Thursday, March 5, 2026
Huis Blog Bladsy 114

ரணிலின் 23 வருட பாதுகாப்பு அதிகாரி யாழிற்கு இடமாற்றம்..!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, விக்ரமசிங்கவின் முக்கிய தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய தலைமை காவல் பரிசோதகர் அசோக ஆரியவன்ஸ, தற்போது காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு இட மாற்றப்பட்டுள்ளார்.

இந்த இடமாற்றத்திற்கு தேசிய காவல் ஆணைக்குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அசோக ஆரியவன்ஸ கடந்த 23 ஆண்டுகளாக விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அணியில் பணியாற்றியுள்ளார். இதில் 15 ஆண்டுகள் அவர் முக்கிய தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.

இந்த இடமாற்றம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் தற்போது கைதிலிருக்கும் முன்னாள் எம்பி சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் விக்ரமசிங்கவின் இடையிலான தொலைபேசி உரையாடலைப் பெற முயன்றதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்காக குறித்த அதிகாரி CID அதிகாரியொருவரை தொடர்பு கொண்டுள்ளதாகவும் போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

யாழில் சிறுமி துஸ்பிரயோகம்; மேலும் இருவர் பொலிஸாரால் கைது..!

0

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் 14 வயதுச் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய மேலும் இருவர் நேற்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

குறித்த சிறுமி கடந்த 3 ஆண்டுகளாக இவ்வாறு பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.இலங்கை வாகன வாடகை

இந்நிலையில் இந்த விடயம் வட்டுக்கோட்டை பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மேலும் இரு ஆண்கள் நேற்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்ட இருவரும் 45 மற்றும் 52 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் நேர்ந்த சோகம்; தீயில் எரிந்து இளம் பெண் உயிரிழப்பு..!

0

யாழ். போதனா வைத்திய சாலையில் தீயில் எரிந்த நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இணுவில் கிழக்கைச் சேர்ந்த நிவேதனன் விஜிதா (வயது 30) என்ற இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை வீட்டில் தனக்கு தானே தீமூட்டி தீயில் எரிந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று திங்கள் கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார் சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

வவுனியாவில் மீட்கப்பட்ட சடலம்; பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை..!

0

வவுனியா, நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் உள்ள தம்பனை புளியங்குளம் குளத்தில் மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண உதவுமாறு இன்று நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரக்கோன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

வவுனியா- இராசேந்திரகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம்- நேரியகுளம் வீதியில் உள்ள தம்பனை புளியங்குளம் பகுதியில் இருந்து கடந்த முதலாம் திகதி சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது.

குறித்த சடலம் 40 வயதிற்கு மேற்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மரணமடைந்து 10 – 15 நாட்களுக்கு பின்னரே குறித்த சடலம் மீட்கப்பட்டிருந்தது.

நீல கலர் கோடு போட்ட சேட்டு அவரது சடலத்தில் அருகில் கண்டு பிடிக்கப்பட்டது. உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதால் சடலத்தை பற்றிய மேலதிக அடையாளங்களை பெற முடியவில்லை.

வவுனியா வைத்திய சாலையில் உள்ள பிரேத அறை குளிரூட்டி இயங்காமையால் முல்லைத்தீவு வைத்திய சாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இதனை அடையாளம் காண உதவுமாறு கோருவதுடன், அவ்வாறு இல்லாவிடின் அரச செலவில் குறித்த சடலத்தை நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

உயர்தர பரீட்சையில் மாணவர்களை விட மாணவிகள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு..!

0

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியான நிலையில் ஆண் பரீட்சார்த்திகளை விட பெண் பரீட்சார்த்திகள் அதிக சதவீதத்தினர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை எழுதிய அனைத்து பரீட்சார்த்திகளிலும் 64.73% பேர் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதிகளைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெண் பரீட்சார்த்திகளில், 71.93% பேர் பல்கலைக் கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர், அதே நேரத்தில் ஆண் பரீட்சார்த்திகளில் 60.24% பேர் பல்கலைக் கழகத் தகுதியைப் பெற்றுள்ளனர்.

29,244 பரீட்சார்த்திகள் உயர்தர பரீட்சைகளின் மூன்று பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளதாக அவர் கூறினார்.

அத்துடன் மூன்று பாடங்களிலும் தோல்வியடைந்த மாணவர்களின் சதவீதத்திலும் இதேபோன்ற நிலை காணப்படுவதாகவும், ஆண் பரீட்சார்த்திகளில் 13.87% பேரும், பெண் பரீட்சார்த்திகளில் 8.6% பேரும் மூன்று பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளதாக அவர் மேலும் எடுத்துரைத்தார்.

இந்த ஆண்டு தேர்வுகளுக்குத் தோற்றிய 456 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்தவும் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

யாழில் அத்தானுடன் கள்ளக் காதல்; அக்கா கண்டித்ததால் தங்கை கிணற்றில் குதிப்பு..!

0

யாழில் தனது கணவனுடன் தனது தங்கை காதல் தொடர்பில் ஈடுபட்டு வந்ததை அறிந்த மனைவி தங்கையை கண்டித்ததால் தங்கை கிணற்றில் குதித்த சம்பவம் யாழ் உரும்பிராய் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

அப்பகுதிப் பாடசாலையில் சாதாரண தரம் கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார். எந்தவித வேலை வெட்டிக்கும் போகாது தாய், தந்தையின் உழைப்பிலும் வெளிநாட்டு வாழ் தனது சகோதரர்களின் பணத்திலும் வாழ்ந்து வந்த 22 வயதான ஒருவன் கடந்த சில மாதங்களுக்கு முன் 20 வயதான யுவதியை திருமணம் முடித்துள்ளான்.

ரிக்ரொக் மூலமான அறிமுகத்திலேயே இந்த திருமணம் இடம் பெற்றுள்ளது. இதன் பின் இவன் தனது மனைவியுடன் தனது பெற்றோரின் வீட்டிலேயே வேலை வெட்டிக்குப் போகாது வாழ்ந்து வந்துள்ளான்.

உரும்பிராய் பகுதியில் அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபார நிலையம் ஒன்றை ஆரம்பிக்க இருப்பதாக தனது ரிக்ரொக் பக்கத்தில் தகவல் வெளியிட்டு வந்துள்ளான். அதே நேரத்தில் மனைவியின் தங்கையையும் காதலித்து வந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

இதனையறிந்த மனைவி தனது பெற்றோருடன் இருந்த தங்கையிடம் சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறு சண்டை பிடித்துக் கொண்டிருந்த போது மனைவியின் தங்கை அப்பகுதியில் உள்ள தோட்டப் பகுதிக்கு ஓடிச் சென்று கிணற்றில் குதித்துள்ளார்.

தங்கையின் பின்னால் சென்ற அக்கா மற்றும் உறவுகளும் அப் பகுதியால் சென்றவர்களும் உடனடியாக செயற்பட்டு குறித்த மாணவியை உயிருடன் மீட்டதாக் தெரிய வருகின்றது.

மாணவி கிணற்றுக்குள் விழுந்ததை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மாணவியின் அத்தானை பிடித்து தாக்கியதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

தற்போது குறித்த அத்தானின் ரிக்ரொக் தளம் செயற்படவில்லை என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகன எண்ணிக்கை குறைப்பு..!

0

இலங்கையில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாகக் கட்டுப்படுத்தும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதோடு , அமைச்சர்களுக்கு மாதத்திற்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவும் 700 லிட்டராக வரையறுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஒரு அமைச்சருக்கு மூன்று வாகனங்கள் வழங்கப்பட்டு, மாதந்தோறும் 2,250 லிட்டர் எரிபொருள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

ஜனாதிபதி கனவுடன் வலம் வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில்..!

0

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எனவும் அவர் சில மாதங்களில் ஜனாதிபதியாக வருவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதாரம் இப்போது சரிந்து கொண்டிருக்கிறது. அப்போது அதை மீண்டும் யார் கட்ட முடியும் என்பதை மக்கள் நினைவில் கொள்வார்கள்.

கோத்தபய இரவில் குழியில் விழுந்தார் பகலில் அனுர குழியில் விழுந்தார். காலையில் சஜித்துடன் விழத் தயாராக இருக்கும் மூளை உள்ளவர்கள் இலங்கையில் யாரும் இல்லை.

அப்படியானால் மீதமுள்ள ஒரே தீர்வு ரணில் விக்ரமசிங்கவே. வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக் கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே நான் எப்போதும் சொல்வேன், ரணில் விக்ரமசிங்கேவின் முகத்தைப் பார்க்காதீர்கள். அவர் கையை அசைக்கும் விதம் அல்லது மக்களின் தோள்களைத் தொடும் கையைப் பற்றிப் பேசாதீர்கள்.

அவரது மண்டைக்குள் இருக்கும் மூளையைப் பாருங்கள். அவரிடம் வேறு எதுவும் இருந்தாலும் பயனில்லை, அந்த மூளை இல்லாமல், இந்த நாட்டை நெருக்கடியிலிருந்து கட்டியெழுப்ப முடியும், ரணில் விக்ரமசிங்கேவுக்கு மட்டுமே தலைமை உள்ளது.

அந்த சுயபலத்துடன் நாங்கள் போராடுகிறோம். இந்தத் தேர்தலில் நாங்கள் முன்னேறி வருகிறோம். பெரிய வெற்றி கிடைக்கா விட்டாலும், எங்கள் வெற்றி தெரியும். எங்கள் நாடு வெற்றி பெறும்.” இந்த வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியாகும்.

மாத்தறை சிறைச் சாலையில் இரண்டு கைதிகள் குழுக்களிடையே அமைதியின்மை..!

0

மாத்தறை சிறைச் சாலையில் இரண்டு கைதிகள் குழுக்களிடையே அமைதியின்மை அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை அதிகாரிகளால் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் இன்று (22) பிற்பகல் இடம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு கைதியை வேறு சிறைச்சாலைக்கு மாற்ற முயற்சித்த போதே இந்த சூடான சூழ்நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, சிறைச்சாலையின் வௌியில் பாதுகாப்பிற்கு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

சிறைச்சாலை வட்டாரங்களின் தகவலின் படி, சக கைதிகளை மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கைதிகள் குழு ஒன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் அமைதியின்மை தொடங்கியது.

ஒரு வார்டைச் சேர்ந்த கைதிகள் வெளியேறி ஒழுங்கீனமாக நடந்து கொள்ளவும், வேறு சில கைதிகளுடன் மோதவும் தொடங்கியதால் நிலைமை மேலும் மோசமடைய தொடங்கியது.

இதனையடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், சிறை அதிகாரிகள் வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

தற்போது நிலைமை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மகிந்த ஆட்சியை விட மோசமான ஆட்சியே தற்போது நடக்கிறது – வி. மணிவண்ணன்

0

மகிந்தவின் அடக்குமுறை ஆட்சியில் கூட தற்போது போன்று அப்பட்டமான முறையில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படவில்லை என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்.

தேசிய மக்கள் சக்தி என கூறிக்கொள்ளும் ஜே.பி.வியினர் அப்பட்டமான முறையில் தேர்தல் விதிமுறைகளை மீறுகின்றனர். யாழ்ப்பாணத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி ஆலயங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

எமக்கு வாக்களித்தாலே உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்குவோம் என பகிரங்கமாக மேடையில் ஜனாதிபதி மக்களை அச்சுறுத்தும் வகையில் கருத்து கூறுகின்றார்.

காரைநகர் பிரதேச சபை செயலர், சபையின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் தேசிய மக்கள் சக்தியினருக்கு ஆதரவாக பதிவுகள் இடுகின்றார். இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தும் இது வரையில் எந்த நடவடிக்கையும் இல்லை.

ஊழலை ஒழிப்போம், மாற்றத்தை ஏற்படுத்துவோம் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் முந்தைய அடக்குமுறையான ஆட்சியாளரான மகிந்தவை விட மிக மோசமாக செயற்படுகின்றனர்.

இவர்களின் ஆட்சி விந்தையானது. ஊழலை ஒழிப்போம் , சட்டவிரோத செயலை இல்லாமல் செய்யவோம் என கூறியவர்கள் தற்போது தம்முடன் போலியான நபர்களையும், சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்களையும் தம்முடன் இணைத்து வைத்து உள்ளார்கள்.

காரைநகர் பிரதேச சபை வேட்பாளர் ஒருவர் அண்மையில் சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தது.

எனவே மிக மோசமான இந்த ஆட்சியாளர்களை எமது மண்ணில் கால் ஊன்ற மக்கள் அனுமதிக்க கூடாது என உரிமையோடு கேட்கிறோம் என தெரிவித்தார்.

error: Content is protected !!