Saturday, March 7, 2026
Huis Blog Bladsy 28

பாலர் பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி மீள திறப்பு..!

0

அவசரகால அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட பாலர் பாடசாலைகள் உள்ளிட்ட முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களில், மீண்டும் பாதுகாப்பாகத் திறக்கக் கூடிய அனைத்து பாலர் பாடசாலைகளையும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையங்களையும் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி தொடர்பான தேசிய செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

70 கோடி வரை அள்ளிய ‘சூர்யா 47’; சூர்யாவின் கருப்பு விரைவில்..!

0

சூர்யாவின் கருப்பு மற்றும் வெங்கி அட்லுரி இயக்கும் படம் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.

இதற்கிடையில் அவர் மலையாள இயக்குனர் ஜீத்து மாதவனுடன் சூர்யா 47 படத்தில் சேர்ந்து பணி புரிகின்றார்.

இந்த படத்துக்கான பூஜை நடந்து முடிந்துள்ள நிலையில், விரைவில் ஷுட்டிங்கும் துவங்கவுள்ளது.

சூர்யா 47 படத்தின் அறிவிப்புக்குப் பிறகே இதன் ஓடிடி, வெளிநாட்டு மற்றும் இசை உரிமைகள் அனைத்தும் விற்கப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளதாகவும், ஃபார்ஸ் பிலிம்ஸ் ஓவர்சீஸ் ரைட்ஸையும் திங்க் மியூசிக் இசை உரிமையையும் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் படக்குழுவிற்கு இந்திய ரூபாயில் சுமார் 70 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சூர்யாவின் கருப்பு படத்தின் ஓடிடி உரிமை மட்டும் விற்கப்படாமல் உள்ளது.

விஜய் சேதுபதியின் ‘காட்டான்’ முதல் ‘ஹார்ட் பீட்’ சீசன் 3 வரை..!

0

ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் ‘காட்டான்’ என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார் மணிகண்டன்.

கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வெப் சீரிஸின் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் இடையில் வரவேற்பினை பெற்று வருகிறது.

ஓடிடி தளங்களில் பிரபலமான ஒரு நிறுவனமாக ஜியோ ஹாட்ஸ்டார் உள்ளது. இதில் தொடர்ந்து நல்ல நல்ல படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் வெளியிடப்படுகின்றன.

இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் இடையில் பெருமளவில் கவனம் ஈர்த்து வருகிறது.

ஜியோ ஹாட்ஸ்டார் சென்னையில் சவுத் அன்பவுண்ட் என்ற நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தியது. இதில் தென்னிந்திய சினிமாவை சார்ந்த பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

இதில் ஜியோ ஹாட்ஸ்டார் தயாரிக்கும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள் குறித்தான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வெளியாகவுள்ள 40 படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

இதில் இடம்பெற்ற விஜய் சேதுபதியின் ‘காட்டான்’ வெப் தொடர் ரசிகர்கள் இடையில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்கள் இடையில் கவனம் ஈர்த்தவர் மணிகண்டன். இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘காட்டான்’ என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார்.

வடகிழக்கில் வெள்ளத்தால் வயல் நிலங்கள் சேதம்; பாரிய நஷ்டத்தில் விவசாயிகள்..!

0

சீரற்ற காலநிலை காரணமாக வடகிழக்கில் மூழ்கடிக்கப்பட்ட வயல் நிலங்கள் மீண்டும் கனமழை காரணமாக மூழ்கியுள்ளது.

ஓரிரு நாட்கள் பெய்த கனமழை காரணமாக வயல் நிலங்கள் மீண்டும் நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. ஏலவே விவசாயிகள் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கிய நிலையில் மீண்டும் விதைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

டித்வா புயலின் தாக்கத்திலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் வேளை மீண்டும் கனமழை பெய்து, வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட வயல் நிலங்களுக்கான பொருத்தமான நஷ்டஈடுகளை பெற்றுத் தர ஆவண செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணல் மாபியாக்களால் கிளிநொச்சியில் குடும்பஸ்தர் கொல்லப்பட்டாரா?

0

கிளிநொச்சியில் திருவையாறு பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டு வந்தவர் இன்று (10) மணலுடன் வந்த ரிப்பர் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

விபத்து சம்பவத்தில் திருவையாறு பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் சோபனாத் வயது 35 என்பவரே பலியாகியுள்ளார்.

கிளிநொச்சி நகரிலிருந்து இரணைமடு நோக்கி தனது மனைவியுடன் உந்துருளியில் பயணித்தவர் வில்சன் வீதி மொட்டை பாலத்திற்கு அருகில் வீதியின் ஓரமாக உந்துருளியை நிறுத்த முற்பட்ட போது அவரை பின் தொடர்ந்து மணலுடன் வந்த ரிப்பர் உந்துருளியை நோக்கி நெருங்கி வருவதனை அவதானித்த மனைவி உந்துருளியிலிருந்து வேகமாக இறங்கி வீதியின் மறுபுறம் ஓடியுள்ளார்.

இதன் போது ரிப்பர் குறித்த நபரின் மீது மோதியத்தில் அவர் ரிப்பரின் பின்பக்க சில்லுக்குள் சிக்குண்டதோடு மணலும் அவரின் மீது கொட்டியத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான சிசிரிவி காட்சிகளிலும் பதிவாகியுள்ளது. சம்பவத்தின் போது ரிப்பர் சட்டவிரோத மணலுடன் காணப்பட்டதாகவும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

திருவையாறு பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக கிளிநொச்சி மற்றும் வவுனியா பொலிஸ் நிலையங்களுக்கு சம்பவத்தில் இறந்தவர் தகவல் தெரிவித்து வருபவர் என்பதுடன் 119 க்கும் தகவல் வழங்கியவர் எனவும் உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

இச் சம்பவம் விபத்தாக இருக்க முடியாது என்றும் இது திட்டமிடப்பட்ட கொலையாகவே காணப்படுகிறது என்று உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.

சர்வதேச ரீதியாக இந்துக்களின் தீபாவளிக்கு கிடைத்த அங்கீகாரம்..!

0

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, யுனஸ்கோவின் மூலாதாரமற்ற கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இன்று (10) இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியா டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற யுனெஸ்கோவின் முக்கிய கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மூலாதாரமற்ற கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் (ICH) 20 மாநாடு தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டை இந்தியா நடத்துவது இதுவே முதல் முறையாகும். டிசம்பர் 8ஆம் திகதி முதல் எதிர்வரும் 13ஆம் திகதி வரை டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இந்த மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

தீபாவளிக்கு முன்னரே இந்தியாவின் பல முக்கிய நிகழ்வுகள் யுனஸ்கோவின் மூலாதாரமற்ற கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அந்தவகையில் கும்பமேளா, கொல்கத்தாவின் துர்கா பூஜை, குஜராத்தின் கர்பா நடனம், யோகா, வேத மந்திரங்களின் பாரம்பரியம் மற்றும் ‘ராமாயண’ காவியத்தின் பாரம்பரிய நிகழ்ச்சியான ராம்லீலா உள்ளிட்ட 15 மரபுகள் தற்போது இந்தியாவில் யுனெஸ்கோவின் மூலாதாரமற்ற கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவ பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிபர் – ஆசிரியர்களுக்கு நிவாரணம்; அரசுக்கு பறந்த கோரிக்கை..!

0

பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பெற்றுள்ள கடன்கள் தொடர்பில் நிவாரண வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

பிள்ளைகள் தொடர்பில் தற்போது 25,000 ரூபா பணத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன் ஊடாக பிள்ளைகளுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

ஆனால் அதன் ஊடாக பிள்ளைகளுக்கு கிடைக்கும் நிவாரணங்கள் குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை.

பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் கடன்களைப் பெற்றுள்ளனர். சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.

எனவே அவர்கள் பெற்றுக்கொண்ட கடன்கள் தொடர்பில் ஏதேனும் ஒரு சலுகை அடிப்படையிலான முறையில் செயற்பட வேண்டும்.

அரசாங்கம் தலையிட்டு கடன்களை இரத்து செய்வதற்காவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நிவாரணம் வழங்குவதில் கடும் அரசியல் அழுத்தம்; விசனத்தில் கிராம உத்தியோகத்தர்கள்..!

0

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணம் வழங்கும் செயற்பாட்டில் அரசியல் தலையீடுகளினால் கிராம உத்தியோகத்தர்களால் சுயாதீனமாக செயற்பட முடியாத நிலை உருவாகியுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் இவ்வாறான அரசியல் அச்சுறுத்தல்கள் தொடர்வதால் நாடளாவிய ரீதியில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குதல் மற்றும் பாதுகாப்பு முகாம்களை நடத்தி வரும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக கிராம உத்தியோகத்தர்கள் மீது அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.

நிவாரணப் பணி மற்றும் பாதுகாப்பு முகாம்களை நடத்திவருவதில் அரசியல் தலையீட்டால் இடையூறு ஏற்பட்டுள்ளதுடன், கிராம உத்தியோகத்தர்கள் சுயாதீனமாக செயற்பட முடியாத இக்கட்டான நிலை உருவாகியுள்ளது.

கடந்த அரசாங்கங்களுடன் ஒப்பிடும் போது தற்போதைய அரசாங்கம் நிவாரண வழங்கும் செயற்பாடுகளையும் துரிதப்படுத்தியுள்ளது. எனினும் உரிய தரப்பினரிடம் நிவாரணங்களை கொண்டு சேர்க்கும் செயற்பாட்டில் கடந்த காலங்களை விட இம்முறை அரசியல் தலையீடுகளால் கிராம உத்தியோகத்தர்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

நாடு முழுவதும் அவ்வாறு அரசியல் அழுத்தங்களை தாம் எதிர் கொண்டதாக கிராம உத்தியோகத்தர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இந்த நாடு பேரழிவை சந்தித்துள்ள இந்த நேரத்தில் தொழிற் சங்க நடவடிக்கை மீது கவனம் செலுத்த நாம் தயாராக இல்லை.

எனினும் நிவாரணம் வழங்குவதில் தொடர்ந்து கிராம உத்தியோகத்தர்களுக்கு அழுத்தம் கொடுப்பார்களாயின், விருப்பம் இன்றியேனும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நிலை உருவாகலாம் என்றார்.

இன்று மீண்டும் மண்சரிவு; அதிகாலையில் தப்பியோடிய மக்கள்..!

0

டித்வா சூறாவளி காரணமாக மலையகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மலையத்தில் அதிகளவான உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய மண்சரிவு காரணமாக மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பதுளை எகரிய, மீகொல்ல, மேல் பகுதியில் இன்று அதிகாலையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்தப் பகுதி மக்கள் அதிகாலை 4 மணியளவில், விளையாட்டு மைதானத்தில் ஒன்றுக் கூடியதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்களை வெளியேற்றும் முயற்சிகள் இருந்த போதிலும், பல குடும்பங்கள் அப் பகுதியில் தங்கியிருப்பதாகவும், பாதுகாப்பு மையங்களை அடைய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண் சரிவு ஏற்பட்ட போதிலும், அப்பகுதியில் இருந்து எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

யாழில் பேருந்தில் இருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி மரணம்..!

0

யாழில் பேருந்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரத்தை சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை அநுராதபுரத்தில் இருந்து யாழ் நோக்கி பேருந்தில் வந்துகொண்டிருந்தார்.

இதன் போது செம்மணிப் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது பேருந்தின் மிதிபலகையில் நின்றவாறு முகம் கழுவ முயற்சித்துள்ளார்.

இதன் போது பேருந்து செம்மணி வளைவில் திரும்பும் போது கீழே விழுந்து மயக்கமுற்றுள்ளார்.

அதன்பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

error: Content is protected !!