Tuesday, October 28, 2025
Huis Blog Bladsy 10

மன்னாரில் பொலிசாரின் அடாவடி : வவுனியாவில் எதிர்ப்புப் போராட்டம்..!

0

மன்னாரில் நிறுவப்படவுள்ள காற்றாலை மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொலிசாரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் இன்று (26) குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் அங்கிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கி வைத்தனர்.

மக்கள் போராட்ட இயக்கம் மற்றும் வவுனியா மாவட்ட சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஆகியன இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்,

“மன்னாரில் கடந்த 56 நாட்களாக போராடி வரும் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இந்த அரசு மக்களுக்கு விரோதமான முறையில் காட்டு மிராண்டித்தனமான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது.

எனவே இந்த திட்டத்தை அரசு உடனடியாக மீள்பரிசீலனை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

மன்னாரில் தாக்கி காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் கைது செய்ய நடவடிக்கை..!

0

மன்னாரில் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை பொலிசார் கொடூரமாக தக்கிய நிலையில் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த பொது மக்கள் அவசர அம்புலன்ஸ் சேவை ஊடாக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் பொலிசார் தங்கள் மீது உள்ள குற்றத்தை மறைக்கும் விதமாக பொதுமக்கள் மீது பல்வேறு விதமான பொய்யான வழக்குகளை தொடுத்து அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலும் போராட்டத்தில் முன்னின்று செயற்படும் சமூக செயற்பாட்டாளர்கள் சிலரை கைது செய்வதற்கான நடவடிக்கையையும் முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனநாயக ரீதியாக நடைபெற்ற போராட்டத்தில் அராஜகமாக மக்களை தாக்கியது மாத்திரம் இல்லாமல் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையையும் பொலிசார் மேற்கொண்டுள்ளமை மன்னார் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான நிலையில் அமைதியான மக்கள் போராட்டத்தில் பெண்கள் மதகுருக்கள் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தக்குதலை மேற்கொண்ட பொலிசார் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளை போராட்டகுழு முன்னெடுக்கவுள்ளதுடன் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பொலிஸ் முறைப்பாட்டு பிரிவிலும் முறைப்பாடு மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாக இருப்பினும் எதிர்வரும் கிழமைகளில் நடந்த அனைத்தையும் மறந்து எம்மவர்கள் பலர் தள்ளாடி கன்ரீனில் நட்பு பாராட்டியபடி மஹதயா கொந்தம ரசாய் என்றபடி கொத்தும், றைசும் உண்டபடி இருப்பார்கள்.

நீதிமன்றில் 40 வயதுடைய ஆண் ஒருவர் தற்கொலை..!

0

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சிறைக்கூடத்தில் 40 வயதுடைய ஆண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் மிச் நகர பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தை வாச்சுக்குட்டி நெவ்பர் என்பவரே உயிரிழந்துள்ளார்.

அவர் கடந்த 21ஆம் திகதி 2,400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு, 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது செப்டம்பர் 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இன்று (26) வழக்கு விசாரணைக்காக சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, திறந்த நீதிமன்ற சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டார்.

திறந்த நீதிமன்ற நடவடிக்கை பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில், குறித்த நபர் காலை 11.50 மணியளவில் சிறைக்கூடத்தில் உள்ள மலசல கூடத்திற்கு சென்று ஜன்னல் கம்பியில் தனது சாரத்தை கழற்றி கழுத்தில் மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தடவியல் பிரிவு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு, நீதவான் அனுமதியுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்திய சாலையில் ஒப்படைத்துள்ளனர்.

உயிரிழந்த நபருக்கு எதிராக இரண்டு திருட்டு மற்றும் நான்கு போதைப்பொருள் வழக்குகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சும்மா, ஆ காட்ட பே காட்ட யாழ்ப்பாணம் வெற்றிலை பெட்டி இல்லை – அர்ச்சுனா எம்பி

0

சும்மா, ஆ காட்ட பே காட்ட யாழ்ப்பாணம் வெற்றிலை பெட்டி இல்லை, என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்றைய அமர்வின் போது தெரிவித்தார்.

இந்த அரசாங்கத்தால் யாழ்ப்பாணத்தில் செய்த ஒரு அபிவிருத்தி திட்டத்தை கூறுமாறு கேட்ட அவர் யாழ்ப்பாணம் வெற்றிலை பெட்டி அல்ல என்றும் அர்ச்சுனா எம்பி ஆவேசமாக கூறினார்.

யாழ்ப்பாணம் அவரவர் வெற்றிலை பெட்டி அல்ல, வரும் நேரமும் போகின்ற நேரமும் சாப்பிடுறதுக்கு, அபிவிருத்தி செய்யப்பட்ட ஒரு வேலையை சொல்லுங்கள்,

யாழ் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நடைபெற்றது என்று ஒரு வேலையை கூறுங்கள் என்றும், அருச்சுனா எம்பி சபையில் கேள்வி எழுப்பினார்.

பைத்தியங்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது; அருச்சுனா எம்பிக்கு பீமல் தெரிவிப்பு..!

0

பைத்தியங்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது என அருச்சுனா எம்பிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நோஸ் கட் செய்த சம்பவம் இன்று நாடாளும்ன்றில் இடம்பெற்றுள்ளது.

எனக்கு பதிலளிக்க நேரத்தை தரவும் இல்லை​என்றால், குழப்பம் விளைவிக்கும் நபர்களை சபையில் இருந்து வெளியேற்றவும் என்றும் பைத்தியங்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்றும் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (26) முன்னதாக கேள்வியெழுப்பிய யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, யாழ். மாவட்டத்தில் செய்த அபிவிருத்தி திட்டங்களின் ஒன்றை கூறுமாறு கேட்டார்.

இதனிடையே அமைச்சின் அறிக்கையை வாசிப்பதற்காக, அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பெயரை, சபாநாயகர் அழைத்தார். அப்போது எதிரணியில் இருந்த சுஜீவ, கேள்விக்கு பதில் இல்லையா? எனக் கேட்டார். எனினும், சுஜீவ உங்களையும் அந்த வாட்டுக்குத்தான் அனுப்ப வேண்டும் என அமைச்சர் பிமல் கூறினார்.

மறுபுறத்தில் இருந்த சுஜீவ, எந்த வாட்டுக்கு என்று கேட்க, பின்னர் கூறுகிறேன் என்றார் பிமல், இதனிடையே எழுந்த அர்ச்சுனா, கேள்விக்கு பதில் இல்லையா? எனக்கேட்டார்.

அதற்கு பதிலளித்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பைத்தியங்களின் கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியாது என்றும், சபையில் குழப்பங்களை ஏற்படுத்தும் நபர்களை உடனடியாக வெளியேற்றுமாறும் கேட்டுக் கொண்டார்.

கொழும்பில் காவல்துறையினரை அச்சுறுத்திய அர்ச்சுனா; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

0

கடமையில் இருந்த காவல்துறை அதிகாரியை அச்சுறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது

அதன்படி, குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு புறக்கோட்டை காவல்துறை பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவை கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே நேற்று (25.09.2025) பிறப்பித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடமையில் இருந்த கோட்டை காவல்துறை அதிகாரி ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளவைித்ததாகக் கூறி, காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இராமநாதன் அர்ச்சுனா கோட்டை காவல்துறையில் பணியாற்றும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக பலவந்தமாக அதிகாரத்தை பயன்படுத்தியதாகவும், மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தை மீறியதாகவும் கூறி, கோட்டை காவல்துறையினர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் B அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.

குறித்த சம்பவத்தின் திருத்தப்படாத காணொளிக் காட்சிகளைப் பெறுவதற்கு தொடர்புபட்ட தொலைக்காட்சி ஊடகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு செய்யப்பட்ட கோரிக்கைக்கு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழில் பெண்ணின் செயலால் பரிதாபமாகப் பறிபோன இளைஞனின் உயிர்..!

0

யாழ். சாகவச்சேரி ஏ9 வீதி நுணாவில் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை இந்த விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சாவகச்சேரியில் இருந்து யாழ். நோக்கிச் சென்ற வாகனமொன்றை அதே திசையில் சென்ற உந்துருளி ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட வேளை இந்த விபத்து சம்பவித்துள்ளது.

முந்திச் செல்ல முற்பட்ட உந்துருளி எதிர்த் திசையில் யாழில் இருந்து சாகவச்சேரி நோக்கிச் சென்ற இளைஞர் ஒருவர் செலுத்திய உந்துருளியுடன் மோதியதில் இளைஞர் அருகில் பயணித்த வாகனத்தில் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த பெண் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து சம்பவத்தில் மீசாலை புத்தூர் சந்தி பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் சாகவச்சேரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஐ.நா முழுமையாக ஆதரவு..!

0

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஆகியோருக்கு இடையிலான நேற்று(25) சந்திப்பு இடம்பெற்றது.

நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கையின் புதிய பொருளாதார சீர்திருத்த செயல்முறையின் முன்னேற்றம், இலங்கையை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் புதிய தளத்திற்கு உயர்த்துவதற்காக அரசாங்கம் தற்போது செயல்படுத்தி வரும் செயற் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி ஐ.நா. பொதுச் செயலாளரிடம் விளக்கினார்.

இலங்கை அரசாங்கத்தின் புதிய முற்போக்கான செயற் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை முன்னிற்பதாகவும், முழு ஆதரவையும் தெரிவிப்பதாகவும் ஐ.நா. பொதுச் செயலாளர் இதன் போது குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுரவின் முடிவால் மன்னார் சுடுகாடாக மாறும் – அர்ச்சுனா எச்சரிக்கை

0

காற்றாலைகளை உருவாக்குவதன் மூலம் மன்னார் பிரதேசம் ஒரு சுடுகாடாக மாறுமே அன்றி அங்கு எந்தவொரு அபிவிருத்தியும் ஏற்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“மன்னாரில் காற்றாலை அமைக்கும் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று பணிப்புரை விடுத்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே மன்னார் மக்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசிய போது, மக்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எட்டப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட சென்றிருந்த அமைச்சரையும் மன்னார் மக்கள் தடுத்திருந்தனர். இவ்வாறான ஒரு சூழலில் நேற்றைய தினம் மீண்டும் காற்றாலை அமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்ளப் போவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இவ்வாறு காற்றாலைகளை உருவாக்குவதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக மன்னார் மண் அழிந்து வருகிறது. இவ்விடயத்தில் அரசாங்கம் மாபெரும் அரசியல் ஒன்றை நடத்தி வருகிறது.

மக்கள் இனியும் அவர்களை நம்பிக் கொண்டிருந்தால் மன்னார் பிரதேசம் சுடுகாடாக மாறுமே அன்றி அங்கு எந்தவொரு அபிவிருத்தியும் ஏற்படாது என தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச் செயலாளரை இன்று சந்திக்கும் ஜனாதிபதி அனுர..!

0

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கும் இடையிலான சந்திப்பு இலங்கை நேரப்படி இன்று (25) இரவு நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் பங்கேற்கவுள்ளார்.

இதற்கிடையில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தும் இன்று பல இராஜதந்திர சந்திப்புகளில் பங்கேற்கவுள்ளார்.

error: Content is protected !!