Wednesday, March 4, 2026
Huis Blog Bladsy 124

கிழக்கு பல்கலை மாணவர்களுக்கிடையே மோதல்; ஒருவர் வைத்திய சாலையில் அனுமதி..!

0

கிழக்கு பல்கலைக் கழகத்தில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (14) இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் வர்த்தகப் பிரிவு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு இடையிலேயே இவ்வாறு மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வர்த்தகபிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்று வரும் நான்கு மாணவர்களுக்கிடையே வாய்த்தர்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வாய்த்தர்கம் கைகலப்பாக மாறியதையடுத்து ஒரு மாணவன் காயமடைந்துள்ளார். இதையடுத்து, காயமடைந்த மாணவன் ஏறாசவூர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், காயமடைந்த மாணவன் காவல் நிலையத்தில் செய்த முறைப்பாடளித்த நிலையில், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமது பாதுகாப்பை வலியுறுத்தி தொழிற்சங்க நடவடிக்கையில் கிராம அலுவலர்கள்..!

0

கிராம உத்தியோகத்தர்களும் பல்வேறு சமயங்களில் விபத்துக்களை எதிர்நோக்க நேரிட்டுள்ள நிலையில் தமக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கான வேலைத் திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு கோரி தொழிற் சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களினால் இந்த தொழில்சார் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், ஏனைய சங்கங்களின் பிரதிநிதிகளும் இதற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கிராம உத்தியோகத்தர்களில் அறுபது சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்கள் எனவும், பெரும்பாலான கிராம உத்தியோகத்தர்களின் அலுவலகங்கள் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது மக்கள் நடமாட்டம் இல்லாத பிரதேசங்களில் அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன் காரணமாக பெண் உத்தியோகத்தர்களின் பாதுகாப்புக்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்ட அவர், 13ம் திகதி முதல் இரவு நேர அனர்த்தங்கள், உயிரிழப்புகள் உட்பட சகல கடமைகளில் இருந்தும் விலகிக் கொள்வதாக தெரிவித்தார்.

நாளை முதல் வாரத்திற்கு ஒருமுறை அலுவலகத்தில் தங்கும் மூன்று நாட்களிலும் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை மட்டுமே (களப்பணிகளுக்கு உட்பட்டு) அலுவலகத்தில் தங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே முறைப்படி, காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்றும், ஆனால், மாலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் இருந்து தங்கள் வீடுகளுக்குச் செல்லும் பெண் அதிகாரிகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தனிமைப்படுத்தப்பட்ட அலுவலகங்களில் பணிபுரியும் பெண் உத்தியோகத்தர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் திரு.நெவில் விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பிரான்சில் இருந்து இலங்கை சென்ற புலம்பெயர் தமிழர்கள் இருவர் கைது..!

0

பிரான்சில் இருந்து இந்தியா சென்று இந்தியாவிலிருந்து கடல் மூலம் இலங்கை சென்ற புலம்பெயர் தமிழர்கள் இருவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

கைது செய்யப்பட்ட இருவரும் சட்டவிராதமாக பிரான்சில் இருந்து இந்தியாவிற்கு செல்லவில்லை என தெரிய வந்துள்ளது.

இவர்கள் பிரான்சில் இருந்து இந்தியா சென்று கடல் மூலம் இலங்கை செல்ல முயன்ற போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்சில் அரசியல் தஞ்ச உரிமை பெற்ற ஒருவரால் இலங்கைக்கு செல்ல முடியாது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஆசிரியரை குடையும் TID; மாணவர்களின் விபரங்களை வழங்க மறுப்பு..!

0

பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவரிடம் மீண்டும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) பயன்படுத்தி நீண்ட நேரம் விசாரணை செய்துள்ளனர்.

கடந்த வருடம் கிளிநொச்சி, கோணாவில் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது தமிழர்கள் வாழும் பகுதிகளைக் குறிக்கும் வகையிலான இலங்கையின் வரைபடத்தை ஒத்த வடிவமைப்பு ஒன்றின் ஊடாக இல்லம் ஒன்று அலங்கரிக்கப்பட்டிருந்த விடயம் தொடர்பில், பாடசாலையின் ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலன் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பரந்தன் பிரிவினரால் மார்ச் மாதம் 3 ஆம் திகதி சுமார் 8 மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஆசிரியர் இன்னாசிமுத்து சத்தியசீலனிடம் இருந்து 2024 டிசம்பர் 11 ஆம் திகதி வாய்மூலமாகப் பெறப்பட்ட பதில் தொடர்பில் மேலும் விசாரிப்பதற்காக 2025 பெப்ரவரி 17 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கொழும்பு 01 இல் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த விடயம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ் மாவட்ட இணைப்பாளர் டி.கனகராஜுக்கு அறிவிக்கப்பட்டதுடன், அவரது தலையீட்டினை அடுத்து, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள், பரந்தன் பிரிவில் வாக்குமூலம் அளிக்க ஆசிரியருக்கு வாய்ப்பளித்தனர்.

பெண் மருத்துவர் துஸ்பிரயோகம்; அச்சத்தில் அனுராதபுர வைத்திய சாலை ஊழியர்கள்..!

0

அனுராதபுரம் போதனா வைத்திய சாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள வைத்திய தொழிற் சங்க நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வருமாறு சுகாதார அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தின் அடிப்படையில், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட வைத்தியர்கள் குழு முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டதை கைவிடுமாறும் சுகாதார அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

36 மணி நேரத்திற்குள் சந்தேக நபரை நாங்கள் கைது செய்தோம். ஐந்து பொலிஸ் குழுக்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன. சந்தேக நபர் இருக்கும் பகுதி தொடர்பில் நேற்றிரவு எனக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, விசாரணைகள் நடத்தப்பட்ட பின்னர் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து இப்போது விசாரணைகள் நடந்து வருகின்றன.

ஒரு அரசாங்கமாக சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களிடம் கோரிக்கையை வைத்தோம். தயவுசெய்து பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என கோரினோம்.

ஊடகங்களும் அந்தப் பொறுப்பை அதே வழியில் நிறைவேற்றின. அதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எந்த ஊடகமும் அந்நபரின் அடையாளத்தை வெளியிடவில்லை. அவர்கள் தொடர்ந்து அவ்வாறு செய்வார்கள் என்று நம்புகிறேன்.

இன்று காலை நான் அனுராதபுரம் மருத்துவமனை வளாகத்தைச் சுற்றிப் பார்த்தேன். இந்த சம்பவத்தால் அங்குள்ள ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.

எந்த பிரச்சனையும் இல்லாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து வழங்குவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். பாதுகாப்பு சேவையில் குறைபாடுகள் உள்ளன. அதைப் பற்றியும் கலந்துரையாடினோம்” என்றார்.

யாழிலும் இலங்கை தமிழரசு கட்சி பிளவு; உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்..!

0

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சி.காண்டீபன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது யாழ்ப்பாணத்திலும் முன்னாள் தவிசாளர் ஒருவர் தமிழரசு கட்சியிலிருந்து பிரிந்து மாற்று கட்சியில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இதன்படி காரைநகர் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் தலைமையிலான அணி இம்முறை தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னமான மான் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பாலச்சந்திரன் தெரிவிக்கையில்,

இதுவரை காலமும் தமக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் காரைநகரின் அபிவிருத்திக்காக தம்முடன் கை கோர்ப்பார்கள் என தான் பலமாக நம்புவதாக குறிப்பிட்டார்.

பிரதேசசபையின் இறுதி 7 மாதங்கள் தான் தவிசாளராக இருந்து பல அதிரடி அபிவிருத்திகளை இனங் கண்டு செயற்படுத்தியமையை தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள் என தாம் திடமாக நம்புவதாகவும். அவரது கட்சியினரின் சட்டப் புலமையை பயன்படுத்தி எதிர்கால காரைநகரின் நிலையான அபிவிருத்திக்கு முறையான திட்டங்களை வகுத்து செயற்படுத்த எண்ணியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தயாராகிறது பட்டியல்; பல முக்கிய புள்ளிகளின் விபரங்கள் விரைவில் – அரசு

0

முன்னாள் அமைச்சர்கள் அல்லது ஆட்சியாளர்களின் ஊழல்கள் தொடர்பான பட்டியல்களை வெளியிடுவதை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை. ஏற்கனவே வெளியிடப்பட்டதைப் போன்று பிறிதொரு முக்கிய பட்டியலொன்றும் தற்போது தயாராகிக் கொண்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் அமைச்சர்கள் அல்லது ஆட்சியாளர்களின் ஊழல்கள் தொடர்பான பட்டியல்களை வெளியிடுவதை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை. அந்தந்த நிறுவனங்கள் அதற்கான பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றன.

இதுவரை வெளியிடப்பட்ட பட்டியல்களில் இடம்பிடித்தவர்களே அவை தொடர்பில் கலவரமடைந்துள்ளனர். இன்னும் பல பட்டியல்கள் வெளியாகக் காத்திருக்கின்றன.

அதேபோன்று ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியல்களில் இன்னும் சில தொகுதிகளும் உள்ளன. பொறுத்தமான சந்தர்ப்பத்தில் அவற்றையும் வெளிப்படுத்துவோம்.

இவை தவிர பிறிதொரு முக்கிய பட்டியலும் தயாராகிக் கொண்டிருக்கிறது. அது இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட பட்டியல்களைப் போன்றதல்ல. மிக முக்கியத்துவம் வாய்ந்ததும் பொறுப்புக்கூற வேண்டியதுமாகும்.

அதில் அரசியல்வாதிகள் தவிர்ந்த மேலும் பல முக்கிய புள்ளிகளும் காணப்படுகின்றனர் என்றார்.

கிரிப்டோ வணிகம் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையாக இருங்கள் – பிரதமர் அலுவலகம்

0

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவலாக விளம்பரப் படுத்தப்பட்டு வரும் மோசடியான ‘கிரிப்டோ’ பண வணிகம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த மோசடி விளம்பரங்கள் சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப் படுத்தப்பட்டு, வெளிநாட்டு நிறுவனங்களால் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பிற பிரபல இலங்கை பிரமுகர்களின் பெயர்களைப் பயன்படுத்தி இந்த மோசடியான விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பிரபலமானவர்கள் மீதான மக்களின் நல்லெண்ணத்தை சிதைத்து, அவர்கள் மீதான நம்பிக்கையை உடைப்பதற்கு மக்களை திசை திருப்புவதே இந்த விளம்பரங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.

லிதுவேனியாவிலிருந்து இயங்கும் இந்த மோசடி கணக்குகள் மூலம், இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களை இலக்காகக் கொண்டு மோசடியான விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனவே, அரச அதிகாரிகள் மற்றும் பிரபலமானவர்களின் அங்கீகாரம் உள்ளதாக பொய்யாகக் கூறும், கிரிப்டோ பண முதலீடுகளை விளம்பரப்படுத்தும் ஒன்லைன் விளம்பரங்களிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவரை துஷ்பிரயோகம் செய்த நபரை கைது செய்யா விட்டால், மாகாணம் தளுவிய வேலை நிறுத்தம்..!

0

நேற்று இரவு வைத்திய சாலை வளாகத்தில் பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபரை உடனடியாக கைது செய்யக் கோரி, அனுராதபுரம் போதனா மருத்துவமனை மருத்துவர்கள் இன்று அதிகாலை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண் தனது கடமை அறைக்குச் சென்று கொண்டிருந்த போது தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து விவாதிக்கவும் எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானிக்கவும் GMOAவின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டதாக GMOAவின் ஊடகத் தொடர்பாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

நாளை புதன்கிழமை காலை 8 மணிக்குள் சந்தேக நபர் கைது செய்யப்படாவிட்டால், மாகாணம் முழுவதும் உள்ள மருத்துவ ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்துவார்கள் என்று அவர் எச்சரித்தார்.

தற்போது, அனுராதபுரம் போதனா மருத்துவ மனையில் அவசர சேவைகள் தவிர அனைத்து ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்கின்றனர் என்று அவர் கூறினார்.

தமிழரசுக் கட்சியிலிருந்து பதவி விலகிய உறுப்பினர்; வலுக்கும் உட்கட்சி மோதல்..!

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சி.காண்டீபன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“இலங்கைத் தமிழரசு கட்சியின் ஆயுட்கால உறுப்பினரும் எருவில் வட்டார தமிழரசு கட்சியின் வட்டார கிளைக்குழு தலைவராகவும் பிரதேசக் கிளை உறுப்பினராகவும் பதவி வகித்து வருகின்றேன்.

கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் எருவில் வட்டாரத்தில் போட்டியிட்டு அளிக்கப்பட்ட வாக்குகளில் 50 வீதத்துக்கும் அதிகமான மக்கள் ஆணையைப் பெற்று சிறந்த முறையில் மக்களுக்கு சேவையாற்றி கட்சி வளர்ச்சிக்காகவும் செயற்பட்ட எனக்கு இம்முறை உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தகுந்த காரணங்கள் எதுவுமின்றி மாற்றுக் கட்சியில் இருந்து தமிழரசுக் கட்சியில் இணைந்த களுவாஞ்சிகுடி வட்டார வேட்பாளரை தவிசாளர் ஆக்குவதற்கு நான் இடையூறாக இருப்பேன் என்கின்ற ஒரே காரணத்துக்காக கட்சியின் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணாக எனக்கு வேட்பாளராக இடம் தராமல் புறக்கணிக்கப்பட்டு இருட்டடிப்புச் செய்யப்பட்டேன்.

இது சம்பந்தமாக கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் அச்சமயம் எழுத்து மூலம் அறிவித்தும் இன்று வரை சம்பந்தப்பட்ட எவரிடம் இருந்தும் எவ்வித பதிலும் கிடைக்காமல் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்துள்ளேன்.

அந்த வகையில் அரசியல் நடைமுறைக்கு மாறாகவும் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணாகவும் கட்சி செயற்பட்டுள்ளதாலும் கட்சிக்குள் காணப்படும் உட்கட்சி முரண்பாடுகளினால் மக்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளது.

மக்கள் கட்சியில் அதிருப்தி அடைந்துள்ளதாலும் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால அங்கத்துவத்தில் இருந்தும் கட்சியில் நான் வகித்து வரும் சகல பதவிகளிலிருந்தும் மிகுந்த மனவேதனையுடன் எனது சுயவிருப்பின் பேரில் இராஜனாமா செய்கின்றேன் என்பதை இத்தால் அறியத் தருகின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!