கனடாவில் பெண் ஒருவரின் சடலத்தை புகைப்படம் எடுத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
வின்னிபெக் பொலிஸ் பிரிவில் 22 ஆண்டுகள் பணியாற்றிய ஒரு பொலிஸ் அதிகாரி, பணியில் இருந்தபோது இறந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்த சம்பவத்திற்குப் பிறகு தற்போது பணியில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
முன்பு ஊதியமின்றி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த கன்ஸ்டபிள் எல்ஸ்டன் போஸ்டாக் தற்போது அதிகாரப்பூர்வமாக பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் பொறுப்பதிகாரி ஜீன் பவேர்ஸ் தெரிவித்துள்ளார்.
போஸ்டாக் கடந்த மாதம் பல குற்றச்சாட்டுகளுக்கு, குறிப்பாக மனித உடலின் மரியாதையை இழிவாக்கிய குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
2021ஆம் ஆண்டு ஒரு வீட்டில் ஏற்பட்ட திடீர் மரண சம்பவத்துக்குச் சென்று, பகுதியளவில் ஆடையுடன் இருந்த இறந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்து, அதை இன்னொரு அதிகாரிக்கு அனுப்பியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் இச்சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கேட்டுள்ளதாக காவல் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார். போஸ்டாக் இன்னும் தண்டனைக்காக காத்திருக்கிறார்.
மன்னார் முள்ளிக்குளத்தில் தலா 50 மெகாவாட் திறன் கொண்ட இரு புதிய காற்றாலை மின் நிலையங்களை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதுதன் மூலம் 2030க்குள் நாட்டின் மின்சார உற்பத்தியின் 70% புதுப்பிக்கத்தக்க ஆற்றலிலிருந்து பெறும் அரசின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாகும்.
இதற்கு முன், 10 பெப்ரவரி 2025 அன்று 100MW முள்ளிக்குளம் காற்றாலை மின் திட்டத்திற்கான தனியார் துறையின் முன்மொழிவுகளை கோர அரசு முடிவு செய்தது.
இந்த திட்டம் Build–Own–Operate (BOO) முறைமையில், 20 ஆண்டு கண்காணிப்பு காலத்துடன் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.
முன்மொழிவுகளை மதிப்பீடு செய்ததையும், அமைச்சரவை நியமித்த பேச்சுவார்த்தைக் குழுவின் பரிந்துரைகளையும் தொடர்ந்து, ஒப்பந்தங்களை வழங்குவதற்கான மின்சார அமைச்சரின் பரிந்துரையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
இந்த இரண்டு 50MW காற்றாலை மின்நிலையங்களை பின்வரும் நிறுவனங்கள் உருவாக்க உள்ளன.
விடுல்லங்கா PLC மற்றும் டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பெனி (லங்கா) லிமிடெட் இணைகுழு விண்ட்போர்ஸ் PLC
கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சை தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், பரீட்சைத் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1911 அல்லது 0112 78 45 37, 0112 78 66 16 மற்றும் 0112 78 42 08 ஆகிய தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என்று இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தவிர, 0112 78 44 22 என்ற தொலைநகல் இலக்கம் மூலமாகவும், பரீட்சைத் திணைக்களத்தின் gcealexam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் இது குறித்து அறிவிக்க முடியும் என்று பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் எதற்கும் சேதம் ஏற்படவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்கள் 2026 ஜனவரி 12 முதல் 20 வரை நடத்தப்படும் என்று கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு அண்மையில் அறிவித்தது.
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நடைபெற்று வந்த உயர் தரப் பரீட்சை அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ் ஹாட்லிக் கல்லூரியின் தமிழ் பாட ஆசிரியை ஒருவர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து உயிரிழந்துள்ளார்.
43 வயதான நிஷாந்தினி நித்திலவர்ணன் என்பவரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பருத்தித்துறைஆதாரவைத்தியசாலையில்அனுமதிககப்பட்டமேலதிகசிகிச்சைக்காக யாழ் போதனாவைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிககப்பட்டார், எனினும் இன்றைய தினம் காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இரு பிள்ளைகளின் தாயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் கூற்றுச் சோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆசிரியரின் மரணம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ். மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில், 13 வயதுச் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
“குறித்த நபர் பாதிக்கப்பட்ட சிறுமியை வேலைக்காக அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் நீண்டகாலமாக அந்த சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு இது குறித்து முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி மானிப்பாய் காவல்துறை இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த சந்தேகநபரை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நேற்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
பண்டாரவளையில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு அருகில், பெண் வேடத்தில் பர்தா அணிந்து சுற்றித்திரிந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளையில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் எத்தலபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது தாயார் அனுப்பிய பணத்தில், ஒரு மாதத்திற்கு முன்பே குறித்த பர்தாவை வாங்கியுள்ளதாக மாணவன் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
பர்தாவை அணிவதற்கு இருந்த ஆசையில், தனது சகோதரி பிரத்தியேக வகுப்புகளுக்கு சென்ற பின்னர், அவரது ஆடைகள், செருப்புகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை, நகரத்தில் உள்ள ஒரு இடத்திற்கு எடுத்துச் சென்று, அதனை அணிந்து நகரம் முழுவதும் சுற்றித் திரிந்ததாக அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
தாயும் தந்தையும் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் குறித்த மாணவன் தனது பாட்டி வீட்டில் சகோதரியுடன் தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு, மாவடி வேம்பைச் சேர்ந்த 12 வயது சிறுவன், தனது தாயாருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
படிப்பின் அழுத்தம் அல்லது குடும்பப் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும், இந்தக் கோரமான முடிவினால் ஒரு இளம் உயிரை இழந்துள்ளதுடன், அந்த குடும்பத்துக்கு ஈடுசெய்ய முடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதய சமூகத்தில் பிள்ளைகள் எதிர்கொள்ளும் மன அழுத்தங்களை பெற்றோரும் சமூகமும் மிகவும் கவனத்துடன் அணுக வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு ஒன்று நிந்தவூர் பிரதேச சபைக்குள் உள்நுழைந்து பிரதி தவிசாளர் உட்பட இருவர் மீது தாக்குதல் நடத்தி இருந்தது.
இந்த சம்பவத்தில் தலைமறைவாகிய நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்று (10) உத்தரவிட்டார்.
அதேவேளை தலைமறைவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 10 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரிய வருவதாவது,
குறித்த பிரதேச சபையின் தவிசாளர் அண்மையில் பதவி விலக்கப்பட்டார். இந்த நிலையில் பிரதி தவிசாளர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி எம்.ஜ. இர்பான் சபை நடவடிக்கையினை மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ தினமான திங்கட்கிழமை (08) ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள், பிரதி தவிசாளர் அறைக்குள் உள் நுழைந்து சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என தெரிவித்து பிரதி தவிசாளருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட நிலையில் அங்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
அங்கு சென்ற பொலிஸார் இது நிர்வாக ரீதியான பிரச்சனை. எனவே, கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற பிரதிப் பணிப்பாளரிடம் முறையிட்டு இதற்கான தீர்வை பெறுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியதையடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
இதனை தொடர்ந்து பிரதி தவிசாளர் தனது சபை கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பிற்பகல் 2.00 மணியளவில் பிரதி தவிசாளரின் காரியாலயத்துக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான 30 பேர் கொண்ட அடியாட்களுடன் உள் நுழைந்து மேசையில் இருந்த பொருட்களை உடைத்து எறிந்து பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியதில் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இதையடுத்து தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ள நிலையில் இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 12 பேரை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்ய நடவடிக்கையினை மேற்கொண்டு வந்தனர். எனினும், அவர்கள் தலைமறைவாகியுள்ளனர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து தலைமறைவாகிய இருவரை பொலிஸார் செவ்வாய்க்கிழமை (09) அன்று இரவு கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட இருவரையம் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இருவரையும் எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்வதற்கு சபாநாயகரிடம் அனுமதியை பெறும் நடவடிக்கையின் முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னார், கற்கடந்தகுளம் கிரமத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தங்களினால் உயிரிழப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இந்நிலையில் மன்னார் மாவட்டத்தின் கற்கடந்தகுளம் கிரமத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட வீதியினால் சென்ற போது தவறுதலாக சேற்றில் புதையுண்டு தரம் 13ல் கல்வி கற்கும் மாணவன் உயிரிழந்துள்ளார்.
நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலையால் பல வீதிகள் வெள்ளத்தில் முழ்கியிருந்த நிலையில் அவற்றின் கட்டமைப்பு சீர்குழைந்தால் ஆபத்துக்கள் ஏற்பட அதிகரித்த வாய்ப்புள்ளது எனவே மக்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் குப்பைகளைக் கொட்டிய ஒருவரை, அதிவேக வீதிப் பொலிஸ் பிரிவின் சீதுவ துணைப் பரிபாலன நிலைய அதிகாரிகள் இன்று (10) பிற்பகல் கைது செய்துள்ளனர்.
குறித்த அதிவேக வீதியின் 19வது கிலோமீட்டர் மைல்கல் அருகே, கொழும்பில் இருந்து கட்டுநாயக்க நோக்கிச் சென்ற பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றின் சாரதி, குப்பை அடங்கிய ஒரு பையை அதிவேக வீதியில் எறிவதை அங்கு நடமாடும் சோதனையில் ஈடுபட்டிருந்த இருந்த அதிகாரிகளால் அவதானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த அதிகாரிகள் உடனடியாக சீதுவ துணைப் பரிபாலன நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
அங்கு கடமையில் இருந்த அதிகாரிகள், அதிவேக வீதிச் சட்டத்தின் கீழ் வீதியில் குப்பைகளை வீசிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த சாரதியைக் கைது செய்து, மேலதிக நடவடிக்கைக்காக சீதுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கைதானவர் யாழ், அல்வாய் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் நாளை (11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.