Thursday, March 5, 2026
Huis Blog Bladsy 11

அமெரிக்காவையே மிரள வைத்த ஈரானின் புதிய தொழிநுட்பம்; உலக நாடுகள் வியப்பில்..!

0

ஈரானில் தற்போது நிலவி வரும் கடுமையான உள்நாட்டுக் கலவரங்களை ஒடுக்க, அந்நாட்டு அரசு இணைய சேவையை முழுமையாக முடக்கியுள்ளது.

இதற்குப் போட்டியாக எலோன் மஸ்க் தனது ‘ஸ்டார்லிங்க்’ சேவையை ஈரானில் இலவசமாகச் செயல்படுத்தினாலும், முன்பை விட இம்முறை ஈரான் தொழில்நுட்ப ரீதியாகத் தன்னைத் தயார்படுத்தியுள்ளது.

Starlink இணையத்தை யாராலும் தடுக்க முடியாது என்ற பிம்பத்தை ஈரான் இன்று உடைத்துள்ளது.

ஸ்டார்லிங்க் மூலம் அனுப்பப்படும் தரவுகள் Data packets ஈரானின் பல பகுதிகளில் 80% வரை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதை டிஜிட்டல் பாதுகாப்பு வல்லுநர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஈரான் தனது வான்வெளியில் சுமார் 5,000 கி.மீ சுற்றளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அதிநவீன Military-grade Jammers களை பயன்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது வெறும் சிக்னல் தடங்கல் மட்டுமல்ல, செயற்கைக்கோள்கள் மற்றும் தரைத்தள முனையங்களுக்கு இடையிலான அதிர் வெண்களை (Frequencies) முற்றிலுமாக மறைக்கும் ஒரு Electronic Shield என்று வர்ணிக்கப்படுகிறது.

இந்தத் தடுப்பு நடவடிக்கைக்குப் பின்னால் ரஷ்யா அல்லது சீனாவின் தொழில்நுட்ப உதவி இருக்கலாம் என்று மேற்குலக நாடுகள் சந்தேகிக்கின்றனர்.

உண்மையில் இது ஈரானிய உள்நாட்டுப் பொறியாளர்களின் திறமையின் மூலம் உருவாக்கப்பட்டது, எத்தகைய செயற்கைக் கோள் தொழிநுட்பத்தையும் முடக்கும் ஆற்றல் ஈரானியர்களுக்கு உண்டு .

starlink போன்ற “தோற்கடிக்க முடியாத” தொழிநுட்பங்கள் கூட ஒரு தேசத்தின் இறையாண்மை மற்றும் ராணுவ பலத்திற்கு முன்னால் தோல்வியடைந்து விட்டது என்பது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கேப்பாபுலவு காணி விடுவிப்பு விவகாரம்; முல்லைத்தீவு மாவட்டச் செயலரை சந்தித்த ரவிகரன் எம்.பி..!

0

முல்லைத்தீவு மாவட்ட மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரன் மற்றும் கரைதுறைப் பற்று உதவிப் பிரதேசசெயலாளர் ஆகியோரை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன். 12.01.2025நேற்று நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

மிக முக்கியமாக இச்சந்திப்பில் கேப்பாபுலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகளின் விபரங்களை மாவட்டச் செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று உதவிப் பிரதேச செயலாளரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன் போது கோரியிருந்தார்.

குறிப்பாக கடந்த 07.01.2026அன்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டம் இடம்பெற்றபோது கேப்பாப்புலவில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும், விடுவிக்கப்படாத காணிகளுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்பட்டதுடன், வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகளால் ஜனாதிபதியிடம் பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவ்வாறு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட பொய்யான தகவலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேப்பாப்புலவில் 55பேருக்குரிய 59.5ஏக்கர் காணிகளும் 4பேருக்குரிய 100ஏக்கர் மத்திய வகுப்புக் காணிகளுமாக மொத்தம் 59 பேருக்குரிய 159.5 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் கேப்பாப்புலவில் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதியிடம் உண்மை நிலையினை சுட்டிக் காட்டியிருந்தார்.

இதன் போது கேப்பாப்புலவு காணிவிடுவிப்பு விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் இராணுவத்தினரிடம் கோரப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள 159.5ஏக்கர் மக்களின் காணிகள் தொடர்பான உண்மையான விபரங்களை ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் திட்டமிட்டுள்ளார்.

அந்த வகையியில் கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் விபரங்கள், ஆவணங்கள் என்பவற்றை முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் ஆகியோரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கோரியுள்ளார்.

இந்நிலையில் விரைவாக அந்த ஆவணங்கள் மற்றும் விவரங்களை கையளிப்பதாக மாவட்டச்செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோரால் இதன் போது பதில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலும் கவனஞ் செலுத்தப்பட்டிருந்தன. அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட செயலக திட்டமிடல் பிரிவினர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி.மஞ்சுளாதேவி சதீசன் ஆகியோரையும் இதன் போது சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மாவட்டத்தின் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவை நீக்க வேண்டும் – ஜி.எல்.பீரிஸ்

0

அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு சட்டமானால் நாட்டில் ஜனநாயகம் இல்லாதொழியும். இந்த சட்டவரைவை நீக்க கோரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அறிவுறுத்த வேண்டும் என்று முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரிடம் வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கண்டி அஸ்கிரிய பீடத்துக்கு சென்று மகாநாயக்க தேரரை சந்தித்து கலந்துரையாடும் போது மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கை பல்வேறு தரப்பிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது என்பதற்காக அரசாங்கம தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது.

பொதுமக்களுடன் எவ்விதமான வெளிப்படையான கலந்துரையாடல்களும் இல்லாமல் தான் அரசாங்கம் புதிய கல்வி கொள்கையை அமுல்படுத்தியுள்ளது. நாட்டின் கலாசாரத்துக்கு எதிராக விடயங்களை கல்வி கொள்கையில் உள்ளடக்கினால் அது விளைவுகளை ஏற்படுத்தும்.

புதிய கல்விக் கொள்கை தொடர்பில் அரசாங்கம் சகல தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்விடயத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயற்பட வேண்டும்.

நீதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை காட்டிலும் பாரதூரமானது.

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு சட்டமானால் நாட்டில் ஜனநாயகம் இல்லாதொழியும், ஊடக சுதந்திரம் அரச அடக்குமுறைக்கு உள்ளாகும். ஆகவே இந்த சட்டவரைவை நீக்குமாறு மாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நாட்டை பின்தள்ளும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது..!

0

மக்களின் அடிப்படை உரிமையை மீறும் நாட்டை மீண்டும் பின்னுக்கு கொண்டு செல்லும் அரசாங்கத்தின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் கொண்டுவந்துள்ள புதிய அரசுக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் பல விடயங்கள் மக்களின் அடிப்படை உரிமையை மீறும் வகையில் அமைந்துள்ளன. அதேநேரம் எமது நாடு சர்வதேச நாடுகளால் ஒதுக்கப்பட்டு மீண்டும் பின்னுக்கு கொண்டு செல்லும் ஆபத்து இருக்கிறது. அதனால் இந்த சட்டமூலம் தொடர்பில் அனைவரது கருத்துக்களையும் கேட்டறிந்து செயற்படுத்த வேண்டும்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நாட்டில் அமுல் படுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் எமது நாட்டுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP வரிச் சலுகை ரத்துச் செய்யப்பட்டிருந்தது. இதனால் எமது நாட்டின் ஆடை உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. என்றாலும் நல்லாட்சி அரசாங்கத்தில் மீண்டும் ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை எங்களுக்கு பெற்றுக் காெள்ள முடியுமாகியது.

அதனால் புதிய பயங்கரவாத எதி்ர்ப்பு சட்ட மூலத்தில் தெரிவிக்கப்படும் சில விடயங்கள் சர்வதேச நாடுகளுடன் நாங்கள் செய்து கொண்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு எதிரான விடயங்கள் உள்வாங்கப்பட்டிருக்கிறதா? அரசாங்கம் தேர்தல் காலத்தில் தெரிவித்த வாக்குறுதிகளுக்கு மாற்றமான விடயங்களை உள்ளடக்கி இருக்கிறதா என நாங்கள் பார்க்க வேண்டும். இந்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்த்தின் தகவல்களை தகவல் அறியும் சட்டத்தின் மூலமும் பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது.

அன்று இவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்தத்தைக் கூட கைச்சாத்திடுவதற்கு இடமளிக்காமல் போராட்டம் மேற்கொண்டு வந்தார்கள். இந்திய எதிர்ப்பு கொள்கையை கடைப்பிடித்து வந்தார்கள். ஆனால் இன்று இந்தியாவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் குறித்து எந்த தகவலும் வெளிப்படுத்தவில்லை. ஒப்பந்தத்தின் மூலம் கச்ச தீவை தற்காலிகமாக இந்தியாவுக்கு வழங்கியுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.

மேலும் இந்த அரசாங்கம் பொய் வாக்குறுதிகளை வழங்கே ஆட்சிக்கு வந்தது. தொடர்ந்தும் பொய்யாலே ஆட்சியை கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள். நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்த அடிப்படை நிவாரண தொகைகளை இன்னும் வழங்கி முடிக்கவில்லை. அனர்த்தத்தில் மரணித்தவர்களின் எண்ணி்க்கையைக் கூட இன்னும் உத்தியோகபூர்வமாக அரசாங்கம் அறிவிக்கவில்லை.

இன்றைய வானிலை முன்னறிவித்தல் 13.01.2026

0

வடக்கு, வட-மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இடைக்கிடையே பல தடவைகள் மழை பெய்யக் கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பிரதேசங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம்.

மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக் கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

சிலாபம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 கிலோ மீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

பெண்ணை துஸ்பிரயோகம் செய்து இரு பியர் போத்தல்களை சொருகியவர்கள் கைது..!

0

வயிற்று வீக்கம் மற்றும் அதிக இரத்தப் போக்கு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கருப்பையில் இருந்து இரண்டு கண்ணாடிப் போத்தல்களை மாரவில ஆதார மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் நாத்தாண்டியா பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண். கடந்த மாதம் 9 ஆம் திகதி 1990 அவசரசேவை நோயாளர் காவு வண்டி மூலம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்தப் பெண்ணுக்கு பல பரிசோதனைகள் செய்யப்பட்டன.

மேலும் அவரை ஸ்கான் செய்ய பரிந்துரைத்த பிறகு, பெண்ணின் வயிற்றில் இரண்டு போத்தல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த அறுவை சிகிச்சையின் போது இரண்டு போத்தல்களையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

இது தொடர்பாக நோயாளியை மேலும் விசாரித்த போது, ​​

அவர் தேங்காய் சார்ந்த உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், ஜனவரி 1 ஆம் திகதி நிறுவனத்தின் உரிமையாளரின் வீட்டில் ஒரு விருந்து நடைபெற்றதாகவும் கூறினார். விருந்தின் போது, ​​நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு நபர்களுடன் மது அருந்தியதாகவும், குடிபோதையில் இருந்த போது, ​​அவர்கள் மீண்டும் மீண்டும் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்னர் இரண்டு போத்தல்களை அவரது அந்தரங்க உறுப்புகளில் செருகியதாகவும் அவர் கூறியுள்ளார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக தனியார் சிகிச்சை பெற்று வந்ததாகவும், தனது உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நத்தாண்டிய-வலஹாபிட்டிய மற்றும் பனங்கொட பகுதிகளைச் சேர்ந்த 51 மற்றும் 56 வயதுடைய இருவரையும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் 47 வயதுடைய பெண்ணையும் மாரவில பொலிசார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரையும் மாரவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய பின்னர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கோமாவில் இருந்து எழுந்த விமல் உண்ணாவிரத நாடகத்தில் குதிப்பு..!

0

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, சிவில் சமூக பிரதிநிதிகளுடன் இணைந்து சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (12.01.2026) காலை முதல் தொடர்ச்சியான சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

புதிய கல்வி சீர்திருத்தங்களை திரும்பப் பெறக் கோரியும், பிரதமர் ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை கடந்த காலத்தில் கல்விக்கும், அதிபர், ஆசிரியர்களுக்கு எதிராகவும் கடும் அநீதி நடைபெற்ற போது கோமாவில் இருந்த விமல் வீரவன்ச உள்ளிட்ட தரப்பினர் தமது குறுகிய அரசியல் இருப்பிற்காக கல்வி விடயத்தில் தலையீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதே கல்வித் துறை சார்ந்தோரின் முடிவாக உள்ளது.

தமிழரசு கட்சியின் மன்னார் உறுப்பினர்களுடன் சத்தியலிங்கம் எம்.பி சந்திப்பு..!

0

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக்கிளை உறுப்பினர்களை இன்று (12.01) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

கட்சியின் மன்னார் மாவட்டக்கிளை அலுவலகத்தில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் விசேடமாக கலந்துரையாடப்பட்டது. உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பிற்பாடு சபைகளில் ஆட்சியமைத்தலின் போது ஏற்பட்ட பின்னடைவு தொடர்பில் இதன் போது விவாதிக்கப்பட்டது.

மேலும் சமகால அரசியல் நிலவரங்கள் உட்பட கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மன்னார் மாவட்டக் கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

யாழிலிருந்து நேரடி ஏற்றுமதிக்கு சுங்கத் திணைக்களம் ஆதரவு..!

0

யாழிலிருந்து ஏற்றுமதி நடவடிக்கைகளை நேரடியாக முன்னெடுப்பதற்குரிய ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இலங்கைச் சுங்கத் திணைக்களம் தயாராக உள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் உறுதியளித்தார்.

வடக்கிலிருந்து நேரடியாக ஏற்றுமதிச் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரால் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்குக் கடிதம் மூலம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அக்கோரிக்கைக்கு அமைவான விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (12) மாலை நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது வடக்கின் ஏற்றுமதிச் சவால்கள் குறித்துத் தெரிவித்த ஆளுநர்,

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த விவசாய மற்றும் ஏனைய உற்பத்தியாளர்கள், தமது உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குத் தற்போதைய நிலையில் மூன்றாம் தரப்பினரையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இதனால் உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான இலாபம் குறைவடைகின்றது.

இந்நிலையை மாற்றியமைக்கும் வகையில், ஒரு விவசாயி தனது உற்பத்திப் பொருளைத் தானே நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கு ஏற்றவகையிலான பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம். இத்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த சுங்கத் திணைக்களம் உதவ வேண்டும், என வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, இந்தத் திட்டத்துக்குக் கொள்கையளவில் நாம் இணக்கத்தை வெளியிடுகின்றோம். தற்போதுள்ள சில நடைமுறைச் சிக்கல்களைத் துரிதமாகத் தீர்த்து, வெகு விரைவில் யாழ்ப்பாணத்திலிருந்து நேரடி ஏற்றுமதிக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்போம், எனக் குறிப்பிட்டார்.

இதனை எவ்வளவு விரைவாகச் சாத்தியப்படுத்த முடியுமோ, அவ்வளவு விரைவாக ஆரம்பிப்போம் என ஆளுநர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் மற்றும் சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி முரசுமோட்டையில் கோர விபத்து; அதிகரித்த பலி எண்ணிக்கை..!

0

பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியின் முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற போது காரில் ஐந்து பேர் பயணித்துள்ளதுடன், அவர்களில் நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விசுவமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும் வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்துமே நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

error: Content is protected !!