Friday, January 23, 2026
Huis Blog Bladsy 143

இன்றைய இராசி பலன்கள் (12.01.2025)

0

மேஷம்

இன்று உடல்நலம் சிறக்கும். தாய், தாய் வழி உறவினர்கள் மூலம் வீண் செலவுகள் நேரிடலாம். பொருளாதார வளர்ச்சி ஏற்ற இறக்கமாகவே இருக்கும். இளைய சகோதரத்துக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

ரிஷபம்

இன்று தந்தை, தந்தை வழி உறவினர்கள், பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம். நண்பர்களிடத்தில் மனக்கிலேசம் ஏற்படலாம். சுபச்செலவுகள் நிகழும். எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்

இன்று உறவினர் வகையில் அதிக நெருக்கம் வேண்டாம். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

கடகம்

இன்று அழகு நிலையம் வைத்திருப்போர், காஸ்மெட்டிக்ஸ் வியாபாரம் செய்வோர் மற்றும் ஆடை அணிகலன்கள் விற்பனை செய்வோருக்கு ஏற்ற காலமிது. தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான சமயமிது. கலைத்துறையினருக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

சிம்மம்

இன்று தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

கன்னி

இன்று சந்தாண பாக்கியம் கிட்டும். தெய்வ யாத்திரை, புனித ஸ்தலங்களுக்கு செல்வது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். முன்னோர்களை வழிபட மறக்க வேண்டாம். கோபம் கூடவே கூடாது. ரத்தம் சம்பந்தப்பட்ட வியாதி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

துலாம்

இன்று பொருட்கள் திருட்டு போகலாம். ஜாக்கிரதை. ஞாபக சக்தியை இழக்காமல் இருபதற்கு மனதை சஞ்சலத்தில் ஆழ்த்த கூடாது. பயிற்சியினால் அது சாத்தியமாகும். கலைத்துறையினருக்கு ஓரளவு நன்மைகள் வந்து சேரும். ஓரளவு சோதனைகளும் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

விருச்சிகம்

இன்று செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம், காலம் பார்த்து செய்வது நல்லது. வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

தனுசு

இன்று பிள்ளைகள் வழியில் கவனம் தேவை. வெளிநாட்டில் வசிப்பவர்கள் நாடு திரும்பி இங்கே தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். எதிரிகளின் தொந்தரவுகள் இருக்கும் இடம் தெரியாமல் மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மகரம்

இன்று மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமை மேம்படும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு பணியிடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள் உயர்வு போன்றவை கிடைக்கும். சகஊழியர்கள் உதவிகரமாக இருக்கும். சிலருக்கு முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். வேலையின்றி தவிக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5

கும்பம்

இன்று தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும் முன் குல தெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6

மீனம்

இன்று தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான சமயமிது. கலைத் துறையினருக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். அதிலும் கலைத்துறையில் டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும்.

தவணை பரீட்சை வினாத்தாள்கள் கசிவு; விசாரணைக்கு விசேட குழு நியமனம்..!

0

வடமத்திய மாகாணத்தில் 11 ஆம் வகுப்பு தவணை பரீட்சை வினாத்தாள்கள் மூன்று, தேர்வுக்கு முன்னதாகவே கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மாகாண கல்விச் செயலாளரின் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட குழு 5 உறுப்பினர்களைக் கொண்டதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பாக சிறப்பு தணிக்கையை தொடங்க மாகாண கல்வி செயலாளர் சிறிமேவன் தர்மசேன அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வடமத்திய மாகாண தரம் 11 பரீட்சையை எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தற்போது அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை கிடைத்த தகவல்களின் படி, தவணைப் பரீட்சைக்கான சிங்கள இலக்கியம், அறிவியல் மற்றும் ஆங்கில வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவும் விசாரணை நடத்தி வருகிறது.

சுகாதாரத் துறைக்குள் அரசியல் தலையீடு; வெடித்தது புதிய சர்ச்சை..!

0

சுகாதார அமைச்சின் நிர்வாக செயல்முறைகளில் அரசியல் தலையீடு இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் காரணமாக, சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸவுடன் உடனடியாக ஒரு சந்திப்பை நடத்த அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அழைப்பு விடுத்துள்ளது.

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்க செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

சில அமைச்சக அதிகாரிகள் ஏற்கனவே உள்ள விதிமுறைகளை மீற முயற்சித்ததால், 2025 ஆம் ஆண்டு மருத்துவர்களுக்கான இடமாற்றப் பட்டியல் பல மாதங்களாக தாமதமாகி வருவதாகக் கூறினார். இந்த தாமதம் 5,000 க்கும் மேற்பட்ட மருத்துவர்களை அது பாதித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த இடமாற்றச் செயல்முறை நிறுவனக் குறியீடு, பொது சேவை ஆணைக் குழுவின் நடைமுறை விதிகள் மற்றும் அமைச்சக சுற்றறிக்கைகளால் நிர்வகிக்கப்படுகிறது என்று வைத்தியர் சுகததாச வலியுறுத்தினார்.

வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்கும் அரசியல் செல்வாக்கைத் தடுப்பதற்கும் மருத்துவ இடமாற்ற சபைகள் இந்த செயல்முறையை மேற்பார்வையிட வேண்டும்.

இது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த GMOA ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, பொது சுகாதாரத்தில் இத்தகைய தலையீட்டின் தாக்கம் குறித்து கவலை தெரிவித்தார்.

வடக்கின் கல்வியை அழிக்கும் அதிகாரிகள்; நடவடிக்கை எடுப்பாரா தோழர் அனுர???

0

வடமாகாணத்தின் கல்வியை திட்டமிட்டு அழிக்கும் செயற்பாட்டில் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளும் அவர்களால் பின்கதவு நியமனம் வழங்கப்பட்ட சில அதிகாரிகளும் தொடர்பு பட்டுள்ளமை அம்பலத்திற்கு வந்துள்ளது.

அந்த வகையில் வட மாகாண கல்வி அமைச்சுக்குட்பட்ட 13 வலயங்களில் சில வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு திட்டமிட்ட வகையில் பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட நிர்வாக மற்றும் கல்வி நிர்வாக அதிகாரிகளின் நியமனங்களில் சேவை மூப்பு உடையவர்கள் முன்னிலைப் படுத்தப்பட்டு நியமிக்கப்படுவது நிர்வாக நடைமுறையாக இருந்து வருகின்ற நிலையில் கடந்த காலத்தில் முன்னாள் ஆளுநரால் தான்தோன்றித்தனமாக பல பின்கதவு நியமனங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் தற்போதய ஆட்சியிலும் இடமாற்ற, பதவியுயர்வு நியமன நியதிகளை பின்பற்றாது தான்தோன்றித்தனமாக நியமனங்கள் மற்றும் இடமாற்றக் கட்டளைகள் வழங்கப்படுகின்றதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ரணில் ராஜபக்ஷ ஆட்சியில் செல்வாக்கின் அடிப்படையில் எதுவித நடைமுறைகளையும் பின்பற்றாது நியமனம் பெற்ற அதிகாரிகள் மற்றும் மக்களால் விரட்டப்பட்ட காலாவதியான அரசியல்வாதிகளுடன் இணைந்து வடக்கின் கல்வியை சீரழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

குறிப்பாக யுத்தப் பேரவலத்தால் அழிந்த போதும் கல்வியே மீட்சிக்கான ஒரே வழி என மீண்டு வரும் வன்னிப் பிரதேசத்தின் கல்வியை முழுமையாக அழிக்க வடக்கின் அதிகாரிகள் திட்டமிட்டு செயற்படுகின்றனரோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் செயலாளர் மற்றும் முன்னாள் பணிப்பாளரால் வழங்கப்பட்ட அதிபர் நியமன முறைகேடு, கல்வி நிர்வாக அதிகாரிகளின் முறையற்ற இடமாற்றம், ஆசிரிய நியமன முறைகேடுகளால் வன்னிப் பிரதேசம் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் ஊழல் மோசடிகளுக்கு எதிரான அரசு எனப்படும் இந்த ஆட்சியிலும் அரச ஊழியர்கள் மீது குறிப்பாக கல்வித் துறை மீது பழிவாங்கல்களும், அரசியல் அழுத்தங்களும் கடந்த ஆட்சியை விட அதிகமாகப் பிரயோகிக்கப்படுகின்றது.

கடந்த ஆட்சியின் இறுதியில் வன்னிப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட பல ஆசிரியர்கள் தமது செல்வாக்கில் யாழ்ப்பாணம் சென்றுள்ள நிலையில் குறித்த வன்னிப் பாடசாலைகளில் வெற்றிடம் நிலவுகின்றது. இது தொடர்பில் நடவடிக்கையெடுக்க முடியாத இன்றைய அரசியல்வாதிகளும் அவர்களின் ஏவலாளர்களும் இளகிய இரும்பாகிய கல்வியை பந்தாடுகின்றனர்.

அந்த வகையில் இந்த அரசின் முறையற்ற செயற்பாடாக வடமாகாண பிரதம செயலாளரின் கையொப்பத்துடன் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு கட்டளைகள் காணப்படுகின்றன.

எனவே முறையற்ற இடமாற்றத்தை இரத்துச் செய்வதுடன் இடமாற்ற மற்றும் பதவியுயர்வு நியதிகளைப் பின்பற்றி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் வடக்கின் கல்விக்குள் காணப்படும் தேவையற்ற தலையீடுகளை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு நாட்டின் ஜனாதிபதியான தோழர் அனுர அவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

பொருத்தமான துறைகளைத் தெரிவு செய்வதன் மூலமே வேலை வாய்ப்பைப் பெற முடியும்..!

0

வட மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் சில துறைகளை உயர் கல்விக்காக தேர்ந்தெடுக்காமையால் இங்குள்ள வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

யாழ். கல்விக் கண்காட்சி – 2025 திறப்பு விழா இன்று (11) வலம்புரி ஹோட்டலில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வட மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் மற்றும் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.

இங்கு உரையாற்றிய ஆளுநர்,

முன்னைய காலத்தில் இலங்கையின் அரச பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாகும் குறிப்பிட்ட தொகையானவர்களுக்கு மாத்திரமே உயர் கல்விக்கான வாய்ப்பு இருந்ததாகவும் இன்று (11) அந்த நிலைமை மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தற்போது அரச பல்கலைக் கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களும் உயர் கல்வி வாய்ப்பு பரந்தளவில் கிடைப்பதாகவும் தெரிவித்த ஆளுநர் அதனைச் சரிவரப் பயன்படுத்த வேண்டும் எனவும் சுட்டிக் காட்டினார்.

அத்துடன் எமது முயற்சி மற்றும் தேடலில்தான் உயர் கல்வித் தெரிவு இருக்கின்றது என்பதைச் சுட்டிக் காட்டிய ஆளுநர், பொருத்தமான துறைகளை தெரிவு செய்வதன் ஊடாக வேலை வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

வட மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி என்பதைக் குறிப்பிட்ட ஆளுநர், இவ்வாறான கல்விக் கண்காட்சிகள் எமது மாகாண மாணவர்களின் எதிர்காலத்துக்கு சிறப்பானவை என்றும் இவை தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

யாழில் மனைவியின் காதை வெட்டி சித்திரவதை செய்த கணவனுக்கு சிறை..!

0

யாழ் – சண்டிலிப்பாய் பகுதியில் மனைவியின் காதை வெட்டிய நபரை விளக்க மறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் இன்றைய தினம் உத்தரவிட்டது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனின் சித்திரவதை தாங்காது சண்டிலிப்பாயில் உள்ள உறவினரின் வீட்டில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் அங்கு சென்ற கணவன் கடந்த 07.10.2024 அன்று மனைவியின் காதினை வெட்டிவிட்டு தப்பி வந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண், வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னர் இச்சம்பவம் குறித்து கடந்த 10.10.2024 அன்று மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

குறித்த சந்தேகநபருக்கு எதிராக வேறு சில முறைப்பாடுகள் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திலும் காணப்படுகிறது. இந் நிலையில் குறித்த சந்தேகநபர் நேற்றைய தினம் (10) வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னரும் மனைவியின் தலை மற்றும் காலை உடைத்து, பல்வேறு சித்திரவதைகளை புரிந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்றைய தினம் (11) மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

சம்பியன்ஸ் கிண்ணம் 2025; 12ஆம் திகதிக்குள் அணிகளை அறிவிக்க உத்தரவு..!

0

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 08 நாடுகளும் தங்களது அணிகளை எதிர்வரும் 12ஆம் திகதிக்குள் அறிவிக்க வேண்டுமென ஐ.சி.சி. உத்தரவிட்டுள்ளது.

08 அணிகள் பங்கேற்கும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் பெப்ரவரி 19ஆம் திகதிமுதல் மார்ச் 09ஆம் திகதிவரை பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இருப்பினும், இந்திய அணி தனது போட்டிகளை டுபாயில் விளையாடவிருக்கிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இடம்பெற்றுள்ள 08 அணிகளும் தங்களுடைய 15 பேர் கொண்ட அணியை எதிர்வரும் 12ஆம் திகதிக்குள் தெரிவிக்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் வீரர்கள் உபாதை காரணமாக விலகினால் மாற்றம் செய்து கொள்ளலாம்.

வீரர்களை மாற்ற பெப்ரவரி 13ஆம் திகதிவரை அனுமதி உள்ளது. இதுவரையில் இங்கிலாந்து மட்டுமே இந்த தொடருக்கான அணியை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர் பணி இடை நீக்கம்..!

0

தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை அவரை இடைநீக்கம் செய்ய விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மகளிர் T20 உலகக் கிண்ணப் போட்டி; இலங்கை அணி மலேசியா பயணம்..!

0

மலேசியாவில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ரி 20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்காக இலங்கை அணி இன்று (11) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டது.

16 அணிகள் பங்குபற்றும் இப் போட்டித் தொடரின் ஆரம்ப சுற்றில் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு இலங்கை அணி ‘ஏ’ பிரிவில் விளையாடவுள்ளது.

தொடரின் முதல் போட்டி அவுஸ்திரேலியா மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

இதன் கீழ் இலங்கையின் முதல் போட்டி மலேசியாவுக்கு எதிராக ஜனவரி 19ஆம் திகதி கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன டில்ஷானின் மகள் லிமான்சா திலகரத்ன உட்பட 15 பேர் கொண்ட அணியை நேற்று (10) இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்தது.

அணித் தலைவராக மொரட்டுவை வேல்ஸ் கல்லூரியின் மானுடி நாணயக்கார தெரிவு செய்யப்பட்டார்.

பிரேசிலின் நெய்மர் ஜூனியரின் புதிய சாதனை..!

0

பிரேசிலைச் சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் 2024ஆம் ஆண்டில் 2 போட்டிகளில் மொத்தமாக 42 நிமிடங்கள் மட்டுமே விளையாடி 101 மில்லியன் யூரோ பணத்தை உழைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது கால்பந்து உலகில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மொத்தமாக தனது கால்பந்து வாழ்க்கையில் 717 போட்டிகளில் விளையாடிய நெய்மர் ஜூனியர் 439 கோல்களை அடித்துள்ளார். அத்தோடு 279 முறை கோல்கள் அடிக்கவும் உதவியுள்ளார்.

error: Content is protected !!