Tuesday, November 18, 2025
Huis Blog Bladsy 38

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம்..!

0

ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடரின் போது இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் முன்வைக்கப்படும் என பிரிட்டனும், கனடாவும் அநுர அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளன.

எனினும், கடந்த கால தீர்மானங்களுடன் ஒப்பிடுகையில் இது மென்போக்குடையதாக அமையும் என இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

இலங்கை தொடர்பான தீர்மானங்களுக்கு கடந்த காலங்களில் இணை அனுசரணை வழங்கிய அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறியுள்ளது. இணை அனுசரணை வழங்கும் நாடுகளின் கட்டமைப்பில் மாற்றம் வரவுள்ளது.

இலங்கை குறித்த கடந்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய மலாவி, மொன்டினேக்ரோ, வட மாசிடோனியா ஆகிய நாடுகள் இம்முறை தீர்மானத்தில் பங்கேற்காமல் இருக்கலாம் என இலங்கை நம்புகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அவர் அவதானித்த விடயங்கள் உட்பட இலங்கையின் மனித உரிமை நிலைவரம் குறித்த அவரின் அறிக்கை 60 ஆவது அமர்வில் முன்வைக்கப்படவுள்ளது. பெரும்பாலும் செப்டம்பர் 8 ஆம் திகதி அறிக்கை முன்வைக்கப்படலாம் எனத் தெரியவருகின்றது.

செம்மனி மனித புதைகுழி விவகாரம் இதில் முக்கிய இடத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, பொறுப்புக்கூறல் தொடர்பான உள்நாட்டு செயல்முறைகள் வலுப்படுத்தப்பட்டு, அரசியல் தலையீடுகள் தவிர்க்கப்பட்டுள்ளன என்ற விடயத்தை இலங்கை தரப்பு எடுத்துரைக்கவுள்ளது.

வவுனியாவில் அடாத்தாக வீட்டினுள் நுழைந்த பிரதியமைச்சரின் இணைப்பாளருக்கு தர்ம‍ அடி..!

0

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும், பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஒருவர் அடாத்தாக வீட்டினுள் நுழைந்து அங்கு தனியாக இருந்த பெண்ணிடம் மதுபோதையில் தவறாக நடந்து கொள்ள முற்பட்ட சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

பின்னர் அவர் கிராமத்தின் பெண்களால் தாக்கப்பட்டு போகஸ்வெவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவர் வன்னியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சர் ஒருவரின் ஒருங்கிணைப்பு செயலாளர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜே.வி.பி.யின் வன்னி மாவட்டக் குழுவின் அதிகாரியான இந்த நபர், வவுனியாவின் நந்திமித்ரகம பகுதியில் ஒரு பெண் மட்டுமே வசித்து வந்த வீட்டிற்குள் மதுபோதையில் நுழைந்துள்ளார். அவ்வேளை, அக்கம் பக்க பெண்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அந்த நபரைப் பிடித்து நையப்புடைத்துள்ளனர்.

அப்போது அந்நபர் கடும் போதையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கிராமத்தின் பெண்கள் அந்த நபரை அடித்து, கயிறுகளால் கட்டி, போகஸ்வெவ பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் வைத்தியசாலையில் உயிரை மாய்த்துக் கொண்ட யாழ் இளைஞன்..!

0

மன்னார் வைத்தியசாலை வளாகத்தில் இளைஞரொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று (11) காலை தூக்கில் தொங்கியவாறு அவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மன்னார், வைத்தியசாலையில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இளைஞனின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்பது தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை.

அத்துடன் குறித்த இளைஞன் நேற்றையதினம் இரவு இவ்வாறு தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்று குறிப்பிடப்படுகின்றது.

ஹர்த்தால் சொல்லும் செய்தியை ஜனாதிபதி அனுர கவனத்தில் எடுக்க வேண்டும் -மனோ

0

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தவருக்காக வடக்கு மற்றும் கிழக்கில் இம்மாதம் 15ஆம் திகதி, முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலை தாம் ஆதரிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ” ஐந்து தமிழ் இளைஞர்கள், 8ஆம் திகதி முத்தையன் கட்டு இராணுவ முகாமுக்கு சிப்பாய்களால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அந்த முகாமில் இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

தப்பி சென்றவர்களில் ஒருவரான, கபில் ராஜ், 9ம் திகதி முல்லை முத்தையன் கட்டு குளத்தில் சடலமாக மீட்க பட்டுள்ளார். தப்பி சென்ற ஏனைய நால்வர், தம்மை இராணுவத்தினர் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆகவே என்ன நடந்தது என்பதை ஊகிப்பது கடினமானது அல்ல.

இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இலங்கை தமிழரசு கட்சி, “நீதியான விசாரணை”, “வடகிழக்கில் இருந்து மேலதிக இராணுவம் குறைப்பு” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஹர்த்தாலை நாம் ஆதரிக்கிறோம்.

ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அநுர குமார திசாநாயக்க, இது தொடர்பான உடனடி விசாரணை, சட்ட நடவடிக்கை, ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும். அத்துடன் இதை அடிப்படையாக கொண்டு, வடக்கு கிழக்கின் மேலதிக இராணுவ பிரசன்னத்தை உடன் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“இராணுவ பிரசன்னம் குறைப்பு” என்பதுதான் இந்த ஹர்த்தால் சொல்ல போகும் செய்தி. போர் செய்த இராணுவம் சும்மா இருக்காது. அதிலும் இன அடிப்படையிலான போர் செய்த இராணுவ சிப்பாய்களின் மனங்களில் இனவாதம் தங்கி இருக்கத்தான் செய்யும்.

எனவே அவர்களை தென்னிலங்கைக்கு கொண்டு வந்து, “குளம் வெட்டுவது, குளத்தில் தூர் எடுப்பது, வீதி அமைப்பது, வீடு கட்டுவது, ஹோட்டல் நடத்துவது, தோட்டம் செய்வது, காய்கறி சந்தை நடத்துவது” போன்ற பிற அபிவிருத்தி பணிகளில், ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அனுர குமார திசாநாயக்க, ஈடுபடுத்த வேண்டும்.

“இதற்கு முன் இப்படியான சம்பவங்கள் நடக்க வில்லையா? அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?” என எம்மை பார்த்து, தம்மை அறிவாளிகள் என நினைத்து கொண்டு, கேள்வி கேட்கும், ஜேவிபி அமைச்சர்கள், எம்பிக்கள் ஆகியோரின் வாய்களையும் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அநுர குமார திசாநாயக்க மூட வேண்டும்.

“அன்றைய அரசுகள் மாறி, மாறி செய்தவற்றை செய்ய நாம் வரவில்லை. மாற்றி செய்யவே நாம் வந்தோம்”, என நீங்கள் தான் மக்களுக்கு கூறினீர்கள். அதேயே தான் நீங்களும் செய்ய வந்தீர்கள் என்றால், நாம் எதிர்க்கத்தான் செய்வோம்.

அரச இராணுவ பயங்கரவாதத்தை, நாம் அப்போதும் எதிர்த்தோம். இப்போதும் எதிர்கின்றோம். எப்போதும் எதிர்ப்போம். வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடை பெற அழைப்பு விடுத்து இருக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் கோரிக்கையை, தமிழ் முற்போக்கு கூட்டணி வரவேற்று, ஆதரவை அறிவிக்கின்றது” இவ்வாறு மனோகனேசனின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியா தனியார் கல்வி நிலைய கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி..!

0

வவுனியாவில் வைரவப் புளியங்குளத்திலுள்ள தனியார் கல்வி நிலைய வளாகத்திலுள்ள கிணற்றில் இருந்து உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு காலையில் இருந்து மதியம் 12 மணிவரை வகுப்பு நடைபெற்றுள்ளது.

குறித்த கல்வி நிலையத்தில் உயர்தர வர்த்தகபிரிவு 2025 இல் கல்வி கற்ற குறித்த மாணவி நீண்ட நேரமாகியும் வீடு வந்து சேராமையால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குறித்த மாணவியை தேடியுள்ளனர்.

இதன்போது, குறித்த மாணவியின் புத்தகப்பை, துவிச்சக்கர வண்டி என்பன மாணவி கல்வி பயின்ற தனியார் கல்வி நிலையத்தில் காணப்பட்டதுடன், அக் கல்வி நிலைய வளாகத்தில் இருந்த கிணற்றின் அருகே மாணவியின் செருப்பும் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பெற்றோர் மற்றும் கல்வி நிலைய நிர்வாகத்தினர் வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார், மாநகர சபையினர், கிராம அலுவர், கிராம மக்கள், மாணவர்கள் எனப் பலரும் இணைந்து 40 அடி ஆழமான கிணற்றில் தேடுதல் மேற்கொண்டு குறித்த மாணவியை சடலமாக மாலை மீட்டு எடுத்தனர்.

குறித்த சம்பவத்தில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும் வவுனியா, கோமரசன்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவியே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் உடலம் வவுனியா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

மாணவி தில்ஷி அம்சிகா மரணம்; எதிர்வரும் 18ஆம் திகதி வழக்கு விசாரணை..!

0

கொழும்பு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் 10 ஆம் வகுப்பு மாணவியான தில்ஷி அம்சிகா, தவறான முடிவெடுத்து உயிரிழந்தார்.

இதுவரையில் அதற்கான நீதி கிடைக்கவில்லை எனவும் எதிர்வரும் 18ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இடம் பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனாவில் பரிதாபமாக உயிரிழந்த 16 வயது பாடசாலை மாணவி..!

0

யாழில் கிருமித் தொற்று காரணமாக 16 வயதுடைய மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் சந்திரானந்தன் வர்ணயா (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (08) குறித்த மாணவி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

குறித்த மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த மாதம் ஐந்தாம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் சேர்ப்பித்து சில தினங்களில் குறித்த மாணவி மயக்க நிலையை அடைந்துள்ளார். தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்து வந்த நிலையில் நேற்று (08) காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

கிருமித் தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

கிளிநொச்சியில் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய நபர் கைது..!

0

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 12 வயதுடைய சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தியததாக குற்றம் சாட்டப்பட்டு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

46 வயது உடைய குறித்த சந்தேக நபர் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அப்பகுதி கிராம சேவகர் வழங்கிய தகவலுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் திகதி 20ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கின் கல்வி நிலைமை பின்னடைவுக்கு காரணம் என்ன? பிரதமர் கூறிய காரணம்..!

0

வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக ரீதியான பிரச்சினை பிரதான காரணமாக இருப்பதாகப் பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

விரைவில் வடக்கின் கல்வி நிர்வாக அதிகாரிகளை அழைத்துக் கலந்துரையாடி, இதற்குத் தீர்வினை காண இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வவுனியா மாவட்ட கல்வி நிலைமை மற்றும் கல்வி மறு சீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, இன்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை அதிகாரிகளால் தொடர்ச்சியாக வழங்கப்படும் அழுத்தம் காரணமாக வவுனியாவில் பல ஆசிரியர்கள் அரச சேவையில் இருந்து விலகியுள்ளதுடன் பலர் கடும் மன உளைச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் எம்.பிக்களுக்கும் அஸ்வெசும கொடுப்பனவு..!

0

முன்னாள் எம்.பிக்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படுமென அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிச்சயம் இரத்து செய்யப்படும். ஓய்வூதியத்தை இரத்து செய்த பின்னர் வாழ்வதற்கு சிரமமெனில் அஸ்வெசுமவுக்கு விண்ணப்பிக்கலாம். அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்

முன்னாள் அரசியல்வாதிகளின் சுமை மக்களின் தோள்களில் சுமத்தப்படுவது நியாயமற்றது என்றும் எம்.பி.க்களின் ஓய்வூதியம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தனது கட்சி தெரிவித்திருந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்த அமைச்சர், ஓய்வூதியம் இரத்து செய்யப்படுவதால் எந்த எம்.பி.யும் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

அவர்கள் வாழ முடியாவிட்டால் அவர்களுக்கு ஆறுதல் அளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

error: Content is protected !!