Friday, January 9, 2026
Huis Blog Bladsy 40

இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சந்தேக நபர்களில் 1/3 பங்கினர் பொலிஸார்..!

0

இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பொலிஸார் என்பது தெரிய வந்துள்ளது.

ஜனவரி 1 முதல் செப்டெம்பர் 30, 2025 வரை நடத்தப்பட்ட 94 தேடுதல்களில் 63 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், 94 தேடுதல்களில் 37 தோல்வியடைந்த தேடுதல் நடவடிக்கையாக அமைந்ததாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கூறுகிறது.


கைது செய்யப்பட்ட 63 சந்தேக நபர்களில் 20 பேர் பொலிஸைச் சேர்ந்தவர்களாவர். இரண்டாவது அதிக எண்ணிக்கையில் கைதானவர்கள் நீதி அமைச்சுடன் தொடர்புடைய அதிகாரிகள் எனவும், அவர்களின் எண்ணிக்கை ஒன்பது எனவும் தெரியவந்துள்ளது.

அதே காலகட்டத்தில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகளும் ஆறு பொது மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி 1 முதல் செப்டெம்பர் 30, 2025 வரை பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,776 என, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இவற்றில், 365 முறைப்பாடுகளை விசாரிக்க உத்தரவிடப்பட்டதோடு, 1,569 முறைப்பாடுகள் போதுமான ஆதாரங்கள் இல்லாததாலும், சட்டத்திற்குப் பொருத்தமற்றதாக காணப்பட்டதாலும் விசாரிக்கப்படத் தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,711 ஆகும்.

இந்த காலகட்டத்தில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் 71 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது. அந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 86. இவற்றில் 25 பேர் பொலிஸ் அதிகாரிகள்.


செப்டெம்பர் 30, 2025 தரவுகளுக்கு அமைய, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 276 என இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. நீதவான் நீதிமன்றத்தில் 20 வழக்குகளும், உயர் நீதிமன்றத்தில் 255 வழக்குகளும் மற்றும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது.

சிறுவனான தம்பியை அச்சுறுத்தி தவறான உறவு; கர்ப்பமான சகோதரி – சம்மாந்துறையில் சம்பவம்

0

உடன்பிறந்த தம்பியை தொடர்ச்சியாக அச்சுறுத்திய நிலையில் கர்ப்பமான சகோதரி சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லரைச்சல் பகுதியில் இடம் பெற்றுள்ளது.


இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதிப்குமாரவின் வழிகாட்டுதலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கல் வாடியில் வேலை செய்வதுடன் தாய் இல்லத்தரசியாக இருக்கின்றார். இந்நிலையில் இச்சம்பவம் 4 வருடங்களாக இடம்பெற்றுள்ளமை ஆரம்ப விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.


இந்நிலையில் சகோதரனுக்கு சுமார் 11 வயது இருக்கும் போது சகோதரிக்கு 18 வயதாகிய நிலையில் இச்சம்பவம் ஆரம்பமாகியுள்ளது.

இச்செயலுக்கு உடன்பிறந்த தம்பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களினால் மிரட்டி இச்செயலை தொடர்ச்சியாக 4 ஆண்டுகளாக உடன்பிறந்த சகோதரி மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது 22 வயதான குறித்த சகோதரி வயற்றில் ஏற்பட்ட வலி காரணமாக சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


இதன் போது சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்பட்ட நிலையில் முறைகேடான உறவினால் 2 மாத கர்ப்பம் தரித்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று (5) மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

வவுனியாவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்..!

0

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் ஆரம்பித்துள்ளது. வவுனியா, குருமன்காடு, காளி கோவில் வீதியில் அமைந்த கட்சியின் தாயகம் அலுவலகத்தில் இக் கூட்டம் இன்று (05.11) காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.


இக் கூட்டத்தில் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம், மாகாண சபைத் தேர்தல், உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், இரா. சாணக்கியன், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் கட்சியின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

வட மாகாண ஆசிரியர் இடமாற்றத்திலும், கல்வியிலும் அரசியல் சூதாட்டம் – புயல் நேசன்

0

வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றத்திலும் கல்வியிலும், அரசியல் சூதாட்டமும் அதிகாரியினர் சிலரின் பக்கச்சார்பான செயற்பாகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் புயல்நேசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றத்திலும் கல்வியிலும், அரசியல் சூதாட்டமும் அதிகாரியினர் சிலரின் பக்கச்சார்பான செயற்பாகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

ஆளுநர் உட்பட அதிகாரியினர் சிலர் நீதிமன்ற தீர்ப்பையும் மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்ப்பையும் மீறி அரசியல் நியமனங்களை மேற்கொள்வதாக சம்பந்தப்பட்டவர்கள் இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்திடம் ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளனர்.


இந்த அரசாங்கத்தில்தான், ஜனாதிபதி கல்வியில் ஒரு முடிவையும் பிரதமரும் கல்வி அமைச்சரும் வேறொரு முடிவையும் தொழில் பிரதி அமைச்சர் இன்னுமொரு முடிவையும் பிரதி அமைச்சர் சிலர் மற்றொரு முடிவையும் அரசியல் தொழிற் சங்க தமிழ்மொழி அழிப்பு அரசியல் அடிவருடிகள் பிறிதொரு முடிவையும் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் – முன்வைத்து வருகின்றனர்.


எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இவை உடனடியாக சீர் செய்யாவிடின், கல்வியில் சரிவு ஏற்பட்டுப் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கும்

எனவே, ஆசிரியர் இடமாற்றங்கள் சீர்செய்யப்பட்டு, கல்வியில் அரசியல் தலையீடுகளை நீக்காவிடின், அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் வடக்கு மாகாண பாடசாலைகள் தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்ல நேரிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டா கோ கம போராட்டம்; பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதாகும் சாத்தியம்..!

0

2022ஆம் ஆண்டு மே மாதம் காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் 31 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் இந்த விடயத்தினை நேற்று அறிவித்துள்ளார்.

அதற்கமைய, குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாகவும் சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான அரச சட்டத்தரணி சஜித் பண்டார, மன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.


முன்னதாக, கோட்டா கோ கம போராட்டம் மீதான தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலமும், சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலமும் காவல்துறை உள்ளிட்ட பிரதிவாதிகள் தமது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகத் தீர்ப்பு வழங்குமாறு கோரி போராட்டக்காரர்கள் குழுவினால் 5 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.


குறித்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று இடம்பெற்ற போதே அரச சட்டத்தரணி இந்த அறிவிப்பை வெளியிட்டார். அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்களில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவதாக அரச சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.


இதேவேளை, சம்பவம் நடந்தபோது காவல்துறை செயலற்ற நிலையில் செயற்பட்டதன் காரணமாகவே இந்த துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டதாக மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தனர்.

நீதிபதி இளஞ்செழியனுக்கு எதிராக எந்த சதியும் இடம்பெறவில்லை – அரசாங்கம் திட்டவட்டம்

0

நீதிபதி இளஞ்செழியனுக்கு எதிராக திட்டமிட்டு சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை. குறித்த காலப்பகுதியில் சேவை நீடிப்பிற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், தனது பதவி உயர்வு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.


இந்நிலையிலேயே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதுடன், “முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மற்றும் அவரது சேவைகள் தொடர்பில் சமூகத்தில் மதிப்பும், கௌரவமும் காணப்படுகிறது. இவரைப் போன்று பல அரச அதிகாரிகள் காணப்படுகின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் நீதிமன்ற கட்டமைப்பிற்குள் சேவை நீடிப்புக்கள் வழங்கப்படும் போது பல விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.


சில சந்தர்ப்பங்களில் நீதிமன்ற கட்டமைப்பிற்குள் அடுத்தடுத்த நிலைகளுக்கு பதவியுயர்வு பெற வேண்டியவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படக் கூடும்.

அவ்வாறான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படாமல் இருந்திருக்கலாம். மாறாக திட்டமிட்டு அவருக்கான சேவை நீடிப்பு வழங்கப்படாமல் இருக்கவில்லை.


இது வழமையான நடைமுறையாகும். சில துறைகளில் சேவை நீடிப்புக்கள் வழங்கப்பட்டிருக்குமாயின், அங்கு பதவி வெற்றிடங்களுக்கான நியமனங்களுக்கு பொருத்தமானவர்கள் இல்லாமல் இருந்திருக்கலாம். எனவே தான் அங்கு ஓய்வு பெறவிருந்த அதிகாரிகளுக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் இளம் குடும்பப் பெண் கழுத்தறுத்துப் படுகொலை..!

0

வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் ஒன்றைப் பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேன்று (04) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

குறித்த பெண் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.


இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் தாயார் பணி நிமித்தம் வெளியில் சென்று விட்டு மாலை வீட்டிற்குச் சென்று பார்த்த போது தனது மகள் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த இ. சிந்துஜா (வயது 25) என்ற ஒரு பிள்ளையின் தாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


சடலத்தின் கழுத்துப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டதால் குறித்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் எனப் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, பெண்ணின் கணவரும் அவரது இரண்டு வயதான பெண் குழந்தையும் மாயமாகியுள்ளனர்.


சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இடை நிறுத்தப்படும் மன்னார் காற்றாலை திட்டம் – ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

0

எதிர்வரும் காலங்களில் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் மீள் புதுப்பிக்கப்படும் வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய, அதிகளவான காற்று ஆற்றல்வளம் கொண்ட பிரதேசமாக அடையாளங் காணப்பட்டுள்ள மன்னார் தீவில் மூன்று (03) காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.


குறித்த கருத்திட்டங்களில் ஒரு கருத்திட்டமான தம்பபவனி காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள் 2021 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன.

ஏனைய கருத்திட்டங்களான 20 மெகாவோட் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் 50 மெகாவோட் காற்றாலை மின்னுற்பத்தி நடவடிக்கைகள் முறையே இரண்டு தனியார் நிறுவனங்களால் 2025 டிசம்பர் மற்றும் 2026 டிசம்பர் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த நிலையில், பிரதேச மக்கள் சமர்ப்பித்துள்ள சுற்றாடல் மற்றும் சமூகப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, மேற்படி திட்டங்களை தவிர மன்னார் தீவு மக்களின் விருப்பமின்றி தொடர்ந்தும் குறித்த தீவில் காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாமென ஜனாதிபதியினால் ஏற்புடைய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, இது குறித்து அமைச்சரவைக்குத் தெரிவித்து அமைச்சரவையின் ஒப்புதலை வழங்க எரிசக்தி அமைச்சர் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் காணி அபகரிப்பில் மாற்றம் தராத அரசு – விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு

0

இன்றைய அரசாங்கம் காணி அபகரிப்பு தொடர்பில் முன்னைய ஆட்சியாளர்களின் அதே மனோநிலையில் இருப்பதாகவே தென்படுகிறது என முன்னாள் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வடக்கு மாகாணத்தில் 65000 ஏக்கர் அரச காணி இன்னமும் படையினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. மிகக் குறைந்த தனியார் காணிகளே இன்றைய அரசாங்கத்தால் அவற்றின் சொந்தக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.


அரச திணைக்களங்கள் வடக்கு மாகாண காணிகளைக் கையேற்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன. எனினும் ஒரு சில பொது விடயங்களில் இந்த அரசாங்கம் நடந்து கொள்வது சரியானதாகவேபடுகின்றது.

நாட்டைச் சூறையாடியவர்களைச் சட்டத்தின் முன் கொண்டு வர அயராது பாடுபடுகின்றார்கள். தாம் கையேற்ற பொருளாதார வங்குரோத்து நிலையை மேலும் சீரழிந்து போகவிடாமல் காப்பாற்ற பல வழிகளில் பாடுபடுகின்றார்கள்.

வன்முறையில் ஈடுபடும் பாதாளக் குழுக்களை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றார்கள். போதை மருந்து வருகையையும் பாவனையையும் குறைக்கப் பாடுபடுகின்றார்கள்.


நான் எவ்வாறு முதலமைச்சராக இருந்த போது எனது அமைச்சர்கள் பற்றி ஊழல் முறைப்பாடுகள் வந்த போது அவற்றை மூடி மறைக்காமல் வெளிப்படுத்தி நீதி முறையான விசாரணைகளை ஆரம்பித்தேனோ அதேபோன்று ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பலர் சம்பந்தமாக அரசாங்கம் நீதிமுறை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது.

அவர்கள் மேற்கொள்ளும் நல்ல நடவடிக்கைகளை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும். அதேவேளை, எமக்கு எதிரான அவர்களின் செயற்பாடுகளையும் நாம் அச்சம் இல்லாமல் சுட்டிக் காட்டத்தான் வேண்டும்


குறிப்பாக, பூர்வீக குடிகளான எமக்கு நாம் இழந்த எமது தன்னாட்சி அதிகாரங்களை மீள வழங்குவதில் ஏனைய எல்லா கட்சிகளையும் விட மிகவும் இனரீதியான சிந்தனையுடனும் அறிவுபூர்வமற்ற விதத்திலும் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பேராசிரியர்; பிரதமர் அளித்த உறுதிமொழி..!

0

வயம்ப பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக் கட்டாயமாக தடுத்து வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் குறித்து பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு முறையான விசாரணை நடத்தி வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.


வயம்ப பல்கலைக் கழகத்தில் கொரிய அரசாங்கத்தின் உதவியுடன் கட்டப்பட்ட தேசிய தொழில்நுட்பக் கல்லூரியை அதிகாரபூர்வமாக கையளிக்கும் தேசிய விழாவில் இன்று (03) பங்கேற்ற பின்னர், இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது பிரதமர் இவ்வாறு கூறினார்.

இந்த விசாரணை மிகவும் சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற முறையில் ஒரு குழுவால் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.


நிகழ்வைத் தொடர்ந்து, பல்கலைக் கழகத்தின் தற்போதைய மாணவர் தலைவர் உட்பட மாணவர்கள் குழு ஒன்று சம்பவம் குறித்து புகார் அளிக்க வந்திருந்தது.

அவர்களில் இருவருக்கு பிரதமரைச் சந்தித்து சம்பவம் குறித்து எழுத்து மூலமாகவும் வாய்மொழியாகவும் தெரிவிக்க வாய்ப்பு கிடைத்தது.

error: Content is protected !!