Saturday, March 7, 2026
Huis Blog Bladsy 88

ஹரிணிக்கு கல்வி முறை பற்றி என்ன தெரியும்? சாடும் திலித் ஜயவீர எம்பி..!

0

இலங்கையின் கல்வி முறைப்பற்றி பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதுவும் தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

விசேட கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கல்வி முறை மாற்றம் தொடர்பில் ஆசிரியர் சங்கத்திடம் கதைக்கவில்லை, அதிபர் சங்கங்களிடம் கதைக்கவில்லை.

சாதாரண நிகழ்நிலை கலந்துரையாடலுடன் இந்த திட்டங்கள் ஹரிணியால் முன்னெடுக்கப்படுகின்றன. எமது காலத்தில் பாட நேரம் 30 நிமிடங்கள் மட்டுமே.

தற்போது 40 நிமிடங்கள் பாடவேளைகள் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் எதிர்வரும் காலங்களில் அவை 50 நிமிடங்களாக மாற்றப்படவுள்ளன. யாரிடமாவது கேட்டார்களா? இது ஐ.எம்.எப்பிடம் கேட்டு எடுக்கப்பட்ட முடிவு.

தற்போது பாடசாலைகளில் இருக்கும் கதிரைகள் பற்றி தெரியுமல்லவா. அனைத்தும் பலகை கதிரைகள். சிலவேலைகளில் பாடவேலைகள் வகுப்புக்கு வெளியே இடம்பெறுகிறன.

வியர்வையுடன் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவ்வாறான பின்னணியில் யாரிடமும் கேட்காமல் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைக்கு காரணம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மன்னார் CIDயினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது..!

0

சுமார் ரூ. 20 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போதைப் பொருட்களை நாடு முழுவதும் விநியோகிப்பதாக இராணுவ புலனாய்வுப் பிரிவிலிருந்து மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சந்தேக நபரான கான்ஸ்டபிள், பொரலஸ்கமுவ, பெல்லன்வில, ஜெயா மாவத்தை பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்த தனது வீட்டில் இந்த விற்பனையை நடத்தி வந்தார். மேலும் அவர் கொஹுவல பொலிஸ் போக்குவரத்துப் பிரிவில் இணைக்கப்பட்ட ஒரு கான்ஸ்டபிளாவார்.

கான்ஸ்டபிளின் மனைவி மற்றும் அவருக்கு போதைப்பொருட்களை வழங்கியதாகக் கூறப்படும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

150 மி.கி போதைப் பொருட்கள் அடங்கிய 21 பெட்டிகளையும், 300 மி.கி போதைப்பொருட்கள் அடங்கிய ஒரு பெட்டியையும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர், மொத்தம் 1,330,420 போதைப்பொருட்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

யாழ் செம்மணியில் இதுவரை 111 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்..!

0

யாழ் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை புதிதாக 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த 09 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 34 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 24 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 09 ஆவது நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை 34 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 33 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 03 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 99 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 111 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறியப்படாத இடங்கள் – ஆதாரங்கள்; அடுத்தகட்ட நகர்வுக்கு தயாராகும் செம்மணி..!

0

யாழ்ப்பாணத்தின் வடக்கே உள்ள ஒரு கிராமத்தில் இருந்து தற்போது, இலங்கையின் மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் மோசமான குற்றவியல் நீதி அமைப்புக்கான ஆதாரங்களை தற்போது வெளிவருகிறது.

அவை காலத்தின் மண்ணில் புதைந்து கிடந்த நீதிக்கான சாட்சியங்களாக வெளிவருகிறது. நீண்ட காலமாக சிறிலங்கா அரசாங்கம் புதைக்க விரும்பிய சங்கடமான உண்மைகளை அதன் கல்லறைகளுக்குள் இருந்து தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளன.

தமிழர்களின் மையப் பகுதியான யாழில் உள்ள செம்மணியில் இருந்து மீண்டும் ஒரு கூட்டுப் புதைகுழி தோன்றுவதற்கான சான்றாக, உலகம் இலங்கையை கூர்ந்து கவனிக்கிறது.

செம்மணி அறியப்பட்ட கூட்டுப் புதைகுழிகளில் ஒன்றாகும், மேலும் 26 ஆண்டுகால யுத்தம் இன்னும் அறியப்படாத மற்றும் அடையாளம் காணப்படாத பிற இடங்களுக்கு இது வழிவகுக்கலாம்.

இந்நிலையில் போரின் வேதனையான மரபைத் தாங்கி, இந்த கூட்டுப் புதைகுழிகள் பல ஆண்டுகால மோதல்களின் போது கொல்லப்பட்ட மற்றும் புதைக்கப்பட்ட மக்களின் ஆதாரங்கள் சர்வதேச அரங்கில் எத்தகைய நகர்வை எதிர்வரும் காலங்களில் கொண்டு வரபோகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உயர்தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு..!

0

2025/2026 கல்வி ஆண்டில் இரண்டாவது கட்டமாக உயர்தர தொழிற் பாடத்துறையின் தரம் 12 இற்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப படிவங்கள் கோரப்படுகின்றன.

குறித்த விடயம் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், குறித்த பாடத்துறைக்கு மாணவர்களை அனுமதிக்கும் போது க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் கருத்தில் கொள்ளப்பட மாட்டாது.

தொழிற் பாடத் துறையின் கீழ், தரம் 12 இல் பாடசாலைக் கற்றல் செயற்பாடுகளை நிறைவு செய்து தரம் 13 இல் கீழே தரப்பட்டுள்ள தொழிற் பாடங்களின் ஒன்றில் தேசிய தொழிற் தகைமை மட்டம் 4 இற்குரிய தொழிற் பயிற்சிப் பாடநெறி ஒன்றிற்கு மாணர்கள் இணைத்துக் கொள்ளபடுவார்கள் என அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கீழ் குறிப்பிட்டுள்ள பாடநெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு NVQ சான்றிதழினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

1. குழந்தை உளவியல் மற்றும் பாதுகாப்பு

2. சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு

3. உடற்கல்வி மற்றும் விளையாட்டு

4. அரங்கற் கலை

5. நிகழ்ச்சி முகாமை

6. கலை மற்றும் கைவினை

7. உள்ளக வடிவமைப்பு

8. நவநாகரீக வடிவமைப்பு

9. கிராஃபிக் வடிவமைப்பு

15. நீர்வளத் தொழில்நுட்பக் கல்வி

16. பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை உற்பத்தித் தொழில்நுட்பக் கல்வி

17. கட்டுமானத் தொழில் நுட்பக் கல்வி

18.மோட்டார் இயந்திர தொழில்நுட்பக் கல்வி

19. மின் மற்றும் இலத்திரனியல் தொழில்நுட்ப கல்வி

20. ஜவுளி மற்றும் ஆடை தொழில் நுட்பக் கல்வி

தொடரும் கைதுகளால் அதிரும் கிழக்கு; இனிய பாரதியின் மற்றுமொரு சகா கைது..!

0

இனிய பாரதியின் இன்னொரு சகாவான வெலிகந்தை தீவுச் சேனையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சபாபதி என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு கிரானில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (29) மாலை 4.00 மணியளவில் கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவு சிஜடியினர் இவரை கைது செய்துள்ளனர்.

ரி.எம்.வி.பி கட்சியை சேர்ந்த இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை 2007-6-28 ம் திகதி திருக்கோவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 6ம் திகதி திருக்கோவில் மற்றும் மட்டு சந்திவெளி பகுதிகளில் வைத்து சிஜடியினர் கைது செய்தனர்.

இதில் கைது செய்த இனியபாரதியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் வெலிகந்தை தீவுச்சேனையை வதைமுகாமில் இருந்து செயற்பட்டு வந்தவரும் இனியபாரதியின் சகாவான அந்த பிரதேசத்தைச் சேர்ந்த பா.சபாபதியை கிரான் வைரவர் கோவில் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சம்பவதினமான இன்று மாலை 4.00 மணியளவில் சிஜடியினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை கொழும்புக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை சிஜடியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இனியபாரதியை கைது செய்து விசாரணையின் பின்னர் இனிய பாரதியின் முன்னாள் சாரதி செந்தூரன், அவரது சாகாவான சந்திவெளியைச் சேர்ந்த சசீந்திரன் தவசீலன் மற்றும் சகாவான திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த தொப்பி மனாப் என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன் மற்றும் தற்போது கைது செய்யப்பட்டவர் உட்பட இனியபாரதியின் சகாக்கள் ஆகிய 4 பேரை சிஜடி யினர் தொடர்ச்சியாக கைது செய்ததையிட்டு இனியபாரதி மற்றும் பிள்ளையானுடன் தொடர்புபட்டவர்கள் பயப்பீதியில் இருந்து வருவது குறிப்பிடதக்கது.

யாழ் செம்மணியில் 23ஆம் நாள் அகழ்வு; புதிய 3 எலும்புக் கூடுகள் கண்டெடுப்பு..!

0

யாழ் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் திங்கட் கிழமை புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் எதுவும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக் கூட்டு தொகுதிகளில் 01 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த 08 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 31 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது

செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 23 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது

இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி கடந்த 08 ஆவது நாட்களாக முன்னெடுக்கப்படும் நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை 31 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 32 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 01 எலும்பு கூட்டு தொகுதியுடனுமாக 96 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப் பட்டுள்ளதுடன், இதுவரையில் 104 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை கடந்த 2 நாட்களில் 08 சான்று பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரையான கால பகுதியில் 54 சான்று பொருட்கள் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மாகாண சபைத் தேர்தல்; முதற் கட்டப் பணிகள் ஆரம்பம்..!

0

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான முதற் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்த பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபயரத்ன,

தொடர்புடைய சட்ட கட்டமைப்பைத் தயாரிக்கும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மாகாண சபைத் தேர்தலுக்கான புதிய வாக்களிப்பு முறையை ஏற்றுக் கொள்வதற்கான வரைவு சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

யாழில் சகோதரனை ஏற்ற சென்ற மாணவி 10 நாட்களாக மாயம்..!

0

யாழில் பாடசாலைக்கு சகோதரனை ஏற்ற சென்ற மாணவி 10 நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என தாயார் யாழ் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

யாழ் – செல்லர் வீதியில் வசிக்கும் 17 வயதுடைய மாணவி பிரதீபன் விகாசினி என்பவரை கடந்த 15 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

கடந்த யூலை 15 ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற தனது சகோதரனை அழைத்து வருவதற்காக வீட்டிலிருந்து நண்பகல் வேளை வழமை போன்று சென்றுள்ளார்.

ஆனால் அவர் பாடசாலைக்கு சென்று மகனை ஏற்றிவரவில்லை அத்துடன் வீட்டுக்கும் வரவில்லை என குறித்த மாணவியின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக யாழ் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இன்றுடன் இரு வாரங்கள் ஆகியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என தாயார் தெரிவித்துள்ளார்.

மேலும், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து யாழ் பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளரிடம் குறித்த விடயத்தை தெரியப்படுத்தியதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என அவர் தெரிவித்ததாக தாயார் தெரிவித்துள்ளதுடன் தனது மகளை கண்டுபிடித்து தர உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

நாமல் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு..!

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஹம்பாந்தோட்ட நீதவான் நீதிமன்றம் இன்று இந்த பிடியாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது.

அம்பாந்தோட்டை நீதிமன்றில் நாமலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இன்று நீதிமன்றத்தில் அவர் முன்னிலையாகாத காரணத்தினால் இந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!