Sunday, August 9, 2026
Huis Blog Bladsy 5

ரயில்வே துறையில் இயந்திர நெருக்கடி; உடனடி நடவடிக்கை கோரும் நிலைய அதிபர்கள் சங்கம்..!

0

ரயில்வே திணைக்களத்தின் வசமுள்ள ரயில் இயந்திரங்கள் (Engines) மற்றும் ரயில் இயந்திர வலு தொகுதிகள் குறைவடைந்துள்ளதன் காரணமாக, ரயில் சேவைகளில் கடுமையான நெருக்கடி ஏற்படக்கூடும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையை சீர்செய்து, தற்போதுள்ள ரயில் நேர அட்டவணைக்கு அமைவாக சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர சுட்டிக்காட்டியுள்ளார்.

2023ஆம் ஆண்டளவில் 106 ஆகக் காணப்பட்ட மொத்த ரயில் இயந்திர தொகுதி இருப்பு, 3 வருடங்களின் பின்னர் இன்று 98 ஆகக் குறைவடைந்துள்ளதுடன், 8 இயந்திரங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2023ஆம் ஆண்டு நடைமுறையிலிருந்த ரயில் நேர அட்டவணையின் படி, சுமார் 450 ரயில் சேவைகள் இயக்கப்பட்டதுடன், அந்த சேவைகளுக்காக ரயில்வே திணைக்களத்திற்கு 74 இயந்திரங்கள் தேவைப்பட்டிருந்தன.

இருப்பினும், அவ்வாறானதொரு எண்ணிக்கையிலான சேவைகளை இயக்குவதற்கு, அந்த காலப்பகுதியில் ரயில்வே திணைக்களத்திடம் இயக்கத்திற்கு உகந்த நிலையில் 68 இயந்திரங்கள் மாத்திரமே இருந்தன. இன்று அந்த இயந்திரங்களின் எண்ணிக்கையும் 49 ஆகக் குறைவடைந்துள்ளது.

இதேவேளை, 2023ஆம் ஆண்டளவில் ரயில்வே திணைக்களத்திடம் 109 ரயில் ரயில் இயந்திர வலு தொகுதிகள் (Power Sets) இருந்த நிலையில், இந்த ஆண்டில் அது 106 ஆகக் குறைவடைந்துள்ளது. இதன்படி, 3 ரயில் இயந்திர வலு தொகுதிகள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், தற்போதைய சேவைகளை வழங்குவதற்கு 88 ரயில் இயந்திர வலு தொகுதிகள் அவசியமாகின்றன.

2023ஆம் ஆண்டில் ரயில்வே திணைக்களத்திடம் இயங்கு நிலையில் இருந்த ரயில் இயந்திர வலு தொகுதிகளின் எண்ணிக்கை 78 ஆகும். அது தற்போது 52 ஆகக் குறைவடைந்துள்ளது. இந்த சேவைகளை தடையின்றி வழங்குவதற்கு திணைக்களத்திடம் 26 ரயில் இயந்திர வலு தொகுதிகளின் பற்றாக்குறை நிலவுகிறது.

இதற்கமைய, ஒட்டுமொத்தமாக 2023ஆம் ஆண்டில் 261 ஆகக் காணப்பட்ட ரயில் இயந்திரங்கள் மற்றும் ரயில் இயந்திர வலு தொகுதிகளின் மொத்த எண்ணிக்கையிலிருந்து 19 நீக்கப்பட்டு, 2026ஆம் ஆண்டளவில் அதன் மொத்த இருப்பு 242 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

எனவே, நிலவும் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கசுன் சாமர மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும்..!

0

நாட்டின் சில பகுதிகளில் இன்று சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் மாத்தளை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

யாழில் மது அருந்திவிட்டு உறங்கிய இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு..!

0

யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடற்கரை வீதி, பாசையூரைச் சேர்ந்த 25 வயதுடைய பே.கனிடஸ் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவு 9.00 மணிக்கு மாடியில் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.

பின்னர், அவரது நண்பர்கள் சென்ற நிலையில் அவர் அந்த மாடியிலேயே உறங்கியுள்ளார்.

பின்னர், அந்த மாடிக் கட்டிட வேலைகளைச் செய்வதற்காக வந்த வேலைக்காரர்கள் குறித்த குடும்பஸ்தர் அசைவற்றுக் காணப்படுவதை அவதானித்தனர்.

அதன்பின்னர், காவல்துறையினருக்கு மற்றும் உறவினர்களுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்தவேளை, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரியவந்துள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகச் சடலம் யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர் பதவி விலகல்; ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியதாக ஆளுநர் ஒருவர் தெரிவிப்பு..!

0

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை எனப் பேராசிரியர் சரத் அபேகோன் தெரிவித்துள்ளார்.

கண்டிப் பகுதியில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதவியை ஏற்கும் சந்தர்ப்பத்திலேயே, மிகக் குறுகிய காலத்திற்குள் தான் இதிலிருந்து விலகப் போவதாக ஜனாதிபதிக்குத் தெரிவித்திருந்ததாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், ‘டித்வா’ சூறாவளி நிலைமை காரணமாக மத்திய மாகாணத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, தனது முடிவை இதுவரையில் பிற்போட்டிருந்ததாகச் சரத் அபேகோன் குறிப்பிட்டுள்ளார்.

முற்றிலும் தனிப்பட்ட காரணத்தினால் தான் தனது பதவியிலிருந்து விலகுவதாகவும், இதற்கு எவரும் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தான் ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகப் பேராசிரியர் சரத் அபேகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

பெண் பொலிஸின் மடியில் அமர முயன்ற ஆண் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்..!

0

கடமை நேரத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு துன்புறுத்தல் விளைவிக்க முயன்ற மற்றும் மதுபோதையில் இருந்த குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இன்று (17) முதல் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி தம்புள்ளை ‘கம்உதாவ’ மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடமையில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர், தனது கடமைகளைப் பதிவு செய்வதற்காக அவர் மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

அப்போது, அங்கிருந்த கதிரை ஒன்றில் அமர்ந்திருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளைக் கண்டு, அவரது மடியில் அமர இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஊடாகப் பிரதேசத்திற்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், குறிப்பிட்ட கான்ஸ்டபிள் அந்த நேரத்தில் கடுமையான மதுபோதையில் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவின் பாடசாலைகளுக்குள் திடீரெனக் களமிறங்கிய வடக்கின் கல்விச் செயலாளர்..!

0

இன்றைய தினம் 17.7.2026 வெள்ளிக் கிழமை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. பற்றிக் டிறஞ்சன் அவர்கள் வவுனியாவின் பல பகுதிகளுக்கு திடீர் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்

அந்த வகையில் செட்டிகுள கோட்டத்தின் செட்டிகுளம் மகா வித்தியாலயம், அல்காமியா ம.வி உட்பட பல பாடசாலைகளுக்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பாடசாலைகளின் குறை நிறைகளை பாடசாலைகளின் அதிபர் உள்ளிட்ட குழுவினரிடம் நேரடியாக கேட்டறிந்து கொண்டதுடன் தவணைப் பரீட்சை தொடர்பிலும், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் தொடர்பிலும் சாதாரண தர மாணவர்களிடம் நேரடியாக கேட்டறிந்து கொண்டார்.

இக் கள விஜயத்தில் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு முகுந்தன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் (பொது நிர்வாகம்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

அதன் பின்னர் மதியம் 2.30 அளவில் தெற்குக் கல்வி வலய அதிபர்களுடன் எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள பொதுப் பரீட்சைகளில் பெறுபேறுகளை அதிகரிப்பது தொடர்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டதுடன் ஆக்கபூர்வமான பல ஆலோசனைகளையும் முன்வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதியில் துயரை ஏற்படுத்திய ஆசிரியரின் மரணம்..!

0

மட்டக்களப்பு, கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளியில் ஆசிரியர் ஒருவர் நேற்று (11) பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார்.

பண்டாரியாவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

பண்டாரியா வெளியில் உள்ள தனது வீட்டில் இருந்து வயல் அறுவடை வேலைகளுக்காக சென்ற போது வயலில் இருந்த பாம்பு தீண்டியது.

பின்னர் அவரை மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் இன்று (12) ஞாயிற்றுக் கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

விவசாயிகளிடமிருந்து துரித கதியில் நெற்கொள்வனவை மேற்கொள்க; ரவிகரன் எம்.பி வலியுறுத்து..!

0

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,046மெற்றிக் தொன் அளவில் 2025 ஆம் ஆண்டின் சிறுபோக நெல்லும், 4,172மெற்றிக்தொன் அளவில் 2025/2026 பெரும்போக நெல்லும் களஞ்சிய சாலைகளில் தேங்கிக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறு களஞ்சிய சாலைகளில் தேங்கியுள்ள நெல்லை உடனடியாக அகற்றிவிட்டு, துரிதகதியில் 2026 ஆம் ஆண்டிற்கான சிறுபோக நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் களஞ்சிய சாலைகளில் தேங்கியுள்ள நெல்லை விரைவாக வவுனியா உள்ளிட்ட பிற மாவட்டங்களிலுள்ள களஞ்சிய சாலைகளுக்கு மாற்றம் செய்துவிட்டு, விரைவாக முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து சிறுபோக நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படுமென நெல் சந்தைப்படுத்தல் சபை அதிகாரி பதிலளித்துள்ளார்.

பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற கமத்தொழில், கால்நடைவளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

குறித்து கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற குழு அறையில் கமத்தொழில், கால்நடைவளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.

அந்தவகையில் அமைச்சர் லால்காந்தவின் தலைமையில், பிரதி அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் எனப் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

அந்த வகையில் தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. குறிப்பாக சிறுபோக நெற்கொள்வனவு தாமதமாகுவது தொடர்பில் சுட்டிக்காட்டி, எப்போது நெல் சந்தைப்படுத்தல் சபையால் நெற்கொள்வனவு மேள்கொள்ளப்படும் என்பதை கேட்டிருந்தேன்.

இந்நிலையில் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் எதிர்வரும் 13ஆம் திகதியும், மன்னார் மாவட்டத்தில் ஒருசில நாட்கள் பிந்திய நிலையும் நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படுமென நெல் சந்தைப்படுத்தல் சபை சார்ந்த அதிகாரியால் இதன் போது பதில் வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் நெற்கொள்வனவை மேற்கொள்ள முடியாத நிலையே ஏற்படுமென இதன்போது நான் குறித்த அதிகாரியிடம் தெரிவித்திருந்தேன்.

ஏன் எனில் ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட நெல் இதுவரை உரியவகையில் வெளியேற்றப்படவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் களஞ்சிய சாலைகளில் அதிகளவான நெல் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டின் சிறுபோக நெல் ஆறு களஞ்சியசாலைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. 3,046மெற்றிக் தொன் நெல் இவ்வாறு களஞ்சிய சாலைகளில் தேக்க நிலையில் காணப்படுகின்றது.

இதுதவிர 2025/2026 பெரும்போக நெல் 16களஞ்சியசாலைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. 4,172 மெற்றிக் தொன் நெல் இவ்வாறு தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பல மெற்றிக் தொன் நெல் களஞ்சியசாலைகளில் தேக்கி வைக்கப்பட்டு தரமிழந்து செல்கின்றது.

இவ்வாறாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள களஞ்சிய சாலைகள் அனைத்திலும் நெல் நிறைந்து காணப்படுகின்றது.

கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ஆகியோருடைய முயற்சியால், களஞ்சிய சாலைகள் வேறு திணைக்களங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டு கடந்த பெரும்போக காலத்தில் நெற்கொள்வனவு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஆனால் அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட நெல்லும் களஞ்சிய சாலைகளில் இருந்து உரிய வகையில் அப்புறப்படுத்தப்படாமல் காணப்படுகின்றது என்ற விடயத்தினைச் சுட்டிக்காட்டினேன்.

இவ்வாறு களஞ்சியசாலைகளை நிறைத்து வைத்துக் கொண்டு எவ்வாறு எதிர்வரும் 13ஆம் திகதி சிறுபோக நெற்கொள்வனவை ஆரம்பிக்கப் போகின்றீர்கள் என இதன் போது கேள்வி எழுப்பியிருந்தேன்.

எனவே களஞ்சியசாலைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நெல்லை உரிய வகையில் அகற்றிவிட்டு, மிகவிரைவாக நெற்கொள்வனவை ஆரம்பிக்குமாறும் இதன்போது வலியுறுத்தியிருந்தேன்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் களஞ்சியசாலைகளில் தேங்கிக்கிடக்கின்ற நெல்லை வாகனங்களின் மூலம் வவுனியா உள்ளிட்ட ஏனைய இடங்களில் காணப்படுகின்ற களஞ்சிய சாலைகளுக்கு மாற்றம் செய்துவிட்டு, சிறுபோக நெற்கொள்வனவு மேற்கோள்ளப்படுமென நெல் சந்தைப்படுத்தல் சபை அதிகாரி இதன் போது பதிலளித்தார்.

குறித்த செயற்பாடுகளை உடனடியாக மேற்கொண்டு துரித கதியில் விவசாயிகளிடமிருந்து சிறுபோக நெற்கொள்வனவை மேற்கொள்ளுமாறு நான் தொடர்ந்தும் வலியுறுத்தியிருந்தேன்.

அத்தோடு நெல்லின் விலை நிர்ணயம் தொடர்பிலும் இதன் போது பேசப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.

பொம்மையாக இருக்க விரும்பவில்லை என பதவியை விட்டு விலகிய அதிகாரிகள்..!

0

அரசியல் அழுத்தங்கள் காரணமாக பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது எனக் குறிப்பிட்டு, ரைகம உடுகஹபத்துவ பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

அதன்படி அவர் தனது இராஜினாமா கடிதத்தில், 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட பின்னர், சங்கத்தின் வளர்ச்சிக்காக தனது நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்ததாக தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடிகள், நிர்வாக சவால்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு மத்தியில் பணிப்பாளர் சபை மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு, களுத்துறை மாவட்டத்தில் உள்ள 10 கூட்டுறவு சங்கங்களில் தமது சங்கத்தை முன்னணி நிலைக்கு கொண்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது சங்கம் கடுமையான அரசியல் தலையீட்டுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிருப்தி வெளியிட்டும் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது ஆலோசனைகள் கவனத்தில் கொள்ளப்படாததால் நிர்வாகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், தலைவர் பதவியின் மதிப்பை குறைத்துக் கொண்டு தொடர விரும்பாத காரணத்தினாலேயே பதவி விலகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, உப தலைவரும் குறித்த அரசியல் தலையீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் பதவிகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநருக்கும் ஆசிய நாட்டு தூதுவர்களுக்குமிடையில் விசேட சந்திப்பு..!

0

மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரா அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் கேள்விக்குட்பட்ட சுற்றுலாத் தளங்கள் குறித்து தூதுவர்களும் ஆளுநரும் விரிவாகக் கலந்துரையாடினர்.

குறிப்பாக, கிழக்கு மாகாணத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா ஈர்ப்பு மையங்களாக அமையக் கூடிய இடங்களை இந்தத் தூதுக்குழு பார்வையிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதில் கிழக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர்கே.குணநாதன், கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!