Saturday, March 7, 2026
Huis Blog Bladsy 27

யாழில் சிறுமி மீதான அத்துமீறல்; சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

0

யாழ். மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில், 13 வயதுச் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

“குறித்த நபர் பாதிக்கப்பட்ட சிறுமியை வேலைக்காக அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் நீண்டகாலமாக அந்த சிறுமியை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு இது குறித்து முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி மானிப்பாய் காவல்துறை இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த சந்தேகநபரை கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நேற்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

விபரீத ஆசையால் பர்தாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவன்..!

0

பண்டாரவளையில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு அருகில், பெண் வேடத்தில் பர்தா அணிந்து சுற்றித்திரிந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளையில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் கல்வி கற்கும் எத்தலபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது தாயார் அனுப்பிய பணத்தில், ஒரு மாதத்திற்கு முன்பே குறித்த பர்தாவை வாங்கியுள்ளதாக மாணவன் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

பர்தாவை அணிவதற்கு இருந்த ஆசையில், தனது சகோதரி பிரத்தியேக வகுப்புகளுக்கு சென்ற பின்னர், ​​அவரது ஆடைகள், செருப்புகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை, நகரத்தில் உள்ள ஒரு இடத்திற்கு எடுத்துச் சென்று, அதனை அணிந்து நகரம் முழுவதும் சுற்றித் திரிந்ததாக அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

தாயும் தந்தையும் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் குறித்த மாணவன் தனது பாட்டி வீட்டில் சகோதரியுடன் தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பில் தாயார் ஏசினார்; 12 வயது சிறுவன் தூக்கில் தொங்கி பலி..!

0

மட்டக்களப்பு, மாவடி வேம்பைச் சேர்ந்த 12 வயது சிறுவன், தனது தாயாருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

படிப்பின் அழுத்தம் அல்லது குடும்பப் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும், இந்தக் கோரமான முடிவினால் ஒரு இளம் உயிரை இழந்துள்ளதுடன், அந்த குடும்பத்துக்கு ஈடுசெய்ய முடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதய சமூகத்தில் பிள்ளைகள் எதிர்கொள்ளும் மன அழுத்தங்களை பெற்றோரும் சமூகமும் மிகவும் கவனத்துடன் அணுக வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.

பிரதி தவிசாளர் உட்பட இருவர் மீது தாக்குதல்; தலைமறைவான எம்.பி..!

0

நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு ஒன்று நிந்தவூர் பிரதேச சபைக்குள் உள்நுழைந்து பிரதி தவிசாளர் உட்பட இருவர் மீது தாக்குதல் நடத்தி இருந்தது.

இந்த சம்பவத்தில் தலைமறைவாகிய நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்று (10) உத்தரவிட்டார்.

அதேவேளை தலைமறைவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 10 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுபற்றி தெரிய வருவதாவது,

குறித்த பிரதேச சபையின் தவிசாளர் அண்மையில் பதவி விலக்கப்பட்டார். இந்த நிலையில் பிரதி தவிசாளர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி எம்.ஜ. இர்பான் சபை நடவடிக்கையினை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினமான திங்கட்கிழமை (08) ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள், பிரதி தவிசாளர் அறைக்குள் உள் நுழைந்து சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என தெரிவித்து பிரதி தவிசாளருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட நிலையில் அங்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

அங்கு சென்ற பொலிஸார் இது நிர்வாக ரீதியான பிரச்சனை. எனவே, கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற பிரதிப் பணிப்பாளரிடம் முறையிட்டு இதற்கான தீர்வை பெறுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியதையடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

இதனை தொடர்ந்து பிரதி தவிசாளர் தனது சபை கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பிற்பகல் 2.00 மணியளவில் பிரதி தவிசாளரின் காரியாலயத்துக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான 30 பேர் கொண்ட அடியாட்களுடன் உள் நுழைந்து மேசையில் இருந்த பொருட்களை உடைத்து எறிந்து பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியதில் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

இதையடுத்து தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ள நிலையில் இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 12 பேரை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்ய நடவடிக்கையினை மேற்கொண்டு வந்தனர். எனினும், அவர்கள் தலைமறைவாகியுள்ளனர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து தலைமறைவாகிய இருவரை பொலிஸார் செவ்வாய்க்கிழமை (09) அன்று இரவு கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட இருவரையம் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இருவரையும் எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்வதற்கு சபாநாயகரிடம் அனுமதியை பெறும் நடவடிக்கையின் முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னாரைத் துயரில் ஆழ்த்திய பாடசாலை மாணவனின் மரணம்..!

0

மன்னார், கற்கடந்தகுளம் கிரமத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தங்களினால் உயிரிழப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

இந்நிலையில் மன்னார் மாவட்டத்தின் கற்கடந்தகுளம் கிரமத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட வீதியினால் சென்ற போது தவறுதலாக சேற்றில் புதையுண்டு தரம் 13ல் கல்வி கற்கும் மாணவன் உயிரிழந்துள்ளார்.

நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலையால் பல வீதிகள் வெள்ளத்தில் முழ்கியிருந்த நிலையில் அவற்றின் கட்டமைப்பு சீர்குழைந்தால் ஆபத்துக்கள் ஏற்பட அதிகரித்த வாய்ப்புள்ளது எனவே மக்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

கொழும்பு அதிவேக வீதியில் குப்பையை வீசிச் சென்ற யாழ் சாரதி கைது..!

0

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் குப்பைகளைக் கொட்டிய ஒருவரை, அதிவேக வீதிப் பொலிஸ் பிரிவின் சீதுவ துணைப் பரிபாலன நிலைய அதிகாரிகள் இன்று (10) பிற்பகல் கைது செய்துள்ளனர்.

குறித்த அதிவேக வீதியின் 19வது கிலோமீட்டர் மைல்கல் அருகே, கொழும்பில் இருந்து கட்டுநாயக்க நோக்கிச் சென்ற பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றின் சாரதி, குப்பை அடங்கிய ஒரு பையை அதிவேக வீதியில் எறிவதை அங்கு நடமாடும் சோதனையில் ஈடுபட்டிருந்த இருந்த அதிகாரிகளால் அவதானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த அதிகாரிகள் உடனடியாக சீதுவ துணைப் பரிபாலன நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

அங்கு கடமையில் இருந்த அதிகாரிகள், அதிவேக வீதிச் சட்டத்தின் கீழ் வீதியில் குப்பைகளை வீசிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த சாரதியைக் கைது செய்து, மேலதிக நடவடிக்கைக்காக சீதுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கைதானவர் யாழ், அல்வாய் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் நாளை (11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்..!

0

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில், தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மாறி மாறி வருகின்ற ஒவ்வொரு அரசாங்கங்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியை வழங்க மறுப்பதாகவும், மனித உரிமைகளை மதிக்காமல் செயற்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.

தமது கவலைகள் தொடர்பில் வெளிப்படுத்தி வரும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

வட- கிழக்கின் பல பகுதிகளில் தொல்லியல் எனும் போர்வையில் காணி அபகரிப்புகள் இடம் பெறுவதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.

மனிதப் புதை குழிகள் விவகாரம் போன்றவற்றிலும் சர்வதேச தலையீட்டுடனான விசாரணை பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திலும் மனித உரிமை விடயங்களிலும் சர்வதேசத்தினுடைய மேற்பார்வையும் தலையீடும் வேண்டும் எனவும் இந்த மனித உரிமைகள் தினத்திலும் சர்வதேசத்திடம் தமது கோரிக்கைகளையும் முன் வைப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.

கைக்கலப்பு வழக்குக்கு சென்றவருக்கு “கசிப்பு சிக்” விசாரணைகள் ஆரம்பம்..!

0

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி ஒருவர் யாழ் போதனா வைத்திய சாலையில் கடந்த ஒரு மாத காலமாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது சகோதரியை யாழ் பொலிஸார் இன்றைய தினம் புதன்கிழமை சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை செய்து வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த நவம்பர் மாதம் 06ஆம் திகதி நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்கு செல்லாத குற்றத்திற்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து நீதிமன்ற உத்தரவில் யாழ் சிறைச்சாலையில் விளக்க மறியலில் தடுத்த வைக்கப்பட்டிருந்த நிலையில் ,தலையில் காயம் ஏற்பட்டு தற்போது கடந்த 11ஆம் திகதி முதல் கோமா நிலையில் சிகிசிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் கடந்த வாரம் குறித்த இளைஞனின் சகோதரி ஊடக சந்திப்பில், அண்ணாவை கடந்த 08ஆம் திகதி வைத்திய சாலையில் சென்று பார்த்த போது “அடித்து போட்டாங்கள்” என தன்னிடம் சொன்னார் என கூறி இருந்தார்.

அந்நிலையில், தாம் அடிக்கவில்லை. சிறையில் தடுக்கி விழுந்தார் என தெரிவித்த யாழ் சிறைச்சாலை நிர்வாகம் இளைஞனின் சகோதரி உண்மைக்கு புறமான தகவலை தெரிவித்தார் என அவருக்கு எதிராக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸ் இன்றைய தினம் புதன்கிழமை குறித்த பெண்ணை பொலிஸ் நிலையம் அழைத்து சுமார் இரண்டரை மணி நேரமாக விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்டனர்.

அதேவேளை, குறித்த இளைஞன் ஊரில் நடைபெற்ற கைக்கலப்பு தொடர்பான வழக்கு விசாரணையையே எதிர்கொண்டு வரும் நிலையில், சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்ததாக சில ஊடகங்களில் இளைஞனுக்கு கசிப்பு வழக்கு உண்டு என்றும், இளைஞனுக்கு “கசிப்பு சிக்” என சிறைச்சாலை நிர்வாகம் கண்டு பிடித்த புது வகையான நோய் தொடர்பில் வெளியான செய்திகளால் இளைஞனின் குடும்பம் கடும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

யாழில் நிவாரணத்தில் பாரபட்சம்; கிராம சேவகருக்கு எதிராக முறைப்பாடு..!

0

அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25000 ரூபாய் கொடுப்பனவில் வெள்ளத்தில் சிக்குண்ட தமது வீட்டை புறக்கணித்து விட்டதாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம சேவையாளர் ஒருவருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தி அலுவலகத்தில் முரண்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டதாவது,

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புதிய வீடமைப்புத் திட்டம் கல்லுண்டாயில் வசிக்கும் யோகநாதன் ராயித் ஆகிய எனக்கு தந்தை இல்லை. தாயின் பாராமரிப்பிலும் பாதுகாப்பிலும் வளர்ந்து வருகின்றேன். அத்துடன் நான் கல்வி கற்று வருகிறேன்.

எனது தாயார் குடும்பச் சுமை காரணமாக தற்காலிகமாக கொழும்பிற்கு வேலைக்கு சென்று 3 மாத காலமாகின்றது. ஆகையால் எனது பாதுகாப்பு கருதி என்னை குருநகரில் வசிக்கும் பெரிய தாயாருடன் விட்டுச் சென்றுள்ளார்.

எனது அம்மம்மாவும் எங்களோடு இருப்பதால் அவருடைய அடிப்படை தேவைகளையும், முழு குடும்ப சுமையையும் எனது தாயாரே தாங்கி வருகிறார்.

எனது வீடு கல்லூண்டாயில் இருப்பதால் நான் அங்கு ஒவ்வொரு ஞாயிறும் சென்று வருவதோடு அங்கு மத ஆராதனை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடப்பதுண்டு.

ஆனால் இரு வாரமாக நான் அங்கு செல்ல வில்லை வெள்ளம் வந்ததால் வீட்டின் மின் இணைப்புக்களில் தண்ணீர் சென்றுள்ளது எனவே உறவினர் சென்று பர்வையிட்டு வந்து கூறினார் .

அதனால் அரசாங்கம் வழங்கும் வெள்ள அனர்த்த நிதியினை வழங்குவதற்காக பதிவுகளை மேற்கொள்ளுமாறு எனது தாயார் கிராம சேவையாளரிடம் கேட்க அவர் அதனை மறுத்து விட்டார். குறித்த குடியிரிப்பில் வாழாத குடும்பங்களுக்கு அந்த கொடுப்பனவுக்காக பதிவு செய்யப்பட்டது, ஆனால் எனது தாயாரை மட்டும் புறக்காணித்து ஊழல் செய்கிறார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலதிகாரிகளிடமும் எனது தாயார் கதைத்து சாதகமான முடிவுகள் கிடைக்காத காரணத்தினால் அரச அதிகாரிகளிடமிருந்து எங்களுக்கு உரிய நீதியைப் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோரும் மீனவர்கள்; நடவடிக்கை எடுத்த ஆளுநர்..!

0

இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் வட மாகாண மீனவர்கள் எதிர் கொள்ளும் மிகப்பெரிய பாதிப்புக்கள் தொடர்பாகவும், இப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடுவது தொடர்பாக, ஜனாதிபதிக்குரிய மனு வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள், வட மாகாண கெளரவ ஆளுநர் நா.வேதநாயகனை ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் புதன் கிழமை சந்தித்து இக் கோரிக்கைக் கடிதத்தைக் கையளித்தனர்.

பல்வேறு இடர்பாடுகளின் போதும் இந்திய அரசாங்கம் வழங்கி வருகின்ற உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள அதேவேளை, இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத இழுவைமடி மீன்பிடி முறையால் வட மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல்வளம் என்பன எவ்வகையில் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன என்பது குறித்தும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எனவே, இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தமக்குச் சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறும் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தினர் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தால் கையளிக்கப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட ஆளுநர், அதனை உடனடியாகவே ஜனாதிபதியின் கவனத்துக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

error: Content is protected !!