Saturday, March 7, 2026
Huis Blog Bladsy 94

யாழில் 17 நாட்களாக 15 வயதுச் சிறுமியை காதலனும் விடுதி உரிமையாளரும் துஸ்பிரயோகம்..!

0

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியொருவரை விடுதி ஒன்றில் 17 நாட்கள் தடுத்து வைத்து , துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என கடந்த 17 நாட்களுக்கு முன்னர் சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வந்த நிலையில் , சிறுமி நல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார் எனும் தகவல் கிடைத்து.

அங்கு விரைந்த பொலிஸார் சிறுமியை மீட்டு , ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டதுடன், வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

ஆரம்ப கட்ட விசாரணையில் ,சிறுமியை இளைஞன் ஒருவர் காதலித்து வந்ததாகவும் , அவரே சிறுமியை வீட்டில் இருந்து அழைத்து வந்து 17 நாட்களும் விடுதியில் தங்கி இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

அதேவேளை , விடுதியின் உரிமையாளரும் , சிறுமியுடன் தவறாக நடந்து கொண்டதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சிறுமியின் காதலன் என கூறப்படும் இளைஞனை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய விமான தாக்குதலின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல்..!

0

யாழ் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது.

சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

அன்று அதிகாலை வலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணை தாக்குதல் ,விமான தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் (Leap forward ) எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தொடர் எறிகணை தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென்ற் பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்தனர்.

அன்றைய காலை திடீரென வந்த மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது வீசின.

இக் குண்டு வீச்சு சம்பவத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட 147 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியாகியிருந்தனர். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

ரிக்ரொக்கில் சர்ச்சையை ஏற்படுத்திய வவுனியா இளைஞன் கைது..!

0

பொலிஸ் சீருடை அணிந்து சமூக வலைத்தளமான ரிக்ரொக்கில் (Tiktok) காணொளி வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நபரை எதிர் வரும் ஜூலை 22ஆம் திகதிவரை விளக்கமறயலில் வைக்க மன்னார் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டது.

குறித்த நபர் மீது பல்வேறு குற்றவியல் வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ள நிலையில் அவற்றில் முன்னிலையாகத் தவறியதால் 25இற்கு மேற்பட்ட பிடியாணை உத்தரவுகள் உள்ளதனை சுட்டிக்காட்டி பொலிஸார் முன்வைத்த விண்ணப்பத்தை கவனத்தில் எடுத்த நீதிவான் மன்று பிணைக் கட்டளைச் சட்டம் 14ஆம் பிரிவின் கீழ் அவருக்கு வழங்கப்பட்ட பிணைகளை நிராகரித்தும் கட்டளையிட்டது.

அண்மையில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாவதற்காக பல்வேறு சர்ச்சையான கணொளிகளை வெளியிட்டு வந்த வவுனியா – ஒமந்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சிவகுமாரன் சிவகரன் என்பவரே இவ்வாறு மடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்று மன்னார் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

நீதிபதியுடன் சந்திப்பு என்ற சர்ச்சைக்குரிய காணொலியையும் குறித்த நபரே வெளியிட்டிருந்தார்.

அரச உத்தியோகத்தரான பொலிஸார் அணியும் சீருடையை அணிந்து ரிக்ரொக் காணொலியை உருவாக்கி வெளியிட்ட குற்றச்சாட்டை முன்வைத்து இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 167 மற்றும் 168ஆம் பிரிவுகளின் கீழ் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், சட்டத்துக்கு புறம்பான செயல்களைச் செய்தல் என்ற அடிப்படையில் மன்னார் நீதிவான் நீதிமன்றில் மடு பொலிஸார் இன்று பி அறிக்கை தாக்கல் செய்தனர்.

வழக்கு மன்னார் நீதிமன்ற மேலதிக நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு ஆதரவாக மன்னார் சட்டத்தரணிகள் முன்னிலையானதுடன் சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி எவரும் முன்னிலையாகவில்லை.

சந்தேக நபர் சட்டத்துக்கு புறம்பான செயலில் ஈடுபட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்களினால் 25இற்கும் மேற்பட்ட பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று மடு பொலிஸார் மன்றில் சமர்ப்பணம் செய்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த மன்று, சந்தேக நபர் பிணை கட்டளைச் சட்டம் 14ஆம் பிரிவை மீறிய உள்ளிட்ட காரணங்களையும் கவனத்தில் எடுத்து அவரை வரும் ஜூலை 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

யாழில் 13 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞன் கைது..!

0

யாழ் – வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் 13 வயதுடைய சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியின் உறவு முறையுள்ள 19 வயதுடைய இளைஞன் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய விடயம் குறித்து வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை காவல்துறையினர் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

செம்மணியில் மேலும் 7 எலும்புக்கூடுகள்; மொத்தமாக 63 எலும்புக் கூடுகள் மீட்பு..!

0

யாழ், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது 7 என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 14 ஆம் நாள் அகழ்வு இன்று இடம்பெற்றது.

இன்றைய அகழ்வின் போது ஏழு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதற்கமைய செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 63 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 54 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இன்று இடம்பெற்ற அகழ்வில் சிறுமியின் ஆடை ஒன்று உட்பட சில ஆடைகள் மற்றும் பாதணிகள் போன்ற தடயப் பொருட்களும் அகழ்ந்தெடுக்கப்பட்டு சான்றுப் பொருட்களாக நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட புதிய பகுதியில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த பகுதி “தடயவியல் அகழ்வாய்வுத்தளத்தின் இரண்டாவது பிரதேசமாக” நீதிமன்றத்தால் நேற்று பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

அவற்றில் அடையாளம் காணப்பட்ட என்பு எச்சங்கள் துப்பரவு செய்யப்பட்டுள்ளன. அவை நாளை அகழ்ந்தெடுக்கப்பட்டு அவை தொடர்பான எண்ணிக்கைகள், அறிக்கையிடல்கள் நாளையே வெளியிடப்படும்.

யாழ். நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும், பேராசிரியருமான ராஜ் சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் ஆணையாளர் மிராக் ரஹீம், காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணிகளான ஞா.ரனிதா, சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஓமந்தை காணி விவகாரம்; அரசாங்கம் அதிரடி அறிவிப்பு..!

0

வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலையம் அருகில் உள்ள காணியை பொலிஸார் துப்புரவு செய்யும் வேலை நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஓமந்தை பொலிஸார் அத்துமீறி சென்று துப்புரவு செய்து அதில் விகாரை அமைக்க மேற்கொண்ட முயற்சி அப்பகுதி மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக பிரதேச சபை தீர்மானம் எடுக்கப்பட்ட பிறகும் வவுனியா ஓமந்தை பகுதியில் பொலிஸார் தனியார் காணிகளை அடாவடித்தனமாகக் கைப்பற்றி வைத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால ”வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையம் அருகில் உள்ள காணியை பொலிஸார் துப்புரவு செய்யும் வேலை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபருடன் நான் பேசி அதற்கான உத்தரவை வழங்கியுள்ளேன். அந்த வேலை இனி இடம்பெறாது” எனத் தெரிவித்துள்ளார்.

செம்மணி புதைகுழியின் இன்றைய அகழ்வில் 04 எலும்புக் கூடுகள் அடையாளம்..!

0

யாழ் – அரியாலை சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுரை 56 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 50 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இன்று 13வது நாளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் மேலும் 4 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

யாழ் – செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 13வது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா, சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது இன்றைய தினமும் 4 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்தோடு இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்ததோடு இதுவரை முழூமையாக 50 என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

வடக்கை பொருளாதார ரீதியில் அழிக்க தயாராகும் பிரமிட் திட்டங்கள்..!

0

பிரமிட் திட்டங்கள் என்பது ஒரு குறிப்பிட்ட வகையான மோசடி திட்டமாகும், இதில் பங்கேற்பாளர்கள் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதன் மூலம் வருமானம் ஈட்டுவார்கள். இந்தத் திட்டங்களில், ஆரம்பகால பங்கேற்பாளர்கள் அதிக லாபம் ஈட்டுவார்கள், ஆனால் புதிய உறுப்பினர்கள் அதிகமாக சேரும்போது, திட்டம் பெரும்பாலும் சரிந்துவிடும். இதனால், பெரும்பாலானோர் பணத்தை இழந்து விடுவார்கள்.

பிரமிட் திட்டங்களின் அம்சங்கள்

புதிய உறுப்பினர்களை சேர்ப்பது:

இந்த திட்டங்களின் முக்கிய அம்சம், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதன் மூலம் வருமானம் ஈட்டுவதாகும்.

உறுப்பினர் கட்டணம்:

புதிய உறுப்பினர்கள் திட்டத்தில் சேர ஒரு கட்டணம் செலுத்த வேண்டும்.

உறுப்பினர்களை சேர்ப்பதற்கான ஊக்கத் தொகை:

தங்கள் கீழ் உள்ள உறுப்பினர்கள் சேர்க்கும் ஒவ்வொரு புதிய உறுப்பினருக்கும் ஒரு ஊக்கத்தொகை கிடைக்கும்.

உறுப்பினர்கள் அதிகரிக்கும் போது சரிவு:

ஒரு கட்டத்திற்கு மேல் உறுப்பினர்கள் அதிகரிக்கும்போது, திட்டத்திற்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது கடினமாகிவிடும். இதனால், திட்டம் சரிந்து, பல உறுப்பினர்கள் பணத்தை இழந்து விடுவார்கள்.

பிரமிட் திட்டங்களின் ஆபத்துகள்:

நிதி இழப்பு:

பெரும்பாலானோர் பணத்தை இழந்து விடுவார்கள்.

மோசடி:

சட்டவிரோதமானவை, மோசடி செய்பவர்கள் பணத்துடன் ஓடிவிடுவார்கள்.

நம்பகத் தன்மை இழப்பு:

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே நம்பிக்கையை இழக்க நேரிடும்.

இலங்கையில் பிரமிட் திட்டங்கள் சட்டத்திற்கு முரணானவையா?

1988 ஆம் ஆண்டு 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் பிரிவு 83(இ) இன் பிரகாரம் பிரமிட் திட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.

இத்திட்டங்களை ஆரம்பிப்பவர்கள் மட்டும் குற்றவாளிகளாக கருதப்படுவார்களா?

இல்லை ஏதாவது நபர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தடைசெய்யப்பட்ட திட்டங்களை ஆரம்பித்தல், வழங்குதல், ஊக்குவித்தல், விளம்பரப்படுத்துதல், நடாத்துதல், நிதியிடல், முகாமை செய்தல் அல்லது இயக்குதல் குற்றமாகக் கருதப்படும்.

பிரமிட் வகையிலான தடைசெய்யப்பட்ட திட்டங்கள் என்றால் என்ன?

பிரமிட் திட்டங்கள் பின்வரும் அமைப்பினைக்கொண்டிருக்கும்

திட்டத்தில் பதிவுசெய்துகொள்வதற்கு குறிப்பிட்டளவு பணம் அல்லது பணப்பெறுமதி செலுத்த வேண்டியிருத்தல் மற்றும் பரிந்துரை செய்யும் முறைமை ஊடாக புதிய உறுப்பினர்களை திட்டத்திற்குள் இணைப்பதற்கும் புதிய உறுப்பினர்கள் ஊடாக மேலதிக பணத்தினை பெற்றுக் கொடுப்பதற்கும் தொடர்ச்சியான ஊக்குவிப்புக்கள் அல்லது வருமானங்களை வழங்குதல்.

பிரமிட் திட்டங்கள் தொடர்பாக தெரிந்திருக்காது அத்திட்டங்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் கம்பனிகளுக்கான தண்டனைகள் என்ன?

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் பங்குபற்றியமைக்காக குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஏதாவது நபர் பின்வரும் தண்டனைகளுக்கு உட்படுவார்:

– மூன்று ஆண்டுகளுக்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது
– ரூ.1,000,000.00 இற்கு மேற்படாத தண்டப்பணம் அல்லது
– பணம் மற்றும் சிறைத்தண்டனை ஆகிய இரண்டும்

வங்கித்தொழில் சட்டத்தின் பிரிவு 83(இ) இல் தொடர்பான தண்டனைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பிரமிட் திட்டங்கள் தொடர்பாக தெரிந்திருந்தும் அத்திட்டங்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் கம்பனிகளுக்கான தண்டனைகள் என்ன?

நபர் ஒருவர் பிரமிட் திட்டங்கள் தொடர்பாக தெரிந்திருந்தும் வேண்டுமென்றே இத்திட்டங்களை செயற்படுத்தி பிறநபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பின் பின்வரும் தண்டனைகளுக்கு உட்படுவார்:

– மூன்று ஆண்டுகளுக்கு குறையாத ஐந்து ஆண்டுகளுக்கு மேற்படாத கடூழிய சிறைத்தண்டனை
– ரூ.2,000,000.00 அல்லது பங்குபற்றுணர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மொத்த பணத்தின் இலங்கைப்பெறுமதியின் இரண்டு மடங்கு ஆகியவற்றில் கூடிய பெறுமதியின் அளவில் தண்டப்பணம்.

வங்கித்தொழில் சட்டத்தின் பிரிவு 83(இ) இல் தொடர்பான தண்டனைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பிரமிட் திட்டங்கள் எவ்வாறு அடையாளங் காணப்படுகிறது?

பங்குபற்றுநர்கள் கீழ்வருமாறு கேட்கப்படின் திட்டத்தில் இணைவதற்கு பணம் அல்லது நாணயப் பெறுமதி வழங்க வேண்டியிருத்தல்; வருமானம் பின்வருமாறு வழங்கப்படல்

a. திட்டத்திற்கு புதிய உறுப்பினரை இணைத்தல் அல்லது
b. பங்களிப்பு தொகையினை அதிகரித்தல் அல்லது பதிய உறுப்பினர்களுடைய முதலீடுகள் அதிகரித்தல்

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் ஏனைய பண்புகள் யாவை?

உழைப்புக்கள் தொடர்பாக அடையமுடியாத மற்றும் தவறான போலி உத்தரவாதங்கள் மற்றும் திட்டத்தில் இணைப்பதற்காக அவசர ஊக்குவிப்புக்கள்

விற்பனை செய்யப்படும் பொருட்கள் சந்தைக் கேள்வி அற்றவையாக இருத்தல்

கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் திருப்ப செலுத்த முடியாதவையும் மீள விற்பனை செய்ய முடியாதவையாகவும் இருத்தல்

இத்திட்டத்தில் இணைவதற்கான நுழைவுக்கட்டணம் மிகவும் உயர்வாகவும் இருத்தல்

ஊக்கத்தொகைகளும் கொடுப்பனவுகளும் புதிய உறுப்பினர்களை இணைப்பதில் தங்கியிருக்கும். பொருள் விற்பனையில் அல்ல.

பொருட்களை விற்பதிலும் பார்க்க புதிய உறுப்பினர்களை இணைப்பதற்கே முக்கியத்துவம் வழங்கப்படும்.

வியாபாரத்தின் அமைவிடம் மற்றும் தொடர்பு விபரங்கள் கண்டுபிடிப்பதற்கு கடினமாக இருக்கும்.

பொருட்களை விற்பனை செய்வதற்கோ அல்லது புதிய உறுப்பினர்களை இணைப்பதற்கோ போதிய பயிற்சிகள் வழங்கப்பட மாட்டாது.

செயற்பாட்டிற்கான பிரதேசம் வரையறுக்கப்பட மாட்டாது.

பொருத்தமான வாடிக்கையாளர் சேவை வழங்கப்படமாட்டாது.
பிரமிட் திட்டங்களின் வகைகள் என்ன?

Naked Pyramid Schemes- நுழைவுக்கட்டணம் மட்டும் பெற்றுக் கொண்டு திட்டத்தில் இணைத்தல்

Product based Pyramid Schemes- பொருட்கள் சேவைகளை விற்பனை செய்வதன் மூலம் திட்டத்தில் இணைத்தல்

ஏன் பிரமிட் திட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன?

பிரமிட் திட்டங்கள் குறிப்பிட்ட மட்டங்களைக் கடக்கும்போது பெரிய அளவிலான உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். இந்நிலையில் கடைசிமட்டத்தில் இருக்கும் பெருமளவு எண்ணிக்கை கொண்ட உறுப்பினர்களால் மேலதிக உறுப்பினர்களை இணைக்க முடியாத நிலை ஏற்படும். இது மக்கள் மத்தியில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்துவதோடு நாடுமுழுவதும் சமூக மற்றும் பொருளாதார குழப்பங்களை ஏற்படுத்தும்.

பிரமிட் திட்டத்தின் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் புதிதாக இணைத்துக் கொள்வதற்கு நபர்கள் இருக்க மாட்டார்கள்

பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் பிரமிட் திட்டங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா?

இல்லை. சட்டரீதியாக வேறுதேவைக்காக பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாகினும் அவற்றின் பிரமிட் திட்டங்களில் முதலீடு செய்வது ஆபத்தானதோடு அப்பணங்களை மீளப் பெற்றுக்கொள்ள முடியாது. சட்டரீதியாகவும் அப்பணங்களை மீளப் பெற்றுக்கொள்ள முடியாது.

ஏன் பிரமிட் திட்டங்கள் தொடர்பில்; அவதானமாக இருக்க வேண்டும்?

– இலங்கையில் பிரமிட் திட்டங்களில் ஈடுபடுதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
– கஸ்டப்பட்டு உழைத்த பணம் இழக்கப்படும்.
– தடைசெய்யப்பட்ட திட்டங்களின் பரிந்துரைகள் முறிவடைவதனால் மக்கள் மத்தியிலுள்ள சமூக உறவு பாதிக்கப்படும்.
– இது நாட்டினுடைய பொருளாதாரத்தில் எதிர்மறையான பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

சாதாரணமாக ஒரு திட்டத்தில் முதலீடு செய்யும்முன்னர் மக்கள் கவனிக்க வேண்டிய விடயங்கள் யாவை?

– முதலீட்டினுடைய பண்புகள் மற்றும் அதன் நன்மைகள் தொடர்பாக முழுமையாக கற்றுக்கொள்ளவேண்டும்
– அத்திட்டம் பிரமிட் திட்டத்தினுடைய பண்புகளை கொண்டுள்ளதா என்பதை கவனமாக ஆராயவேண்டும்.
– பெரும்பாலான போலி திட்டங்கள் சட்டரீதியானவை போன்ற தோற்றப்பாடுகளோடு இருப்பதனால் பிரமிட் திட்டத்தினையும் ஏனைய திட்டங்களையும் வேறுபடுத்தவேண்டும்.
– மோசடிக்காரர்களுடைய வியாபாரத் தந்திரங்களைத் தெரிந்துகொள்ளுதல் நன்று.

– திட்டம் எவ்வாறு வருமானம் உழைக்கிறது? வருமான மூலங்கள் சாத்தியமானவையா? என்பனவற்றை அடையாளம் காணல்.

– பங்குபற்றுணருடைய வருமானங்கள் சாத்தியமானவையா?

தடைசெய்யப்பட்ட திட்டங்களை எதிர்த்து போராடுவதில் பொதுமக்களுடைய பொறுப்பு என்ன?

– நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தடைசெய்யப்பட்ட திட்டங்களை ஆரம்பித்தல், வழங்குதல், ஊக்குவித்தல், விளம்பரப்படுத்துதல், நடாத்துதல், நிதியிடல், முகாமை செய்தல் அல்லது இயக்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுதலைத் தவிர்த்தல்.
– மோசடி நடவடிக்கைகளில் சிக்காமல் இருத்தல்.
– மோசடி திட்டங்கள் தொடர்பாக சட்டம் மற்றும் நடைமுறைப்படுத்தல் அதிகாரிகளுக்கு அறிக்கையிடல்.
– விழிப்பாக இருப்பதோடு மற்றவர்களையும் விழிப்படையச்செய்தல்.

பிரமிட் திட்டங்கள் தொடர்பில் பொதுமக்கள் எங்கே முறையிட முடியும்?

– அருகிலுள்ள பொலிஸ் நிலையம்

– முறைப்பாடுகள் நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களத்திற்கு பின்வரும் முகவரிக்கு அனுப்பப்பட முடியும்:

பணிப்பாளர்,
நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம்,
இலங்கை மத்திய வங்கி,
இல.30, சனாதிபதி மாவத்தை, கொழும்பு 01,
தொலைபேசி இல: 0112477966 / 1935

ஆகியவற்றில் முறையிடலாம்.

செம்மணியில் நிலமட்டத்திலிருந்து ஒன்றரை அடி ஆழத்திலேயே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன..!

0

செம்மணியில் நிலமட்டத்திலிருந்து ஒன்றரை அடி தொடக்கம் இரண்டு அடி ஆழத்திலேயே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன என மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்ண வேல் தெரிவித்துள்ளார்.

செம்மணி புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வின் 12ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. குறித்த அகழ்வு பணிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஏற்கனவே அகழ்வு பணிகள் இடம்பெறும் பகுதிகள் தவிர மேலும் புதிய பகுதிகளிலும் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. கண்டுபிடிக்கப்பட்ட என்புத் தொகுதிகள் நில மட்டத்திலிருந்து ஒன்றரை அடி, இரண்டடி ஆழத்திலேயே புதைக்கப்படிருக்கிறன.

இது சாதாரணமாக ‘மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட’ இடமாகத் தெரியவில்லை. மாறாக சடுதியாக புதைக்கப்பட்டது போல் காணப்படுகின்றது. சிறுவர்களின் என்புத் தொகுதிகளும் காணப்படுகின்றன.

இது மிகப்பெரும் சர்சையை தோற்றுவித்திருக்கிறது. எனவே முகத்தோற்றத்தின் அளவில், நிச்சயமாக குற்றம் நடைபெற்ற இடமாகவே இந்தப் புதைகுழி காணப்படுகின்றது.

இந்த விடயத்தில் மிகவும் அக்கறையுடன் ஆய்வாளர்கள் செயற்பட்டு வருகிறார்கள். தினமும் அவதானிக்கப்படும் விடயங்கள் உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படுகின்றன என தெரிவித்தார்.

யாழ் செம்மணியில் புதிதாக 5 என்புத் தொகுதிகள் மீட்பு..!

0

மனித பேரவலத்தின் சாட்சியமாக மாறிவரும், யாழ் செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்று 05 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன்படி, இதுவரை 52 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில், 47 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், 04 என்புத் தொகுதிகள் பின்னிப்பிணைந்து காணப்படுவதாகப் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!