Wednesday, March 4, 2026
Huis Blog Bladsy 117

புலம்பெயர்ந்து சென்றவர்கள் எமது ஊர்களையும் மக்களையும் மறக்கவில்லை – வடக்கு ஆளுநர்

0

தொண்டு அமைப்புக்கள் பல செயற்பட்டிருந்தாலும் அவை காலப் போக்கில் காணாமல் போயிருக்கின்றன. ஆனால் வெளிப்படைத் தன்மையுடன் இயங்குவதால் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் இன்னமும் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது என்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் புகழாரம் சூட்டினார்.

இளவாலை மக்கள் ஒன்றிய அமைப்பின் பிரதான நிதிப் பங்களிப்புடனும், அமரர் மருத்துவர் மோகன் அவர்களது நண்பர்கள் மற்றும் அவரது உறவினர்களினது நிதிப்பங்களிப்புடனும் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட ‘மருத்துவர் மோகன் ஞாபகார்த்த உள்ளக விளையாட்டரங்கம்’ இன்று சனிக்கிழமை (12.04.2025) இளவாலையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஆளுநர் தனது உரையில்,

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் பல சேவைகளை முன்னெடுத்து வருகின்றது. அவர்கள் மிகச் சிறப்பாக உள்ளக விளையாட்டரங்கை இன்று பெற்றிருக்கின்றார்கள்.

எமது மாகாணத்தில் இயங்கும் சில அமைப்புக்கள் புலம்பெயர் மக்களின் நிதியைப் பெற்று அவர்களை ஏமாற்றியிருக்கின்றார்கள். இவ்வாறு ஏமாற்றுவதற்காகவும் சிலர் அமைப்புக்களை ஆரம்பித்திருந்தார்கள். அவை எல்லாம் நிலைத்து நிற்பதில்லை. நல்ல நோக்கத்துடன் ஆரம்பித்தால்தான் நிலைத்து நிற்கும்.

இன்றைய இளையோருக்கு பொழுதுபோக்குக்கான வசதிகள் உரிய வகையில் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. அதனால் அவர்கள் சமூகப் பிறழ்வை நோக்கிச் செல்கின்றனர்.

அவ்வாறு செல்பவர்களுக்கு புத்திமதி சொல்லவும் யாரும் முன்வருவதும் இல்லை. அந்தளவு தூரம் அச்சுறுத்தல்களும் இருக்கின்றன. ஆனால் இளையோரின் அவ்வாறான போக்கை மாற்றியமைக்க கூடிய ஒன்றாக இந்த உள்ளக விளையாட்டரங்கம் எதிர்காலத்தில் இருக்கும்.

அன்று நாம் பாடசாலை மாணவர்களாக இருந்த போது பாடசாலை முடிவடைந்த பின்னர் விளையாடுவோம். இன்று பிள்ளைகளுக்கு அவ்வாறான வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை. பிள்ளைகளை இவ்வாறான உள்ளக விளையாட்டரங்குகளுக்கு விளையாட அனுமதிக்க வேண்டும். அவர்களுக்குரிய வாய்ப்புக்களை வழங்க வேண்டும்.

புலம்பெயர்ந்து சென்றவர்கள் எமது ஊர்களையும், எமது மக்களையும் மறக்கவில்லை. அவர்களால் இங்கு பல விடயங்கள் நடந்தேறுகின்றன. இவ்வாறாக எமது மக்களுக்கும் குறிப்பாக இளையோருக்கும் தேவையான விடயங்களுக்கு தொடர்ந்து உதவ வேண்டும், என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில் உள்ளக விளையாட்டரங்கு திறந்து வைக்கப்பட்ட பின்னர், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களையும் ஆளுநர் வழங்கி வைத்தார்.

அமெரிக்காவில் புதிய சட்டம்; இந்துக்கள் குறித்து அவதூறு பேசினால் கடும் தண்டனை..!

0

அமெரிக்காவில் முதன் முறையாக இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து அவதூறு பேசினாலோ வேறு சூழலை கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாலோ கடும் தண்டனை விதிக்கும் சட்ட யாப்பு ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் 25 லட்சத்திற்கும் மேலான இந்துக்கள் வசித்து வருகின்றனர். பல்வேறு முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் ஒன்றான ஜோர்ஜியாவில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த மாகாணத்தில் குடியரசு கட்சி சார்பில் சுவாண்ட் டில், கிளிண்ட் டிக்சன், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜேசன் எஸ்டீவ்ஸ், இம்மானுவேல் ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து குறித்த சட்ட யாப்பை செனட் சபையில் அறிமுகம் செய்துள்ளனர்.

உலகில் 100 கோடிக்கும் மேலானவர்கள் பின்பற்றும் இந்து மதம் என்றும், இது உலகில் பழமையான மதங்களில் ஒன்று என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்ட யாப்பு, மதம், இனம், நிறம், அயல் நாட்டவர் என்ற வேறுபாட்டைத் தடைசெய்யும் சட்டங்களின் கீழ் வரும் என தெரிவிப்படுகின்றது.

அத்துடன் சட்டம் நிறைவேற்றப்பட்டதும் விரைவில் நடைமுறைக்கு வருவதையடுத்து இந்து மதம், இந்துக்கள் மீதான வெறுப்பு செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியிலான கடும் நடவடிக்கைள் பாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்துக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் ஒரு புது சட்டம் இயற்றப்படுவது இதுவே முதன் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பறந்து கொண்டிருந்த விமானத்தில் பாலியல் சேட்டை; ஒருவர் கட்டுநாயக்காவில் கைது..!

0

துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பெண் பயணி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (12) காலை துபாயிலிருந்து ஃபிட்ஸ் ஏர் பிட்ஸ் ஏர் விமானத்தில் ஏ.டி. 822 விமானத்தின் மூலம் வந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் விமானத்தில் பயணித்து கொண்டிருந்த போது பெண் ஒருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும், இது குறித்து விமானக் குழுவினருக்குத் தெரிவிக்கப் பட்டதாகவும் அதன் பின்னர் சந்தேக நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதகவும் கூறப்படுகிறது.

விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் இந்திய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 35 வயதுடையவர் என்றும் குறித்த சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் துஷ்பிரயோகம்; பொலிஸார் உறுதி..!

0

16 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த கிளிநொச்சி பிரதேசத்துப் பாடசாலை விளையாட்டு பயிற்றுனர் கைது செய்யப்படுவார் என மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம் பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.

கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய விளையாட்டு பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜிடம் கிளிநொச்சி பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் சனிக் கிழமை (12) தொடர்பு கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ், குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகள் குறித்து வினவிய போதே கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேற்கண்டாறு தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறார்களின் வாக்குமூலங்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர் இதுவரை சந்தேகநபர் கைது செய்யப்படாமை தொடர்பில் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகின்றது.

16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை என்பது மிகப்பெரிய சமூக அனர்த்தம். ஆனால் இந்த விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோர் அசமந்த போக்கில் இருப்பது பெற்றோர்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வடக்கு மாகாண கல்வி அமைச்சானது இத்தகைய பாலியல் மற்றும் இரத்மலானை மது விருந்து உள்ளிட்ட மோசமான ஒழுக்கச் சீர்கேடுகளில் ஈடுபடும் குற்றவாளிகளைக் காப்பாற்றும் அதேவேளை கட்டுப்பாடு, ஒழுக்கங்களைப் போதிப்பவர்களுக்கு எதிராகவே பழிவாங்கல் செயற்படுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாகிய பயிற்றுவிப்பாளர்..!

0

கிளிநொச்சியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 16 சிறுவர்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலை ஒன்றின் சிற்றூழியராக பணியாற்றும் குறித்த நபர் விளையாட்டு பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

இவரிடம் குறித்த விளையாட்டு பயிற்சிக்காக சென்ற சிறுவர்களில் 16 பேரையே அவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார். சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் 10 தொடக்கம் 13 வயதுக்குட்டவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இவர்களில் சிலரின் நடத்தைகளில் மாற்றம் மற்றும் கல்வியில் திடீர் பின்னடைவு என்பவற்றின் அடிப்படையில் கவனம் செலுத்திய போது ஆரம்பத்தில் இரண்டு சிறுவர்கள் மூலமே விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட போது பயிற்றுவிப்பாளரால் 16 சிறுவர்கள் இவ்வாறு சீண்டலுக்கு உள்ளானதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனையடுத்து பாடசாலை நிர்வாகம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு பொலிஸாரின் கவனத்திற்கு விடயம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (11) கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு பெற்றோர் மற்றும் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்களுடன் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

வாக்குமூலத்தின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சந்தேக நபரை இதுவரை கைது செய்யாத பொலிஸார் பாதிக்கப்பட்ட சிறுவர்களை குற்றவாளிகள் போல் நடத்துவதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண விளையாட்டு துறை அமைச்சின் செயலாளரின் வினைத்திறனற்ற செயற்பாடுகள் மற்றும் தமது கதிரைகளை காப்பாற்றிக் கொள்வதற்காக அதிக நேரத்தை செலவிடுவதால் தொடர் கண்காணிப்புக்களை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை என்பதாலேயே இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன.

எனவே தாபனவிதிக்கோவை மற்றும் தனது நியமன கடமைகளை சரிவர மேற்கொள்ளத் தவறிய வடக்கு மாகாண விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் தனது தவறுகளை ஏற்று பதவி விலக வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எனவே இந்த விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு உரிய செயலாளரை பதவி நீக்க அல்லது உடன் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

வவுனியாவில் பெண்களின் சங்கிலி அறுத்த இராணுவ சிப்பாய் கைது..!

0

வவுனியாவின் பல பகுதிகளிலும் வீதியால் சென்ற பெண்களை பின் தொடர்ந்து சென்று சங்கிலி அறுத்து வந்ததாக வவுனியாவில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக இடம்பெற்ற சங்கிலி அறுப்பு சம்பவம் தொடர்பில் வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது மோட்டர் சைக்கிளுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி ஓமந்தைப் பகுதியில் பெண் ஒருவரிடம் 1பவுண் சங்கிலியும், கடந்த ஜனவரி முதலாம் திகதி வேப்பங்குளம், 6 ஆம் ஒழுங்கை பகுதியில் பெண் ஒருவரிடம் 2 பவுண் சங்கிலியும், கடந்த மார்ச் 31 ஆம் திகதி கூமாங்குளம் பகுதியில் பெண் ஒருவரிடம் 1 பவுண் சங்கிலியும், இம் மாதம் முதலாம் திகதி நெளுக்குளம் பகுதியில் பெண் ஒருவரிடம் 1 பவுண் சங்கிலியும், இராசேந்திரகுளம் பகுதியில் பெண் ஒருவரிடம் 1பவுண் சங்கிலியும் அறுத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த நபர் கடமை இல்லாத நேரங்களில் சங்கிலி அறுப்பு சம்பவங்களுக்கு பயன்படுத்திய அவரது சொந்த மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளதுடன், அறுக்கப்பட்ட சங்கிலிகளும் அடைவு வைத்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் வவுனியா, ஈரப்பெரியகுளம் இராணுவ முகாமில் பணியாற்றும் மிகிந்தலையைச் சேர்ந்த 30வயதுடைய இராணுவ வீரரே கைது செய்ய்பட்டுள்ளார்.

வவுனியா ஓமந்தை விளையாட்டு அரங்கை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை..!

0

வவுனியா, ஓமந்தை விளையாட்டு அரங்கை மேலும் விரிவுபடுத்தி சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.

வவுனியா, ஓமந்தையில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு அரங்கிற்கு இன்று (11) விஜயம் மேற்கொண்ட அமைச்சர், அதன் தேவைப்பாடுகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டார். அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வன்னி மாவட்டத்தில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கு ஓமந்தையில் அமைந்துள்ளது. அங்கு பல தேவைகள் காணப்படுகின்றன. பயிற்சிகளை வழங்குவதற்கான பயிற்றுவிப்பாளர்கள், அதற்கான உபகரணங்கள் என பல தேவைப்பாடுகள் இருக்கின்றன. அவற்றை எதிர்வரும் காலங்களில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வடமாகாணத்தில் உள்ளக விளையாட்டுப் பயிற்சிகள் மற்றும் மெய்வல்லுனர் பயிற்சிகள் என்பவற்றை எதிர்காலத்தில் வழங்கக் கூடியதாக இருக்கும். இந்தப் பிரதேசத்தில் நீச்சல் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. விளையாட்டுத் துறையை வவுனியா மாவட்டத்தில் சிறப்பாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இளைஞர்களிடையே காணப்படுகின்ற தீய பழக்கவழக்கங்கள், மது பாவனை, தொலைபேசி பாவைனை, போதைப் பொருள் பாவனை என்பவற்றை கட்டுப் படுத்துவதற்கு விளையாட்டு துறை அவசியம். அந்தவகையில் இந்த விளையாட்டு அரங்கை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

வவுனியா பிரபல பாடசாலை ஆசிரியர் தயாபரன் விபத்தில் சிக்கி பலி..!

0

வவுனியா வடக்கு ஓமந்தை மத்திய கல்லூரியின் தமிழ்ப் பாட ஆசிரியர் தயாபரன் அவர்கள் 04.04.2025 அன்று ஏற்பட்ட வீதி விபத்தில் காயமுற்று யாழ் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (09) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் கோடாவுடன் ஒருவர் பொலிசாரால் கைது..!

0

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் கோடாவுடன் ஒருவர் வெள்ளிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயில் புளியங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 180 லீற்றர் கோடா பெரலில் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த நபரும் கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வடமாகாணத் தொழிற்துறை வர்த்தகச் சந்தையை பார்வையிட்ட ஆளுநர்..!

0

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம், தேசிய அருங்கலைப் பேரவை மற்றும் புடவைக் கைத்தொழில் திணைக்களம் இணைந்து யாழ் முற்றவெளியில் நடத்தும், ‘வடமாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை – 2025’ இனை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக் கிழமை (11) நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்தக் கண்காட்சி நேற்று ஆரம்பமானது என்பதுடன் நாளை சனிக் கிழமையுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!