15 வயது சிறுமியொருவர் தன் தந்தையின் நண்பரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான சம்பவம் ஒன்று தனமல்வில பகுதியில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, கடந்த 19ஆம் திகதி சிறுமியின் தந்தை அண்டைவீட்டை சேர்ந்த 50 வயதுமிக்க நபருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
மது அருந்திவிட்டு, தந்தை வீட்டை விட்டு வெளியேறிய போது, சந்தேக நபர் சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து, அவரை பயமுறுத்தி, வீட்டின் தோட்டத்திற்கு கீழே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
நடந்த சம்பவம் குறித்து சிறுமி தனது தாயிடம் கூறிய பிறகு, தாயும் சிறுமியும் தனமல்வில பொலிஸாரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேக நபர் நேற்றையதினம் கைதாகியுள்ளார்.
குறித்த நபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர், 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனது பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை நீக்குமாறு பாராளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (21) விசேட உரையொன்றை ஆற்றிய ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குவதற்கு சட்டமூலம் ஒன்றை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் கொண்டு வருவதாகவும், ஜனாதிபதி சலுகைகள் சட்டத்தை திருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
“சில விடயங்களை நாங்கள் இப்போதுதான் தெரிந்து கொள்கிறோம். நான் ஜனாதிபதியான பிறகு, பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததற்காக எனக்கு ஓய்வூதியம் கிடைக்கிறது. அதாவது, ஜனாதிபதி சம்பளத்திற்கு மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினரின் ஓய்வூதியமும் கிடைக்கிறது.
நான் இன்று கடிதம் ஒன்றை கொடுத்தேன், எனக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியம் வேண்டாம் என்று. இந்த நாட்டை சரி செய்ய ஆரம்பிக்க வேண்டும். உண்மையைச் சொல்லப் போனால், எனக்கு அப்படி ஒரு ஓய்வூதியம் கிடைக்கும் என்று தெரியாது, பின்னர்தான் அது கிடைப்பது தெரிய வந்தது.
அதனால், பாராளுமன்றத்திற்கும் கடிதம் ஒன்றை கொடுத்தேன், எனக்கு ஓய்வூதியம் வேண்டாம் என்று. அதேபோல், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமைச்சராகும் போது, பாராளுமன்ற உறுப்பினர் சம்பளமும் கிடைக்கிறது, அமைச்சர் சம்பளமும் கிடைக்கிறது. நாங்கள் ஒரு தீர்மானம் எடுத்தோம், அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தை மட்டுமே பெறுவார்கள். ஆனால், பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்துடன் அமைச்சர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு கிடைக்கிறது.
பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தின் இருந்து எரிபொருள் கொடுப்பனவையும் நீக்கி, நாங்கள் அதை வழங்கவுள்ளோம். அதே போல், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் நீக்குகிறோம். ஜனாதிபதி சலுகைகள் சட்டத்தையும் திருத்துவோம்.” என்றார்.
அரசாங்கம் ஒரு பக்கமும், உள்ளூராட்சி நிறுவனங்கள் மறு பக்கமும் இருந்தால், முரண்பாடுகள் உருவாகி குழப்பம் ஏற்படும் என மக்கள் விடுதலை முன்னணியில் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பெலவத்தையில் உள்ள ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் இன்று (21) பிற்பகல் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, உள்ளூராட்சி நிறுவனங்களினது அதிகாரத்தையும் நாட்டை வழிநடத்தும் திசைக்காட்டி கொண்டிருப்பது, உள்ளூராட்சி நிறுவனங்கள் நாட்டை வழிநடத்தும் டில்வின் சில்வா சுட்டிக் காட்டியுள்ளார்.
உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரம் வேறொரு குழுவிற்கு மாற்றப்பட்டால், அரசாங்கத்தின் பணிகளை நாசப்படுத்த எதிரிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசாங்கத்தின் அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதற்கும் அரச சேவைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கும் நாட்டின் முயற்சிகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரம் மிகவும் முக்கியமானது என்றும் டில்வின் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், திசைக்காட்டி கட்சி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளுடன் வலுவான நிலையில் இருந்ததால், உள்ளூராட்சி தேர்தலும் வெல்லப்படும் என்று தான் நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
யாழ் மாவட்ட வேட்புமனுத் தாக்கலில் அர்ச்சுனாவின் ஊசி.சின்னம் 17 சபைகளிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை அர்ச்சுனா புலம்பெயர் தமிழர்களி்டமிருந்து தேர்தலுக்காக பெருமளவான பணத்தைப் பெற்ற பின் திட்டமிட்டு தேர்தல் மனுக்களில் தவறுகளை ஏற்படுத்தி ஏற்படவுள்ள பாரிய தோல்வியை மறைப்பதற்காக குறித்த நியமனப் பத்திரங்களை நிராகரிக்க வைத்திருக்கலாம் என சந்தேகம் எழுவதாக சமூகவலைத் தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் சந்திரசேகரனை படிப்பறிவு இல்லாதவர் என மட்டம் தட்டிக் கதைப்பது, மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகளை படிப்பறிவு இல்லாதவர்கள், திட்டமிடல் தெரியாதவர்கள் என ஏசுவது, பாராளுமன்றத்தில் தமிழ் பிள்ளைகளை விபச்சாரிகள் என கதைப்பது என அறிவாளியாக திரிந்த உமக்கு ஒரு தேர்தல் படிவம் நிரப்ப தெரியவில்லையா?? அல்லது புலம்பெயர் தமிழர்களிடமிருந்து உமக்கு தேர்தலுக்கு போட்டியிடுவதற்காக வந்த பணத்தை நீர் கொள்ளை அடிப்பதற்காக இவ்வாறு தேர்தல் குளறுபடிகள் செய்தீரா? உம்மை நம்பி தேர்தலில் குதித்த அந்த அப்பாவிகளின் நிலை இனி என்னவாக இருக்கும் என முகநூல்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி விடுவதாக கூறி பணம் பெற்று வந்த பொலிஸ் உயர் அதிகாரியின் மகனை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரின் மகன், பொலிஸ் நிலையங்களில் உள்ள வழக்குகளை முடிப்பதாக கூறி பணம் பெற்று வந்தமை தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையில், பொலிஸ் அதிகாரியின் மகன் தலைமறைவாகி இருந்தார்.
அது குறித்து, யாழ் நீதவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்த நிலையில், சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துமாறு நீதிமன்று பொலிஸாருக்கு கட்டளையிட்டிருந்தது.
இந்நிலையில் பொலிஸ் அதிகாரியின் மகன் இன்றைய தினம் (17) சட்டத்தரணி ஊடாக மன்றில் முன்னிலையானதை அடுத்து, அவரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.
அதேவேளை, சந்தேக நபரின் தந்தையான பொலிஸ் அதிகாரி முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உடலில் எங்கும் பச்சை குத்திக் கொண்டிருப்பவர்கள் பொலிஸ் துறையில் வேலைக்குத் தகுதி பெற மாட்டார்கள் என தலைமைப் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர குறிப்பிட்டுள்ளார்.
உடலில் பச்சை குத்திய ஒருவர் தனது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்து ஆயுதப் படைகளில் பணிபுரிய விரும்பினாலும், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
உடலின் மிகப் பெரிய உறுப்பு தோல். அந்த தோலை அழிப்பது நல்லதல்ல, நாம் இது தொடர்பில் ஆராய வேண்டும்.
எனவே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலும், உடலில் பச்சை குத்தியிருந்தால் எந்த ஆயுதப் படையிலும் இணைய வாய்ப்பு கிடைக்காது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிர் மாய்த்துள்ளார். இதன் போது வசாவிளான் தெற்கு பகுதியைச் சேர்ந்த பிரகாஸ் பிருந்தா (வயது 26) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
குறித்த பெண் ஆறு மாதங்கள் கர்ப்பிணியாக காணப்படுகின்றார். கணவனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கடந்த 2ஆம் மாதம் 20ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்துள்ளார்.
இந்நிலையில் அயலவர்கள் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகள் நாளைய தினம் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு பாடசாலை ஒன்றில் தரம் 10 ஆண்டில் கல்விகற்கும் மாணவி ஒருவரை காதலிப்பதாக தெரிவித்த சக மாணவனை அதிபர் பிரம்பால் அடித்ததில் மாணவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் நேற்று (15) இடம் பெற்றுள்ளதாக அந்த பிரதேச பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பாடசாலையில் ஆண் பெண் பிள்ளைகள் கற்றுவரும் கலவன் பாடசாலையில் சம்பவதினமான நேற்று குறித்த பாடசாலையில் தரம் 10 ம் ஆண்டில் கல்விகற்றுவரும் மாணவி ஒருவரை பார்த்து அதே வகுப்பில் கல்விகற்று வரும் மாணவன் ஜ லவ் யூ என தெரிவித்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
அது தொடர்பில் மாணவி பாடசாலை அதிபரிடம் சென்று குறித்த மாணவன் ஜ லவ் யு என தெரிவித்ததாக முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து அதிபர் குறித்த மாணவனை தனது காரியாலயத்துக்கு வரவழைத்து பிரம்பால் மாணவன் மீது இரண்டு அடி கொடுத்து ஒழுக்கமாக நடக்குமாறு தெரிவித்து எச்சரித்து அனுப்பியுள்ளார்.
வீட்டிற்கு சென்ற மாணவன் அதிபர் தனக்கு அடித்துள்ளார் என தெரிவித்ததையடுத்து மாணவனை பெற்றோர் மட்டு போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதுடன் அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அதிபரை விசாரணைக்கு அழைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சிறுவர் பெண்கள் பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவத்தில் ஒருசில படையினர் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். இதனை முழு இராணுவத்தினர் மீதும் தொடர்புபடுத்தி இராணுவத்தினர் யுத்தக் குற்றத்திலும், பாலியல் துஷ்பிரயோக செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர் என்று குற்றஞ் சாட்டுவதை ஏற்க முடியாது.
சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் காலத்துக்கு பொருத்தமற்றவையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தின் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
ராஜபக்ஷக்களை ரணில் விக்கிரமசிங்கமே பாதுகாத்தார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குறிப்பிட்டிருந்தார். எங்களுக்கு எதிராக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டார்.
அதிகளவில் வழக்குகளை தாக்கல் செய்தார். நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல் ஒழிப்பு அலுவலகத்தின் செயலாளராக பதவி வகித்த ஆனந்த விஜேபால தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக செயற்படுகிறார். நீங்களே அந்த வழக்குகளை தாக்கல் செய்தீர்கள். அவற்றில் நாங்கள் நீதிமன்றத்தினால் நாங்கள் விடுதலையாகி உள்ளோம்.
கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் இறையாண்மைக்ககு எதிராக செயற்பட்டார். ஆனால் தற்போது சர்வதேச ஊடகங்களில் அவர் நாட்டை காட்டிக் கொடுக்காமை தொடர்பில் மகிழச்சியடைகின்றோம்.
எமது அரசியல் மாற்றங்கள் என்பது வேறு விடயமாகும். நம்மிடையே நட்புறவுகள் உள்ளன. 2005இல் ஒரே மேடையில் இருந்தோம். 2015 இல் நீங்களும் ரணிலும் ஒரே மேடையில் இருந்தீர்கள். இப்போது பட்டலந்த அறிக்கையை நீங்களே முன் வைக்கின்றீர்கள். அன்று அந்த அறிக்கையை மறைத்து வைத்துக் கொண்டு இருந்தீர்கள்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் 2005இல் உடன்படிக்கை கைச்சாத்திடும் போது குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என்று கூறவில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கவின் அமைச்சரவையிலும் இருந்தீர்கள். அப்போதும் பட்டலந்த அறிக்கை தொடர்பில் பேசவில்லை. ஆனால் இப்போது சர்வதேச ஊடகம் கேட்டதும் அந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளீர்கள்.
நாங்கள் நாட்டை பாதுகாக்க வேண்டும். நாட்டின் முன்னாள் தலைவர் ஒருவர் வெளிநாட்டுக்கு சென்று எமது இராணுவத்தினர் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டனர் என்பதனை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு சென்றால் மஹிந்த ராஜபக்ஷவுக்கோ, ரணில் விக்கிரமசிங்கவுக்கோ பாதகமாக அமையாது, முழு நாடும் நெருக்கடிக்குள்ளாக நேரிடும்.
சாணக்கியன், இராணுவத்தினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றார். இராணுவத்தினர் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டனர் என்பது மட்டுன்றி பாலியல் வன்கொடுமைகளிலும் ஈடுபட்டதாகவும் கூறுகின்றார். ஏதேனும் சம்பமொன்று முன்னாள் இராணுவ சிப்பாயால் நடந்திருக்கலாம்.
ஒரு நபரின் செயற்பாட்டை முழு இராணுவத்தினருடனும் தொடர்புபடுத்த வேண்டாம். பாதாள கும்பல் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதில் தலையீடு செய்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். அந்த நடவடிக்களை எடுக்கும் போது நாங்கள் உங்களை பாதுகாக்கின்றோம்.
பாதாள உலக கும்பலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் போது பிலிப்பைன்ஸில் நடந்ததை போன்று மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உங்களை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல நாங்கள் இடமளிக்கப் போவதில்லை. இதனால் இறுதியில் நாடே வீழ்ச்சியடையும்.
இங்கே சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் காலத்திற்கு பொருத்தமானது அல்ல. இராணுவத்தினர் அன்று யுத்தம் செய்தனர். அதன் போது ஏதேனும் சம்பவம் இடம் பெற்றிருந்தால் அது தொடர்பில் விசாரணை செய்வதல்ல பிரச்சினை, இதனை அரசியல் விடயமாக மாற்றி, வருடங்கள் பலவற்றுக்கு பின்னரும் இதுபற்றி கூறிக் கொண்டு போனால் 1988 இல் நடந்த சம்பவத்தை 2028 இலும் கதைப்போம் என்றால், 2009இல் நடந்தவற்றை 2048 இலும் கதைக்க தயாராவோம் என்றால் அதனூடாக இந்த சமுகத்தில் வெறுப்புணர்வு உருவாகுவதை நிறுத்த முடியாது.
வெறுப்புணர்வற்ற அரசியலை இங்கே கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரசு என்ற விடயத்தில் நாம் எல்லோரும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்றார்.
யாழ் போலீஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவு மற்றும் போதை தடுப்பு போலீசார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், பாரியளவில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட இடம் ஒன்று முற்றுகையிடப்பட்டதாக யாழ் போலீசார் தெரிவித்தனர்.
கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய இந்த திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 20 லிட்டர் கசிப்பு ஆறு பரல் கோடா என்பன இதன் போது கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ் அத்தியூஸ் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தொடர்ச்சியாக கசிப்பு உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டது.