Thursday, March 5, 2026
Huis Blog Bladsy 136

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் சக தமிழ் கட்சிகளுக்கும் இடையில் சந்திப்பு..!

0

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் (DTNA) பிரதிநிதிகளுக்கும் சக தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு இன்று (23) முற்பகல் யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பின் போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பங்கு கொள்வது தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், சமத்துவக் கட்சி, ஜனநாயக தமிழரசுக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களாக,

மேற்படி அனைத்து அமைப்புக்களும் இணைந்து ஓரே அணியாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முகம் கொடுப்பது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்னும் கட்சியின் பெயரில் இணைந்து போட்டியிடுவது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சின்னத்தை பொதுவான சின்னமாக அனைவரும் ஏற்றுக் கொண்டு அந்தச் சின்னத்தில் போட்டியிடுவது.

மாவட்ட ரீதியாக யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சி மாவட்டத்திலும் மாவட்டத் தேர்வுக் குழுவை உருவாக்குவது ஆகியன அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!

0

வவுனியா, செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன சிப்பிக்குளம் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் ஒருவர் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (22) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்கலை மாணவர் குழுக்களிடையே மோதல்; மூவர் வைத்திய சாலையில் அனுமதி..!

0

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக் கழக மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மூன்று மாணவர்களும் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடங்களில் கல்வி பயிலும் இரண்டு மாணவ குழுக்களுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறைத் தீர்க்கச் சென்றபோது, ​​அதே பீடத்தின் இறுதி ஆண்டு மாணவர்கள் குழு தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

காயமடைந்த மாணவர்கள் பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை – ஜனாதிபதி

0

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (23) விஜயம் செய்தபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலாகும் என்றும், அதை அடக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் மலசல கூடத்தில் குழந்தையை பெற்று ஜன்னல் ஊடாக வீசிய மாணவி..!

0

மட்டக்களப்பு வைத்திய சாலையின் மலசல கூடத்தில் குழந்தையை பெற்று யன்னலினூடாக குழந்தையை வீசி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

உயர் தரத்தில் கல்விகற்று வரும் 18 வயதுடைய மாணவி ஒருவர் சம்பவ தினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் நிறைமாத கற்பிணியான இவர் கற்பிணி தான் என தெரிவிக்காது வைற்றுவலி என மட்டு போதன வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்

இதனை தொடர்ந்து வயிற்றுவலி என தெரிவித்த இவர் மாணவி என்பதால் சரியான முறையில் வைத்தியர் சோதனையிடாது அவரது சலத்தை சோதனையிட்டு வயிற்று வலிக்கான ஊசி மூலமாக வலி நிவாரண மருந்து கொடுக்கப்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து அதிகாலை 5 மணியளில் குறித்த நோயாளி மலசல கூடத்திற்கு சென்ற நிலையில் குழந்தையை பிரசவித்து யன்னல் வழியாக வீசியுள்ளார்.

குழந்தை யன்னலில் கீழ் உள்ள பிளேற்றில் வீழ்ந்து அழுகுரல் கேட்டதையடுத்து தாதியர்கள் அங்கு சென்ற நிலையில் குழந்தையை பிரசவித்துள்ளார் என அவர்களுக்கு தெரிய வந்ததையடுத்து வீசிய குழந்தையை மீட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன் தாய்க்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த குழந்தையும் தாயும் பாதுகாப்பாக உள்ளதாக மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாறஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வைத்திய சாலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய யாழ் மாவட்ட செயலாளரின் மகன் செலுத்திய சொகுசு வாகனம்..!

0

யாழ் மாவட்ட செயலாளர் ம.பிரதீபனின் மகன் செலுத்தி சென்ற சொகுசு வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் சிக்கிய மாவட்ட செயலாளரின் மகனும் மற்றும் அவரது நண்பரும் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

யாழ் – பலாலி வீதியில் கந்தர்மட சந்திக்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதன் போது அருகில் உள்ள வீட்டின் முன்னால் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேகா ரக மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.

விபத்தில் வாகனத்தை செலுத்தி சென்ற மாவட்ட செயலாளரின் மகன் ஆதிரன் என்பவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

அத்தோடு, சாரதி இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த ஆதிரனின் நண்பர் ஒருவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்த நிலையில், அவரது கால்கள் வாகனத்தினுள் சிக்கியமையால் சுமார் ஒரு மணி நேர போராட்டத்தின் பின்னரே அவர் வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டு வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த வாகனம் மாவட்ட செயலாளரின் தனிப்பட்ட வாகனம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விரைவில் நாடு கடத்தப்படும் சாத்தியம்..!

0

ஈபிடிபியின் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அபிவிருத்திக் குழுத் தலைவருமான கெளரவ குலசிங்கம் திலீபன் இந்தியாவிலிருந்து விரைவில் நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

கடந்த வாரம் தமிழகப் பொலிசாரால் கேரளாவில் போலிக் கடவுச் சீட்டுடன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவர் எதிர்வரும் வாரமளவில் இலங்கை அரசிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்படக் கூடும் என அறியக் கிடைத்துள்ளது.

ஏலவே நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பான நீதிமன்ற வழக்கு ஒன்று நிலுவையில் உள்ள நிலையில் பிணையில் விடுதலையான அவர் நீதிமன்ற முன் அனுமதி அல்லது நீதிமன்றுக்கு அறிவிக்காது நாட்டிலிருந்து சட்ட விரோதமாக வெளியேற முயன்றமை பாரிய குற்றமாக காணப்படுகின்றது.

அதேவேளை கடந்த காலத்தில் குறித்த நபரால் பாதிக்கப்பட்டதாக பலர் தமது முறைப்பாடுகளைப் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காதலியின் தவறான செயலால் காதலன் எடுத்த விபரீத முடிவு..!

0

சுமார் ஒன்றரை வருடங்களாக காதல் தொடர்பில் இருந்த பெண்ணுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் மொனராகலையில் நேற்று (22.02.2025) இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 19 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், “உயிரிழந்த இளைஞன் மொனராகலை ஹுலந்தாவ தெற்கைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் சுமார் ஒன்றரை வருடங்களாக காதல் உறவில் இருந்து வந்துள்ளார்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவரது காதலி அவருடன் கருத்து வேறுபாடு கொண்டு உறவை முறித்துக் கொண்டுள்ளார். எனினும் இளைஞன் உறவை மீண்டும் கட்டியெழுப்ப முயன்ற போதிலும் அந்த இளம் பெண் அதற்கு உடன்படவில்லை என கூறப்படுகின்றது.

இந்நிலையில், மொனராகலை பிரதேச சபை மைதானத்தில் ஒரு இசை நிகழ்ச்சியைப் பார்க்க இளைஞன் நேற்று(22) சென்றபோது, ​​தன்னுடைய காதலி இன்னொரு இளைஞனுடன் நடனமாடுவதைக் கண்டு கலக்கமடைந்ததாகவும் வந்திருந்த தனது நண்பர்களுக்குத் தெரிவிக்காமல், மைதானத்தை விட்டு வெளியேறி, வீடு திரும்பி, தனது அறையில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் மரணம் தொடர்பான பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனை மொனராகலை மாவட்ட பொது மருத்துவ மனையில் இன்று (23) இடம் பெற்றுள்ளது.

பக்குவமடையாத இத்தகைய சிறுவயதுக் காதலால் வருடந்தோறும் பலர் மரணமடைந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை..!

0

வடக்கு உட்பட நாட்டின் பல மாவட்டங்களில் காணப்படும் அதிக வெப்பநிலை குறித்து பொது மக்கள் அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்தி, வடமேல், மேற்கு, சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் நிலவும் வெப்பம் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், போதிய நீர் ஆகாரங்களை அருந்து மாறும் ஓய்வு எடுக்கும் போது நிழலான இடங்களில் இருக்குமாறும் திணைக்களம் தமது அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

அவ்வாறே வயோதிபர்கள் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் இது தொடர்பாக விசேட கவனத்துடன் செயற்படுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளை அல்லது இள நிறங்களில் மற்றும் இலகுவான ஆடைகளை அணிந்து கொள்ளுமாறும் கனரக வேலைகளில் ஈடுபடுவதில் இருந்து முடிந்தவரை கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு; சூட்சுமத்தை வெளிப்படுத்திய மகிந்த..!

0

அரச ஊழியர்களின் சம்பளம் 5,975 ரூபாவினால் அதிகரிப்பதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் “தற்போது அரசாங்க சேவையில் கொடுப்பனவுகள் இரண்டு வழங்கப்படுகின்றன.

ஒன்று வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 17,800 ரூபாவும் கடந்த காலங்களில் அதிகரிக்கப்பட்ட 7,500 ரூபாவும் காணப்படுகிறது.

இந்த 7500 ரூபாய் என்பது 15,750 ரூபாயினுள் சம்பள அதிகரிப்பிற்கு அதிகரிக்கப்படும். அடிப்படைச் சம்பளம் 15,750 ரூபாவினால் அதிகரிக்கும் போது அங்கு காணப்படும் 7,500 ரூபாய் புதிதாக மீதப்படும் பகுதியாகும்.

அதனால் இந்த வருடத்தில் 5000 ரூபாவில் மீதப்படும் 3,250 ரூபாவின் 975 ரூபாவும் அதிகரிக்கப்படும். அதன்போது, அரசாங்க சேவையில் பி எல் (PL)1 தரத்தின் குறைந்த சம்பளம் 5,975 ரூபாவினால் அதிகரிக்கும்.

அதேபோல, அரசாங்க சேவையில் ஒவ்வொருவருக்கும் வருடாந்த சம்பள அதிகரிப்பு 80% வீதத்தினால் உயரும். குறைந்தது 250 ரூபாய் வருடாந்த சம்பள உயர்வு 450 ரூபாய் வரை 80% வீதத்தினால் அதிகரிக்கும்.

மேலும், கிராம உத்தியோகத்தர் சேவையின் தற்போதைய சம்பளம் GN-1- 28,940 மூன்று ஆண்டுகளுக்குள் 56,630 ரூபாவாக அதிகரிக்கும்.

அதுபோல் 40,000 ரூபாய் அடிப்படை சம்பளத்திற்கு 17,500 எனப்படும் வாழ்க்கைச் செலவுப்படி அதே விதத்திலேயே சேர்க்கப்படும்.

அத்துடன், அவர்களின் மொத்த அதிகரிப்பு 21,690 ரூபாய் அதிலிருந்து 17,500 ரூபாய்களை கழித்தால் அவர்களது நிகர சம்பள அதிகரிப்பு 14,190 ரூபாவாகும். அதாவது இன்றைய நாள் கிராம உத்தியோகத்தர் ஒருவரின் சம்பளம் 9,257 ரூபாவினால் அதிகரிக்கும்.

error: Content is protected !!