Thursday, March 5, 2026
Huis Blog Bladsy 135

அனுபவமற்ற “L” போர்ட்டுடன் பயணிக்கும் எண்ணம் இல்லை – ரணில்

0

அனுபவமற்ற எல் போர்ட் உரிமம் உள்ளவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினராகிப் பயணிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிற்கும் தெரிவித்ததாக ரணில் தெரிவித்தார். “எல் போர்ட் உரிமம் உள்ளவர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை” என்று அவர் சுட்டிக் காட்டினார்.

நாடாளுமன்றத்திற்கு திரும்பும் நோக்கம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.

கொழும்பில் உள்ள புதிய ஜனநாயக முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற இளம் வழக்கறிஞர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து, ரணில் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்ப உள்ளதாக ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி, ஊடகவியலாளர்கள் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி கேட்டனர்.

மேலும், நாடு திவாலான போது தான் ஏற்றுக் கொண்ட சவாலின் வெற்றிகரமாக நடத்தியமை தொடர்பில் பணிவான மகிழ்ச்சி இருப்பதாக கூறிய முன்னாள் ஜனாதிபதி மக்கள் நாட்டின் பொறுப்பை ஒரு புதிய குழுவிடம் ஒப்படைத்துள்ளதால், அந்தக் குழு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அரசியல் நோக்கங்களுக்காக அனுர அரசால் பழிவாங்கப்பட்டாரா நீதிபதி இளஞ்செழியன்..!

0

மேன்முறையீட்டு நீதிபதிக்கான பதவி உயர்வு குறித்து நீதிபதி இளஞ்செழியனுக்கு அநுர அரசாங்கத்தால் திட்டமிட்டு அநீதி இழைத்துள்ளதாக தீவக சிவில் சமூகம் குற்றம் சாட்டி வருகிறது.

இலங்கையின் சிறந்த நீதிபதிகளுள் ஒருவரும் தற்துணிவாக அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது தீர்ப்புக்களை வழங்கி நீதியை எதிர்பார்த்த மக்களை ஆற்றுப்படுத்திய ஒருவராக நீதிபதி இளஞ்செழியன் காணப்படுகிறார்.

நீதிபதி இளஞ்செழியன் தனது 27 ஆண்டுகால நீதித்துறையின் பதவிக் காலத்தில் பல்வேறு தீர்ப்புகளை அச்சமின்றியும் பாரபட்சமின்றியும் வழங்கியதால் இலங்கை மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்தார்.

ஆனால் அவருக்கான பதவிகள் அந்தந்தக் காலகட்டத்தில் வழங்கப்படாது அரசுகளால் திட்டமிட்ட வகையில் தட்டிக்களிக்கப்பட்டு வந்தது. இதன் உச்சமாக தற்போது அநுர அரசும் தகுதிகள் அனைத்தும் இருந்து திட்டமிட்டு அவரது பதவி உயர்வை தடுத்து ஓய்வு நிலைக்கு தள்ளியது.

இதேவேளை இலங்கை தீவின் முன்னாள் ஜனாதிபதிகள் பல்வேறு குற்றங்களைச் செய்ய பாதாள உலக நபர்களைப் பயன்படுத்தியுள்ளதாக தற்போது நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன கோனாவாலா சுனிலை என்ற பதாள குழு நபரை வைத்து உயர் நீதிமன்ற நீதிபதியின் வீட்டின் மீது கல் எறிந்தாகவும் மறைந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாச பத்திரிகையாளர் ரிச்சர்ட் டி சொய்சாவைக் கடத்தி கொலை செய்ய பாதாள உலக நபர்களைப் பயன்படுத்தியதகாவும் பிரதி அமைச்சர் அமைச்சர் சுனில் வட்டகல நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

இந்நிலையில், இளஞ்செழியன் போன்றவர்கள் மக்களால் நேசிக்கப்படுகின்ற ஒருவர் தமிழ் மக்களைத் தலைமை தாங்க முன்வர வேண்டும் என்பதே சில சிவில் சமூக அமைப்புக்களின் நிலைப்பாடாக இருக்கின்றது.

மேலும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இளஞ்செழியன் அவர்களை அரசிலுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுவருவதையும் காணமுடிகிறது.

முன்னாள் காவல்துறை மா அதிபர் தென்னகோனை கைது செய்ய உத்தரவு..!

0

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட கொழும்பு குற்றப் பிரிவின் முன்னாள் அதிகாரிகள் எட்டு பேரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் சந்தேக நபர்களாகப் பெயரிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த உத்தரவானது, மாத்தறை நீதவான் நீதிமன்றினால் (28) விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள W 15 உணவகத்துக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பிலேயே தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது வழக்கு எண் 6314/23 இன் கீழ் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாகக் கொலைக்குச் சூழ்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டிசம்பர் 31, 2023 அன்று, கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று, பாதாள குழு உறுப்பினர் ஹரக் கட்டாவுக்கு நெருக்கமான ஒரு குழுவைக் கைது செய்ய மாத்தறையின் வெலிகம பகுதிக்குச் சென்றது.

அதன்போது, வெலிகமவில் உள்ள W 15 ஹோட்டலின் திசையிலிருந்து சிவில் உடையில் இருந்த காவல்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதை அடுத்து, அந்த ஹோட்டலை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதவி விலகவுள்ளாரா வைத்தியர் யாழ் மாவட்ட சுயேட்சை எம்.பி..!

0

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கௌசல்யா நரேன் என்பவருக்கு விட்டுக் கொடுக்கவுள்ளதாக அர்த்தப்படும் வகையிலான முகப்புத்தக பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

கடந்த தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அர்ச்சுனா, தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

அவர் பதவி விலகுவாராக இருந்தால் அவரது அணியில் போட்டியிட்டு இரண்டாவது அதிக வாக்குகளைப் பெற்ற கௌசல்யாவுக்கு அந்தப் பதவி செல்லும்.

எவ்வாறாயினும் அர்ச்சுனாவும் இந்த பதிவில் மறைமுகமாகத் தாம் பதவி விலகப் போவதாகக் குறிப்பிட்டுள்ளாரே ஒழிய, நேரடியாக எதனையும் குறிப்பிடவில்லை.

வவுனியாவில் கல்வி அதிகாரிக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கவுள்ள பெற்றோர்கள்..!

0

வவுனியாவில் கல்வி அதிகாரி ஒருவருக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வவுனியாவில் கடமை புரியும் கல்வி அதிகாரி ஒருவர் கடந்த காலத்தில் ஆளும் கட்சியின் அரசியல் அதிகாரத்தை தனது தனிப்பட்ட நலன்களுக்குப் பயன்படுத்தி வந்துள்ளதுடன் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தமது பிள்ளைகளின் கல்வியை முழுமையாக அழிக்க முயன்று வருவதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளதுடன் குறித்த விடயத்திற்கு நீதியை வேண்டி விரைவில் தொடர் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.

வடக்கு, கிழக்கில் அத்தியாவசியமற்ற இராணுவ முகாம்களுக்கு பூட்டு..!

0

வடக்கு , கிழக்கு மாகாணங்களில் அத்தியாவசியமான இராணுவ முகாம்களை தவிர்த்து ஏனையவற்றை மூடுவதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

அத்துடன், இராணுவ வசமுள்ள காணிகள் முறையான மீளாய்வுகளுடன் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும் என்றும் கூறினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) உரையாற்றுகையிலேயே அவர் இதை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களும், பெருந்தோட்ட மக்களும் அரசாங்கத்துக்கு விசேட ஆணை வழங்கியுள்ளார்கள்.

ஆகவே அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்தே செயற்படுகிறோம். தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும், மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் இராணுவத்தினர் உட்பட முப்படையினரும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்.

இயற்கை அனர்த்தம் ஏற்பட்டாலும் இராணுவத்தையே அழைக்கிறோம். ஆகவே முப்படையின் சேவையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது என்றார்.

புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவிக்கு இளைஞர்கள் இருவரால் நேர்ந்த அவலம்…!

0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 24 ஆம் திகதி சிறுமி ஒருவர் மாஞ்சோலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்திய பரிசோதனையில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரிய வந்துள்ளது.

அதனையடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. சிறுமியை இளைஞன் ஒருவர் பாடசாலை வகுப்பிற்கு அழைத்து செல்வதாக கூறி பற்றைக் காட்டுக்குள் அழைத்து சென்று துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் முறைப்பாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி , உப பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் குழுவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பதியப்பட்டதனையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு 2ஆம் வட்டாரம், கோம்பாவில் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவரும் துஸ்பிரயோகத்திற்கு உடந்தையாக இருந்த 19 வயதுடைய வீட்டின் உரிமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டடனர்.

சந்தேக நபர்களை நேற்றுமுன்தினம் (26) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்திய போது எதிர்வரும் மார்ச் மாதம் 11 திகதிவரை இரு இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனுமதிக்கப் பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கின் வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவரின் திருகு தாளங்கள்; விசாரணைக்குப் பணிப்பு..!

0

வடக்கின் வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவரின் தொடர் முறைகேடுகள் தொடர்பில் பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு முன்வைத்த முறைப்பாட்டை சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப விசாரணை செய்யுமாறு வட மாகாண பிரதமர் செயலாளருக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த ஆண் வலயக் கல்விப் பணிப்பாளர் தொடர்பில் இரத்மலானை சம்பவம் உட்பட பல்வேறு முறை பாடுகள் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட நிலையிலும் முன்னாள் ஊழல், மோசடிகளுடன் தொடர்புபட்ட பணிப்பாளர் உட்பட அதிகாரிகளுடனான நல்லுறவு காரணமாக மாகாண கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்படாமல் தட்டிக் கழிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் புதிய அரசாங்கம் பதவியேற்ற நிலையில், வடக்கு மாகாண கல்வியில் உள்ள முறைகேடுகள், மோசடிகள், அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பில் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


அந்த வகையில் குறித்த விடயத்தை பொதுச் சேவை ஆணைக்குழு கல்விச் சேவை ஆணைக் குழுவிற்கு பாரப்படுத்திய நிலையில், இம்முறைப்பாட்டை ஆராய்ந்த கல்விச் சேவை ஆணைக்குழு வலுவில் உள்ள சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக மாகாண பிரதம செயலாளருக்கு பாரப்படுத்தி உள்ளனர்.

கடந்த ரணில் ராஜபக்க்ஷ அரசால் நியமிக்கப்பட்ட பிரதம செயலாளர் குறித்த விடயத்தில் தொடர்புபட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பாரா? அல்லது காப்பாற்ற முனைவாரா? என்பதே மக்கள் முன்னுள்ள பாரிய வினா.

கிளீன் சிறிலங்காவில் இந்து மதத்தையும் கிளீன் செய்ய நினைக்கும் வேலைத் திட்டம்..!

0

அனுராதபுரத்தில் கிளீன் சிறிலங்காவில் இந்து மதத்தை துடைத்தெறிய நினைக்கும் வேலைத்திட்டம் ஹபரணையில் நடந்தேறியுள்ளதாக சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் ஹபரணை பிரதான வீதியால் பயணம் செய்யாதவர்கள் இருக்க மாட்டீர்கள் அப் பிரதேசத்தில் வீதியின் மருங்கில் பழமையான விநாயகர் ஆலயம் ஒன்று உள்ளது.

பயணிகள் அங்கு வழிபாடு செய்து செல்வது வழக்கம். அவ் வழிபாட்டில் ஈடுபடுவதில் நானும் ஒருவன். தற்போது விநாயகர் ஆலத்தின் முன்னால் பேருந்து தரிப்பிடம் அமைக்கப்பட்டு விநாயகர் ஆலயம் முழுமையாக மறைக்கப்பட்டு குறிகிய காலத்தில் அது அகற்றப்படும் நிலையும் உருவாகியுள்ளது.

எமது இந்து கலாசாரத்தின் தொன்மைபீடமாக இலங்கை இருப்பதால்தான் ஈழத்தினை சிவபூமி என திருமூலர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அழைத்திருந்தார்.

எமது மரபுரிமைகளை கடந்த சிங்கள அரசாங்கங்கள் அழித்தது போல தற்போதும் நடைபெறுவது ஏற்க முடியாது.

இதற்கான கண்டனத்தினை நாம் ஒன்றிணைந்து வெளிப்படுத்த வேண்டும். அத்தோடு விநாயகர் ஆலயத்தினை இந்த அரசாங்கம் புனர்நிர்மானம் செய்ய வேண்டும் எனவும் இப்பதிவி்ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிக்டாக் காதலால் கர்ப்பமான சிறுமி; காதலனை கைது செய்ய விசாரணை ஆரம்பம்..!

0

9 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞன் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். குறித்த சிறுமி டிக்டாக் செயலி மூலம் அறிமுகமான ஒரு இளைஞனுடன் காதல் உறவில் இருந்துள்ளார்.

குறித்த சிறுமியின் தாத்தாவின் இறுதிச் சடங்கிற்குப் பின்னர், தனியாக இருந்த பாட்டிக்கு உதவியாகச் சென்றுள்ளார். 27/11/2024 அன்று, பாட்டி வீட்டில் இல்லாத நேரத்தில் குறித்த இளைஞன் வீட்டிற்கு வந்து இருவரும் கணவன்-மனைவி போல நடந்து கொண்டுள்ளனர். அன்றிலிருந்து அவர்கள் பலமுறை கணவன் மனைவியாக இருந்துள்ளனர்.

குறித்த சிறுமிக்கு மாதவிடாய் தவறியதால், ஜனவரி 2025 இல், அவரது தாயார் அவளை பரிசோதனைக்கு வைத்திய சாலைக்கு அழைத்துச் சென்று மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

பின்னர் சிறுமி பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள அவரது சகோதரி தங்கியிருந்த ஒரு தங்கும் விடுதிக்கு அனுப்பப்பட்டு, மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பிபில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

error: Content is protected !!