Thursday, July 23, 2026
Huis Blog Bladsy 144

ஆசிரியர் சம்பள முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் – மஹிந்த ஜயசிங்க

0

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு மற்றும் சேவை நிலையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கமைய கல்வி சபையை உருவாக்குவதற்கு கல்வி அமைச்சர் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு நிருபம் சமர்ப்பிப்பார்.

அதனைத் தொடர்ந்து கல்வி ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும். வெகுவிரைவில் முரண்பாடற்ற வகையில் ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பு தயாரிக்கப்படும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

கல்விக்கு என்றும் முன்னுரிமை வழங்குவோம் என்பதை அதிகாரத்தில் இல்லாத போதும் குறிப்பிட்டோம், தற்போதும் அதே நிலையில் உள்ளோம். இந்த ஆண்டு ஆசிரியர் சேவையில் 7913 நியமனங்கள் வழங்கப்படும்.

அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் சேவை தொடர்பில் குறிப்பிடப்பட்டது. இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு அமைவாகவே செயற்பட முடியும்.

அதிபர் சேவையில் 1610 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. கடந்த ஜனவரி மாதம் நிர்வாக மட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதேபோல் கல்வி நிர்வாக சேவையில் 1331 வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில் 422 பேருக்கு நியமனங்களை வழங்குவதற்கு அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதி கோரப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பதவிக்கான பரீட்சை நடைபெற்றது. இருப்பினும் நியமனங்கள் வழங்கப்படவில்லை.

ஆசிரியர் கல்வி சேவையில் 1310 வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில் முதல் கட்டமாக 706 பேருக்கு நியமனங்களை வழங்குவற்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த காலங்களில் இழுபறி நிலையில் இருந்த விடயங்களை நாங்கள் துரிதப்படுத்தியுள்ளோம்.

கடந்த காலங்களில் பெரும்பாலான பாடசாலைகள் தேசிய பாடசாலைகள் என்று பெயர் பலகைகளில் ஊடாக மாத்திரம் அறிவிக்கப்பட்டது.இருப்பினும் எவ்வித வளங்களும் வழங்கப்படவில்லை. அனைத்து பாடசாலைகளுக்கும் இணையான வளங்களை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு தொடர்பில் பேசப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பொய்யுரைத்தார்கள். பி.சி பெரேரா ஆணைக்குழுவின் அறிக்கை ஊடாக 1997 ஆம் ஆண்டு ஆசிரியர் – அதிபர் சேவை சம்பள முரண்பாடு ஆரம்பமானது. 27 ஆண்டுகாலமாக இந்த பிரச்சினை தொடர்கிறது. 8 ஆண்டுகாலமாக ஐக்கிய தேசியக் கட்சியும், 19 ஆண்டுகாலமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இந்த நாட்டை ஆட்சி செய்தது.இருப்பினும் இந்த முரண்பாட்டுக்கு தீர்வு காணவில்லை.

நாங்கள் தொடர்ந்து போராடினோம் . 2021 ஆம் ஆண்டு 121 நாள் போராட்டத்தில் பின்னரே ஒரு பகுதியளவிலான வெற்றியை பெற்றுக் கொண்டோம். 1994 ஆம் ஆண்டு ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பினை தயாரிக்கையில், பல நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டு அவை முழுமைப்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல், அமைச்சரவை பத்திரம் ஊடாக தற்காலிக தீர்வுகள் எடுக்கப்பட்டன.

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடு மற்றும் சேவை நிலையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கமைய கல்வி சபையை உருவாக்குவதற்கு கல்வி அமைச்சர் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு நிருபம் சமர்ப்பிப்பார்.அதனைத் தொடர்ந்து கல்வி ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் என்றார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் உடனுக்குடன் பெற்றுக் கொள்ள தமிழ்பொறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

திருமலை மேல் நீதிமன்ற நீதிபதி பிரேமசங்கர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பதவியேற்பு..!

0

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக இன்று (11) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் உறுதியுரை எடுத்து பதவியேற்கிறார்.

கண்டி மேல் நீதிபதி சுமுது பிரேமச்சந்திர, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி கே.பிரியந்த பேர்னாண்டோ மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகிய மூவருமே நாளை காலை 9 மணிக்கு பதவியேற்கின்றனர்.

யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நீதிவான், மாவட்ட நீதிபதி மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதியாக அன்னலிங்கம் பிரேமசங்கர் சுமார் 28 ஆண்டுகள் நீதிச் சேவையில் கடமையாற்றியுள்ளார்.

1967ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி யாழ்ப்பாணம், வடமராட்சி, துன்னாலையில் அன்னலிங்கம் (முன்னாள் அத்தியாவசிய சேவைகள் உதவி ஆணையாளர்) மகாலக்ஷ்மி தம்பதியினருக்கு மகனாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிரேமசங்கர் பிறந்தார்.

துன்னாலை அமெரிக்க மிசன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிரேமசங்கர், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியில் உயர் கல்வியைத் தொடர்ந்து சட்டத்துறையில் கல்வி கற்று சட்டத்தரணியானார்.

1998ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நீதித்துறை அலுவலராக நீதிபதி நியமனம் பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை, சாவக்கச்சேரி மற்றும் கிளிநொச்சி நீதிமன்றங்களில் ஒரே தடவையில் நீதிவானாகவும் (போர் இடம்பெற்ற காலப் பகுதியில்) மல்லாகம், சாவகச்சேரி மற்றும் யாழ் என யாழ் மாவட்டத்தில் அனைத்து நீதிவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதியாகக் கடமையாற்றியுள்ளார்.

சுமார் 14 ஆண்டுகள் நீதிவான் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த அன்னலிங்கம் பிரேமசங்கள் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்ற ஆணையாளராக (மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நாடாளுமன்றினால் அதிகரிக்க முன்னர்) பின்னர் 2013ஆம் ஆண்டு ஜூலை 01ஆம் திகதி தொடக்கம் 2014ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற ஆணையாளராக பதவி வகித்ததுடன் 2014ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி முதல் மேல் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு என மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் சுமார் 13 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.

இந்த நிலையில் 27 ஆண்டுகள் நீதிச் சேவையில் முதல் நிலை நீதிபதியாகத் தொடர்ந்த நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், தலைமை நீதியரசர் முறுது பெர்னான்டோ தலைமையிலான நீதிச் சேவை ஆணைக்குழுவின் பரிந்துரையுடனும் சபாநாயகர் தலைமையிலான அரசியலமைப்புச் சபையின் ஒப்புதலுடனும் ஜனாதிபதியினால் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்படுகிறார்.

2000ம் ஆண்டு பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் கிளிநொச்சி நீதிவானாக செயற்பட்ட காலத்தில் மிருசுவிலில் ஐந்து வயது சிறுவன் உட்பட எட்டுப் பேரை சுட்டு படுகொலை செய்த வழக்கின் விசாரணைகளை உரிய வகையில் முன்னெடுத்தமைக்காக அந்த வழக்கின் தூக்குத் தண்டனை பெற்ற இராணுவச் சிப்பாயின் மேன்முறையீட்டை விசாரணை செய்து தூக்குத் தண்டனையை உறுதி செய்த தீர்ப்பில் உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கருக்கு பாராட்டை கோடிட்டுக் காட்டியிருந்தது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் உடனுக்குடன் பெற்றுக் கொள்ள தமிழ்பொறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

மாணவர்களை பிரம்பால் தாக்கிய டியூஷன் ஆசிரியர்; பொலிஸார் தீவிர விசாரணை..!

0

தனியார் உயர்தர வகுப்பு ஆசிரியர் ஒருவர் மாணவர்களை பிரம்பால் தாக்கிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நுகேகொடை மற்றும் கம்பஹா போன்ற பகுதிகளில் வணிக பிரிவில் கல்வி கற்பிக்கும் குறித்த ஆசிரியர், தனது தனியார் வகுப்புகளில் மாணவர்களை பிரம்பால் அடிக்கும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

ஆசிரியரால் தாக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரித்து வருவதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.

தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 18 வயதுக்குட்பட்டவர்கள் சிறுவர்கள் என்று கருதப்படுகிறார்கள்.

உயர்தர வகுப்புகளில் படிக்கும் சில மாணவர்கள் 19 வயதை பூர்த்தி செய்துள்ளதால், சட்டத்தை செயல்படுத்துவதில் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபைக்கு சிக்கல்கள் உள்ளதாக இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் உடனுக்குடன் பெற்றுக் கொள்ள தமிழ்பொறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

அக்கரைப்பற்றில் திருட முயற்சித்து மக்களிடம் வசமாக சிக்கிக் கொண்ட திருடன்..!

0

அக்கரைப்பற்று 8ஆம் பிரிவில் இன்று (10) அதிகாலை நேரத்தில் அகப்பட்ட நபரை பொதுமக்கள் நையப்புடைந்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த நபரும் அவனது நண்பர்களும் இணைந்து நேற்றிரவு (09) முதல் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பகுதிகளில் பல இடங்களில் திருட முயற்சித்துள்ள நிலையில் ஒருவன் மாத்திரம் வசமாக மாட்டிக் கொண்டார்.

குறித்த நபர் வீட்டில் உள்ளவர்களின் நடமாட்டத்தை அவதானித்து வீட்டிற்குள் புகுந்து அறை ஒன்றினுள் ஒளிந்திருந்து அவ்வறையில் இருந்த பை ஒன்றை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகையில் அதனை அவதானித்து அவ்வீட்டின் பெண் கூச்சலிடவே அவ்விடத்தை விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இருந்தபோதிலும் அயலவர்களின் முயற்சியால் பிடிக்கப்பட்ட நபரை மக்கள் நையப்புடைந்து திருடப்பட்ட பை ஒளித்து வைக்கப்பட்ட இடத்தினை காட்டுமாறு தாக்கினர்.

அடியினை தாங்கமுடியாத நபரும் குறித்த வீட்டிலிருந்து சுமார் 50 மீற்றருக்கு அப்பால் உள்ள வீட்டில் அவ்வீட்டின் உரிமையாளருக்கு தெரியாமலே மறைத்து வைக்கப்பட்ட பையினை எடுத்து கொடுத்துள்ளார்.

அத்தோடு தன்னுடன் வந்த ஏனையவர்களின் விபரத்தினையும் வழங்கியதோடு திருடிய முறை தொடர்பிலும் பொது மக்கள் மத்தியில் கூறியுள்ளார்.

இந்நிலையில் பொதுமக்கள் மத்தியில் குறித்த நபரை பொலிஸாரிடம் ஒப்படைப்பது வீணற்றது எனும் கருத்தும் நிலவிய நிலையில் குறித்த நபர் இதற்கு முன்னர் திருடிய வீட்டு உரிமையாளர்களும் இணைந்து அடையாளம் காட்டியதுடன் அவர்களது ஆத்திரத்தினையும் வெளிப்படுத்தினர். பின்னர் பொதுமக்கள் நபர் ஊர்லமாக கொண்டு சென்று அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதேநேரம் அநாதை இல்லங்களுக்கு நிதி அறவீடு மற்றும் ஏழைகளுக்கான நிதி அறவீடு என கூறிக் கொண்டு யாருடைய அனுமதியுமின்றி கிராமங்களுக்குள் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் நடமாடுகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

திருகோணமலையில் மாணவியை தகாதமுறைக்கு உட்படுத்திய குடும்பஸ்தர் கைது..!

0

திருகோணமலையில் மாணவியை தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கைானது நேற்று (9) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது, கைது செய்யப்பட்டவர் 33 வயதுடைய தீர்த்தக்கரை சிலாவத்தையில் வசிக்கும் கடற்றொழில் சங்க தலைவராவார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறித்த குடும்பஸ்தர் திருகோணமலையில் உள்ள மனைவியின் சித்தி வீட்டிற்கு போய்வருவது வழக்கமான நிலையில் சித்தியின் மகளான 15 வயதுடைய பாடசாலை மாணவியை அதிக நாட்களாக தகாதமுறைக்கு உட்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், மாணவிக்கு உடல் நிலையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக குறித்த மாணவி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தபட்ட போது அவர் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த மாணவியிடம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் நேற்றையதினம் (9) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணையின் பின்னர் இன்றைய தினம் (10) முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த மாதம் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாண YouTuber கிருஷ்ணா தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!

0

யாழில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பர் உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ், பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வறியவர்களுக்கு உதவி செய்வதாக புலம்பெயர் தமிழர்களிடம் நிதியினை பெற்று ,அதன் ஊடாக உதவி செய்வது போன்றன காணொளிகளை தனது யூடியூப் தளத்தில் பதிவேற்றி வந்துள்ளார்.

பெண்ணொருவரை அவமானப்படுத்துவது போன்று பேசி காணொளியொன்று வெளிவந்த நிலையில், அது சர்ச்சையாக மாறி இருந்தது. அத்தோடு, இந்த விடயமானது, நாடாளுமன்ற அமர்வில் கூட பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது.

இந்த நிலையில், சர்ச்சையான காணொளியில் உள்ள குடும்பத்தின் வீட்டிற்கு யூரியூபர் வந்திருந்த வேளை, ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு கிருஸ்ணா மீது மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், யூடியூப்பர் உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழில் பொலிஸ் அதிகாரியின் மகன் லஞ்சம் வாங்கிய சம்பவம்; நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

0

யாழ் தலைமை காவல் நிலையத்தில் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய அதிகாரியின் மகனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ். தலைமைப் காவல் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன் ஒருவர் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த காவல்துறை அதிகாரியின் மகன் வழக்கு ஒன்றினை இல்லாது செய்வதற்காக 20 ஆயிரம் ரூபாவினை பொதுமகன் ஒருவரிடம் இலஞ்சமாக பெற்றுள்ளார்.

இதையடுத்து, இலஞ்சம் பெற்றமை தொடர்பில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையிடம் பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அந்த வகையில், சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த வழக்கானது இன்றைய தினம்(10) காவல்துறையினரால் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதன்படி, இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதிக்குள் கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடுவதில்லை; தமிழரசுக் கட்சி தீர்மானம்..!

0

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை என்று தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது என கட்சியின் பதில் செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடுகின்றமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அந்த வகையில் கொழும்பு மாநகரசபையின் கீழ் தமிழ் மக்கள் வசிக்காத வட்டாரங்களும் உள்ளன. அங்கு வேட்பாளர்களை நியமிப்பது சவாலான ஒரு நிலையை ஏற்ப்படுத்தியுள்ளது.

இங்கு ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டாலும் அதன் வேட்பாளர்களின் பின்புலம் தொடர்பாக ஆராய்வதில் பல்வேறு சவால்கள் உள்ள காரணத்தினால் இம்முறை கொழும்பில் போட்டியிடுவதில்லை என மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது என தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஞாயிற்றுக் கிழமை (09) நடைபெற்றது.

தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம் பெற்று வரும் இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் சமர்ப்பிப்பு, வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தேர்தலைக் கையாளுதல் உள்ளிட்ட விஷயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

குறித்த கூட்டத்தில் பதில் பொதுச் செயலாளர் எம்.எ,சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், க.கோடீஸ்வரன், எஸ்,சிறிதரன், ஞா.சிறிநேசன், குகதாசன், சிறிநாத், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஐ.நாவில் குவியும் தமிழர் தரப்பின் முக்கிய ஆவணங்கள்; அநுர அரசுக்கு காத்திருக்கும் நெருக்கடி..!

0

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 58வது அமர்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய மையக் குழு மீண்டும் ஒருமுறை நாட்டின் மீதான இராஜதந்திர நகர்வை நீட்டித்துள்ளது.

இலங்கை சர்வதேச பொறுப்புக்கூறலை தொடர்ந்து நிராகரித்து வருகிறது. ஒரு போர்க் குற்றவாளியை கூட விசாரிப்பதை மறுக்கும் அதேவேளை, தொடர்ச்சியான மேலோட்டமான நடவடிக்கைகளை இலங்கை வரவேற்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

கனடா, மலாவி, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐ.நாவின் கோர் குழு, அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்தின் “அமைதியான தேர்தல்கள் மற்றும் சுமூகமான அதிகார மாற்றத்தை” அங்கீகரித்தது.

இலங்கை அதன் ஆழமாக வேரூன்றிய மனித உரிமை மீறல்கள் மற்றும் தீர்க்கப்படாத போர்க் குற்றங்களை நிவர்த்தி செய்ய இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தியது.

இருப்பினும், 2009 இல் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு ஒரு இலங்கை அதிகாரி கூட பொறுப்பேற்கவில்லை என்பதை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்ந்தும் சுட்டிக்காட்டுகிறது.

ஐ.நா. தீர்மானங்களையும் சர்வதேச வழிமுறைகளையும் இலங்கை அரசு தொடர்ந்து நிராகரிப்பது, இலங்கையின் அரசியலுக்கு நல்ல நோக்கம் என கொழும்பு மைய அரசியல் கருதினாலும் – நீதி நிலைநாட்டப்படுவதை தடுக்கும் செயற்பாடுகள் அரசாங்கத்தால் நிறைவேற்றப்படுகின்றன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது எனவும் குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்நிலையில் போர்குற்றம் மீதான இலங்கையின் நகர்வுகள் மற்றும் புதிய அரசாங்கத்துக்கு சர்வதேச விசாரணை தொடர்பிலான அழுத்தங்கள் வலுத்து வருகிறது.

யாழ். யூடியூப்பரின் மோசமான செயலுக்கு ரஜீவன் எம்.பி கண்டனம்..!

0

யாழ்ப்பாணத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களது நிலைமையை காணொளியாக வெளியிட்டு புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உறவுகளிடம் இருந்து பெறப்படுகின்ற பணத்தில் வறுமை கோட்டுக்கு உட்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாக காட்டும் வலையொளியாளர் (YouTuber) தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கில் பெண்கள் மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்கின்ற விடயம் அடிக்கடி செய்திகள் வாயிலாக வெளியாகின்றன. நேற்றையதினம் கூட ஒரு காணொளி வெளியாகி இருந்தது. அந்த காணொளியில் மக்களது வறுமையை காட்டி அதை வைத்து உழைப்பை பெறும் வகையில் யாழ்ப்பாண யூடியூப்பர் ஒருவரது அடாவடித் தனங்களை நாங்கள் கண்டு கொண்டோம்.

இது சம்பந்தமாக சமூக ஊடகங்களிலும் வலைத் தளங்களிலும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

இவ்வாறான விடயங்கள் தமது மக்களை பல்வேறு விதத்திலும் பிரச்சினைகளுக்கு உள்ளாக்குகின்றன. இந்த விடயம் தொடர்பாக நாங்கள் உடனடியாக மகளிர் விவகார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றோம்.

வெளிநாட்டில் வாழ்கின்றவர்களுக்கு இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை காண்பித்து அதன் மூலம் பணத்தை திரட்டி பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்கள், சிறுவர்கள் எமது நாட்டின் முதுகெலும்புகள் அவர்களை காக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது.

அவர்களின் வறுமை என்ற கருவியை பயன்படுத்தி பல்வேறு தரப்பினரும் பணம் சுரண்டலில் ஈடுபட்டு வருகின்றனர். இது பெண்களின் சிறப்பு உரிமைகளை மீறுகின்ற செயற்பாடாக அமைகிறது. இவ்வாறானவர்கள் சமூகத்திலிருந்து ஒழித்துக் கட்டப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டி இருக்கின்றது.

எனவே,இவ்வாறான செயற்பாடுகளை ஈடுபடுகின்றவர்கள் தொடர்பாக உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் உடனடியாக அதனை எனக்கு தெரியப்படுத்துங்கள். இந்த பிரச்சனைக்கு நாங்கள் பொலிசார் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுடன் இணைந்து தீர்வு காண்பதற்கு முயற்சிக்கின்றோம் என்றார்.

error: Content is protected !!