Saturday, June 27, 2026
Huis Blog Bladsy 30

பாடசாலைகளுக்கு மாணவர் பதிவு புத்தகங்கள் கிடைக்கவில்லை – அதிபர்கள் கவலை

0

2026 ஆம் ஆண்டின் முதலாம் தவணைக்கான கல்விச் செயற்பாடு இன்று (05) தொடங்கிய போதிலும், 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முறையான கல்வித் திட்டம் எதுவும் வெளியிடப்படவில்லை என்று தரப்படுத்தப்பட்ட அதிபர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் ஜனவரி 21 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் கல்வி நடவடிக்கைகளில் இடைவெளி உள்ளது என்று அதன் பொதுச் செயலாளர் நிமல் முதுங்கொடுவா குறிப்பிட்டார்.

பாடசாலை ஆரம்பமாகும் முதல் நாளில் பாடசாலைகளுக்கு மாணவர் பதிவு புத்தகங்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

புதிய 6 ஆம் வகுப்பு தொகுதிகளில் உள்ள பிழைகள் மற்றும் அதிகாரிகள் அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்கிறார்கள் என்பது குறித்தும் கவலைகள் எழுப்பப்பட்டன.

இதேவேளை, இந்தப் பாடத் திட்டத்தை செயல்படுத்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 7,181 பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், 132,580 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனைவியின் தாலிக்கொடியை கொழும்பு யுவதியிடம் இழந்த யாழ் வங்கி ஊழியர்..!

0

யாழைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர், மனைவிக்கு தெரியாது எடுத்துச் சென்ற 9 பவுண் தாலிக் கொடியை கொழும்பு யுவதி எடுத்துக் கொண்டு தலைமறைவான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிய வருகின்றது.

கடந்த சில மாதங்களின் முன்னர் இடம்பெற்ற இச்சம்பவம், மனைவி மறைவிடத்தில் இருந்த தாலிகொடியை விசேடம் ஒன்றுக்காக எடுக்க சென்ற போதே கணவனின் குட்டு வெளிப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

யாழைச் சேர்ந்த திருமணமான வங்கி ஊழியர் ஒருவருக்கு , அவரது நண்பனின் ஊடாக கொழும்பு யுவதி ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

அந்த யுவதியுடன் தனித்திருக்க விரும்பி குறித்த வங்கி ஊழியர் மனைவிக்கு தெரியாது அவர்து தாலிகொடியை எடுத்து கொண்டு கொழும்பு யுவதியுடன் வவுனியா சென்று ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் வங்கி ஊழியர் கண் அயர்ந்த நேரத்தில் கொழும்பு யுவதி, வங்கி ஊழியரிடம் இருந்த தாலிக் கொடியை எடுத்து கொண்டு கம்பி நீட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண் விழி்த்த பின்னரே வங்கி ஊழியருக்கு , கொழும்பு யுவதி தாலிக் கொடியுடன் மாயமாகியமை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து நண்பனுடன் யுவதியை தேடியபோதும் அவர்களால் கொழும்பு யுவதியை கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

இந்த நிலையிலேயே மனைவி தாலிக் கொடியை எடுக்க சென்ற போது மறைவிடத்தில் இருந்த தாலிக்கொடியை கணவன் எடுத்து சென்ற சம்பவம் அம்பலமாகியுள்ளது.

நண்பருக்கு இரவல் கொடுத்ததாக கணவன் சமாளித்த போதும், தொடர்ந்து இழுத்தடிப்பு செய்ததால், நண்பனின் வீடு சென்று மனைவி அது தொடர்பில் வினவிய போதே நடந்த சம்பவத்தால், மனைவியும், நண்பனின் மனைவி்யும் அதிர்ந்து போயுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பில் மனைவி பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளதுடன், விவாகரத்துவரை சென்றுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகும் விவகாரம்; சிறீதரன் வெளியிட்ட தகவல்..!

0

அரசியலமைப்பு பேரவையிலிருந்து விலகுவது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து தனக்கு தனிப்பட்ட ரீதியில் உத்தியோகபூர்வ கடிதத்தின் மூலம் அறிவிக்க வில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் சிறீதரனின் நிலைப்பாடு தமிழ் ஊடகமொன்று அவரை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பு பேரவையிலிருந்து சிறீதரன் பதவி விலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக அண்மையில் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சியின் கொள்கைகளுக்கு மாறாகவும் அரசாங்கத்திற்கு சார்பாகவும் சிறீதரன் செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த விடயம் தமிழரசுக் கட்சியின் கொள்கைகளில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் அரசியலமைப்பு பேரவையிலிருந்து பதவி விலக வேண்டும் என்று தனக்கு உத்தியோக பூர்வ கடிதம் எதுவும் அனுப்பவில்லை என்றும் தமிழரசுக் கட்சி ஊடக அறிவிப்பினை மட்டுமே விடுத்துள்ளதாகவும் கடிதம் கிடைத்தால் மட்டுமே மேலதிக விடயம் தொடர்பில் தான் தெரிவிக்க முடியும் எனவும் சிறீதரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்விச் சீர்திருத்தங்கள் அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானமாகும் – விஜித ஹேரத்

0

கல்வி சீர்திருத்தம் அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானம் – பிரதமரை இலக்காக வைத்து வெளியிடப்படும் கருத்துக்களை நிராகரிப்பதாகவும், மிகவும் பலமான மற்றும் நூதனமான உலகத்திற்கு பொருத்தமான கல்வி சீர்திருத்தத்தை உருவாக்குதல் அரசாங்கத்தின் அடிப்படை நோக்கம் என வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பிரச்சினைக்குரிய தரம் 6 தொகுதியின் உள்ளடக்கத்தை பரீட்சிப்பதற்காக நியமிக்கப்பட்ட உள்ளகக் குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும், அதற்கேற்ப தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

கல்வி சீர்திருத்த செயற்பாடுகளை குறுகிய நோக்கத்துடன் அடைந்து கொள்வதற்காக சிலர் பிரதமரை இலக்காக வைத்து மேற்கொள்ளும் இந்த பிரச்சாரத்தை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (04) நடைபெற்ற புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக தெளிவுபடுத்தும் விசேட ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

புதிய கல்வி சீர்திருத்தங்கள் நாட்டின் குழந்தைகளின் எதிர் காலத்திற்காக அரசாங்கம் எடுத்த கொள்கைத் தீர்மானம் என்றும், இது போன்ற கட்டமைப்பு கல்வி சீர்திருத்தம் சமீபத்திய வரலாற்றில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கல்வியியலாளர்கள் இதுபோன்ற சீர்திருத்தங்களை குறைந்தது 8 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தாலும், கடந்த காலங்களில் நாட்டின் கல்வி முறையில் இது போன்ற செயல்முறை நடைபெறவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

இந்த சீர்திருத்தங்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே அனைத்து தரப்பினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், பெரும்பாலான கட்சி மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் இந்த சீர்திருத்தங்கள் விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய கல்வி நிறுவகத்தினால் தயாரிக்கப்பட்டு அச்சிடப்பட்ட தரம் 6 ஆங்கில மொழி மொடியூல் குறித்து தற்போது விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாகவும், தரம் 6 இல் சேர்க்கக் கூடாத உள்ளடக்கத்தை அரசாங்கம் கண்டறிந்து அந்தப் பிரிவை நீக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தவறான கல்வி முறையை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும், ஒரு அரசாங்கமாக அதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

6 ஆம் வகுப்பு தொகுதி தொடர்பாக கல்வி அமைச்சு உள்ளக விசாரணைகளை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,

மேலும் அடையாளம் காணப்பட்ட பிழைகளை சரிசெய்வதன் மூலம் கல்வி சீர்திருத்தங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த கல்வி சீர்திருத்தங்களின் முதன்மை நோக்கம் தர்க்கரீதியான, புத்திசாலித்தனமான மற்றும் நவீன சமூகத்திற்கு ஏற்ற தலைமுறையை உருவாக்குவதாகும், மேலும் அரசாங்கம் அதற்கு முழுமையாக உறுதி பூண்டுள்ளது, பெற்றோர்கள் இது தொடர்பாக எவ்வித அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வெடுக்குநாறிமலை ஆலய நிலம் மற்றும் பாதையை விடுவிக்க ஆளுனருக்கு சத்தியலிங்கம் எம்.பி கடிதம்..!

0

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கான நிலம் மற்றும் பாதையை விடுவித்துதருமாறு வடக்கு மாகாண ஆளுனர் நா.வேதநாயகன் அவர்களுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (05.01.2026) திகதியிட்டு குறித்த கடிதம் ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வரலாற்று தொண்மைமிக்க வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் வழிபாட்டு செயற்பாடுகளுக்காக ஆலயம் அமைந்துள்ள பகுதியின் ஒரு ஏக்கர் காணியினை ஆலயத்திற்கு விடுவித்துதர ஆவன செய்யுமாறு ஆலய அறங்காவலர் சபையினர் என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பிலான கோரிக்கையினை ஏற்கனவே தங்களுக்கு தாம் விடுத்துள்ளதாகவும் எனினும் எதுவித திருப்திகரமான பதிலும் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த ஆலயத்திற்கு செல்லும் பாதையினை வவுனியா வடக்கு பிரதேசசபைக்கு விடுவித்துதரும் பட்சத்தில் குறித்த பாதையினை தம்மால் புனரமைக்க முடியுமென வவுனியா வடக்கு பிரதேச சபையினரும் தெரிவித்துள்ளனர்.

எனவே தாங்கள் இவ்விடயத்தில் நேரடியாக தலையீடு செய்து குறித்த வரலாற்று தொண்மைமிக்க ஆலயத்திற்கான காணி மற்றும் பாதையினை மிகவிரைவாக விடுவித்துத்தர ஆவன செய்யுமறு கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த கடிதத்தின் பிரதிகள் வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர், வெடுக்குநாறிமலை ஆலய அறங்காவலர் சபையினருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழில் மார்பின் நடுவில் குத்திய tattooவால் மாப்பிளை விவாகரத்து செய்ய முடிவு..!

0

யாழில் கடந்த நவம்பர் மாதம் மிகவும் சிறப்பாக திருமணம் நடைபெற்று சந்தோசமாக இருந்த புதுமணத் தம்பதிகள் தற்போது எலியும் பாம்புமாக மாறியுள்ளார்கள்.

குறித்த மணமகள் தனது மார்பின் நடுப்பகுதியில் குத்திய tattooவே இதற்கு காரணம் எனத் தெரிய வருகின்றது.

திருமணமாகி சில நாட்களிலேயே கணவர் இதனை கண்டு பிடித்தள்ளார். அதன் பின்னர் தனது மனைவியை குறித்த tattoo ஏன் குத்தப்பட்டது, யார் மூலமாக குத்தினாய் என கேட்டு தொல்லைப்படுத்தி வந்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரி மாணவியான குறித்த மணமகள் அங்கு கற்கும் போது சில மாணவிகளுடன் சேர்ந்து அழகுகலை நிலையத்தில் குறித்த tattooi வை குத்தியதாக கூறியதுடன் அந்த tattoo பச்சை மயில் தோகையுடன் காணப்படும் அழகிய உருவமாக இன்னுமொரு மாணவியிடம் காணப்பட்டதால் அதனைப் பார்த்தே தானும் அவ்வாறு குத்தியதாக கூறியும் கணவன் சமாதானம் அடையவில்லை எனத் தெரிய வருகின்றது.

மற்றைய மாணவிகளையும் tattoo குத்திய அழகுகலை நிலையத்தையும் தனக்கு காட்டும்படி கூறியதால் கடுப்பான மனைவி கணவனை கண்டபடி ஏசியதுடன் இது தொடர்பாக தனது சமூக வலைத் தளத்திலும் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

இதனால் கடும் கோபமடைந்த கணவன் தற்போது மனைவியை விவாகரத்து செய்வதற்கு முற்பட்டுள்ளதுடன் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரிய வருகின்றது.

மதுரோ உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்; அமெரிக்காவுக்கு வெனிசுலா எச்சரிக்கை..!

0

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாகத் தற்போதைய உப ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை நியமித்து வெனிசுலா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதலை மேற்கொண்ட அமெரிக்கா, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைச் சிறைப்பிடித்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தியுள்ளது.

இதனையடுத்து, வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் எனவும், தமக்குச் சாதகமான அரசாங்கம் அமையும் வரை அமெரிக்க இராணுவம் அங்கு நிலை கொண்டிருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தையடுத்து வெனிசுலாவில் அவசரகால நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ட்ரம்பின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என சீனா, ரஷ்யா, பிரேசில், கியூபா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பன கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், வெனிசுலா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் முன்னிலையாகி நாட்டு மக்களுக்கு விசேட உரையாறினார்.

“வெனிசுலாவின் ஒரே ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மட்டுமே. அவரை அமெரிக்கா உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும். எமது நாட்டு மக்களைப் பாதுகாக்க அனைத்துப் பாதுகாப்புப் படைகளையும் நாம் தயார் நிலையில் வைத்துள்ளோம்,” என அவர் இதன்போது தெரிவித்தார்.

வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிகஸ் நியமனம்..!

0

வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிகஸை நியமித்து அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெனிசுலாவின் தொடர்ச்சியான நிர்வாகத்திற்கும், விரிவான பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிப்பதற்காக துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸை இடைக்கால ஜனாதிபதியாக நியமித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெனிசுலாவிலிருந்து போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீண்ட காலமாகக் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை நேற்று (3) அமெரிக்க படை கைது செய்தது.

இதனையடுத்து, வெனிசுலாவின் துணை ஜனாதிபதி இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெனிசுலாவில் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை இலவச இணைய சேவை..!

0

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டு மக்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் அதிரடியாகக் கைது செய்து நியூயோர்க்கிற்கு கொண்டு சென்றுள்ள நிலையில், அங்கு நிலவும் தகவல் தொடர்புக் குறைபாடுகளை நீக்க ‘ஸ்டார்லிங்க்’ மூலம் பெப்ரவரி 3-ஆம் திகதி வரை இலவச இணையம் வழங்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தல் வழக்குகளுக்காக அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ள நிலையில், வெனிசுலாவின் நிர்வாகத்தை சீரமைக்கும் வரை அமெரிக்கா அந்நாட்டை வழிநடத்தும் என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

பத்தாண்டுகால மதுரோவின் ஆட்சி அமெரிக்காவின் நேரடி இராணுவ நடவடிக்கையின் மூலம் முடிவுக்கு கொண்டுவரப் பட்டுள்ளமை உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து; வர்த்தமானி வெளியானது..!

0

தேசிய அரசுப் பேரவையின் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியங்கள் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான, பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய, இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!