Thursday, June 18, 2026
Huis Blog Bladsy 40

சண்டிலிப்பாய் பிரதேச செயலாளருக்கு வந்த சோதனை; இரு நாள் காலக்கேடு..!

0

அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வீட்டுக்கானதா அல்லது நபருக்கானதா என்ற விளக்கத்தை எழுத்து மூலமாக வழங்குமாறு யாழ் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் இரு நாட்கள் காலக்கெடு வழங்கி கடிதம் அனுப்பி உள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது நேற்று முன்தினம் புதன்கிழமை மாணவன் ஒருவர் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25000 ரூபாய் கொடுப்பனவில் வெள்ளத்தில் சிக்குண்ட தமது வீட்டை புறக்கணித்து விட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.

மேலும் தாயின் பாராமரிப்பிலும் பாதுகாப்பிலும் வார்ந்து வருகின்ற தனது வயது 16 புனித பத்திரிசியார் கல்லூரியில் படித்து வருகிறேன் எனக் குறிப்பிட்டதோடு தனது தாயார் குடும்பச் சுமை காரணமாக தற்காலிகமாக கொழும்பிற்கு வேலைக்கு சென்று 3 மாதகாலமாகி விட்டது.

 

ஆகையால் எனது பாதுகாப்பு கருதி என்னை குருநகரில் வசிக்கும் பெரிய தாயாருடன் விட்டுச் சென்றுள்ளார்.

எனது அம்மம்மாவும் அங்களோடு இருப்பதால் அவருடைய அடிப்படை தேவைகளையும் பூர்த்தி கட்டாயத்தில் எனது தாயார் உள்ள நிலையில் தாயாரே முழு குடும்ப சுமையையும் தாங்கி வருகிறார்.

எனது வீடு கல்லூண்டாயில் இருப்பதால் நான் அங்கு ஒவ்வொரு ஞாயிறும் சென்று வருவதோடு அங்கு மத ஆராதனை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடப்பதுண்டு.

ஆனால் இரு வாரமாக நான் அங்கு செல்ல வில்லை வெள்ளம் வந்ததால் வீட்டின் மின் இணைப்புக்களில் தண்ணீர் சென்றுள்ளது எனவே உறவினர் சென்று பர்வையிட்டு வந்து கூறினார் .

அதனால் அரசாங்கம் வழங்கும் வெள்ள அனர்த்த நிதியினை எனது தாயார் கிராம சேவையாளரிடம் தரும்படி, பதிவினை மேற் கொள்ளும் கேட்டார் அவர் மறுத்து விட்டார்.

குறித்த குடியிரிப்பில் வாழாத குடும்பங்காருக்கு கொடுத்துள்ளார் ஆனால் எனது தாயாரை மட்டும் புறக்காணித்து ஊழல் செய்கிறார் என தனது முறைப்பாட்டை வழங்கியிருந்தார்.

குறித்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யால் பிராந்தி அலுவலகம் அரசாங்கத்தின் 25000 ரூபா நிவாரணத் தொகை வீட்டுக்கானதா அல்லது தனிநபருக்கானதா என்ற விளக்கத்தை இரு நாட்களுக்குள் எழுத்து மூலம் ஆணைக் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு சண்டிப்பாய் பிரதேச செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளது.

‘வா வாத்தியார்’ படக்குழு வெளியிட்ட அறிவிப்பு; அதிர்ச்சியில் கார்த்தி ரசிகர்கள்..!

0

‘மெய்யழகன்’ படத்தினை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் ‘வா வாத்தியார்’ ரிலீசாக இருக்கிறது. நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட இந்த படத்தை திரையில் காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருப்பில் உள்ளனர்.

இந்நிலையில் ‘வா வாத்தியார்’ ரிலீஸ் குறித்து வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஆனால் இப்படத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட காரணத்தால் திட்டமிட்டப்படி வெளியாகுமா, இல்லையா? என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் அறிவிக்கப்பட்டதை போன்று நாளை ‘வா வாத்தியார்’ ரிலீசாக வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் கடுமையாக அப்செட் அடைந்துள்ளனர்.

‘வா வாத்தியார்’ தயாரிப்பாளர் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா வாங்கிய கடனை திருப்பி அளிக்கும் வரை இந்த படத்தினை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

ஆனாலும் திட்டமிட்டப்படி படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகளில் படக்குழு கவனம் செலுத்தியது. இதனிடையில் நேற்றைய தினம் இப்படத்தின் வழக்கு விசாரணை நடந்த நிலையில் ஞானவேல் ராஜா தரப்பில் தற்போது 3 கோடியே 75 லட்சம் ரூபாயை 24 மணி நேரத்தில் செலுத்துவதாகவும், மீதமுள்ள தொகைக்காக சொத்து ஆவணங்களை தாக்கல் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் கடன் தொகையை திருப்பி செலுத்தும் வரை ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிடக் கூடாது என தடை விதித்துள்ளது. இதனால் நாளை படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் ‘வா வாத்தியார்’ தொடர்பாக படக்குழு புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளது. தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த அதிகாரப் பூர்வ அறிவிப்பில் ‘வா வாத்தியார்’ விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியாவிலும் சேதமடைந்த ரயில் பாதைகள் துரித கதியில் திருத்தம்..!

0

வவுனியாவில் சேதமடைந்த ரயில் பாதைகளை இன்றைய தினம் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஏரங்க குணவர்த்தன பார்வையிட்டிருந்தார்.

நொச்சிமோட்டை பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக அப்பகுதியில் இருந்த ரயில் பாதை கடுமையாக சேதமடைந்தது.

தற்போது குறித்த பாதையை செப்பனிடும் பணிகள் ராணுவத்தினரின் உதவியுடன் ரயில்வே திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் சுமார் 125 மீட்டர் நீளமான சேதமடைந்த வீதியை செப்பனிடும் பணிகளை இன்றைய தினம் நகர அபிவிருத்தி அமைச்சர் ஏரங்க குணவர்தன நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.

இதன் போது அங்கு பணியாற்றும் இராணுவத்தினர் மற்றும் ரயில்வே திணைக்கள ஊழியர்களுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஊடகங்களில் கருத்துத் தெரிவிக்காது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் – பிமல் அதிரடி

0

கடந்த 50 ஆண்டுகளாக தவறாக அரசியல்வாதிகளினால் வழி நடாத்தப்பட்ட மக்களை ஒரேயொரு உத்தரவின் மூலம் ஒரே நேரத்தில் அனைத்தையும் மாற்றிவிட முடியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத கட்டுமானங்கள் காரணமாவே நாட்டில் பாரிய அழிவு ஏற்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட வீதிகள் மற்றும் ரயில்வே பாதைகளை புனரமைப்பு செய்யும் பணிகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதியிலுள்ள உலபனே நகருக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று களவிஜயம் மேற்கொண்டிருந்தார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற புனரமைப்பு பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டிருந்தார்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

பேரழிவால் நாவலப்பிட்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் பாரிய அழிவை சந்தித்துள்ளன.உண்மையில், நாவலப்பிட்டி மக்கள், முப்படைகள், மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அனைவரும் ஒன்றிணைந்து மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய பல அடிப்படை வசதிகளை மேம்படுத்துகின்றனர்.

நாவலப்பிட்டியிலிருந்து கம்பளைக்கு செல்லும் பிரதான வீதி சேதமடைந்துள்ளது. இங்கு ஒரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

தீவிர முயற்சிகளின் விளைவாக, அடுத்த 2-3 நாட்களுக்குள், பிரதான வீதிய போக்குவரத்திற்காக திறக்க முடியும். தற்போது, 750 மீட்டர் தூரம் பேருந்தில் சென்று, மறுபுறம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

இவ்வளவு அழிவு ஏற்படுவதற்கு காரணம், வடிகால்கள், கால்வாய்கள் மற்றும் மதகுகளை மறித்து சில கட்டுமானங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற கட்டுமானங்கள் செய்யப்பட்ட இடத்திலும் நாம் தற்போது இருக்கிறோம்.

எனவே நாம் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்க மாட்டோம். ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக ஒரு தவறான அமைப்பின் கீழ் மக்கள் பழக்கப்படுத்தப்பட்ட விஷயங்கள் உள்ளன.

ஒரே உத்தரவின் மூலம் அவற்றை ஒரே நேரத்தில் எம்மால் மாற்ற முடியாது. எனவே, இதுபோன்ற விஷயங்கள் நடக்க அனுமதிக்காமல், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு முறையாக அழைத்துச் செல்ல புதியவற்றை உருவாக்குவதையே நாங்கள் செய்ய விரும்புகிறோம்.

கொத்மலை நீர்த்தேக்க அணையைத் தாமதமாக திறந்தாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.அவ்வாறு குறிப்பிடுபவர்களை பார்த்து நான் மிகவும் வருத்தப்படுகின்றேன். எதிர்க்கட்சிகள் தற்போது மக்களின் செல்வாக்கினை இழந்துள்ளனர்.

புயல் காரணமாக மக்கள் அகதிகளாக மாற்றப்பட்டதை விடவும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அகதிகளாக மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன்.

சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடாமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கு உதவுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

ஒத்தி வைக்கப்பட்ட பொதுத் தகவல் தொழிநுட்பப் பரீட்சைக்கான (GIT) திகதி அறிவிப்பு..!

0

நாடளாவிய ரீதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தரம் 12 மாணவர்களுக்கான 2025 பொதுத் தகவல் தொழிநுட்பப் பரீட்சையை 2026 ஜனவரி மாதம் 11 ஆம் திகதி நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பரீட்சை ஆணையாளர் நாயகம் இதனை அறிவித்துள்ளார்.

இடர் நிலைமைக்குட்பட்ட பாடசாலைப் பரீட்சார்த்திகள் தமது பரீட்சை நிலையத்திற்குச் செல்ல முடியாதிருப்பின் தமது பாடசாலை அதிபருக்கு அறிவிக்க வேண்டும்.

அதிபர்கள் தமது பாடசாலைப் பரீட்சார்த்திகள் இடர் நிலைமைக்கு உட்பட்டிருப்பின் அது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர், பரீட்சை ஆணையாளர் (பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு, பெறுபேறு) ஆகியோருக்கு அறிவிக்க வேண்டும்.

எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு..!

0

அடுத்த 36 மணித்தியாலங்களில் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருணாகல், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அத்துடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

மூன்று மாதங்களுக்குள் 184 கோடி ரூபாவை செலுத்துமாறு கப்ராலுக்கு நிபந்தனை..!

0

சர்ச்சைக்குரிய கிரேக்க பத்திர முதலீட்டு இழப்பு 1,843,267,595.65 ரூபாய் தொடர்பில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை, நிபந்தனையின் அடிப்படையில் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இந்த வழக்கை திரும்பப்பெற்றது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல் முன் நடந்த வழக்கு விசாரணையின் போது இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டை திரும்பப்பெறுவதற்கான நிபந்தனைகளின் கீழ், குற்றம் சாட்டப்பட்ட கப்ரால் நேற்று முதல் மூன்று மாதங்களுக்குள் இலங்கை மத்திய வங்கிக்கு இழப்பீட்டை திருப்பிச் செலுத்த வேண்டும்.

இணங்கத் தவறினால் புதிய குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும் என்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம் தெரிவித்துள்ளது.

கிரேக்கத்தின் பொருளாதார நெருக்கடியின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் தெரிந்தே கிரேக்க அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கிரேக்க திறைசேரிப் பத்திரங்களை வாங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு அரசுக்கு 1.84 பில்லியனுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக கூறியே வழக்கு தொடரப்பட்டது.

வழக்கின் ஏனைய பிரதிவாதிகளில் மத்திய வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் தர்மசேன தீரசிங்க மற்றும் உதவி ஆளுநர்கள் டான் வசந்த ஆனந்த சில்வா மற்றும் எம்.ஏ.கருணாரத்ன ஆகியோர் அடங்குவர்.

இந்த நிலையில் குறித்த பேரையும் கொழும்பு மேல் நீதிமன்றம் நிபந்தனையின்றி விடுவித்துள்ளது.

சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு விரைவில் மோட்டார் சைக்கிள்..!

0

குடும்பநல உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு தாதியர் மற்றும் கண்காணிப்புக் குழுக்களுக்கு 4,441 உந்துருளிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஆரம்ப சுகாதார பராமரிப்புக் கட்டமைப்புக்களை மேம்படுத்துவதற்கான கருத்திட்டத்தின் கீழ் 150 மில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரசு, உலக வங்கிக் குழுமத்தின் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்துடன் நிதி ஒப்பந்தமொன்றில் கையொப்பமிட்டுள்ளது.

தொற்றா நோய்களைத் தடுத்தல் மற்றும் முகாமைத்துவம், முதியோர்களுக்கான பராமரிப்பு உதவிகள், சமூக மட்டச் சேவைகளைப் பலப்படுத்தல் மற்றும் காலநிலையுடன் தொடர்புடைய அவசர சுகாதார நிலைமைகளுக்கு மீட்சி திறனைக் கட்டியெழுப்புதல் உள்ளிட்ட சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில், இந்த கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

2024 தொடக்கம் 2028 வரையான காலப்பகுதியில் இலங்கையில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் குறித்த கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

களநிலைப் பணியாளர்களுக்கான (குடும்பநல உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு தாதியர் மற்றும் கண்காணிப்புக் குழு) போதியளவு போக்குவரத்து இன்மையால் இக் கருத்திட்டத்தில் அடையாளங் காணப்பட்ட தீர்மானமிக்க தடையாக அமையும்.

அதனால், வீட்டு மட்டத்திலான பராமரிப்பு மற்றும் சமூகத் தொடர்புகளை விரிவாக்கம் செய்தல், களநிலை ஆய்வுகள் மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேம்படுத்தல், சிகிச்சைக் கழிவுகளைப் பாதுகாப்பாகவும் சரியான நேரத்தில் ஏற்றிச் செல்வதை உறுதிப் படுத்துவதற்கான போக்குவரத்து இயலுமைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான வாகனங்களை கீழ்க்காணும் வகையில் பெறுகை செய்வதற்காக யோசனை சமர்ப்பிக்கப்பட்டது.

கனடாவில் சடலத்தை புகைப்படம் எடுத்த பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை..!

0

கனடாவில் பெண் ஒருவரின் சடலத்தை புகைப்படம் எடுத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

வின்னிபெக் பொலிஸ் பிரிவில் 22 ஆண்டுகள் பணியாற்றிய ஒரு பொலிஸ் அதிகாரி, பணியில் இருந்தபோது இறந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்த சம்பவத்திற்குப் பிறகு தற்போது பணியில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

முன்பு ஊதியமின்றி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த கன்ஸ்டபிள் எல்ஸ்டன் போஸ்டாக் தற்போது அதிகாரப்பூர்வமாக பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் பொறுப்பதிகாரி ஜீன் பவேர்ஸ் தெரிவித்துள்ளார்.

போஸ்டாக் கடந்த மாதம் பல குற்றச்சாட்டுகளுக்கு, குறிப்பாக மனித உடலின் மரியாதையை இழிவாக்கிய குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.

2021ஆம் ஆண்டு ஒரு வீட்டில் ஏற்பட்ட திடீர் மரண சம்பவத்துக்குச் சென்று, பகுதியளவில் ஆடையுடன் இருந்த இறந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்து, அதை இன்னொரு அதிகாரிக்கு அனுப்பியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் இச்சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கேட்டுள்ளதாக காவல் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார். போஸ்டாக் இன்னும் தண்டனைக்காக காத்திருக்கிறார்.

மன்னாரில் 50MW காற்றாலை திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்..!

0

மன்னார் முள்ளிக்குளத்தில் தலா 50 மெகாவாட் திறன் கொண்ட இரு புதிய காற்றாலை மின் நிலையங்களை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதுதன் மூலம் 2030க்குள் நாட்டின் மின்சார உற்பத்தியின் 70% புதுப்பிக்கத்தக்க ஆற்றலிலிருந்து பெறும் அரசின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாகும்.

இதற்கு முன், 10 பெப்ரவரி 2025 அன்று 100MW முள்ளிக்குளம் காற்றாலை மின் திட்டத்திற்கான தனியார் துறையின் முன்மொழிவுகளை கோர அரசு முடிவு செய்தது.

இந்த திட்டம் Build–Own–Operate (BOO) முறைமையில், 20 ஆண்டு கண்காணிப்பு காலத்துடன் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.

முன்மொழிவுகளை மதிப்பீடு செய்ததையும், அமைச்சரவை நியமித்த பேச்சுவார்த்தைக் குழுவின் பரிந்துரைகளையும் தொடர்ந்து, ஒப்பந்தங்களை வழங்குவதற்கான மின்சார அமைச்சரின் பரிந்துரையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

இந்த இரண்டு 50MW காற்றாலை மின்நிலையங்களை பின்வரும் நிறுவனங்கள் உருவாக்க உள்ளன.

விடுல்லங்கா PLC மற்றும் டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பெனி (லங்கா) லிமிடெட் இணைகுழு விண்ட்போர்ஸ் PLC

error: Content is protected !!