Saturday, March 14, 2026
Huis Blog Bladsy 58

பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த 1.5 ஏக்கர் காணி விடுவிப்பு..!

0

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணி இன்று விடுக்கப்பட்டுள்ளது.



இதேவேளை, விடுவிக்கப்பட்ட காணிகளின் விடுவிப்புக்கான ஆவணத்தை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனிடம் இராணுவத்தினர் கையளித்தனர். இந்த நிகழ்வு இன்று (29) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.



குறித்த நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பலாலி காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்..!

0

யாழ் – பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள தனியார் காணிகளை அவற்றின் அசல் உரிமையாளர்களிடம் மீண்டும் கையளிக்கும் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், அது தொடர்பான சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும், பாதுகாப்பு பிரதானிகளின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (28) நடைபெற்றது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர தலைமையில் கொழும்பில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யாகொந்த உட்பட சிரேஷ்ட பாதுகாப்பு மற்றும் நிர்வாக அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

காணிகளை மீளக் கையளிக்கும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள செயற்பாட்டு மற்றும் நிர்வாகத் தடைகளைத் தீர்ப்பதில் இந்தக் கலந்துரையாடலின் பிரதான கவனம் செலுத்தப்பட்டுள்ளது.



அத்துடன், இன்னும் இராணுவத்தின் வசம் உள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதை துரிதப்படுத்துவதற்காக, அந்த இராணுவப் பிரிவுகளை கட்டம் கட்டமாக அகற்றுவது குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.

அதன்படி, சிவில் சொத்துக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையிலும், அத்தியாவசிய பாதுகாப்புப் பிரிவுகளைத் தொடர்ந்து பேணி, பிரதேசத்தின் தொடர்ச்சியான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், புதிய எல்லைகளை நிறுவுவதை நிறைவு செய்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.



இந்தச் செயல்முறை வெளிப்படையானதாகவும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும் என்றும், தேசிய பாதுகாப்புடன் முழுமையாகப் பொருந்திப் போக வேண்டும் என்றும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை; 64 பேர் உயிரிழப்பு..!

0

போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்ய 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் நடத்திய சுற்றி வளைப்பின் போது நடந்த தாக்குதலில் 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர்.



இந்த சோதனையின் போது கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து பதிலுக்கு பிரேசில் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலின் போது 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள 46 பாடசாலைகள் மூடப்பட்டதாகவும், பெடரல் பல்கலைக்கழகத்தில் சிறப்பு வகுப்புகளை இரத்து செய்துள்ளது.



பல்கலையில் தங்கி படிக்கும் மாணவர்கள் விடுதியில் பத்திரமாக இருக்கின்றனர் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் கும்பல் மீதான ஒரு வருட விசாரணையைத் தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை வரலாற்றில் மிகப்பெரியது.



குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கம் கூடுதல் ஆதரவை வழங்க வேண்டும் என ரியோ டி ஜெனிரோ நகர் கவர்னர் கிளாடியோ காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.

இதனால் ரியோ டி ஜெனிரோ நகரில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு..!

0

கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் காட்டில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யூனியன் குளம் பகுதியை சேர்ந்த அப்சரன் (வயது 26) எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் கடந்த 24ஆம் திகதி வெளிநாட்டுக்கு பயணமாக இருந்த நிலையில் , ஐந்து தினங்களுக்கு முன்னரான 19ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.



காணாமல் போன மகனை பெற்றோர் தேடி வந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி அக்கராஜன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் உறவினர்களும் இளைஞனை தேடி வந்தனர்



இந்நிலையில் இளைஞனின் வீட்டில் இருந்து சுமார் 02 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள காட்டினுள் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வந்த அக்கராஜன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

நீதிமன்றை விட்டு வெளியேறிய ரணில்; விடுக்கப்பட்ட உத்தரவு..!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரி 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் நிகழ்வில், அரசு பணத்தை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




வழக்கு ஒத்திவைப்பை தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தை விட்டு வெளியேறி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு..!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு, இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.



பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர அவர்களின் உத்தரவின் பேரில், கடந்த ஓகஸ்ட் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.



அத்துடன், அது தொடர்பான வழக்கு ஓகஸ்ட் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது, முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதித் தரப்பினரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதியை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இஷாராவுக்கு பிஸ்டல் துப்பாக்கியை மறைக்க உதவிய பெண் சட்டத்தரணி கைது..!

0

கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக, இஷாரா செவ்வந்திக்கு, பிஸ்டல் துப்பாக்கியை மறைத்துக் கொள்வதற்காக ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலின் பிரதியொன்றை வழங்கிய பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



குறித்த சட்டத்தரணி கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லசா கொலை சந்தேக நபரை காணொளி எடுத்த பொலிசாருக்கு கடும் சிக்கல்..!

0

வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரை காணொளி பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் குறித்து சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.



இந்த விடயம் தொடர்பில் காவல்துறை மா அதிபரின் கவனம் செலுத்தப் பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவருக்கும் எதிர்கால நீதித்துறை நடைமுறைகளுக்கும் தீங்கு விளைவிப்பதால் இந்த சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என்றும் அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

காணொளி பதிவு மூன்றாம் தரப்பினரால் செய்யப்பட்டதா அல்லது காவல்துறை அதிகாரிகளின் ஒப்புதலுடன் செய்யப்பட்டதா என்பது விசாரணைகளில் கண்டறியப்படும் என்று அவர் கூறினார்.



இதேவேளை வடக்கின் கல்வியுடன் தொடர்புடைய சில திணைக்களங்களில் பழிவாங்கும் நோக்கில் சில உயர் அதிகாரிகளால் இரகசிய ஆவணங்கள் கசியவிடப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் மாட்டுத் திருட்டில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநீக்கம்..!

0

மன்னார் பொலிஸ் பிரிவில் கடந்த (25) ஆம் திகதி அதிகாலையில் மாடொன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி இடைநீக்கம் (Suspended) செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் தெரிவித்துள்ளது.

பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் பேசாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.

அவர் கடந்த 23 ஆம் திகதி விடுமுறையில் சென்றிருந்ததாகவும், விடுமுறையிலிருந்த போது இந்தத் திருட்டில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் இன்று (28) மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டனர். இதன்படி குறித்த இருவரும் நாளைய தினம் (29) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 25 ஆம் திகதி அதிகாலை நானாட்டான் பிரதேசத்தில், மூவர் இணைந்து மாடொன்றைத் திருடி முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றுவதற்கு முயற்சித்துள்ளனர்.

இதைக் கண்ட பிரதேசவாசிகள் கூச்சலிட்டதால், முச்சக்கர வண்டி அங்கிருந்து தப்பிச் சென்றது. இதையடுத்து, பிரதேசவாசிகள் குறித்த முச்சக்கர வண்டியைப் பின் தொடர்ந்துள்ளனர்.



பின்னர் முச்சக்கர வண்டியானது அங்கு கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் முச்சக்கர வண்டியின் சாரதியைக் கைது செய்த போது, அவர் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.



அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் முச்சக்கர வண்டியிலிருந்து தப்பிச் சென்றதாகத் தெரியவந்தது.

அதன்படி, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அந்தப் பகுதியில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றொருவர் தப்பிச் சென்றுள்ளார்.

நாட்டின் சிறைகளிலுள்ள இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

0

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய பாடசாலையில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாகப் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.



இலங்கையில் 36 சிறைச்சாலைகள் உள்ளன. அவற்றில் அடைக்கக்கூடிய சிறைக் கைதிகளின் எண்ணிக்கை 10,500 ஆகும்.

ஆனால் தற்போது கிட்டத்தட்ட 36,000 பேர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.



இதேவேளை சட்டங்கள் மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச சமூக ஆர்வலர்களின் செயற்பாட்டால் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்களின் கைகள் கடுமையாகக் கட்டப்பட்டு வரும் நிலையில் இத்தகைய அதிகரிப்பை தவிர்க்க முடியாது.

error: Content is protected !!