Tuesday, May 5, 2026
Huis Blog Bladsy 131

மனைவியைக் காதலனுக்கே திருமணம் செய்து வைத்த கணவன்; முன்வைத்த இறுதி கோரிக்கை..!

0

தனது மனைவியை அவருடைய காதலனுக்கு கணவனே திருமணம் செய்து வைத்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சாண்ட் கபிர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பப்லு. இவருக்கும், ஜோதி என்ற பெண்ணுக்கும் கடந்த 2017இல் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு, 7 மற்றும் 9 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். பப்லு தனது தனது குடும்பத்தைக் காப்பாற்ற அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று சம்பாதித்து வந்துள்ளார்.

இதற்கிடையில், ஜோதிக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த விவகாரம் பப்லுவின் குடும்பத்தினருக்கு தெரியவர, இது குறித்து உடனடியாக பப்லுவிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை அறிந்த பப்லு, இந்த பிரச்சனையை சரிசெய்ய பலமுறை முயன்றுள்ளார். ஆனால், அனைத்து தோல்வியில் முடிந்துள்ளது. இந்த சூழ்நிலையில், தனது மனைவியை அவருடைய காதலனுக்கே திருமணம் செய்து வைக்க பப்லு முடிவு செய்துள்ளார்.

நீதிமன்றத்திற்குச் சென்று தனது மனைவிக்கு அவரது காதலனோடு திருமணம் செய்து வைத்ததுடன் பின்னர், அவர்களை ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளார்.

இறுதியாக, தனது இரண்டு குழந்தைகளை தானே வைத்துக் கொள்ள விரும்புவதாக பப்லு ஜோதியிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. காதலனை மணந்த பிறகு ஜோதியும், பப்லுவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.

வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு..!

0

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்று இடம்பெற்றது. வவுனியா நகரில் அமைந்துள்ள வாடி வீட்டில் கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, செட்டிகுளம் பிரதேச சபை என்பவற்றுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில், கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அநுர அரசாங்கத்திற்கு பேரிடி; மற்றுமொரு பதவி விலகல் பதிவானது..!

0

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் பந்துர திலீப விதாரண தனது பதவியில் இருந்து விலகுவதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் கடிதமொன்றை சமர்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தியின் போக்குவரத்து குழுவின் தலைவராகவும் பணியாற்றும் பந்துர திலீப விதாரண, நாவல திறந்த பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர பிமல் ரத்நாயக்க தலைமையிலான போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்களின் தவிசாளர் பதவியிலிருந்து விலகிய செய்த மூன்றாவது அதிகாரி பந்துர திலீப விதாரண ஆவார்.

ஏற்கனவே, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தவிசாளராக பணியாற்றிய ருவன் விஜயமுனி மற்றும் தேசிய போக்குவரத்து சபையின் தவிசாளராக பணியாற்றிய ரமல் சிறிவர்தன ஆகியோர் முன்னர் பதவி விலகியிருந்தனர்.

இந்த நிலையில், பதவி விலகல் குறித்த காரணத்தை விசாரிக்க பந்துர திலீப விதாரணவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, அவர் வேறு வேலையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அழைப்பைத் துண்டித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

கூரை சூரிய மின்சாரக் கட்டணக் குறைப்புக்கு ஆட்சேபனை தெரிவிப்பு..!

0

கூரை சூரிய மின்சக்தி கட்டணக் குறைப்புக்கு சூரிய மின்சக்தி தொழிற் சாலைகள் சங்கம் கடும் ஆட்சேபனை எழுப்பியுள்ளது. இது இலங்கையின் சூரிய மின்சக்தித் துறையை கடுமையாகப் பாதிக்கும் என்று, அந்த சங்கம் எச்சரித்துள்ளது.

திறைசேரியின் செயலாளர் கே.எம். மகிந்த சிறிவர்தனவுக்கு எழுதிய கடிதத்தில், முன்மொழியப்பட்ட கட்டணக் குறைப்பு, 27 இல் இருந்து 23 ஆகவும், 19 இல் இருந்து 14 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது.

இது, 1,000க்கும் மேற்பட்ட வணிகங்களையும் 40,000க்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும் அச்சுறுத்துகிறது என்று சங்கம் தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டில் கூரை சூரிய மின்சக்தி 500 மெகாவோட்டிற்கு மேல் பங்களித்ததாகவும், இது புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் வேகமாக வளர்ந்து வரும் பிரிவாக அமைந்ததாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

வேட்பு மனு நிராகரிப்பு; நீதிமன்ற படியேறும் தமிழ் மக்கள் கூட்டணி..!

0

யாழ் மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப் பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தமிழ் மக்கள் கூட்டணி வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியினால் வழங்கப்பட்ட வேட்பு மனுவில் பெண் வேட்பாளர் ஒருவரின் சத்திய கூற்றில் தவறு உள்ளதாக கூறி அந்த பெண் வேட்பாளரை பட்டியலில் இருந்து நீக்கியமையால் , தேவையான பெண் பிரதிநிதித்துவம் இல்லை என மாநகர சபைக்கான வேட்பு மனுவை தேர்தல்கள் திணைக்களம் முற்றாக நிராகரித்துள்ளது.

வேட்பு மனுவில் தேவையான பெண் வேட்பாளர்களை உள்ளடக்கி இருந்தோம். ஆனால் ஒரு பெண் வேட்பாளரின் சத்திய கூற்றில் தவறு எனில் அவரை மாத்திரம் நீக்கி ஏனையோரை போட்டியிட அனுமதித்து இருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் முழு வேட்பு மனுவையும் நிராகரித்து 48 வேட்பாளர்களின் ஜனநாயக உரிமையை மறுத்துள்ளார்கள் என தமிழ் மக்கள் கூட்டணியினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந் நிலையிலேயே இன்றைய தினம்(25) செவ்வாய்க் கிழமை ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் ஊடாக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

யாழ் மாநகர சபையில் , முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் முதல்வர் வேட்பாளராக கொண்டு களமிறங்கிய தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பு மனுவே நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் ஊசி மூலம் ஹெரோயினை உடம்பினுள் செலுத்திய இளைஞன் மரணம்..!

0

யாழில் அதிக ஹெரோயின் பாவனையால் இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். யாழ் – நல்லூர் பகுதியை சேர்ந்த 30 வயதடைய ஜெ.சுகன்யன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

இவர் கடந்த 23ஆம் திகதி நண்பனின் வீட்டுக்கு சென்று உறங்கியுள்ளார். 24ஆம் திகதி அவரை பார்வையிட்ட வேளை மயக்க நிலையில் காணப்பட்டார்.

பின்னர் அவரை யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

ஊசி மூலம் அதிகளவான ஹெரோயினை உட்செலுத்தியதன் காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு..!

0

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, போகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து இருந்ததை அவதானித்த ஊர் மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் பெண் ஒருவரின் சடலத்தை மீட்டதுடன், திடீர் மரண விசாரணை அதிகாரி க.கரிபிரசாத் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

வவுனியா, போகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வவுனியா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு..!

0

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ் முஸ்லிம் சிவில் சமூக அமைப்பின் செயலாளர் தாஹா.ஐன்ஸ்டின் தெரிவித்தார்.

தான் ஏற்கனவே சபாநாயகரிடம் இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் இதனால் அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் இன்றைய தினம் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் மா அதிபர் அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

யாழில் பிரான்ஸ் மாப்பிளை தாலி கட்டிய யுவதி; குடும்பஸ்தருடன் தலைமறைவு..!

0

திருமணம் முடிந்த சில நாட்களில் திருமணப் பெண் வேறு ஆண் ஒருவருடன் ஓடிய சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

பிரான்ஸ் நாட்டிலிருந்து வருகை தந்த மணமகனுக்கு யாழ் நீர்வேலிப் பகுதியில் வசிக்கும் மருதனார்மடம் புடவைக்கடையில் வேலை செய்யும் யுவதி ஒருவருக்கும் திருமணம் கடந்த வாரம் இடம் பெற்றது.

திருமணம் முடிந்த சில நாளில் பதிவுத் திருமணம் இடம்பெற இருந்த நிலையில் ஏற்கனவே திருமணம் செய்த ஆண் ஒருவருடன் புது மணப்பெண் தலை மறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் மணமகன் வீட்டார் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

14 வயது சிறுமிக்கு 33 வயது நபருடன் காதல்; பேருந்தில் சிக்கிய ஜோடி..!

0

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதிகும்புர கஹம்பான பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்ற 33 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று திங்கட்கிழமை (24) அன்று மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் தாயார் பொலிஸில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, இருவரும் எம்பிலிபிட்டியவிலிருந்து மொனராகலைக்கு வரும் பேருந்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபரை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்திய சாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!