களுத்துறை, வரக்ககொட பகுதியில் 8 வயது சிறுமியை இயற்கைக்கு மாறான முறையில் மிக கொடூரமான முறையில் துஷ்பிரயோகம் செய்த 15 வயது மாணவர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாய் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு சிறுவர்களும் பாதிக்கப்பட்ட சிறுமி வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி பயத்தில் யாரிடமும் இது குறித்து சொல்லவில்லை.
இரவில் அவரது தாயார் சிறுமியை குளிக்க வைக்கும் போது சிறுமிக்கு ஏற்பட்ட வலி காரணமாக இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி சிறப்பு பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் நாளை (14 ஆம் திகதி) சிறப்பு கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகள் கூறுகையில், எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் கூட்டணியை உருவாக்க இந்த கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம், முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் இது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது, அதன் தொடர்ச்சியாக இந்த கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த கலந்துரையாடலில் அநுர அரசுக்கு எதிராக பலமாக செயற்படவேண்டியதன் அவசியம் குறித்தும் அதற்காக எதிர்க்கட்சி அரசியல் கூட்டணியை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் ஆராயப்படவுள்ளதாக எதிர்க்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன நேற்று (12) குற்றப் புலனாய்வுத் துறையில் தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
பொல்கஹவெல பகுதியில் ஒருவர் காணாமல் போனது மற்றும் அது தொடர்பான வழக்குகள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு கம்மன்பில இடையூறு விளைவிப்பதாகவும், விடுதலைப் புலிகளின் சாட்சியத்தின் அடிப்படையில் கைதுகள் நடைபெறுவதாகக் கூறி இனவெறியைத் தூண்ட முயற்சிப்பதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன சம்பந்தப்பட்ட சம்பவம், பொல்கஹவெல பகுதியில் வசிக்கும் ஒருவரின் காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடையது என்றாலும், கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் பதினொரு இளைஞர்கள் கடத்தப்பட்டு பின்னர் காணாமல் போன சம்பவமும் அந்த சம்பவத்துடன் தொடர்புடையது என்பது இப்போது தெரியவந்துள்ளது.
இந்த காணாமல் போன சம்பவங்கள் அனைத்திற்கும் பின்னால் கடற்படைக்குள் செயல்படும் ஒரு குழுவின் தலையீடு இருப்பதும் தெரியவந்துள்ளது.
இருப்பினும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இந்தக் கைதுகளை விமர்சித்து, தொடர்புடைய நடவடிக்கைகளைத் தடுத்ததாக, காணாமல் போன பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் அச்சலா செனவிரட்ன தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் சாட்சியத்தின் அடிப்படையில் இந்தக் கைதுகள் நடைபெறுவதாகக் கூறி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இனவெறியைத் தூண்டி வருவதாகவும் அவரது புகாரில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதி நிசாந்த உலுகேதென்னவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26ம் திகதி வரையில் நிசாந்த உலுகேதென்னவை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொல்கஹாவெல நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னாள் கடற்படைத் தளபதி நிசாந்த நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டார்.
இதன் போது நிசாந்தவை 27ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிசாந்த, கடற்படை புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக கடமையாற்றிய காலத்தில் இடம்பெற்ற கடத்தல் சம்பவமொன்று தொடர்பில் கடந்த ஜூலை மாதம் 28ம் திகதி கைது செய்யப்பட்டார்.
கடந்த 2020ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இலங்கையின் 24ம் கடற்படைத் தளபதியாக நிசாந்த உலுகேதென்ன கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பருவப்பெயர்ச்சி காற்றுடன் இந்தியாவிலிருந்து நாட்டின் சமுத்திர கட்டமைப்பிற்குள் மிதந்து வரும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளின் அளவு அதிகரித்துள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
மன்னார், யாழ்ப்பாணம், கற்பிட்டி, நீர்கொழும்பு ஆகிய கடற்பிராந்தியங்களில் அதிகளவான கழிவுகள் குவிந்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் சமந்த குணசேகர தெரிவித்தார்.
குறிப்பாக சென்னை, கேரளா, கொச்சின், கன்னியாகுமாரி ஆகிய பகுதிகளில் தயாரிக்கப்படும் போத்தல் வகைகள், வலைகள், பூங்கொத்துக்களுக்கு பயன்படுத்தப்படும் கயிறு போன்றவையே அதிகளவாக நாட்டின் கடற்பிராந்தியங்களில் தேங்கியுள்ளதாக அவர் கூறினார்.
இருதரப்பினரும் இணைந்து நிரந்தர தீர்வை காண வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் சுற்றாடல் அமைச்சு விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.
யுத்த காலம் முதல் இன்றுவரை இலங்கையின் கடற்பகுதியை இந்தியா குப்பைத் தொட்டியாகவே பயன்படுத்தி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுளளார்.
இதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று(13) பிற்பகல் வழங்கப்பட்டது.
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 61 ஈ (ஆ) சரத்தின்படி அரசியலமைப்பு பேரவையின் அனுமதிக்கமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கை பொலிஸ் சேவையின் 37 ஆவது பொலிஸ் மாஅதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் கான்ஸ்ரபள், உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகிய 03 பதவிகளையும் வகித்து பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்ட முதலாவது பொலிஸ் மாஅதிபராக வரலாற்றில் முதன்முறையாக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இடம் பிடித்துள்ளார்.
இராணுவ முகாம்களையோ அல்லது காவல் நிலையங்களையோ தேவையில்லாமல் அகற்ற வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் இன்று இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் (Online Safety Act, No. 9 of 2024) திருத்துவது குறித்த அவதானிப்புகள், கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை சமர்ப்பிக்க அனைத்து உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் உட்பட பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் முடிவுக்கு இணங்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர், நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் 2024 ஜூலை 31 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட திருத்தங்களை பரிசீலிக்கவும், பொதுமக்களின் ஆலோசனையைப் பெற்று, தேவையான பரிந்துரைகளை வழங்கவும் ஒரு குழுவை நியமித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்று முதல் ஒரு மாத காலப் பகுதிக்குள் நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவது குறித்து பொது மக்களிடமிருந்து அவதானிப்புகள், கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் யோசனைகளை நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான குழு கோரியுள்ளது.
ஏதேனும் அவதானிப்புகள், கருத்துகள், பரிந்துரைகள் அல்லது யோசனைகளை தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான குழுவுக்கு அனுப்ப முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தபால் மூலமாக அனுப்புவதாயின், கடித உறையின் மேல் இடது மூலையில் “2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான குழு” என்று குறிப்பிடப்பட்டு செயலாளர், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, இல. 19, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு 10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அத்துடன் “2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான குழு” என்ற தலைப்பின் கீழ் legal@moj.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமும் சமர்ப்பிப்புகளைச் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்காக ஒரு புதிய வட்ஸ்அப் இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் குறித்த வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 071 – 8598888 என்ற புதிய வட்ஸ்அப் இலக்கம் இன்று (13) முதல் செயல்படும்.
இந்த இலக்கம் ஊடாக நேரடியாக பொலிஸ்மா அதிபருக்கு குறுஞ்செய்தி அனுப்பவும், வீடியோக்கள் மற்றும் படத் தொகுப்புகளை அனுப்புவதற்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் என்றும், அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிகள் வழங்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் அதிகாரிகளும் இந்த இலக்கத்தின் ஊடாக தங்கள் பிரச்சினைகள் மற்றும் தகவல்கள் தொடர்பாக தகவல்களை வழங்கு முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் 53 ஆண்டுகளாக, காணி உறுதியில்லாமல் வாழ்ந்து வந்த மக்களுக்கு இந்த அரசாங்கத்தின் காலத்தில் விடிவு கிடைத்துள்ளது. வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்களுக்கு முதல் முறையாக இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் வசித்து வரும் யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த 32 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த 300 பேருக்கும் இன்று புதன் கிழமை (13.08.2025) காணி உறுதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
பளை மத்திய கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, கடற்றொழில், நீரியல்வள அமைச்சர் இ.சந்திரசேகர், பிரதி அமைச்சர் கலாநிதி சுனில் ரணசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் சுரேன், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தவிசாளர் கே.நிஹால், யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் மாவட்டச் செயலர்கள், சாவகச்சேரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.