Friday, March 13, 2026
Huis Blog Bladsy 143

இரத்து செய்யப்பட்ட முடிவு: அரச நிறுவனங்களுக்கு வெளியாகிய அறிவிப்பு..!

0

சுதந்திர தினத்தை முன்னிட்டு அரச நிறுவனங்களில் கட்டிடங்களை மின்சாரத்தால் அலங்கரிப்பது தொடர்பான சுற்றறிக்கையில் உள்ள ஏற்பாட்டை இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தை ஒரு விசேட நிகழ்வாகக் கருதி, 01/2025 சுற்றறிக்கையின் சில விதிகளை செயல்படுத்த வேண்டாம் என்று பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மேலும் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 1 முதல் 7ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு அனைத்து அரச கட்டிடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பெப்ரவரி 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் கட்டிடங்களை மின் விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மின்சார பாதுகாப்பு மற்றும் மின் அலங்காரச் செலவு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட கருத்துக்கள், பரிந்துரைகள் மற்றும் பிரதிநிதித்துவங்களைக் கருத்தில் கொண்டு, மின் விளக்குகளால் கட்டிடங்களை அலங்கரிக்கும் செயற்பாட்டை இரத்துச் செய்வதற்கு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.

யாழ் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் 162 வெற்றிடங்கள் – அரச அதிபர்

0

யாழ் .மாவட்ட செயலகம் மற்றும் 15 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய தமது நிறுவனத்தில் 162 ஆளணி வெற்றிடங்கள் காணப்படுவதாக யார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் (31.01.2025) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர்,

யாழ், மாவட்டம் செயலகம் உற்பட அதன் கீழ் இயங்கும் 15 பிரதேச செயலகங்களில் அங்கீகரிக்கப்பட்ட ஆளணியினருக்கு குறைவாக பின்வரும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டி உள்ளது.

நிர்வாக கிராம உத்தியோகத்தர் 06, கிராம உத்தியோத்தர்கள் 65, முகாமைத்துவ உதவியாளர்கள் 27, அலுவலக உதவியாளர்கள் 45, சாரதிகள் 12 மற்றும் மாவட்ட பதிவாளர் தின களத்தில் 08 பேர் உள்ளடங்களாக 162 ஆளணியினர் தேவைப்பாடு இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த விடயத்திற்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி விரைவில் முப்பதாயிரம் பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் நியமனம்..!

0

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதியரசர் மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் பந்துல கருணாரத்ன, ஓய்வுபெறுவதற்கு முந்திய விடுமுறையை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அதனை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஏற்றுக் கொண்டுள்ளார்.

புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் ஒருவர் அரசியலமைப்பு ரீதியாக நியமிக்கப்படும் வரை இந்த நியமனம் நடைமுறையில் இருக்கும்.

இளைஞர்களிடையே அதிகரித்து வரும் பாலியல் நோய்கள் – வைத்திய நிபுணர் எச்சரிக்கை

0

நாட்டின் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களின் பயன்பாடு இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக சங்கத்தின் வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு விஜேராமாவில் உள்ள இலங்கை மருத்துவ சங்க கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இந்த விடயத்தில் அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும், இதனால் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அது மட்டுமல்லாமல், சிலர் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை நாடியுள்ளனர்.

இது போன்ற காரணங்களால், பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி போன்ற வைரஸ்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் ஏற்படுகின்றன என்றார்.

பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளாரா அர்ச்சுனா எம்.பி; வெளியாகிய தகவல்..!

0

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மே 14 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அறிவித்தது.

இதற்கிடையில், நிலுவையில் உள்ள ஒழுக்காற்று விசாரணை காரணமாக இராமநாதன் அர்ச்சுனா சேவையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் செயலாளர் சார்பாக ஆஜரான மூத்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டதற்கான ஆவணங்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி மாயாதுன்னே கொரியா மற்றும் நீதிபதி மஹேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மனுதாரர் கோரியபடி அறிவிப்புகள் மற்றும் இடைக்கால நிவாரணம் வழங்குவதை பரிசீலிக்க மனுவை மே 14 ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைத்தது.

பிரதிவாதிகள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் மேலும் கால அவகாசம் வழங்கியது.

இராமநாதன் அர்ச்சுனாவை நாடாளுமன்ற உறுப்பினரிலிருந்து தகுதி நீக்கம் செய்து அறிவிக்கும் குவோ வாரண்டோ ரிட் வகையிலான உத்தரவை பிறப்பிக்கக் கோரி சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

மனுதாரர் சார்பாக சட்டத்தரணி என்.கே.அசோக்பரன் மற்றும் ஷெனல் பெர்னாண்டோ ஆஜராகினர், துஷாரி ஜெயவர்தனாவின் அறிவுறுத்தலின் பேரில் மூத்த சட்டத்தரணி சேனானி தயாரத்ன இராமநாதன் அர்ச்சுனாவுக்காக ஆஜரானார்.

அர்ச்சுனா சுகாதார அமைச்சுடன் இணைக்கப்பட்ட ஒரு பொது அதிகாரி என்றும், எனவே, ஒரு பொது அதிகாரியாக, அவருக்கு அரசுடன் ஒப்பந்தம் இருப்பதாகவும் மனுதாரர் கூறினார்.

அரசியலமைப்பின் பிரிவு 91(1)(e) பொது ஒப்பந்தங்களில் ஏதேனும் வகையில் சம்பந்தப்பட்ட நபர்கள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தடுக்கிறது என்று மனுதாரர் கூறினார்.

அர்ச்சுனா சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் பதில் மருத்துவ அத்தியட்சகராக பணியாற்றினார் என்றும், பின்னர் பேராதனை போதனா மருத்துவமனைக்கு இணைக்கப்பட்டார் என்றும் மனுதாரர் மேலும் கூறினார்.

செப்டம்பர் 29, 2024 அன்று அல்லது அதற்கு முந்தைய திகதியில் அர்ச்சுனாவின் பேஸ்புக் சுயவிவரம், அப்போதைய சுகாதார அமைச்சக செயலாளரால் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளதால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக பகிரங்கமாக வெளிப்படுத்தியதாக மனுதாரர் கூறினார்.

எனவே, அரசியலமைப்பின் பிரிவு 91(1)(d) மற்றும் 91(1)(e) ஆகியவற்றின் கீழ் அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என்று மனுதாரர் கூறினார்.

வவுனியாவில் தொலைபேசி கோபுரத்தில் ஏறிய நபருக்கு நேர்ந்த கதி..!

0

வவுனியா மகாரம்பைக்குளத்தில் தொலைபேசி கோபுரத்தை சீர்செய்யச் சென்ற தொழிநுட்ப உத்தியோகத்தர் ஒருவர் கோபுரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று(01.02.2025) இடம்பெற்றுள்ளது.

அத்தே மஹகிரில்ல, நிகவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய எச். எம். சுதேஷ் சதுரங்க ஹேரத் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான 50 மீற்றர் உயர தொலைபேசி கோபுரத்தின் பாகங்களை அகற்றும் போதே தொழில்நுட்ப உத்தியோகத்தர் கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிரிழந்த தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஊழியர்களுடன் தொலைபேசி கோபுரத்தில் ஏறி சில பாகங்களை அகற்றும் போது உதிரி பாகங்கள் அடங்கிய பையுடன் கீழே விழுந்துள்ளதாக பொலிசார் தெரவித்துள்ளனர்.

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையில் பாரிய வீழ்ச்சி..!

0

சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, ஒரு முட்டையின் விலை ரூ.26 முதல் 30 வரையிலும் கோழி இறைச்சி கிலோகிராம் ஒன்றின் விலை ரூ.650 முதல் 850 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முட்டை மற்றும் கோழி உற்பத்தி அதிகரித்துள்ளதாலும் தேவை குறைந்ததாலும் விலைகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சிறப்பு அங்காடிகளில் பத்து முட்டைகள் கொண்ட ஒரு பொதி ரூ.500 முதல் 520 வரை விற்கப்படுவதாகவும் நுகர்வோர் கூறியுள்ளனர்.

அத்தோடு, கோழி இறைச்சி கிலோகிராம் ஒன்று 600 ரூபாய் மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மாவையின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய நாமல் ராஜபக்ஷ..!

0

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச இன்றைய தினம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதன் போது பொதுஜன பெரமுனவின் வடக்குக்கான அமைப்பாளர் கீதனாத் காசிலிங்கமும் மாவை சேனாதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

கிளிநொச்சி-வவுனியா பொலிஸ் நிலையங்களை மூடுமாறு மக்கள் கோரிக்கை..!

0

கிளிநொச்சி இராமநாதபுரம் , வவுனியா ஈச்சங்குளம் பகுதி பொலிசாரின் செயற்பாடுகளால் பொலிஸ் நிலையங்களை மூடுமாறு மக்கள் விரக்தியில் தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்ட சட்டவிரோத வியாபாரங்களை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.

அதன் போது கருத்து தெரிவித்த பிமல் ரட்நாயக்க,

தான் இராமநாதபுரம் , ஈச்சங்குளம் ஆகிய பகுதிகளுக்கு மக்கள் சந்திப்புக்கு சென்ற சமயம் அப்பகுதி மக்கள் பொலிசாரின் விரும்பத்தகாத செயற்பாடுகளால், பொலிஸார் மீது நம்பிக்கை இழந்து விரக்தி நிலையில் உள்ளனர்.

சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தால், உடனேயே சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு அந்த தகவல் செல்கின்றன என தெரிவிக்கின்றனர்.

தமது பகுதியில் பொலிஸ் நிலையம் இருந்தும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், எதற்காக பொலிஸ் நிலையம், அதனை மூடிவிடுங்கள் என என்னிடம் தெரிவித்தனர் என மேலும் தெரிவித்தார்.

அதற்கு பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் பதில் அளிக்கையில்,

கீழ்நிலை பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையீனம் இருந்தால் , மேலதிகாரிகளுக்கு தகவல் வழங்க முடியும். என தெரிவித்தார்.

அதன் போது ஜனாதிபதி அனுர, வல்வெட்டித்துறை பருத்தித்துறை பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் அந்த தகவல் வழங்கியவர் தொடர்பில், சட்ட விரோத மதுபான உற்பத்தியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுவதாக எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என கூறினார்.

மாவை சேனாதிராஜாவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தவுள்ள ஜனாதிபதி; வெளியாகிய தகவல்..!

0

தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த மாவை சேனாதிராஜாவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேரில் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடல் நலக்குறைவினால் நேற்றிரவு (29) உயிரிழந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக மாவிட்டபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாளைய தினம் (31) யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி மாவை சேனாதிராஜாவின் வீடடுக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இதற்கான முன்னேற்பாடுகளில் பாதுகாப்பு வட்டாரங்கள் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை அநுரகுமார திசாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு என சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நாளை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்.

error: Content is protected !!