Monday, March 31, 2025
Huis Blog

உள்ளூராட்சி வேட்புமனுக்கள் நிராகரிப்பு; சாதகமான பதிலை வெளியிட்ட சட்டத்தரணி..!

0

பிறப்புச் சான்றிதழ்களால் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் அனைவருக்கும் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என நம்புவதாக ஜனாதிபதி சட்டத்தரணி M. நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நேற்று (30) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

“கடந்த 28ஆம் திகதி உயர் நீதிமன்ற அமர்வு, நீதியரசர் ச. துரைராஜா(PC), நீதியரசர் மஹிந்த சமயவர்தன, மற்றும் நீதியரசர் சம்பத் பி. அபயகோன் ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இடம்பெற்றது.

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட உள்ளூராட்சி தேர்தலில் வேட்புமனுக்கள் சில நிராகரிக்கப்பட்டதை ஆட்சேபித்துத் தாக்கல் செய்யப்பட்ட 21 வழக்குகள் இதன்போது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்தநிலையில் உயர் நீதிமன்றம், மார்ச் 30 சட்டமா அதிபர், தேர்தல் ஆணைக்குழு மற்றும் மனுதாரர்களின் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாட வேண்டும் என உத்தரவிட்டதுடன் இதன் மூலம் இந்த வழக்குகளுக்கு தீர்வைக் காண முயற்சி செய்யலாம் எனக் கருதப்பட்டது.

அதன்படி, சட்டமா அதிபர் திணைக்களத்தில், மேலதிக மன்றாடியார் நாயகம் கனிஷ்கா டி சில்வா பாலபடபெந்தியை பிரதிநிதித்துவப் படுத்தியும் 20 வழக்குகளில் மனுதாரர்களின் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி M. நிசாம் காரியப்பர், ஒரு மனுதாரரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெஃப்ரி அழகரத்தினம், வழக்கறிஞர்கள் கே. குருபரன் மற்றும் இல்ஹாம் காரியப்பர் ஆகியோர் ஏனைய மனுதாரர்களின் சார்பில் பிரசன்னமாகியிருந்தார்கள்.

இதன் போது முக்கியமாகக் கலந்துரையாடப்பட்ட விடயங்களாவன,

1. பிறப்புச் சான்றிதழ்களால் ஏற்பட்ட நிராகரிப்புகள். (சான்றுபடுத்தப்பட்ட நகல்களுக்கு பதிலாக உண்மையான புகைப்படநகல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.)

2. சத்தியப்பிரமாணங்களில் ஏற்பட்ட குறைபாடுகளாலான நிராகரிப்புகள். (சில பிழைகள் அல்லது தேவையான தகவல்களின் குறைவுகள்)

3. மற்ற ஏதேனும் நிராகரிப்பு காரணங்கள்.

குறித்த கலந்துரையாடலின் முடிவில், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “பிரஸ்தாப கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும், பிறப்புச் சான்றிதழின் புகைப்படநகல்களுக்கான நிராகரிப்பு, அனைவருக்கும் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என தாம் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் இறுதி நிலைப்பாடு ஏப்ரல் 1ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று அரச தரப்பு சட்டத்தரணி உறுதியளித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

9 கிலோ கஞ்சா கலந்த மாவாவுடன் இருவர் யாழில் கைது..!

0

யாழ் நகரில் 9 கிலோ 300 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.

யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வழிகாட்டலில் உதவி பொலிஸ் பரிசோதகர் நந்தகுமார் குழுவினர் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

கைதான 40 வயது மதிக்கத்தக்க இருவரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருணாவின் கூற்றால் கவலையில் பிரித்தானிய அரசாங்கம் – சாணக்கியன்

0

பிரித்தானியாவை ‘மொக்க அரசாங்கம்’ என்று விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தமையால் பிரித்தானியா கவலையடைந்துள்ளதாக சாணக்கியன் கேலி செய்யும் வகையில் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் கூறுகையில்,

கருணாவின் பேச்சுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டாம் என பலர் என்னிடம் கூறினார்கள்.

ஆனால் இதை சொல்லியாக வேண்டும், கருணா இங்கிருந்து கொண்டு பிரித்தானியாவை ‘மொக்க அரசாங்கம்’ என்று கூறியுள்ளார். இதனால் பிரித்தானியா கவலையடைந்துள்ளதாம்.

உங்களுக்கே தெரியும் யார் மொக்கை என்று என கூறியுள்ளார்.

தலைப் பிறை தென்பட்டது; நாளை நோன்பு பெருநாள் – கொழும்பு பெரிய பள்ளிவாசல்

0

கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஹிஜ்ரி 1446 புனித ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள், கொழும்பு மேமன் சங்க உறுப்பினர்கள், வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் உலமாக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது நாட்டின் பல பிரதேசங்களிலும் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டதற்கான ஆதார பூர்வமான தகவல்கள் கிடைக்கப் பெற்றன. எனவே நாளை 31ஆம் திகதி திங்கட்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சருக்கு சிஐடி அதிரடி அழைப்பு..!

0

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி, வரும் திங்கட்கிழமை (01) காலை 10 மணிக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த ஒரு காவல்துறை சார்ஜென்ட் இறந்தது தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் ஐஜிபி தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட ஒரு குழு கைது செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேசபந்து தென்னகோனைத் தவிர மற்ற சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சருக்குத் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக, இவ்வாறு விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

இலங்கை இளைஞர்கள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்..!

0

இலங்கையில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

இதன்படி கடந்த வருடத்தில் 15 முதல் 24 வயதுக்கிடைப்பட்ட 115 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் நாட்டில் 824 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 718 பேர் ஆண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் 47 பேர் எய்ட்ஸ் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தனர். இலங்கையில் எச்.ஐ.வி பரவல் அதிகரித்து வருவதனால், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறு தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு பொது மக்களுக்கு தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டில் ஆண்டுதோறும் ஏற்படும் மொத்த மரணங்களில் 83% தொற்றா நோய்களால் ஏற்படுவதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சுகாதார தரவுகளுக்கு அமைய, 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 35 சதவீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அவர்களில் பலருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது தெரியாமல் இருப்பதால், ஆண்டுதோறும் சுமார் 60,000 பேர் பக்கவாதத்திற்கு ஆளாகின்றனர். இதில் சுமார் 4,000 பேர் ஆண்டு தோறும் உயிரிழப்பதாகவோ அல்லது ஊனமுற்ற நிலைக்கு ஆளாவதாகவோ சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அதேபோல், நாட்டின் சிரேஷ்ட பிரஜைகள் மக்கள் தொகையில் 20% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 41% பேர் சிகிச்சை பெறுவதில்லை என அமைச்சர் தெரிவித்தார்.

யாழில் வீதியில் சென்ற குடும்பப் பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

0

யாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த குடும்பப் பெண் ஒருவர் மயங்கி கீழே விழுந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு, 14ஆம் வட்டாரத்தை சேர்ந்த சி.வசந்தா (வயது 68) என்பவரே உயிரிழந்துள்ளார்

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த பெண் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். இதன் போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் அவர் புங்குடுதீவு வைத்திய சாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.

யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(29) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நான் என்ன அப்பக் கோப்பையோ? ஊடகவியலாளர்களிடம் பாய்ந்த இளங்குமரன் எம்.பி..!

0

இலங்கையின் வலுசக்தி அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில் மின்சாரம் தடைப்பட்டமை தொடர்பில் தகவலை வெளிபடுத்திய ஊடகவியலாளர் மீது நான் அப்ப கோப்பை அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் சூடாகிய சம்பவம் இன்று மாலை பதிவானது .

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

யாழ். தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இலங்கை புத்திஜீவிகள் அமைப்பின் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.

இதன் பொழுது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம், வலு சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித் கொடிதுவக்கு, பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், யாழ். மாவட்ட பொறியியலாளர்கள் , பொறியியல் துறைசார் வல்லுனர்கள், பேராசிரியர்கள் , கல்வியலாளார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த கூட்டத்தில் உரையாற்றிய வலு சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தங்கு தடையின்றி 24 மணிநேர மின்சாரத்தை வழங்குவது எமது நோக்கமாக உள்ளது என தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் உரையாற்றி சில நிமிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பில் தகவலை சமூக ஊடகத்தில் ஊடகவியலாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஊடகவியலாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு விரைந்து வந்த இளங்குமரன் எம்.பி நான் அம்பை கோப்பை அல்ல அனைவரும் இணைந்து மின் ஆழியை நிறுத்தினால் மின்சாரம் இல்லாது போகும் என தெரிவித்து சென்றார்.

இதனிடையே ஊடகவியலாளர்கள் மின்சார துண்டிப்பு தொடர்பில் மின்சா சபையுடன் தொடர்பு கொண்டே செய்தியினை உறுதிப் படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் திடீரென ஊடகவியலாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு விரைந்த இளங்குமரன் எம்.பி மின்சார சபை உறுதிப்படுத்தியுள்ளது. எனவும் தெரியாது பேசிவிட்டேன் எனவும் கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த ஊடகவியலாளர்கள் நாம் செய்தியினை வெறுமனே உறுதிபடுத்தாது வெளிப்படுத்தவில்லை. நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு முதலில் மின்சார சபையை கேட்டுவிட்டு ஊடகவியலாளர்களுடன் இவ்வாறு பேசியிருக்க வேண்டும் என தெரிவித்தனர்.

உலகத் தமிழ் மக்களுக்கான வெற்றி; கனேடிய உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!

0

தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம் என்று அழைக்கப்படும் சட்டமூலம் 104 ஐ எதிர்த்து இலங்கை குழுக்கள் தாக்கல் செய்த வழக்கை கனேடிய உச்ச நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்துள்ளதாக ஒன்ராறியோ மாவட்ட சட்டமற்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டம் ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதியையும் ஒன்ராறியோவில் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் கிழமையாக குறிப்பிடப்படுகிறது.

மே 2009 இல் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் இறுதிக் கட்டங்களில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களை நினைவு கூரும் நேரமாக இது அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 2021 ஆம் ஆண்டு ஒன்ராறியோ சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த 104 சட்டத்தை ரத்து செய்யும் முயற்சியில் பல சிங்கள அமைப்புகளால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த முயற்சிகள் தமிழர் துன்பங்களை அழிக்கவும் அங்கீகாரத்தைத் தடுக்கவும் நோக்கமாகக் கொண்ட மறுப்பு பிரச்சாரம் என்று தமிழ் கனேடிய அமைப்புகளும் சட்ட வல்லுநர்களும் பரவலாகக் கண்டனங்களை வெளியிட்டு வந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், ஒன்ராறியோ நீதிமன்றங்களில் இந்தச் சட்டத்தை ரத்து செய்வதற்காக, தொடர் தோல்வியடைந்த சட்ட முயற்சிகளைத் கருத்தில் கொண்டு, கனேடிய உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சட்டமற்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம், இது கனடாவிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியென தெரிவித்துள்ளார்.

வட இந்து ஆரம்ப பாடசாலையின் ஆசிரியர் பொலிசாரால் கைது செய்யப்பட்டது ஏன்?

0

5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஆண்டு தோற்றும் மாணவர்களுக்காக பாடசாலை விடுமுறை நாட்களில் மேலதிக கற்றல் செயற்பாட்டுக்காக கற்பித்த ஆசிரியர் ஒருவர் யாழ் வடமராட்சியில் பொலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி வடஇந்து ஆரம்ப பாடசாலையில் கற்பிக்கும் தில்லைவாசன் என்ற ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார், மேலதிக வகுப்பிற்காக வந்த மாணவர்களுக்கு குறித்த ஆசிரியர் விடைத்தாள்களை சக மாணவர்களை கொண்டு ஒருவர் மாறி ஒருவர் மூலம் திருத்தப்பட்டுள்ளது.

இதன் போது பாதிக்கப்பட்ட மாணவியின் விடைத்தாளை திருத்திய மாணவி பிழையான விடைகள் எழுதப்பட்ட போதும் அதை திருத்தி சரியானதாக குறிப்பிட்டு அதிக புள்ளியை போட்டுள்ளார்.

இவற்றை அவதானித்துக் கொண்டிருந்த ஆசிரியர் விடைத்தாளினை பார்வையிட்ட போது மேற்குறித்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டு திருத்திய மாணவியை விசாரித்த பின் அந்த மாணவியை அடிக்காது விடையை எழுதிய மாணவியை அடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த மாணவியை, ஆசிரியரால் தாக்கப்பட்டதாக கூறி அவரது பெற்றோரால் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் நேற்று முன்தினம் (26) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை பெறும் அளவுக்கு பாதிப்புகள் எவையும் இல்லாத நிலையில் மாணவியை வைத்திய சாலையில் இருந்து விடுவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆசிரியருக்கு எதிராக மாணவியின் தாயாரினால் பருத்தித்துறை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை நேற்றைய தினம் கைது செய்த பருத்தித்துறை பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து குறித்த வகுப்பில் கல்விகற்கும் ஏனைய மாணவர்களது பெற்றோர் ஆசிரியருக்கு ஆதரவாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (27) மாலை ஒன்று கூடியிருந்தனர்.

பாடசாலை அதிபர் ஊடாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி விடுத்த அறிவுறுத்தலை அடுத்து நேற்று இரவு 8 மணி அளவில் ஆசிரியருக்கு ஆதரவாக திரண்ட பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றிருந்தனர்.

இதன் பின்னர் குறித்த ஆசிரியர் பொலிஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் (28) வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பருத்தித்துறை பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தங்களது பணிக்கடமைகளை விட மேலதிகமாக கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டு பிள்ளைகளுக்காக பாடுபட்ட ஆசிரியர் குறித்த மாணவியை கடுமையாகத் தாக்கினாரா? அல்லது மெதுவாகத் தாக்கினாரா என்பது தொடர்பாகவும் குறித்த மாணவிக்கு காயங்கள் எப்படி உள்ளன என்பது தொடர்பாகவும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைகளின் படியே ஆசிரியருக்கான நீதிமன்ற நடவடிக்கைகள் அமையும் எனத் தெரிய வருகின்றது.

ஏற்கனவே குறித்த பாடசாலையில் பெற்றோர் ஒருவருக்கும் பாடசாலை நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து ஊடகங்களில் குறித்த பாடசாலையின் செயற்பாடுகள் வெளியாகியிருந்தன.

கல்வி நிர்வாக பரீட்சை எழுதாது பதவிக்கு வந்த முன்னாள் பணிப்பாளர் யோன்குயின்ரஸ் அவர்களால் கடந்த காலத்தில் கல்வித் துறையில் விசுவாசமாக கடமையாற்றிய அதிபர், ஆசிரியர்களுக்கு எதிராக சில தோல்வியடைந்த அரசியல்வாதிகளுடன் இணைந்து தான்தோன்றித்தனமாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளின் அறுவடைகளையே வடக்கின் கல்வி தற்போது பெற்று வருகின்றது.

error: Content is protected !!