென்னையில் கஷ்டப்பட்டு உழைத்து தனது திருமணத்தை சொந்த ஊரில் தடபுடலாக நடத்த வேண்டும் என்று ஷான் நிகம் ஏற்பாடுகளை செய்கிறார். திருமணத்திற்கு தயாராகும் வீடு எவ்வளவு கலகலப்பாக இருக்கும் என்பதை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

சத்யாவாக வரும் ஷான் நிகம் பேசும் தமிழில் மலையாள சாயல் தெரிவது ஆரம்பத்தில் உறுத்தலாக இருந்தாலும் அவரது நடிப்பால் அதனை மறக்கடிக்க செய்கிறார்.

கலையரசன் துரைசிங்கம் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். முதல் பாதிவரை பரபரப்பாக செல்ல வேண்டிய திரைக்கதை மிகவும் மெதுவாக நகர்ந்து பொறுமையை சோதிக்கிறது.

இரண்டாம் பாதியில் ஏதோ ஒரு ட்விஸ்ட் இருக்கிறது என்பதை யூகிக்க முடிந்த நிலையில், வில்லனின் பின்னணி மற்றும் அவர் செய்த குற்றங்கள் என கதை எங்கெங்கோ செல்கிறது.

அதிலும் சுவாரஸ்யம் இல்லை. வலுவில்லாத திரைக்கதையில் படத்தை எப்படி முடிப்பது என்று தெரியாதது போல் இருக்கிறது கிளைமேக்ஸ்.

நடிப்பை பொறுத்தவரை கருணாஸ், தீபா உள்ளிட்ட நடிகர்கள் எல்லாம் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர். சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை மற்றும் கல்யாண பாடல் ஆறுதல். படத்தின் கதைக்கும் தலைப்பிற்கும் சம்பந்தமே இல்லை.

புதுக்கோட்டையை பூர்வீகமாக கொண்ட ஹீரோ வேலைக்காக தான் சென்னை சென்றிருக்கிறார். மேலும் நீ எந்த ஊரு என உள்ளூரில் கேட்கும் போது சென்னை என்கிறார். இதுபோல் பல லாஜிக் மிஸ்டேக்ஸ் படத்தில்.

மொத்தத்தில் ஆராவாரமாக தொடங்கி அயர வைத்து விட்டார் இந்த மெட்ராஸ்காரன்.

வணங்கான் திரை விமர்சனம்

0

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் வணங்கான். இப்படத்தை V House Productions சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

மேலும் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த வணங்கான் திரைப்படம் எப்படி இருக்கிறது விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்

கன்னியகுமாரியில் தனது தங்கையுடன் வாழ்ந்து வரும் கதாநாயகன் அருண் விஜய் (கோட்டி) வாய் பேச இயலாதவராக இருக்கிறார்.

தங்கை மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் அருண் விஜய், தன் கண்முன் கொடுமைகள் நடந்தால் அதை தட்டிக் கேட்கும் நபராகவும் மாறிவிடுகிறார். தட்டி கேட்பது என்றால், அந்த கொடுமைகளை செய்யும் நபர்களை அடித்து துவைத்து சாவு பயத்தையே காட்டி விடுகிறார்.

ஊருக்குள் இப்படி தொடர்ந்து அருண் விஜய் செய்து வர, இவருக்கு நிலையான வேலை இருந்தால் மட்டுமே இப்படி எதுவும் செய்யமாட்டார் என முடிவு செய்து, அருண் விஜய்யின் நலன் விரும்பியான சர்ச் ஃபாதர், ஆதரவற்றோர் இல்லத்தில் செக்யூரிடி வேலையை அருண் விஜய்க்கு வாங்கி தருகிறார்.

அங்கு வேலை பார்த்துக் கொண்டே அங்குள்ள அனைவரிடமும் பழகும் அருண் விஜய்க்கு பல சொந்தங்கள் கிடைக்கிறது. இந்த நிலையில், அதே ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள இரண்டு நபர்களை அருண் விஜய் கொலை செய்கிறார். இந்த கொலைகளை செய்தது நான் தான் என, தானே முன் வந்து போலீசிடம் சரணடைகிறார்.

போலீஸ் எவ்வளவு கேட்டாலும் கொலைக்கான காரணத்தையும் சொல்லாமல் மூடி மறைக்கிறார் அருண் விஜய். இவர் எதற்காக இந்த கொலையை செய்தார்? இதன்பின் என்ன காரணம் உள்ளது? எதை அனைவரிடம் இருந்தும் காரணத்தை மறைகிறார் என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

கதாநாயகன் அருண் விஜய் நடிப்பு வேற லெவல். வாய் பேச இயலாதவராக நடித்து நம்மை கலங்க வைத்துவிட்டார். ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார். குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் இவருடைய நடிப்பு மனதை தொடுகிறது.

இவருடன் இணைந்த நடித்த நடிகைகள் ரோஷ்ணி பிரகாஷ், ரிதா ஆகியோரின் நடிப்பு சிறப்பாக இருந்தது. அதே போல் சாயா தேவி, பாலசிவாஜி, சண்முகராஜன் ஆகியோரின் நடிப்பு திரைக்கதையோடு ஒன்றிப்போகிறது. கௌரவ வேடத்தில் தோன்றிய மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனியின் கதாபாத்திரங்களும் சிறப்பு.

இயக்குநர் பாலா எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்கு முதல் பாராட்டுக்கள். சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை சுட்டிக்காட்டி, அதற்கு தண்டை இப்படித்தான் இருக்க வேண்டும் என திரைக்கதையை நேர்த்தியாக கொண்டு சென்ற விதம் சிறப்பாக இருந்தது.

முதல் பாதியில் அருண் விஜய்க்கும் ரோஷ்ணி பிரகாஷுக்கும் இடையிலான காதல் காட்சிகள் கவனம் ஈர்க்கவில்லை. மற்றபடி படத்தில் குறை என்று சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை. இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சி படத்தின் மிகப்பெரிய பலம்.

குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டார் பாலா. கண்டிப்பாக அருண் விஜய் மற்றும் பாலா இருவருக்கும் தேசிய விருது கிடைக்க வேண்டும். தன்னைச் சுற்றி நடக்கும் கொடுமைகளை ஒருவன் தட்டிக் கேட்டால், அவனுடன் இந்த சட்டமும் நிற்கும் என காட்டிய விதம் பாராட்டுக்குரியது.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் பாடல்கள் சிறப்பு. சாம் சி.எஸ் பின்னணி இசை மிரட்டலாக இருந்தது. ஒப்பனை மற்றும் ஆடை வடிவமைப்பு பக்கா. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் படத்தின் பலம்.

மொத்தத்தில் வணங்கான் அனைவரையும் கலங்க வைத்து விட்டான். கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

ரேகா சித்ரம் திரை விமர்சனம்

0

ஆசிப் அலி, அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியாகியுள்ள ரேகா சித்ரம் மலையாள படத்தின் விமர்சனம் குறித்து காண்போம்.

கதைக்களம்

காவல் ஆய்வாளர் விவேக் (ஆசிப் அலி) ஆன்லைன் ரம்மி விளையாடியதற்காக சஸ்பென்ட் செய்யப்படுகிறார்.

வீட்டு வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கும் அவர் திரிச்சூரின் மலக்கப்பாரா பகுதிக்கு டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார்.

அங்கு சென்றதுமே சித்திக் காட்டுக்குள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கை விசாரிக்க வேண்டியதாகிறது.

சித்திக் இறப்பதற்கு முன் பேஸ்புக் லைவில் மூவரின் பெயர்களை கூறிவிட்டு, நாங்கள் அந்த பெண்ணை இங்கேதான் புதைத்தோம். அதனால் என் உயிர் இங்கேயே போகட்டும் என்று கூறுகிறார்.

அவரது வாக்குமூலத்தை வைத்து அந்த இடத்தில் தோண்டும் போது எலும்புக்கூடுகள் கிடைகின்றன. அதனை வைத்து ஆசிப் அலி விசாரணையைத் தொடங்குகிறார். அப்போது தொழிலதிபர் மனோஜ் கே ஜெயன் மீது ஆசிப் அலிக்கு சந்தேகம் வருகிறது.

மேலும் அவர் விசாரிக்கும் நபர்கள் கொல்லப்படுகிறார்கள். இடையே ஆசிப் அலி டிராபிக்கிற்கு மாற்றப்படுகிறார். அதன் பின்னர் காவலராக நேரடியாக இல்லாமலே குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்படுகிறார்.

40 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட பெண் யார்? அவருக்கும் தற்கொலை செய்துகொண்டவருக்கும் என்ன சம்பந்தம்? தன்னை செயல்படவிடாமல் தடுப்பது யார் என்ற கேள்விகளுக்கு ஆசிப் அலி எப்படி பதில் கண்டுபிடித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை

படம் பற்றிய அலசல்

விவேக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆசிப் அலி மிடுக்கான காவல் அதிகாரியாக நடிப்பில் அதகளம் செய்திருக்கிறார்.

சைலண்டாக விசாரிக்கும் போலீஸ் என்று பார்க்கும்போது தடாலடியாக தன்னை கிண்டல் செய்யும் அதிகாரி ஒருவரை அடித்து எச்சரிக்கும் காட்சியில் ஆசிப் அலி கைத்தட்டலை பெறுகிறார்.

போலீசாக இருந்தாலும் வழக்கை கண்டுபிடிக்க வேண்டுமென தானே இறங்கி குழியை தோண்டும் ஆசிப் அலி, 1985யில் ரேகா என்ற பெண்ணுக்கு என்ன ஆனது, உண்மையில் அவர் யார் என்ற கேள்விக்கு விடை முயல்வதிலும் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அவருக்கு அடுத்து அனஸ்வரா ராஜன் வெகுளித்தனமான பெண் கதாபாத்திரம் மூலம் நம்மை கவர்கிறார்.

ஒரு நடிகையாக வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று கூறுவதுடன், மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என அவர் பேசும் ஒரு காட்சி மிகவும் எதார்த்தம்.

மனோஜ் கே ஜெயன் அமைதியான வில்லத்தனத்தில் ஸ்கோர் செய்கிறார். பெரும்பாலும் பார்வையிலேயே வசனத்தை அவர் கடத்துகிறார். பிளாஷ்பேக் காட்சியில் நடிகர் மம்மூட்டியை டிஏஜிங் லுக்கில் காட்டிய விதம் அருமை.

முதல் பாதி பொறுமையாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து வரும் யூகிக்க முடியாத ட்விஸ்ட்கள் நம்மை சீட் நுனியில் அமர வைக்கிறது.

பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்க்க, ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. மொத்தத்தில் மலையாள சஸ்பென்ஸ் திரில்லர் படங்களை விரும்பி பார்ப்பவர்களுக்கு செம ட்ரீட் இந்த “ரேகா சித்ரம்”

இன்றைய இராசி பலன்கள் (11.01.2025)

0

மேஷம்

இன்று இசைத் துறையில் உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் லாபம் கிடைக்கும். மின்சாரம், இரசாயணம் தொழில் சார்ந்தவர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தொழில் காரணமாக வாங்கிய கடனை திரும்ப செலுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

ரிஷபம்

இன்று எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். தடைகளை முறியடித்து காரிய வெற்றி பெறலாம். வீடு, நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் சில பாதிப்புகள் வரலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மிதுனம்

இன்று மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் வதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும் என்றாலும் தம்பதிகளுக்குள் சிற்சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்

இன்று புதிய பொறுப்புகள் வந்து சேரும். கிடப்பில் போட்டிருந்த வேலைகளை செய்வீர்கள். ஊதிய விஷயங்களில் நல்ல மனநிலை இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டும் காலமிது. பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியம், கதை, கவிதைத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

சிம்மம்

இன்று பிள்ளைகளின் வளப்பின் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கன்னி

இன்று செலவுகளைப் பற்றி கவலைப்படும் சமயம் வந்து விட்டது. ஆடம்பர செலவுகள் வேண்டாம். இளையசகோதரத்தின் மூலம் லாபம் கிடைக்கும் நேரமிது. சிறப்பான சுகங்களை அனுபவிக்க போகும் காலமிது. புத்தம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

துலாம்

இன்று சில மாற்றங்கள் வந்து சேரும். பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும். உடனே கைகூடா விட்டாலும் அதற்கான விதையை இப்போது ஊன்றா வேண்டிய காலகட்டமிது. பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டிய காலமிது. அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

விருச்சிகம்
தோ, ந, நி, நோ, ய, இ, யு
இன்று வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும். புதிய வாகனம் யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

தனுசு

இன்று உலக வாழ்க்கை யோக வாழ்க்கை இரண்டிலும் சரி சமமான எண்ணங்கள் உண்டாகும். அருளாளர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபாடு அதிகரிக்கும். பாகப்பிரிவினை பிரச்சனைகளின்றி சுமூகமாக நடைபெறும். இளைய சகோதரம் குடும்ப பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டு லாபங்களை சேர்ப்பார். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்

இன்று விருந்து விழா என சென்று வருவீர்கள். குடும்பத்தில் நிலவிவந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக மறையும். தம்பதிகளிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும் பிரிந்திருக்கும் குடும்பம் ஒன்று சேரும். உத்தியோகம் பார்ப்பவர்கள் பிந்தங்கிய நிலை மாறி முன்னேற்றம் காண்பர். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கும்பம்

இன்று கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மீனம்

இன்று லாபம் ஈட்டுவீர்கள். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியம், கதை, கவிதைத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். அழகுநிலையம் வைத்திருப்போர், காஸ்மெட்டிக்ஸ் வியாபாரம் செய்வோர் மற்றும் ஆடை அணிகலன்கள் விற்பனை செய்வோருக்கு நல்ல நாள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

இன்றைய இராசி பலன்கள் (10.01.2025)

0

மேஷம்

இன்று பயணங்களின் போது கவனம் தேவை. பணவரத்து தாமதப் படலாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களுக்காக அலைய வேண்டி வரும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

ரிஷபம்

இன்று தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயலாற்றுவீர்கள். நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவீர்கள். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். எதையும் மனோதைரியத் துடன் செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மிதுனம்

இன்று வீடு தொடர்பான பணிகள் விரைந்து நடக்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். தொழில்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கடகம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பற்றி ஆலோசிப்பார்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி மகிழ்ச்சியான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

சிம்மம்

இன்று உறவினர்களுடன் சுமுக உறவு இருந்தாலும் அவர்களால் கிடைக்கும் உதவி தாமதப்படும். எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. மாணவர்கள் பாடங்களில் சந்தேகம் கேட்பதற்கு தயக்கம் காட்டாமல் இருப்பது வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கன்னி

இன்று வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பொறுமையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக முடிவு எடுப்பது நன்மை தரும். உடல் ஆரோக்கியம் ஏற்படும். மனதில் இருந்த குழப்பம், கவலை நீங்கும். தைரியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

துலாம்

இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் அதிகரிக்கும். புதிய ஆர்டர்கள் பெறுவதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தயக்கத்துடன் தங்களது பணிகளை செய்ய வேண்டி இருக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். சொத்துக்கள் வாங்க எடுக்கும் முயற்சிகள் தாமதப்படும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

தனுசு

இன்று எடுத்த முடிவை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற மிகவும் கவனமாக பாடங்களை படிப்பீர்கள். மனகுழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை மேலோங்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்

இன்று எதிரில் இருப்பவரை சரியாக எடைபோடுவீர்கள். பணபற்றாக் குறை நீங்கும். மற்றவர்களால் குற்றம் சாட்டப்படும் சூழ்நிலை உருவாகலாம் கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கும்பம்

இன்று வீடு, வாகனம் போன்றவற்றை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். மனோதைரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். இடமாற்றம் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மீனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் கஷ்டம், சுகம் இரண்டும் ஏற்படலாம். எல்லாரும் நட்புடன் பழகுவார்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

இன்றைய இராசி பலன்கள் (09.01.2025)

0

மேஷம்

இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். மாணவர்கள் சகமாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

ரிஷபம்

இன்று நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மிதுனம்

இன்று தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கடகம்

இன்று குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள். எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

சிம்மம்

இன்று மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தடைதாமதம் ஏற்படும். வீண் வழக்குகள் வரலாம். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை. அலைச் சலை சந்திக்க நேரிடும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கன்னி

இன்று பயணம் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம். தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

துலாம்

இன்று வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது வியாபார மேன்மைக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் திடீரென்று பிரச்சனைகள் தோன்றலாம். கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும்படி சம்பவம் நிகழலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

தனுசு

இன்று மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. மாணவர்கள் மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்

இன்று முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். பணிநிமித்தமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குறிக்கோளற்ற வீண் பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிட்டு அதை தீர்த்து வைக்க முயல்வதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கும்பம்

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வீண் அலைச்சல், பண வரத்தில் தாமதம் போன்றவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை இருக்கும். அலுவலகம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டிவரும். எந்திரங்களை கையாளும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மீனம்

இன்று குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வி மற்றும் நலனில் கூடுதல் கவனம் செலுத்து வது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

இஸ்ரேலை சீண்டி ஹவுதி இழைத்த மிகப்பெரிய தவறு; கதிகலங்கும் மத்திய கிழக்கு..!

0

ஈரான் ஆதரவு பெற்ற யேமனில் உள்ள ஹவுதி அமைப்பின் கட்டமைப்புகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

ஹவுதி அமைப்பினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, யேமன் தலைநகர் சனாவுக்கு அருகிலுள்ள ஹெசியாஸ் மின் உற்பத்தி நிலையமும் மேற்கு கடற்கரையில் உள்ள ஹொடைடா மற்றும் ராஸ் இசா துறைமுகங்களும் தாக்கப்பட்டதாக IDF தெரிவித்துள்ளது.

குறித்த மின் உற்பத்தி நிலையமானது, ஹவுதி அமைப்பின் இராணுவ நடவடிக்கைகளில் மைய எரிசக்தி ஆதாரமாக செயற்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சனாவின் வடக்கே உள்ள ஹார்ஃப் சுஃபியான் மாவட்டத்தில் ஹவுதி தளங்களை அமெரிக்கா தலைமையிலான கூட்டணி தாக்கியதாகக் கூறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நேற்றிரவு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கும் ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

எனினும், ஏமனில் இருந்து இஸ்ரேல் மீது ஏவப்பட்ட மூன்று ட்ரோன்களை இஸ்ரேலிய விமானப்படை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியதாகவும், எந்த சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை என்றும் IDF மேலும் தெரிவித்துள்ளது.

பைடனின் இறுதி நாட்கள்; உக்ரைனுக்கான தனது கடைசி நகர்வு..!

0

உக்ரைனுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்க அமெரிக்கா தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேட்டோ அமைப்பில் இணைந்து கொள்ள உக்ரைன் முயற்சித்ததால், அதன் அண்டை நாடான ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுப்பு நடத்தி தாக்குதல் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவிகளை அளித்து வருகின்றன.

உக்ரைன்-ரஷ்யா போர் உலகெங்கிலும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக உக்ரைன்-ரஷ்யா போரின் விளைவாக உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளதுடன் இந்த போர் மூன்றாம் உலகப் போரை தூண்டி விடும் அபாயமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அமெரிக்கா உக்ரைனுக்கு மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இராணுவ உதவிகளை அறிவித்துள்ளது.

இதில் டாங்கிகள், ஏவுகணைகள் போன்ற நவீன ஆயுதங்கள் அடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் மூலம், போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய மொத்த உதவித் தொகை 66.5 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.

இந்த உதவித் தொகை ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் செய்யப்படும் இறுதி ஒதுக்கீடுகளில் ஒன்றாக இருக்கும் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்த மாதம் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், தனது பதவிக் காலத்தில் உக்ரைனுக்கு அதிகபட்ச உதவிகளை வழங்க ஜோ பைடன் முயன்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!