Tuesday, July 21, 2026
Huis Blog Bladsy 116

காணி கபளீகரத்துக்கு எதிரான சுமந்திரனின் வழக்கு மீளப் பெறப்பட்டது..!

0

வடக்கு மாகாணத்தில் பொதுமக்களின் காணிகளைக் கபளீகரம் செய்யும் இலக்கோடு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அரசு கடைசி நேரத்தில் திரும்ப பெற்றுக் கொண்டது.

அதனை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று உயர்நீதிமன்றத்தில் விலக்கிக் கொண்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரரான சுமந்திரனுக்கு உள்ள உரித்துகளைக் கைவிடாமல் வழக்கை திரும்ப பெறுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. நீதியரசர்கள் ஜனக் டி சில்வா, அர்ஜுனா ஒபயோசேகர, மேனக விஜயசுந்தர ஆகியோரைக் கொண்ட ஆயம் இந்த அனுமதியை அளித்தது.

இந்த வழக்கை மனுதாரர் தரப்பில் முன்னின்று வாதிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ஈ.கனகேஸ்வரன் இன்றைய வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்துக்குச் சமுகம் அளித்திருக்கவில்லை.

சுகவீனம் காரணமாக அவர் நீதிமன்றத்துக்கு வரவில்லை என அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி லக்‌ஷ்மணன் ஜெயக்குமார் மன்றில் தெரிவித்தமையோடு, இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி அதற்கான முன்னுரிமை அளிக்கப்பட்டது.

அதன்படி, உரிய சமயத்தில் இடைக்காலத் தடை உத்தரவையும் விதித்த நீதிமன்றத்துக்கு ஜனாதிபதி சட்டத்தரணிகனகேஸ்வரன் நேரில் பிரசன்னமாகி இன்று நன்றி தெரிவிக்க விரும்பினாராயினும், அவர் சுகவீனம் காரணமாக இன்று மன்றுக்கு வரவில்லை என்றும், தமது நன்றியை நீதிமன்றில் பதிவு செய்யுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார் என்றும் சட்டத்தரணி லக்‌ஷ்மணன் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதேவேளை, அரசு தரப்பில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சுரேகா அஹமத் முன்னிலையாகி இருந்தார்.

வவுனியா இளைஞனைக் கடத்திச் சென்று தாக்கி பணம் பறித்த காவாலிகள் கைது..!

0

யாழில் இருந்து வருகை தந்து வவுனியா இளைஞன் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று (01.07) தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மூவர் கார் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியாவிற்கு வருகை தந்து வவுனியா, புதிய பேருந்து நிலையம் முன்பாக நின்ற வவுனியா இளைஞன் (வயது 18) ஒருவரை காரில் கடத்திச் சென்று குடியிருப்பு குளக்கட்டு பகுதியில் வைத்து குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தி விட்டு அவரது வங்கி அட்டையை பறித்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் பெற்று விட்டு தாக்குதலுக்குள்ளான இளைஞனை புதிய பேருந்து நிலையம் முன்பாக இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி அவர்களின் வழி நடத்தலில் வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஹேமந்த டீ சில்வா தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான திசாநாயக்க (37358), ஜெயதுங்க (20211), திலீப் (61461), பொலிஸ் கொன்ஸ்தாபிள்களான உபாலி (60945), ரணில் (81010), தயாளன் ( 91792) ஆகிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இவ் விசாரணைகளையடுத்து யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 19, 21 மற்றும் 19 வயது இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

யாழில் கசிப்பு குடித்துவிட்டு கிணற்று படியில் நித்திரையான நபர் கிணற்றில் வீழ்ந்து பலி..!

0

நேற்று முன்தினம் (29) கசிப்பு குடித்துவிட்டு கிணற்றுக்கு அருகே படுத்துறங்கிய நபர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். மானிப்பாய் தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த கணேசராசா சுபாகரன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

இவர் கடந்த 29ஆம் திகதி வீடு ஒன்றிற்கு சென்று கசிப்பு குடித்துள்ளார். பின்னர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் அந்த வீட்டுக்கு கசிப்பு குடிக்கச் சென்றுள்ளார். அந்த வீடு பூட்டியிருந்தது.

இந்நிலையில் குறித்த நபர் அந்த வீட்டுக்கு முன்னால் உள்ள பழைய கிணற்றுக்கு அருகாமையில் உறங்கியுள்ளார். இவ்வாறு உறங்கியவர் திடீரென கிணற்றினுள் விழுந்துள்ளார்.பின்னர் உறவினர்கள் அவரை தேடியவேளை நேற்றைய தினம் (30) கிணற்றில் சடலமாகக் காணப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மோட்டார் திணைக்கள முன்னாள் ஆணையாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது..!

0

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் உட்பட 3 பேரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இலங்கை சுங்கத்தால் அனுமதிக்கப்படாமல், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

323 கொள்கலன்கள் விடுவிப்பு; முக்கிய புள்ளிகள் மீது பாயப் போகும் சட்டம்???

0

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்து அமைச்சர்,

“சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விவகாரத்தை ஆராய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு, சுங்க அதிகாரிகளின் தரப்பில் ஆய்வு தொடர்பான சில தவறுகள் நடந்திருப்பதைக் கண்டறிந்துள்ளதுடன், அக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி தேவையான தீர்மானங்களை எடுப்பார்.

இந்தக் குழுவின் மூலம் சில முக்கிய காரணிகள் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் இலங்கை சுங்கத் தரப்பில் குறைபாடும் தவறும் ஒன்றாகும்.

இது தொடர்பில் சுங்கத்திணைக்கள அமைச்சரும் அமைச்சகச் செயலாளரும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள்.”

மேலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் போலி செய்திகள் அடிப்படையில் இந்தப் பிரச்சினையை அரசியலாக்க முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளை அமைச்சர் ரத்நாயக்க சாடியுள்ளார்.

இதேவேளை, சுங்க சோதனை இல்லாமல் விடுவிக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய 323 கொள்கலன்களின் உள்ளடக்கங்களை தன்னால் வெளியிட முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

கொள்கலன்கள் எங்கிருந்து வந்தன, எந்த நாட்டிலிருந்து வந்தன என்பதை முழுமையாக கூறமுடியம் என்றும் அர்ச்சுனா சுட்டிக் காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (30.06.2025) இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சியிலிருந்து பதவி விலகிய முக்கிய உறுப்பினர்..!

0

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் தி.பரஞ்சோதி கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

இன்று (01.07.2025) இது தொடர்பான எழுத்து மூலம் கடிதம் ஒன்றையும் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

“தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர், முன்னாள் மாவட்டத் தலைவர், நானாட்டான் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் என்ற வகையில் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் பொருளாளர் பதவியிலிருந்து நான் பதவிவிலகல் செய்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாவட்டத் தலைமை கடந்த தேர்தலில் தன்னிச்சையாகச் செயற்பட்டதுடன், உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் அலட்சியமாகச் செயற்பட்டமை, கட்சிக்கும் மன்னார் மாவட்டத்திற்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தற்போதைய மாவட்ட தலைமையுடன் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, மக்கள் மத்தியில் பல்வேறு வகையான விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் எழுந்துள்ளதால், தோல்வி மற்றும் பின்னடைவுக்கு தார்மீக பொறுப்பேற்று, பொருளாளர் பதவியில் இருந்து விலகுகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதி இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளை தலைவர், செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் தலைவராக செயல்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் கட்சிளின் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இவ்விடயம் குறித்து முன்னாள் நாடாளும்னற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதனை தொடர்பு கொண்டு வினவிய போது தான் மாவட்ட கிளை தலைமை பதவியில் இருந்து பதவி விலகல் செய்ய உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

0

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

வெள்ளை டீசல் லீற்றர் 15 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, வெள்ளை டீசல் ஒரு லீற்றரின் விலை 274 ரூபாவிலிருந்து 289 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

மண்ணெண்ணை லீற்றர் 7 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, மண்ணெண்ணை ஒரு லீற்றரின் விலை 178 ரூபாவிலிருந்து 185 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

92 ஒக்டேன் ரக பெற்றோல் லீற்றர் 12 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 293 ரூபாவிலிருந்து 305 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, 4 ஸ்டார் யூரோ 4 ரக லங்கா சுப்பர் டீசல் மற்றும் 95 ஒக்டேன் யூரோ 4 ரக பெற்றோல் என்பனவற்றின் விலைகளில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணியில் நேற்றும் இரண்டு சிறுவர்களுடைய எலும்பு கூடுகள் மீட்பு..!

0

செம்மணி மனித புதைகுழியில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில், இரு சிறுவர்களின் எலும்பு கூடுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஐந்தாம் நாள் பணிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன.

அவற்றில் ஏற்கனவே 22 எலும்பு கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் ஒன்றுடன் ஒன்றின் பின்னி பிணைந்து குழப்பமான முறையில் காணப்படுவதால் அதனை அகழ்ந்து எடுப்பதில் அகழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் சவால்களை எதிர்கொண்டு உள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 33 எலும்பு கூடுகளில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வரையில் 24 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனையவற்றையும் அகழ்ந்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டமையால், புதிதாக எவையும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை புதைகுழி ஒன்றினுள் அடையாளம் காணப்பட்ட நீல நிற பை முற்றாக அகழ்ந்து எடுக்கப்படவில்லை. அதனை அகழ்ந்து எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

செம்மணி புதைகுழியில் இடம்பெறும் சூழ்ச்சி; புத்தகப்பையை அகற்றுமாறு வந்த உத்தரவு..!

0

செம்மணி புதைகுழியில் நேற்றைய தினம் புத்தக பையொன்று கண்டுபிடிக்கப்பட்டவேளையில் அதனை அங்கிருந்து அகற்றுமாறு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக எங்களுக்கு உறுதிப் படுத்தப்படாத சில தகவல்கள் கிடைத்தன.

ஆனால் அங்கிருந்த ஊடக நண்பர் ஒருவர் அதனை உடனடியாக புகைப்படம் எடுத்ததன் காரணத்தினால் அது வெளிவந்திருக்கின்றது. இந்த விடயங்களை மூடிமறைக்க அரசாங்கம் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டு. ஊடக அமையத்தில் நேற்று (30) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் நேற்றில் இருந்து சில விடயங்கள் நடைபெற்றுவருகின்றது. இதனை தமிழ் மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெளிவுபடுத்த வேண்டிய தேவையிருக்கின்றது.

செம்மணியில் தொடர்ந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் 33 பேரின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த மனித எச்சங்கள் அதிகரித்துச் செல்லுமானால் சில நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அரசாங்கம் அவற்றினை முன்னெடுப்பதில் இருந்து தவறி வருகின்றது. இதனை சர்வதேசத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

33 பேரின் எச்சங்கள் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் அதனை பாதுகாப்பதற்கு கூடாரங்களோ அல்லது பாதுகாப்பதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. புதைகுழியில் கண்டுபிடிக்கும் அடையாளங்களை பாதுகாப்பதற்கான கூடாரங்களை அமைத்தால் மாத்திரமே அவற்றினை பாதுகாக்க முடியும்.

மழை பெய்யுமானால் அவற்றிற்கு பாதிப்புகள் ஏற்படும். டிஎன்ஏ பரிசோதனைகள் செய்யப்படும் போது சில கஷ்டங்கள் ஏற்படும். எனவே, இவை உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

புதைகுழிகளின் வலி எமக்கு புரியும் நீதியான விசாரணை நடத்துவது உறுதி – பிமல்

0

புதைகுழிகளுடன் நாம் விளையாடமாட்டோம். அந்த வலி, வேதனை எமக்கு நன்கு புரியும். நீதிமன்ற நட வடிக்கை ஊடாக நீதி நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும்என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“வடக்கில் செம்மணி, மண்டைத்தீவு, கொக்குத்தொடுவாய், திருக்கேதீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வடக்கிலும், தெற்கிலும் இவ்வாறு நூற்றுக்கணக்கான புதைகுழிகள் இருக்கக்கூடும்.

இவை தொடர்பில் நீதியை பெற்றுக் கொடுப்பதற்கே எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது. அந்த வகையில் மனித புதைகுழிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்.”

மனித எலும்புக்கூடுகளை அடையாளம் கண்டு, ஆய்வுக்காக – உரிய வசதிகளுள்ள வெளிநாடொன்றுக்கு அவற்றை அனுப்ப வேண்டும். இதற்கு காலமெடுக்கும். மாத்தளை மனித புதைகுழியில் எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை அனுப்பும் போது, எலும்புக்கூடுகள் மாற்றப்பட்டுள்ளன என்ற பலத்த சந்தேகம் எமக்கு உள்ளது.

எனவே, எமக்கு ஆய்வு செய்யக்கூடிய ஆய்வகமொன்றை இலங்கையில் நிறுவுவதற்கு உதவுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். மனித புதைகுழிகள் தொடர்பில் நிச்சயம் நீதியான விசாரணை முன்னெடுக்கப்படும். எமது தோழர்கள் காணாமல்ஆக்கப்பட்டுள்ளனர்.

எனவே, புதைகுழிகளுடன் நாம் விளையாடமாட்டோம். அந்த வலி, வேதனை எமக்கு நன்கு புரியும். நீதிமன்ற நடவடிக்கை ஊடாக நீதி நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும். செம்மணி அகழ்வுப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.” என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.

error: Content is protected !!