Tuesday, February 24, 2026
Huis Blog Bladsy 46

NPPயின் பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோல்வி..!

0

தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டது.

பிரதேச சபை தவிசாளர் சஞ்சீவ கருணாசாகர சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 17 வாக்குகளும் எதிராக 21 வாக்குகளும் கிடைத்தன.

அதன்படி, பண்டுவஸ்நுவர வரவு செலவுத் திட்டம் 4 பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இதேவேளை சர்ச்சைக்குரிய சூழ்நிலைக்கு மத்தியில் அகலவத்த பிரதேச சபையின் முதல் வரவு செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது.


தேசிய மக்கள் சக்தியால் நியமிக்கப்பட்ட தலைவர் லலித் குமாரரத்ன, வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்தார்.

அங்கு வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 10 வாக்குகளும், எதிராக 7 வாக்குகளும் கிடைத்தன, மேலும் மூன்று வாக்குகள் வாக்களிப்பில் இருந்து விலகின.

இதன்போது, ​​சபையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சமிந்த ரணவக்கவின் வாக்கு சபை செயலாளரால் தவறாகப் பதிவு செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

பின்னர் சபையின் செயலாளர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக ஒன்பது வாக்குகளும் எதிராக எட்டு வாக்குகளும் இருப்பதாகக் கூறினார்.


மூன்று பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதால் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.

அந்த அறிக்கையை ஏற்காத எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் எதிர்ப்பை வௌியிட்டிருந்தனர்.

இதனால் சபை அமர்வு 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அகலவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெட்கம் இல்லையா உங்களுக்கு; சபையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய அர்ச்சுனா..!

0

மலையக தொழிளார்களின் சம்பளம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுந்தரலிங்கம் பிரதீப் நாடாளுமன்றில் உரையாற்றி கொண்டிருக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா சபையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வரலாற்றிலே தோட்ட தொழிலாளர்களுக்கு அதி கூடிய பணத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்குவதாக சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து அவர், வடக்கு கிழக்கு என எல்லா இடங்களிலும் உங்கள் ஆட்சி முடிந்து விட்டது இனி தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி தான் இடம் பெறும் என நாடாளுமன்றில் கூறினார்.

இதன் போது எழுந்த அர்ச்சுனா எம்பி, அவரின் கூற்றை மறுத்து, ”உங்களுடைய இனத்திற்கே நீங்கள் ஒரு இறாத்தல் பாண் தானே கொடுக்கிறீர்கள் முடிந்தால் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் கொடுங்கள்” என கொந்தளித்து பதில் அளித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு..!

0

பரீட்சைகள் திணைக்களம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாடசாலை பரீட்சைகள் திகதிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் பெப்ரவரி 26 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆண்டு ஓகஸ்ட் 09 ஆம் திகதி நடைபெறும் என்றும் உயர் தரப் பரீட்சை எதிர்வரும் ஆண்டு ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, 2027 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சையை முதன்முறையாக எழுதும் மாணவர்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள பொதுத் தகவல் தொழில்நுட்பத் பரீட்சை 2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 08 ஆம் திகதி முதல் டிசம்பர் 17 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் இருந்து தமிழரசு கட்சி விலகல்..!

0

வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து தமிழரசு கட்சி விலகல்
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் போது இலங்கை தமிழரசு கட்சி நடுநிலை வகிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்று (14) இடம்பெறும் விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் தெரிவித்துள்ளதாவது,

இன்றைய வாக்கெடுப்பில் எங்கள் தமிழரசுக் கட்சி அரசு சார்பாகவும் இல்லை, அரசுக்கு எதிராகவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் அடுத்த வாரம் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில்தான் 2026 வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஏகமானதாக தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இது ஒரு நல்லெண்ண அடிப்படையிலான முடிவு. நாம் எமது கட்சி ஜனாதிபதியின் மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாகத்தான் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி எங்கள் பிரச்சினைகளை தீர்க்க முன்வருவார், தமிழர் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயல்வார், எமது மக்களின் நீண்டகாலமாக எதிர்பார்க்கும் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவார்.

பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட சமூகத்தின் கருத்துக்களை கேட்பார், நிலப்பிரச்சினைகளில் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையுடன்தான் ஏகமனதாக கட்சியினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாங்கள் எதிர்க்க வேண்டிய நான்கு ஆண்டுகள் இன்னும் எங்களுக்கு உள்ளன

அடுத்த ஒரு ஆண்டிற்குள் எந்த முன்னேற்றமும் இல்லையெனில், அடுத்த ஆண்டு எதிர்ப்பு தெரிவிக்கத் தயாராக இருக்கிறோம்.


தமிழரசு கட்சி இன்று வாக்கெடுப்பில் இருந்து விலகியிருப்பது நாம் அரசுடன் செயல்பட தொடர்ந்து தயாராக உள்ளோம் என்பதைக் காட்டும் ஒரு முக்கியமான செய்தியாகும்.

அத்துடன் எனது தகப்பனாரின் இறுதி அஞ்சலியில் பங்குபற்றிய மற்றும் துக்கம் விசாரித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரபுரத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்; அகழ்வு தோல்வியில் நிறைவு..!

0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியிலுள்ள தனியார் காணியில், யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்களை தேடும் நோக்கில் இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.ஹெச். மஹ்ரூஸ் நேரடி மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றன.

விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், புதுக்குடியிருப்பு பொலிஸார் இணைந்து அகழ்வு பணிகள் இடம்பெற்றிருந்தது.


நீதிமன்றத்தில் 10 அடி ஆழம் வரை அகழ்வதற்கு அனுமதி பெறப்பட்டு பைக்கோ இயந்திரத்தின் உதவியுடன் அகழ்வு பணிகள் இடம்பெற்றிருந்தது.

குறித்த பகுதியில் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில் அப்பகுதியில் அருகாமையில் அகழ்ந்து பார்ப்பதற்கு அனுமதி வழங்குமாறு உரிய தரப்பினர் கோரிய நிலையில் பிறிதொரு நாளிற்கு அனுமதிக்கு கோருமாறு நீதிபதி கூறியிருந்ததுடன், குறித்த அகழ்வு இடம்பெற்ற பகுதியை மூடுமாறு நீதிபதி உத்தரவு வழங்கியதனையடுத்து மூடப்பட்டிருந்தது.

குறித்த தற்போது அகழ்வு இடம்பெற்ற பகுதியில் 2021ம் ஆண்டு அகழ்வு இடம்பெற்று எதுவும் கிடைக்காத நிலையில் மூடப்பட்டிருந்தது.


இருப்பினும் இதுவரை இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் எவ்வித ஆயுதங்களோ, தங்கங்களோ மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவனை தாக்கிய பாடசாலை அதிபருக்கு பிணை..!

0

பாடசாலை மாணவர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் கைது செய்யப்பட்ட அதிபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கொழும்பு மேலதிக நீதிவான் அவரை பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.


சந்தேக நபரைத் தலா மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாரஹேன்பிட்ட பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்வி சீர்திருத்தம் எனும் போர்வையில் மூடப்படும் பாடசாலைகள் – வீதியில் இறங்கிய மாணவர்கள்

0

அராசாங்கம் அத்தியாவசிய கல்விக்காக நூற்றுக்கு ஆறு சதவீதம் ஒதுக்குவதாக தெரிவித்து அதனை இந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யாமல் மக்களை ஏமாற்றுகின்றது என கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

அதேவேளை கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில் கிராமப்புற பாடசாலைகளை மூடுவது பாடப்புத்தகங்களை இல்லாமல் செய்வதை அரசாங்கம் நிறுத்த வேண்டும். இல்லை என்றால் பல்கலைக் கழக மாணவர் போராட்டம் வெடிக்கும் என கிழக்கு பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


மட்டக்களப்பு பேருந்து தரிப்பு நிலையத்தில் ‘பாடசாலைகள் மூடப்படுகிறது பாட புத்தகங்கள் இல்லை, மாணவர்கள் கல்வியை விட்டு வெளியேற்றம், சீர்திருத்தத்தை தோற்கடிப்போம்’ எனும் தொனிப் பொருளில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் தலைமையில் இன்று கையொழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“அராசாங்கம் அத்தியாவசிய கல்விக்காக நூற்றுக்கு ஆறு சதவீதம் ஒதுக்குவதாக தெரிவித்து அதனை இன்று வரை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யாமல் மக்களை ஏன் ஏமாற்றுகிறது.


இன்றைய இளைய சமூதாயத்தினர் நாளைய தலைவர்கள் அவர்களின் கல்வி தேவைக்காக ஒதுக்கப்படும் நிதியை இடை நிறுத்தினால் மாணவர்களின் கல்வி எந்தளவுக்கு செல்லும் மக்களே சிந்தியுங்கள்” என கூறியுள்ளனர்.

ஹெரோயினுடன் கைதான அதிபர் தொடர்பில் இலங்கை அதிபர்கள் சங்கம் போர்க்கொடி..!

0

போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபர் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை தொழிற்சார் அதிபர்கள் சங்கம் இன்று (14) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அநுராதபுரம் எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் ஒரு கிலோ கிராமுக்கு அதிகமான ஹெரோயினுடன் கடந்த மாதம் (5) கைது செய்யப்பட்டிருந்தார்.


குறித்த அதிபர் தொடர்பில் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிகாரி ‘அதிபர்’ எனக் குறிப்பிடப்பட்டாலும், அவர் இலங்கை அதிபர் சேவையின் தரப்படுத்தப்பட்ட அதிகாரி அல்ல.

அவர் இலங்கை ஆசிரியர் சேவையின்அதிகாரி என்பது உறுதியாகியுள்ளதுடன், அவர் அதிபர் பதவியை தற்காலிகமாகப் பொறுப்பேற்று (Covering duties) பணியாற்றியுள்ளார்.

‘அதிபர்’ என்று அழைக்கப்படக்கூடியவர்கள் இலங்கை அதிபர் சேவையின் தரப்படுத்தப்பட்ட அதிகாரிகள் மாத்திரமே என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இலங்கை தொழிற்சார் அதிபர்கள் சங்கம் மேலும் கூறுகையில், அதிபர் சேவையின் தரப்படுத்தப்பட்ட அதிகாரிகள் அல்லாதவர்கள் இவ்வாறு ‘அதிபர்’ என்ற பெயரைப் பயன்படுத்துவது அதிபர் சேவைக்கு செய்யப்படும் அநீதியாகும் என்று சுட்டிக் காட்டியுள்ளது.

மேலும், குறித்த அதிகாரியைப் பற்றிய தகவல்களை வெளியிடும் போது, ​​அவரை “இலங்கை ஆசிரியர் சேவையின் அதிகாரி” என்று அடையாளப்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகம் கடமைகளைப் பொறுப்பேற்றார்..!

0

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

முன்னாள் தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று (13) தனது பதவியிலிருந்தும், அரசு சேவையிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 16, 2019 அன்று தேர்தல் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட அவர் கடந்த 34 ஆண்டுகளாக ஒரு அரசு அதிகாரியாக பணியாற்றியதாகக் கூறினார்.


அத்துடன் தேர்தல் ஆணையாளர் நாயகமாக தனது கடமைகளைச் செய்வதில் தனக்கு உதவிய அனைத்து முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதி செயலாளர்கள், பல்வேறு அரச நிறுவனங்களின் அதிகாரிகள், முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகங்களுக்கு சமன் ஸ்ரீ ரத்நாயக்க தனது நன்றியைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு இன்று..!

0

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.

இந்த வாக்கெடுப்பு மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை கடந்த நவம்பர் 7ஆம் திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.


அதன்படி, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துடன் தொடர்புடைய வரவு செலவுத் திட்ட விவாதம் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை நடைபெறும்.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலையின் விவாதம் நாளை (15) முதல் 17 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

வரவு செலவுத் திட்டக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து ஏனைய நாட்களில் வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறும் என்று பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, இன்று நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக்க கூறுகையில், இந்த வரவுசெலவுத் திட்டம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்காததால் அதற்கு எதிராக வாக்களிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!