Sunday, July 6, 2025
Huis Blog Bladsy 40

குழந்தையை பெற்று ஜன்னலில் வீசிய மாணவி; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

0

மட்டு போதனா வைத்திய சாலையின் மலசல கூடத்தில் குழந்தையை பெற்று ஜன்னல் வழியாக வீசிய சம்பவம் தொடர்பாக மாணவி மற்றும் மாணவியை கர்ப்பமாக்கிய காதலனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களை நேற்று(28.02.2025) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; தேவையற்று பீதியடைய தேவையில்லை..!

0

இலங்கையில் எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருட்களை விநியோகிப்பதில் இருந்து விலகிய நிலையில் நாட்டில் மீண்டும் எரிபொருள் வரிசைகள் உருவாகியுள்ளன.

இந்நிலையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை பெற்று வந்த மூன்று சதவீத தள்ளுபடியை இரத்து செய்ய எடுத்த முடிவை திரும்ப பெறாவிட்டால் நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோலிய ஒழுங்கு நடவடிக்கைகளில் இருந்து சங்கம் விலகியது.

பின்னர் பணம் பெறுவதன் அடிப்படையில் மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதற்கு தனது சங்கம் முடிவு செய்துள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம் என்று நுகர்வோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடு முழுவதும் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் பெற்றோல் நிரப்பு நிலையங்கள் மக்கள் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாட்டில் எரிபொருள் இருப்புக்களில் தட்டுப்பாடு இல்லை என்று தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்தார்.

எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று (1) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது நாட்டில் எரிபொருள் நெருக்கடி இருப்பதாகக் காட்ட சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஒரு செயற்கை எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாக அனில் ஜயந்த சுட்டிக் காட்டினார்.

அனுபவமற்ற “L” போர்ட்டுடன் பயணிக்கும் எண்ணம் இல்லை – ரணில்

0

அனுபவமற்ற எல் போர்ட் உரிமம் உள்ளவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினராகிப் பயணிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிற்கும் தெரிவித்ததாக ரணில் தெரிவித்தார். “எல் போர்ட் உரிமம் உள்ளவர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை” என்று அவர் சுட்டிக் காட்டினார்.

நாடாளுமன்றத்திற்கு திரும்பும் நோக்கம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.

கொழும்பில் உள்ள புதிய ஜனநாயக முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற இளம் வழக்கறிஞர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து, ரணில் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்ப உள்ளதாக ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி, ஊடகவியலாளர்கள் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி கேட்டனர்.

மேலும், நாடு திவாலான போது தான் ஏற்றுக் கொண்ட சவாலின் வெற்றிகரமாக நடத்தியமை தொடர்பில் பணிவான மகிழ்ச்சி இருப்பதாக கூறிய முன்னாள் ஜனாதிபதி மக்கள் நாட்டின் பொறுப்பை ஒரு புதிய குழுவிடம் ஒப்படைத்துள்ளதால், அந்தக் குழு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அரசியல் நோக்கங்களுக்காக அனுர அரசால் பழிவாங்கப்பட்டாரா நீதிபதி இளஞ்செழியன்..!

0

மேன்முறையீட்டு நீதிபதிக்கான பதவி உயர்வு குறித்து நீதிபதி இளஞ்செழியனுக்கு அநுர அரசாங்கத்தால் திட்டமிட்டு அநீதி இழைத்துள்ளதாக தீவக சிவில் சமூகம் குற்றம் சாட்டி வருகிறது.

இலங்கையின் சிறந்த நீதிபதிகளுள் ஒருவரும் தற்துணிவாக அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது தீர்ப்புக்களை வழங்கி நீதியை எதிர்பார்த்த மக்களை ஆற்றுப்படுத்திய ஒருவராக நீதிபதி இளஞ்செழியன் காணப்படுகிறார்.

நீதிபதி இளஞ்செழியன் தனது 27 ஆண்டுகால நீதித்துறையின் பதவிக் காலத்தில் பல்வேறு தீர்ப்புகளை அச்சமின்றியும் பாரபட்சமின்றியும் வழங்கியதால் இலங்கை மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்தார்.

ஆனால் அவருக்கான பதவிகள் அந்தந்தக் காலகட்டத்தில் வழங்கப்படாது அரசுகளால் திட்டமிட்ட வகையில் தட்டிக்களிக்கப்பட்டு வந்தது. இதன் உச்சமாக தற்போது அநுர அரசும் தகுதிகள் அனைத்தும் இருந்து திட்டமிட்டு அவரது பதவி உயர்வை தடுத்து ஓய்வு நிலைக்கு தள்ளியது.

இதேவேளை இலங்கை தீவின் முன்னாள் ஜனாதிபதிகள் பல்வேறு குற்றங்களைச் செய்ய பாதாள உலக நபர்களைப் பயன்படுத்தியுள்ளதாக தற்போது நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன கோனாவாலா சுனிலை என்ற பதாள குழு நபரை வைத்து உயர் நீதிமன்ற நீதிபதியின் வீட்டின் மீது கல் எறிந்தாகவும் மறைந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாச பத்திரிகையாளர் ரிச்சர்ட் டி சொய்சாவைக் கடத்தி கொலை செய்ய பாதாள உலக நபர்களைப் பயன்படுத்தியதகாவும் பிரதி அமைச்சர் அமைச்சர் சுனில் வட்டகல நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

இந்நிலையில், இளஞ்செழியன் போன்றவர்கள் மக்களால் நேசிக்கப்படுகின்ற ஒருவர் தமிழ் மக்களைத் தலைமை தாங்க முன்வர வேண்டும் என்பதே சில சிவில் சமூக அமைப்புக்களின் நிலைப்பாடாக இருக்கின்றது.

மேலும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இளஞ்செழியன் அவர்களை அரசிலுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுவருவதையும் காணமுடிகிறது.

முன்னாள் காவல்துறை மா அதிபர் தென்னகோனை கைது செய்ய உத்தரவு..!

0

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட கொழும்பு குற்றப் பிரிவின் முன்னாள் அதிகாரிகள் எட்டு பேரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் சந்தேக நபர்களாகப் பெயரிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த உத்தரவானது, மாத்தறை நீதவான் நீதிமன்றினால் (28) விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள W 15 உணவகத்துக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பிலேயே தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது வழக்கு எண் 6314/23 இன் கீழ் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாகக் கொலைக்குச் சூழ்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டிசம்பர் 31, 2023 அன்று, கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று, பாதாள குழு உறுப்பினர் ஹரக் கட்டாவுக்கு நெருக்கமான ஒரு குழுவைக் கைது செய்ய மாத்தறையின் வெலிகம பகுதிக்குச் சென்றது.

அதன்போது, வெலிகமவில் உள்ள W 15 ஹோட்டலின் திசையிலிருந்து சிவில் உடையில் இருந்த காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதை அடுத்து, அந்த ஹோட்டலை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதவி விலகவுள்ளாரா வைத்தியர் யாழ் மாவட்ட சுயேட்சை எம்.பி..!

0

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கௌசல்யா நரேன் என்பவருக்கு விட்டுக் கொடுக்கவுள்ளதாக அர்த்தப்படும் வகையிலான முகப்புத்தக பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

கடந்த தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அர்ச்சுனா, தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

அவர் பதவி விலகுவாராக இருந்தால் அவரது அணியில் போட்டியிட்டு இரண்டாவது அதிக வாக்குகளைப் பெற்ற கௌசல்யாவுக்கு அந்தப் பதவி செல்லும்.

எவ்வாறாயினும் அர்ச்சுனாவும் இந்த பதிவில் மறைமுகமாகத் தாம் பதவி விலகப் போவதாகக் குறிப்பிட்டுள்ளாரே ஒழிய, நேரடியாக எதனையும் குறிப்பிடவில்லை.

வவுனியாவில் கல்வி அதிகாரிக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கவுள்ள பெற்றோர்கள்..!

0

வவுனியாவில் கல்வி அதிகாரி ஒருவருக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வவுனியாவில் கடமை புரியும் கல்வி அதிகாரி ஒருவர் கடந்த காலத்தில் ஆளும் கட்சியின் அரசியல் அதிகாரத்தை தனது தனிப்பட்ட நலன்களுக்குப் பயன்படுத்தி வந்துள்ளதுடன் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தமது பிள்ளைகளின் கல்வியை முழுமையாக அழிக்க முயன்று வருவதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளதுடன் குறித்த விடயத்திற்கு நீதியை வேண்டி விரைவில் தொடர் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.

வடக்கு, கிழக்கில் அத்தியாவசியமற்ற இராணுவ முகாம்களுக்கு பூட்டு..!

0

வடக்கு , கிழக்கு மாகாணங்களில் அத்தியாவசியமான இராணுவ முகாம்களை தவிர்த்து ஏனையவற்றை மூடுவதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

அத்துடன், இராணுவ வசமுள்ள காணிகள் முறையான மீளாய்வுகளுடன் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும் என்றும் கூறினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) உரையாற்றுகையிலேயே அவர் இதை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களும், பெருந்தோட்ட மக்களும் அரசாங்கத்துக்கு விசேட ஆணை வழங்கியுள்ளார்கள்.

ஆகவே அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்தே செயற்படுகிறோம். தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும், மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் இராணுவத்தினர் உட்பட முப்படையினரும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்.

இயற்கை அனர்த்தம் ஏற்பட்டாலும் இராணுவத்தையே அழைக்கிறோம். ஆகவே முப்படையின் சேவையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது என்றார்.

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவிக்கு இளைஞர்கள் இருவரால் நேர்ந்த அவலம்…!

0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 24 ஆம் திகதி சிறுமி ஒருவர் மாஞ்சோலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்திய பரிசோதனையில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரிய வந்துள்ளது.

அதனையடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. சிறுமியை இளைஞன் ஒருவர் பாடசாலை வகுப்பிற்கு அழைத்து செல்வதாக கூறி பற்றைக் காட்டுக்குள் அழைத்து சென்று துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் முறைப்பாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி , உப பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் குழுவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பதியப்பட்டதனையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு 2ஆம் வட்டாரம், கோம்பாவில் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவரும் துஸ்பிரயோகத்திற்கு உடந்தையாக இருந்த 19 வயதுடைய வீட்டின் உரிமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டடனர்.

சந்தேக நபர்களை நேற்றுமுன்தினம் (26) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்திய போது எதிர்வரும் மார்ச் மாதம் 11 திகதிவரை இரு இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனுமதிக்கப் பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கின் வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவரின் திருகு தாளங்கள்; விசாரணைக்குப் பணிப்பு..!

0

வடக்கின் வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவரின் தொடர் முறைகேடுகள் தொடர்பில் பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு முன்வைத்த முறைப்பாட்டை சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப விசாரணை செய்யுமாறு வட மாகாண பிரதமர் செயலாளருக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த ஆண் வலயக் கல்விப் பணிப்பாளர் தொடர்பில் இரத்மலானை சம்பவம் உட்பட பல்வேறு முறை பாடுகள் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட நிலையிலும் முன்னாள் ஊழல், மோசடிகளுடன் தொடர்புபட்ட பணிப்பாளர் உட்பட அதிகாரிகளுடனான நல்லுறவு காரணமாக மாகாண கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்படாமல் தட்டிக் கழிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் புதிய அரசாங்கம் பதவியேற்ற நிலையில், வடக்கு மாகாண கல்வியில் உள்ள முறைகேடுகள், மோசடிகள், அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பில் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


அந்த வகையில் குறித்த விடயத்தை பொதுச் சேவை ஆணைக்குழு கல்விச் சேவை ஆணைக் குழுவிற்கு பாரப்படுத்திய நிலையில், இம்முறைப்பாட்டை ஆராய்ந்த கல்விச் சேவை ஆணைக்குழு வலுவில் உள்ள சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக மாகாண பிரதம செயலாளருக்கு பாரப்படுத்தி உள்ளனர்.

கடந்த ரணில் ராஜபக்க்ஷ அரசால் நியமிக்கப்பட்ட பிரதம செயலாளர் குறித்த விடயத்தில் தொடர்புபட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பாரா? அல்லது காப்பாற்ற முனைவாரா? என்பதே மக்கள் முன்னுள்ள பாரிய வினா.

error: Content is protected !!