Sunday, January 25, 2026
Huis Blog Bladsy 130

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவிக்கு இளைஞர்கள் இருவரால் நேர்ந்த அவலம்…!

0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 24 ஆம் திகதி சிறுமி ஒருவர் மாஞ்சோலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்திய பரிசோதனையில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரிய வந்துள்ளது.

அதனையடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. சிறுமியை இளைஞன் ஒருவர் பாடசாலை வகுப்பிற்கு அழைத்து செல்வதாக கூறி பற்றைக் காட்டுக்குள் அழைத்து சென்று துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் முறைப்பாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி , உப பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் குழுவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பதியப்பட்டதனையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு 2ஆம் வட்டாரம், கோம்பாவில் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவரும் துஸ்பிரயோகத்திற்கு உடந்தையாக இருந்த 19 வயதுடைய வீட்டின் உரிமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டடனர்.

சந்தேக நபர்களை நேற்றுமுன்தினம் (26) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்திய போது எதிர்வரும் மார்ச் மாதம் 11 திகதிவரை இரு இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனுமதிக்கப் பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கின் வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவரின் திருகு தாளங்கள்; விசாரணைக்குப் பணிப்பு..!

0

வடக்கின் வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவரின் தொடர் முறைகேடுகள் தொடர்பில் பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு முன்வைத்த முறைப்பாட்டை சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப விசாரணை செய்யுமாறு வட மாகாண பிரதமர் செயலாளருக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த ஆண் வலயக் கல்விப் பணிப்பாளர் தொடர்பில் இரத்மலானை சம்பவம் உட்பட பல்வேறு முறை பாடுகள் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட நிலையிலும் முன்னாள் ஊழல், மோசடிகளுடன் தொடர்புபட்ட பணிப்பாளர் உட்பட அதிகாரிகளுடனான நல்லுறவு காரணமாக மாகாண கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்படாமல் தட்டிக் கழிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் புதிய அரசாங்கம் பதவியேற்ற நிலையில், வடக்கு மாகாண கல்வியில் உள்ள முறைகேடுகள், மோசடிகள், அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பில் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


அந்த வகையில் குறித்த விடயத்தை பொதுச் சேவை ஆணைக்குழு கல்விச் சேவை ஆணைக் குழுவிற்கு பாரப்படுத்திய நிலையில், இம்முறைப்பாட்டை ஆராய்ந்த கல்விச் சேவை ஆணைக்குழு வலுவில் உள்ள சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக மாகாண பிரதம செயலாளருக்கு பாரப்படுத்தி உள்ளனர்.

கடந்த ரணில் ராஜபக்க்ஷ அரசால் நியமிக்கப்பட்ட பிரதம செயலாளர் குறித்த விடயத்தில் தொடர்புபட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பாரா? அல்லது காப்பாற்ற முனைவாரா? என்பதே மக்கள் முன்னுள்ள பாரிய வினா.

கிளீன் சிறிலங்காவில் இந்து மதத்தையும் கிளீன் செய்ய நினைக்கும் வேலைத் திட்டம்..!

0

அனுராதபுரத்தில் கிளீன் சிறிலங்காவில் இந்து மதத்தை துடைத்தெறிய நினைக்கும் வேலைத்திட்டம் ஹபரணையில் நடந்தேறியுள்ளதாக சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் ஹபரணை பிரதான வீதியால் பயணம் செய்யாதவர்கள் இருக்க மாட்டீர்கள் அப் பிரதேசத்தில் வீதியின் மருங்கில் பழமையான விநாயகர் ஆலயம் ஒன்று உள்ளது.

பயணிகள் அங்கு வழிபாடு செய்து செல்வது வழக்கம். அவ் வழிபாட்டில் ஈடுபடுவதில் நானும் ஒருவன். தற்போது விநாயகர் ஆலத்தின் முன்னால் பேருந்து தரிப்பிடம் அமைக்கப்பட்டு விநாயகர் ஆலயம் முழுமையாக மறைக்கப்பட்டு குறிகிய காலத்தில் அது அகற்றப்படும் நிலையும் உருவாகியுள்ளது.

எமது இந்து கலாசாரத்தின் தொன்மைபீடமாக இலங்கை இருப்பதால்தான் ஈழத்தினை சிவபூமி என திருமூலர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழைத்திருந்தார்.

எமது மரபுரிமைகளை கடந்த சிங்கள அரசாங்கங்கள் அழித்தது போல தற்போதும் நடைபெறுவது ஏற்க முடியாது.

இதற்கான கண்டனத்தினை நாம் ஒன்றிணைந்து வெளிப்படுத்த வேண்டும். அத்தோடு விநாயகர் ஆலயத்தினை இந்த அரசாங்கம் புனர்நிர்மானம் செய்ய வேண்டும் எனவும் இப்பதிவி்ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிக்டாக் காதலால் கர்ப்பமான சிறுமி; காதலனை கைது செய்ய விசாரணை ஆரம்பம்..!

0

9 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞன் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். குறித்த சிறுமி டிக்டாக் செயலி மூலம் அறிமுகமான ஒரு இளைஞனுடன் காதல் உறவில் இருந்துள்ளார்.

குறித்த சிறுமியின் தாத்தாவின் இறுதிச் சடங்கிற்குப் பின்னர், தனியாக இருந்த பாட்டிக்கு உதவியாகச் சென்றுள்ளார். 27/11/2024 அன்று, பாட்டி வீட்டில் இல்லாத நேரத்தில் குறித்த இளைஞன் வீட்டிற்கு வந்து இருவரும் கணவன்-மனைவி போல நடந்து கொண்டுள்ளனர். அன்றிலிருந்து அவர்கள் பலமுறை கணவன் மனைவியாக இருந்துள்ளனர்.

குறித்த சிறுமிக்கு மாதவிடாய் தவறியதால், ஜனவரி 2025 இல், அவரது தாயார் அவளை பரிசோதனைக்கு வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்று மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

பின்னர் சிறுமி பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள அவரது சகோதரி தங்கியிருந்த ஒரு தங்கும் விடுதிக்கு அனுப்பப்பட்டு, மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பிபில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் சக தமிழ் கட்சிகளுக்கும் இடையில் சந்திப்பு..!

0

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (DTNA) பிரதிநிதிகளுக்கும் சக தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு இன்று (23) முற்பகல் யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பின் போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பங்கு கொள்வது தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், சமத்துவக் கட்சி, ஜனநாயக தமிழரசுக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களாக,

மேற்படி அனைத்து அமைப்புக்களும் இணைந்து ஓரே அணியாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முகம் கொடுப்பது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்னும் கட்சியின் பெயரில் இணைந்து போட்டியிடுவது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சின்னத்தை பொதுவான சின்னமாக அனைவரும் ஏற்றுக் கொண்டு அந்தச் சின்னத்தில் போட்டியிடுவது.

மாவட்ட ரீதியாக யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சி மாவட்டத்திலும் மாவட்டத் தேர்வுக் குழுவை உருவாக்குவது ஆகியன அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!

0

வவுனியா, செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன சிப்பிக்குளம் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் ஒருவர் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (22) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்கலை மாணவர் குழுக்களிடையே மோதல்; மூவர் வைத்திய சாலையில் அனுமதி..!

0

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக் கழக மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மூன்று மாணவர்களும் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடங்களில் கல்வி பயிலும் இரண்டு மாணவ குழுக்களுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறைத் தீர்க்கச் சென்றபோது, ​​அதே பீடத்தின் இறுதி ஆண்டு மாணவர்கள் குழு தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

காயமடைந்த மாணவர்கள் பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை – ஜனாதிபதி

0

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (23) விஜயம் செய்தபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலாகும் என்றும், அதை அடக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் மலசல கூடத்தில் குழந்தையை பெற்று ஜன்னல் ஊடாக வீசிய மாணவி..!

0

மட்டக்களப்பு வைத்திய சாலையின் மலசல கூடத்தில் குழந்தையை பெற்று யன்னலினூடாக குழந்தையை வீசி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

உயர் தரத்தில் கல்விகற்று வரும் 18 வயதுடைய மாணவி ஒருவர் சம்பவ தினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் நிறைமாத கற்பிணியான இவர் கற்பிணி தான் என தெரிவிக்காது வைற்றுவலி என மட்டு போதன வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்

இதனை தொடர்ந்து வயிற்றுவலி என தெரிவித்த இவர் மாணவி என்பதால் சரியான முறையில் வைத்தியர் சோதனையிடாது அவரது சலத்தை சோதனையிட்டு வயிற்று வலிக்கான ஊசி மூலமாக வலி நிவாரண மருந்து கொடுக்கப்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து அதிகாலை 5 மணியளில் குறித்த நோயாளி மலசல கூடத்திற்கு சென்ற நிலையில் குழந்தையை பிரசவித்து யன்னல் வழியாக வீசியுள்ளார்.

குழந்தை யன்னலில் கீழ் உள்ள பிளேற்றில் வீழ்ந்து அழுகுரல் கேட்டதையடுத்து தாதியர்கள் அங்கு சென்ற நிலையில் குழந்தையை பிரசவித்துள்ளார் என அவர்களுக்கு தெரிய வந்ததையடுத்து வீசிய குழந்தையை மீட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன் தாய்க்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த குழந்தையும் தாயும் பாதுகாப்பாக உள்ளதாக மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாறஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வைத்திய சாலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய யாழ் மாவட்ட செயலாளரின் மகன் செலுத்திய சொகுசு வாகனம்..!

0

யாழ் மாவட்ட செயலாளர் ம.பிரதீபனின் மகன் செலுத்தி சென்ற சொகுசு வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் சிக்கிய மாவட்ட செயலாளரின் மகனும் மற்றும் அவரது நண்பரும் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

யாழ் – பலாலி வீதியில் கந்தர்மட சந்திக்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதன் போது அருகில் உள்ள வீட்டின் முன்னால் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேகா ரக மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.

விபத்தில் வாகனத்தை செலுத்தி சென்ற மாவட்ட செயலாளரின் மகன் ஆதிரன் என்பவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

அத்தோடு, சாரதி இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த ஆதிரனின் நண்பர் ஒருவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்த நிலையில், அவரது கால்கள் வாகனத்தினுள் சிக்கியமையால் சுமார் ஒரு மணி நேர போராட்டத்தின் பின்னரே அவர் வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டு வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த வாகனம் மாவட்ட செயலாளரின் தனிப்பட்ட வாகனம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

error: Content is protected !!