அனலைதீவு பகுதியில் நீர் நிறைந்த கிணற்றில் தவறி வீழ்ந்து பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் இன்று (12) நாலை 5.45 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனலைதீவு, 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சுப்பையா நளினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நாட்டில் தொடரும் அசாதாரண வானிலையை தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நீர் நிலைகளும் நிரம்பி இருக்கின்ற சூழலில் இவ்வாறு நிகழ்ந்த சம்பவம் குறித்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் உறவினரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இரணைப்பாலை வீதியில் கடந்த 09.12.2025 அன்று இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கடந்த 9 ம் திகதி 31 வயதான இரணைப்பாலையினை சேர்ந்த அன்ரன் செல்வராசா திலைக்சன் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த கனரக வாகனத்தில் மோதி விபத்தினை சந்தித்துள்ளார்.
காயமடைந்த குறித்த குடும்பஸ்தர் உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 12.12.2025 அன்று உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தினை ஏற்படுத்திய கனரக வாகனமும் சாரதியும் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு வீதி போக்குவரத்து பொலீசாரால் வழக்கு தொடரப்பட்ட நிலையில் சாரதி கைது செய்யப்பட்டு 10.12.2025 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது குறித்த சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்
இந்த வழக்கு விசாரணை 13.01.2026 அன்று திகதியிடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் சமீபத்தில் டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக அரசு கால்நடை மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று முதல் மூன்று நாள் மொபைல் கால்நடை மருத்துவ முகாமை ஆரம்பிக்க இருப்பதாக சங்கத் தலைவர் டாக்டர் உபல ரஞ்சித் குமார குறிப்பிட்டார்.
இந்த திட்டம் விவசாயம், கால்நடை, நில மற்றும் பாசன அமைச்சு, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் (DAPH) மற்றும் அரச கால்நடை மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது.
“மன்னாரின் பல கிராமங்களுக்கு எட்டு குழுக்கள் அனுப்பப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பண்ணைகளை கண்டறிந்து சேவைகள் வழங்கப்படும். பொதுமக்கள் தங்களுடைய கால்நடைகளை சிகிச்சைக்காக கொண்டு வருமாறு அறிவிப்புகள் மூலம் தகவல் வழங்கப்படும்,” என டாக்டர் குமார தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வெள்ளத்தால் மேய்ச்சல் நிலங்கள் நீரில் மூழ்கியதால் கால்நடைகளுக்கு தீவனக் குறைப்பு கடுமையாக ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க 250 மெட்ரிக் டன் மாட்டுத் தீவனம் ஏற்கனவே மன்னாருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.
“இந்த தீவனம் நிலைமைகள் சீராகும் வரை விவசாயிகள் தங்கள் கால்நடைகளை பராமரிக்க பெரிதும் உதவும்,” என்றார்.
தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திலுள்ள புத்தளம் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 12 வாக்குகள் கிடைத்துள்ள அதேவேளை, ஆதரவாக 7 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.
ஓர் உறுப்பினர் வாக்களிப்பிலிருந்து தவிர்த்துக்கொண்டதுடன், இதற்கமைய புத்தளம் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டத்தில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளது.
மாநகர முதல்வர் எம்.எஃப். ரின்ஸாத் அஹமட், வரவு செலவுத் திட்ட அறிக்கை முதன்முறையாக சபையில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் அது தோல்வியடைந்தது.
இதனையடுத்து, மாநகர முதல்வர் எம்.எஃப். ரின்ஸாத் அஹமட் சபையை நாளை வரை ஒத்திவைத்து கூட்டத்தை நிறைவு செய்தார்.
எனினும், இது மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்திற்கு முரணான செயற்பாடு எனவும், சட்டவிரோதமானது எனவும் குறிப்பிட்டு, 12 மாநகர சபை உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதமொன்று மாநகர சபை செயலாளர் ஊடாக மாநகர முதல்வரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு கடற்றொழில் அமைச்சராக பதவி வகித்த போது ராஜித சேனாரத்னவினால் நிதிமோசடி செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை ஜனவரி மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹால் இன்று உத்தரவிட்டார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மோதரை மீன்பிடித் துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கிய போது அரசாங்கத்திற்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழங்குத் தாக்கல் செய்துள்ளது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட ராஜித சேனாரத்ன சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி, அனில் சில்வா, திருத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாதுகாப்பு தரப்பு பூர்வாங்க ஆட்சேபனைகளை எழுப்ப விரும்புவதாகவும், அவ்வாறு செய்வதற்கு முன்னர், அவற்றைப் படிப்பதற்கு அவகாசம் கோருவதாகவும் நீதிமன்றத்தில் தனது மனுவை சமர்ப்பித்தார்.
இதன் போது நீதிமன்றில் ஆஜரான இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான 13 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரினர்.
இதனை தொடர்ந்து வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வெலிவேரிய பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி ஐஸ் போதைப் பொருளை கொடுத்து 21 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 6 பேரை கைது செய்வதற்கான விசாரணைகளை வெலிவேரிய பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகமும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொண்டுள்ளனர்.
வெலிவேரிய பொலிஸ் நிலையத்திற்கு வந்த பெண் ஒருவர் சுய நினைவின்றி கீழே விழுந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் விசாரணைகள் பல விடயங்களை குறித்த பெண் வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த பெண் பேலியகொடை பிரதேசத்தில் உள்ள இளைஞன் ஒருவனுடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதுடன், காதலன் குறித்த பெண்ணை வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் குறித்த இளைஞன் தனது நண்பர்கள் சிலரையும் குறித்த அறைக்கு வரவழைத்து கட்டாயப்படுத்தி ஐஸ் குடிக்க வைத்து, மயக்கமடைந்த பிறகு பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகவும் அவற்றை தனது காதலன் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
கூட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான குறித்த பெண் வைத்திய பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இப் பதிவானது சமூக விளிப்புணர்வுக்காகவே பதிவிடப்படுகின்றது.
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வீட்டுக்கானதா அல்லது நபருக்கானதா என்ற விளக்கத்தை எழுத்து மூலமாக வழங்குமாறு யாழ் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம் இரு நாட்கள் காலக்கெடு வழங்கி கடிதம் அனுப்பி உள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது நேற்று முன்தினம் புதன்கிழமை மாணவன் ஒருவர் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25000 ரூபாய் கொடுப்பனவில் வெள்ளத்தில் சிக்குண்ட தமது வீட்டை புறக்கணித்து விட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.
மேலும் தாயின் பாராமரிப்பிலும் பாதுகாப்பிலும் வார்ந்து வருகின்ற தனது வயது 16 புனித பத்திரிசியார் கல்லூரியில் படித்து வருகிறேன் எனக் குறிப்பிட்டதோடு தனது தாயார் குடும்பச் சுமை காரணமாக தற்காலிகமாக கொழும்பிற்கு வேலைக்கு சென்று 3 மாதகாலமாகி விட்டது.
ஆகையால் எனது பாதுகாப்பு கருதி என்னை குருநகரில் வசிக்கும் பெரிய தாயாருடன் விட்டுச் சென்றுள்ளார்.
எனது அம்மம்மாவும் அங்களோடு இருப்பதால் அவருடைய அடிப்படை தேவைகளையும் பூர்த்தி கட்டாயத்தில் எனது தாயார் உள்ள நிலையில் தாயாரே முழு குடும்ப சுமையையும் தாங்கி வருகிறார்.
எனது வீடு கல்லூண்டாயில் இருப்பதால் நான் அங்கு ஒவ்வொரு ஞாயிறும் சென்று வருவதோடு அங்கு மத ஆராதனை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடப்பதுண்டு.
ஆனால் இரு வாரமாக நான் அங்கு செல்ல வில்லை வெள்ளம் வந்ததால் வீட்டின் மின் இணைப்புக்களில் தண்ணீர் சென்றுள்ளது எனவே உறவினர் சென்று பர்வையிட்டு வந்து கூறினார் .
அதனால் அரசாங்கம் வழங்கும் வெள்ள அனர்த்த நிதியினை எனது தாயார் கிராம சேவையாளரிடம் தரும்படி, பதிவினை மேற் கொள்ளும் கேட்டார் அவர் மறுத்து விட்டார்.
குறித்த குடியிரிப்பில் வாழாத குடும்பங்காருக்கு கொடுத்துள்ளார் ஆனால் எனது தாயாரை மட்டும் புறக்காணித்து ஊழல் செய்கிறார் என தனது முறைப்பாட்டை வழங்கியிருந்தார்.
குறித்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யால் பிராந்தி அலுவலகம் அரசாங்கத்தின் 25000 ரூபா நிவாரணத் தொகை வீட்டுக்கானதா அல்லது தனிநபருக்கானதா என்ற விளக்கத்தை இரு நாட்களுக்குள் எழுத்து மூலம் ஆணைக் குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு சண்டிப்பாய் பிரதேச செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளது.
‘மெய்யழகன்’ படத்தினை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் ‘வா வாத்தியார்’ ரிலீசாக இருக்கிறது. நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட இந்த படத்தை திரையில் காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருப்பில் உள்ளனர்.
இந்நிலையில் ‘வா வாத்தியார்’ ரிலீஸ் குறித்து வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஆனால் இப்படத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட காரணத்தால் திட்டமிட்டப்படி வெளியாகுமா, இல்லையா? என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் அறிவிக்கப்பட்டதை போன்று நாளை ‘வா வாத்தியார்’ ரிலீசாக வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் கடுமையாக அப்செட் அடைந்துள்ளனர்.
‘வா வாத்தியார்’ தயாரிப்பாளர் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா வாங்கிய கடனை திருப்பி அளிக்கும் வரை இந்த படத்தினை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
ஆனாலும் திட்டமிட்டப்படி படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகளில் படக்குழு கவனம் செலுத்தியது. இதனிடையில் நேற்றைய தினம் இப்படத்தின் வழக்கு விசாரணை நடந்த நிலையில் ஞானவேல் ராஜா தரப்பில் தற்போது 3 கோடியே 75 லட்சம் ரூபாயை 24 மணி நேரத்தில் செலுத்துவதாகவும், மீதமுள்ள தொகைக்காக சொத்து ஆவணங்களை தாக்கல் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் கடன் தொகையை திருப்பி செலுத்தும் வரை ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிடக் கூடாது என தடை விதித்துள்ளது. இதனால் நாளை படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் ‘வா வாத்தியார்’ தொடர்பாக படக்குழு புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளது. தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள இந்த அதிகாரப் பூர்வ அறிவிப்பில் ‘வா வாத்தியார்’ விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வவுனியாவில் சேதமடைந்த ரயில் பாதைகளை இன்றைய தினம் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஏரங்க குணவர்த்தன பார்வையிட்டிருந்தார்.
நொச்சிமோட்டை பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக அப்பகுதியில் இருந்த ரயில் பாதை கடுமையாக சேதமடைந்தது.
தற்போது குறித்த பாதையை செப்பனிடும் பணிகள் ராணுவத்தினரின் உதவியுடன் ரயில்வே திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் சுமார் 125 மீட்டர் நீளமான சேதமடைந்த வீதியை செப்பனிடும் பணிகளை இன்றைய தினம் நகர அபிவிருத்தி அமைச்சர் ஏரங்க குணவர்தன நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.
இதன் போது அங்கு பணியாற்றும் இராணுவத்தினர் மற்றும் ரயில்வே திணைக்கள ஊழியர்களுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.